பிரபாகரன் கார் மீது முட்டை வீச்சு - 16.11.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபாகரன் கார் மீது முட்டை வீச்சு - 16.11.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 நவம்பர் 2019

பிரபாகரன் கார் மீது முட்டை வீச்சு

மலேசியாகினி
16.11.2019


பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் கார் மீது முட்டைகள் வீசித் தாக்குதல் நடத்தப் பட்டதாக போலீஸில் நேற்றிரவு புகார் செய்து உள்ளார்.


ஜாலான் ஈப்போவில் பப்பாரிச் உணவகத்துக்குப் பின்புறத்தில் அவருடைய டொயோட்டா கார் நிறுத்தபட்டு இருந்தது.

“நான் உணவகத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்ததால் கார் ஓட்டுநரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விட்டேன். சந்திப்பு இரவு மணி 12.30-க்கு முடிந்தது. காரை நோக்கிச் சென்றேன். காருக்கு அருகில் முட்டை ஓடுகள் கிடந்தன.

“காரின் பின்புறம் முழுவதும் மூட்டைகள் வீசி எறியப்பட்டு இருந்தன. கூரைப் பகுதியிலும் முன்புறக் கண்ணாடி முழுக்கவும் முட்டைகள் வீசி எறியப்பட்டு இருந்தன.

“என் பாதுகாப்புக் குறித்து அஞ்சியே இந்தப் புகாரைச் செய்கிறேன்” என்று பிரபாகரன் போலீஸ் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

சில அரசு சாரா இயக்கங்கள், பிரபாகரன் பத்து தொகுதி எம்.பி. பதவியைத் துறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடைபெற்று இருப்பது தான் யோசிக்க வைக்கிறது.

பிரபாகரன் பதவி விலகி பி.கே.ஆர். உதவித் தலைவர் தியான் சுவா போட்டியிட இடம் அளிக்க வேண்டும் என்பது அந்த அரசு சாரா இயக்கங்களின் கோரிக்கை.

அவர்களின் கோரிக்கைக்கும் தியான் சுவாவுக்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. எந்தத் தொடர்பும் இல்லை என்று தியான் சுவா மறுக்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் பிரபாகரன் ஒரு சுயேச்சையாகப் பத்து தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு பி.கே.ஆர். ஆதரவு அளித்தது.