19 மே 2016

கலிகாலச் சாமியார்கள்

கமலஹாசன் ஒரு வசனம் சொல்வார். ”கடவுள் இல்லை என்று சொல்கிறவனை நம்பலாம். கடவுள் உண்டு என்று சொல்கிறவனை நம்பலாம். ஆனால், நான்தான் கடவுள் என்று எவன் ஒருவன் சொல்கிறனோ அவனை நம்பவே கூடாது”. இவை கற்பக விருட்சங்களாக வாழ்கின்ற தத்துவப் பாசுரங்கள். மனிதனில் எவனும் கடவுள் இல்லை. எந்த ஒரு மனிதன் தன்னை ஒரு கடவுள் என்று சொல்கிறானோ, அவன் மனிதனே இல்லை.



இப்போது கலியுகம் நடக்கிறது. அந்த யுகம் கண் சிமிட்டிய நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன். நல்ல சாமியார் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் இடம் தெரியாமல் போகின்றார்கள்.

கையை நீட்டச் சொல்லி, நாலு வார்த்தையில் நம்பிக்கை வளர்த்த சாமியார்கள் எல்லாம் காணாமல் போகின்றார்கள். கிளியும் கையுமாகத் திரிந்த கிளிச் சாமியார்கள் எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை. அதையும் தாண்டி, சில நேர்மையான ஏழைச் சாமிகள் இருந்தார்கள். அவர்களும் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள்.




இங்கே ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். சாமியார்கள் யாரையும் நாம் குறை சொல்லவில்லை. உண்மையான, நல்ல சாமியார்கள் இருக்கிறார்கள். நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாணயமாக ஆன்மீகச் சேவைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை நாம் மதிக்கிறோம். வாழ்த்துகிறோம்.

Narayan Sai
ஆனால், அந்தச் சாமியார் கூட்டத்திலேயே பசுத் தோல் போர்த்திய புலிகளும் இருக்கின்றன. மான்தோல் போர்த்திய முதலைகளும் இருக்கின்றன. அந்தக் கார்ப்பரேட் புலிகளும், அந்தக் கார்ப்பரேட் முதலைகளும் எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி இருக்கின்றன.

எத்தனைப் பெண்களை நாசமாக்கி நடுத்தெருவில் விட்டு இருக்கின்றன. எத்தனை ஏழைகளின் வயிற்றில் அடித்து கருவை நசுக்கி இருக்கின்றன. எத்தனைக் குடும்பங்களைக் கெடுத்துக் கழிசடை ஆக்கி இருக்கின்றன. எத்தனைப் பேரைக் கொலை செய்து மாலைகள் போட்டு இருக்கின்றன. அந்த ஆதங்கம்தான் இந்தக் கட்டுரை.


கார்ப்பரேட் சாமியார்கள் பிரம்ம மந்திரங்களைப் பாடினார்கள். மன்னிக்கவும். பிரம்ம மந்திரங்கள் என்பது புனிதமானச் சொற்கள். இருந்தாலும் அதைப் பாடித்தானே கார்ப்பரேட் சாமியார்கள் கோடிக் கோடியாய்ச் சுருட்டினார்கள். கதைக்கு வருகிறேன். ரமண ரிஷியை உங்களுக்குத் தெரியும் தானே.

ஒருநாள் அவர் கையில் இருந்த சில சில்லறைக் காசுகளைக் குளத்தில் தூக்கி எறிந்துவிட்டு தபசில் ஆழ்ந்து போனார். ‘காசும் பணமும் நகையும் ஆட்கொல்லி’ என்று சொன்னவர், கடைசி வரையில் காசைக் கையில் தொடவே இல்லை. அவரைப் பின்பற்றி இன்னொரு யோகி வாழ்ந்தார். ‘நான் ஒரு பிச்சைக்காரன். உனக்கும் எனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சைக் கேட்கிறேன்’ என்றார். அவர் யோகி ராம் சுரத் குமார்.
 

(ான்று: Fake Indian Babas Scandals Crimes And Their leaked Photo - https://plus.google.com/+14mixpage/posts/Sruy331CqcR )
 
ஆதி சங்கரர், அப்பைய தீட்சிதர், சட்டம்பி சுவாமிகள், இராமானுசர், ராகவேந்திர சுவாமிகள், ரமண மகரிஷி, பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கண்ணையா யோகி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், சித்பவானந்தர் போன்றவர்கள் தமிழகம் கண்ட சுத்த ஆன்மீகவாதிகள்.

