அப்போது எனக்கு இப்போது உனக்கு - இன்றைய சிந்தனை - 16.11.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்போது எனக்கு இப்போது உனக்கு - இன்றைய சிந்தனை - 16.11.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 நவம்பர் 2019

அப்போது எனக்கு இப்போது உனக்கு

அது ஒரு பொது நூலகம். நிறைய பேர். அங்கே ஓர் இளம்பெண். பத்திரிகை படித்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு அருகில் ஓர் இளைஞன் வருகிறான். அவளுக்குப் பக்கத்தில் ஓர் இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் அமைதியாகக் கேட்கிறான். "ஏங்க... நான் இங்க கொஞ்ச நேரம் உட்காரலாமா?"

அவள் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

பின் சத்தமாகப் பேசினாள். "என்னாது... உன்கூட தங்குறதா... என்ன நினைக்கிறாய்?" அவ்வளவுதான். அவள் போட்ட சத்தத்தைக் கேட்டு எல்லோரும் அவனையே ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவனுக்கு ரொம்பவும் அவமானமாகி விட்டது.

தொலைவில் ஒரு காலி இருக்கை. அதில் போய் அமர்ந்தான். கொஞ்ச நேரம் கழிந்தது. சத்தம் போட்ட அந்தப் பெண் அவனிடம் வந்தாள்.

"நான் மனோதத்துவம் படிக்கிற மாணவி... உங்க மன நிலையைச் சோதித்துப் பார்க்கத் தான் அப்படி செய்தேன்" என்றாள்.

இளைஞன் அவளை சற்று நேரம் முறைத்துப் பார்த்தான். அப்புறம் ’என்னாது... இருநூறு வெள்ளியா... என்ன நினைச்சுகிட்டு இருக்கிறாய்...’ என்று உரக்கக் கத்தினான்.

இப்போது அனைவரும் அவளையே பார்த்தார்கள். அவள் குறுகிப் போனாள். அவன் சொன்னான் ’அப்போது எனக்கு... இப்போது உனக்கு...’

இதில் இருந்து ஓர் உண்மை. இன்றைக்கு ஒருவரை நாம் அவமானப் படுத்தினால் நாளைக்கு யாராவது ஒருவர் நம்மை அவமானப் படுத்தலாம். அதனால் வேதனைகள் வரலாம். அந்த வேதனைகள் தொடரலாம்.

அதனால் யாரையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவமானப் படுத்தாமல் அன்பாய் அழகாய்ப் பயணிப்போம். அதையே நம் இலட்சியங்களில் ஒன்றாய்ப் பின்பற்றுவோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
16.11.2019