சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் விரதம் - 25.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் விரதம் - 25.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகளின் மனைவிமார்கள் விரதம் - 25.10.2019

நீதி நிலைக்க வேண்டும். நியாயம் தழைக்க வேண்டும். நல்லாட்சி மலர வேண்டும். நல்வாழ்வு புலர வேண்டும். நிலை மாறுமா. துயர் மாறுமா. கனவு பலிக்குமா. சத்தியம் பேசுமா.


வாயில்லா ஜீவன்களின் வெதும்பல்கள் அல்ல. அவை வாயில்லா பூச்சிகளின் வாய்மை நிறைந்த உண்மைகள். அவையே வாய்மைக் கடல்களில் ஆர்ப்பரிக்கும் வேதனை மிக்க உண்மைகள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களில் மூவரின் மனைவிமார்கள் தங்களின் கணவன்மார்களை விடுவிக்கும்படி கடந்த 21.10.2019-ஆம் தேதியில் இருந்து அமைதி மறியல் செய்து வருகின்றனர்.


இரு தினங்களுக்கு முன்னர் இந்தப் பெண்கள் மூவரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். அந்த விரதம் இன்றும் தொடர்கிறது.

மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதனின் துணைவியார் திருமதி வீ.உமாதேவி சொல்கிறார்...

’விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு இருந்தார் என என் கணவர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்.’

’ஓராண்டுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.’

’சிறையில் என் கணவர் மோசமான நிலையில் இருக்கிறார். அவரின் உடல்நலம் குறித்து நான் கவலை கொள்கிறேன்’ என்று உமாதேவி கூறினார்.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக மலாக்கா மாநிலத்தில் கொண்டாடுவதற்கு மாண்புமிகு சாமிநாதன் திட்டமிட்டு இருந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார். இந்தச் சமயத்தில் தான் கைது செய்யப்பட்டார்.

சாமிநாதன் அவர்கள் மலாக்கா மாநிலத்தின் இந்தியர்களுக்கு ஒரு தலைவராக திகழ்ந்தவர். அவர் இல்லாமல் மலாக்கா மாநில இந்தியர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.


புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு முன் அந்தப் பெண்களின் அமைதிப் போராட்டமும் உண்ணாவிரதமும் தொடர்கின்றன.

சோஸ்மா தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பன்னிருவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அல்லது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றப்பதிவு செய்யப்பட வேண்டும்.

குற்றம் நிரூபீக்கப்படும் வரையில் அந்த 12 பேரும் நிரபராதிகள் என்பது உறுதிபடுத்தப்பட்ட வேண்டும். இதுவே மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்புகள்.

உண்ணாவிரதம் இருக்கும் அந்தப் பெண் பிள்ளைகளுக்கு நம்முடைய அன்பும் ஆதரவுகளும்...

(மலாக்கா முத்துகிருஷ்ணன்)
25.10.2019


பேஸ்புக் பின்னூட்டங்கள்


Prezident V Jai: மலேசிய நரகாசுரனை அழித்தால் என்றும் தீபாவளி இந்தியர்களின் வாழ்வில்

Kumar Murugiah Kumar's >>> Prezident V Jai: அதுதான் என் அவா கூட