அந்த ஆன்றோர்களின் பெயர்களைச் சொல்லி வந்தவர்கள்தான் இந்த ரஜ்னீஷ், பிரேமானந்தா, சந்திராசாமி, ராமன்ஸ்வாமிஜி, சதுர்வேதி, காமந்தக சாமியார், நித்தியானந்தா போன்ற சாமியார்கள். அதற்கு முன், கார்ப்பிரேட் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


கார்ப்பிரேட் என்பது corporate எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்த ஒரு வாடிக்கைச் சொல். தமிழில் இது ஒரு வழக்குச் சொல்லாக மாறி வருகிறது. ஒரு நிறுவனத்தின் உச்ச மட்ட நிர்வாகத்தில் இருப்பவர்களைக் கார்ப்பிரேட் என்று சொல்வார்கள். அவர்களுடைய எண்ணம், எழுத்து, எழுச்சி எல்லாமே பணத்தைச் சுற்றிச் சுற்றிதான் இருக்கும்.
 
Kripalu-Mahara
அவர்களை மிஞ்சி எதுவும் நடக்க முடியாது. அவர்கள் எடுத்த முடிவுதான் இறுதி முடிவு. அதைத் தாண்டி எதுவும் இல்லை. அவர்கள் கிழித்த கோட்டை யாரும் தாண்டிப் போக மாட்டார்கள். அப்படிப்பட்ட அதிகாரம் உள்ளவர்களைத்தான்  கார்ப்பிரேட் அல்லது கார்ப்பரேட் தலைவர்கள் என்பார்கள்.


நித்தியானந்தா என்பவர் ஒரு கார்ப்பிரேட் சாமியார்தான். இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. நித்யானந்தர் தன்னை ஒரு பிரம்மச்சாரி, ஞானி, இந்திய ஞான மரபில் வந்தவர் என்று சொல்லிக் கொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்ற ஆன்மீகக் கர்த்தாக்களின் வாரிசு என்றும் சொல்லிக் கொண்டார். இப்படிச் சொல்லி இலட்சக்கணக்கான மக்களை நம்ப வைத்தார். அவரை நம்பி பல இளம் பெண்கள் சந்நியாச வாழ்வையும் மேற்கொண்டனர்.
சான்று: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1206/12/1120612015_1.htm

ஒரு சின்னக் கதை வருகிறது. ஒரு கணவனும், மனைவியும் நித்யானந்தரின் சீடர்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை. ஒரு நாள் ‘எனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம். எனக்கு நித்திதான் வேண்டும்’ என்று சொல்லி  அந்தப் பெண், நித்யானந்த ஆசிரமத்தில் துறவியாகச் சேர்ந்தாள். அதனால் அந்தக் குடும்பமே சிதைந்து போனது. அதைப் பற்றி அவரிடம் கேட்ட போது ‘போகட்டும்’ என்று சொன்னார் நித்யானந்தர். புத்தர் துறவியாக மாறவில்லையா என்று திருப்பிக் கேட்டாராம். சான்று: http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=77945


இந்தக் கட்டத்தில் எனக்குள் ஒரு கேள்வி. அந்தத் தெய்வ மகான் தன்னுடைய 29ஆவது வயதில் யசோதராவை  விட்டு விலகிச் சென்றார். லௌகிக வாழ்க்கையை மறுத்து துறவறம் பூண்டார். ஆனால், நித்யானந்தர் என்ன செய்தார். தன்னுடைய 32ஆவது வயதில் ரஞ்சிதாவை இல்லறத்தில் இணைத்துக் கொண்டார். துறவறத்தைத் துறந்து லௌகித்தில் லயித்துப் போனார்.
சான்று: http://www.manithan.com/news/20120517102697
 
Ram Rahim Singh
நித்யானந்தரின் பக்த கோடிகள் எல்லாருமே ஏதோ மந்திரித்து விட்ட ஆட்டு மந்தைகளைப் போல அவர் பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சுயமான சிந்தனை என்பதே இல்லை. நித்யானந்தர் எதைச் சொல்கிறாரோ அதைத்தான் இவர்களும் கண்களை மூடிக் கொண்டு நம்புகிறார்கள், செய்கிறார்கள்’ என்று ஒரு தமிழகத் தாளிகை குற்றம் சொல்கிறது.

ஆனால், அதே தாளிகைதான் “ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” எனும் தொடரை இரண்டு வருடங்களுக்கு கடுகு தாளிப்பு செய்தது. அதை உலக மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அடுத்து வரும் துணுக்குகளைப் பாருங்கள்.


