சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் உண்ணாவிரதம் - 25.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் உண்ணாவிரதம் - 25.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் உண்ணாவிரதம் - 25.10.2019


தமிழ் மலர் - 25.10.2019

விடுதலைப்புலி இயக்கத்தோடு தொடர்பு உடையவர்கள் என்று அண்மையில் மலேசியப் போலீஸாரால் கைது செய்யப்பட்ட காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி.சாமிநாதன்; வர்த்தகர் எஸ்.சந்துரு; மலாக்கா ஊராட்சி மன்றக் கவுன்சிலர் பி.சுரேஷ்குமார்; ஆகிய மூவரின் மனைவிமார்களும் நேற்று புக்கிட் அமான் காவல் தலைமையகத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.


உமாதேவி; சுமதி; விமலா ஜக்குமாரன்; ஆகிய மூவரும் நேற்று புக்கிட் அமான் வளாகத்தில் இறுதி வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்ற தங்கள் முடிவை அறிவித்தனர்.

கடந்த திங்கட் கிழமை தொடங்கி அந்த மூன்று பெண்களும், அந்தத் தேசியக் காவல் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே தரையில் அமர்ந்தவாறு ‘தங்களின் கணவன்மார்களைத் தயவுசெய்து விடுதலை செய்யுங்கள்’ என்ற வாசகங்களைக் கொண்ட அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

*என்னுடைய கணவர் சிறைக்குள் இருக்கும் போது எப்படி நான் தீபாவளியைக் கொண்டாடுவது.* வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறேன். எது நடந்தாலும் இந்தப் போலீஸ் தலைமையகத்திலேயே நடக்கட்டும்.

*செய்யாத குற்றத்திற்காக கைதியாக இருக்கும் கணவர்கள்*

இது வரையில் என்னுடைய மகனுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அப்பா எங்கே என்று கேட்கும் போது எல்லாம் என் மகனிடம் நான் என்ன பதில் சொல்வேன்?

இதுவரை ஏன் தீபாவளிக்குப் புதுச் சட்டை வாங்கவில்லை என்று கேட்கிறான். நான் என்ன சொல்லி புரிய வைப்பது என்று கூறும் போதே ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் மனைவி உமாதேவி கண்ணீர் விட்டு அழுதார்.

*அவர்கள் இல்லாமல் எங்களுக்கு எங்கே தீபாவளி*

பக்காத்தான் கட்சி ஆட்சிக்கு வந்தால் சொஸ்மா சட்டத்தை அகற்றுவதாக் கூறி இருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கிறது.

அமைச்சர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள். அவர்கள் சொல்லும் ஆறுதல் வார்த்தையும் வருத்தமும் எங்கள் பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வையும் கொண்டு வரப் போவது இல்லை என்று தன் ஆதங்கத்தை உமாதேவி வெளியிட்டார்.


பேஸ்புக் பின்னூட்டங்கள்


Inbachudar Muthuchandran: தேசிய முன்ணணி ஆட்சியில் அமலாக்கம் செய்யப்பட்ட இந்த சோசுமா சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்

Muthukrishnan Ipoh: வேதனை... வேதனை...

Moon Noom: தமிழ் நாடாக இருந்திருந்தால் தமிழர்களின் வற்றாத ஆதரவுகள் கிடைத்திருக்கும் இந்தியர்களாக இருப்பதே காரணம் முடிந்த கதைக்கு இப்படி ஒரு நாடகமா இன துரோகிகள்

Augustine Chinnappan Muthriar: Roomba veethanai

Ramarao Ramanaidu: உண்ணாவிரதம் இந்த நாட்டில் எந்த பலனையும் தராது ... சாகட்டும்னு விட்டுடுவாங்க ...

Ramarao Ramanaidu: தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்கள் உள்ளே தான் இருப்பார்கள் ...

Ramarao Ramanaidu:
போய் பிள்ளைகளை கவனியுங்கள் ...

Ramarao Ramanaidu: இதை இந்த மூன்று பெண்களுக்கும் புரிய வைக்க வேண்டும் ... இவர்கள் தவறான வழியில் நடத்தப் படுகிறார்கள் ...

Kumaravelu Shanmugasundaram: தமிழ் என்றும் வெல்லும்