“சாமியாராம் சாமியார்… அதான் பார்த்தோமே முந்தா நாள் ராத்திரி. சின்னப் பையனா இருந்தாலும் எவ்வளவு கருத்தா பேசறான்னு பார்த்தா, அவன் சின்னபுத்தி சிரிப்பா சிரிச்சிடுச்சே… இனிமே சாமியார் கீமியார்னு எவனாச்சும் வந்தா அவன் மேல விழுற முதல் விளக்குமாறு நான் போடறதாத்தான் இருக்கும் பாத்துக்க…”
சான்று: http://www.envazhi.com/நித்யானந்தா-மீது-அப்படிய/

“இத பாருங்கடி… இனி சாமிய பாக்க கோயிலுக்குப் போறதோட நிறுத்திக்கணும்… சாமியாரை பாக்கப் போனா, இப்படித்தான் சந்தி சிரிச்சிப் போகும்…” என்று அந்தத் தாளிகையே நக்கல் செய்கிறது. வாழ்ந்தால் ஒரு பேச்சு. தாழ்ந்தால் ஒரு பேச்சு. நல்ல ஒரு ஜால்ரா.


உலகில் இரண்டு வகை சாமியார்கள் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஒன்று பிடிபட்ட சாமியார். இன்னொன்று பிடிபடாத சாமியார். இதில் எந்தச் சாமியார் மரண அடி இல்லாமல் தப்பிக்கின்றாரோ, அந்தப் பக்கமாகச் சாய்வதற்கு ஒரு செம்மறியாட்டுக் கூட்டமே காத்து இருக்கும். இப்படி நான் சொல்லவில்லை. அமிழ்தா எனும் வலைப்பதிவில்  ’பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை’ எனும் கட்டுரையில் எழுதப்பட்டு இருக்கிறது.
சான்று: http://amizhtha.wordpress.com/2010/03/10/பிரேமானந்தா-முதல்-நித்யா/.

ஒரு காலத்தில் வயிற்றுக்குக் கிடைத்தால் போதும் என்று சாமியார்கள் சிலர் பிழைப்பு நடத்திக் கொண்டு இருந்தார்கள். எதற்கும் அதிகமாக ஆசைப்படவில்லை. மறுபடியும் சொல்கிறேன். எல்லா சாமியார்களையும் குறை சொல்லவில்லை. இப்போதைக்கு மாட்டிக் கொண்டு இருப்பது கார்ப்பரேட் சாமியார்கள்தான். கார்ப்பரேட் அல்லாத சாமியார்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. சரி.
 

இப்போது நடப்பது என்ன. கார்ப்பரேட் சாமியார்களுக்கு ஆடம்பரமான விளம்பரங்கள். அவர்கள் நடக்கின்ற பாதையில் எல்லாம் பூமாலைகள். உடுத்துகின்ற காவி உடைகளில் எல்லாம் முழுக்க முழுக்க பன்னீர்ப் புஷ்பங்கள். சந்தனச் சவ்வாதுகள்.

காலையில் இந்தியா. மாலையில் மாலைத்தீவு. ராத்திரியில் அரபுகடல் அபிஷேகம். அவர்களின் கஜானாக்கள் கோடிக் கோடிகளில் நிறைகின்றன. தங்களுடைய உருவப்படங்களைக் கொடுத்து அதையே கடவுளாக நினைத்துப் பூஜிக்கச் சொல்கிறார்கள். சாமிகள் செய்ய முடியாததைச் சாமியார்கள் செய்ய முடியும் என்று பகதர்களையும் நம்ப வைக்கின்றனர். அது பெரிய பாவம். இப்போது தெரியாது.
 

யாரோ ஒருவருக்கு எப்போதோ ஒரு நல்லது நடந்து இருக்கும். அதை அவர் அடுத்தவரிடம் சொல்ல, அடுத்தவர் அதை மற்றவரிடம் சொல்ல, அது அப்படியே பரந்து விரிந்து பாய்மரக் கப்பலில் பயணம் செய்கிறது. இதை ஒரு Domino Effect என்றும் சொல்லலாம்.
சான்று: http://gilmaganesh.blogspot.com/2010/03/blog-post_3243.html

கடவுளை மிஞ்சி எதுவும் இல்லை. அவர் செய்யாததை எந்தச் சாமியாராலும் செய்ய முடியாது. ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்” என்று தொடர் எழுதிய ஓர் ஆன்மீகவாதி, ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று தன்னுடைய ரஞ்சித பாசத்தால் நிரூபித்து இருக்கிறார். அவருடைய எழுத்துகளுக்கும், செயலுக்கும் எத்தனை எத்தனை வேறுபாடுகள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.


Asharam Bapu

கார்ப்பிரேட் சாமியார்களின் தோற்றம் இருக்கிறதே அது ஒரு மாயை. அதற்கு அவர்களைச் சுற்றி பின்னப்பட்டு இருக்கும் அற்புதமான விளம்பர ஜோடனைதான் அதற்கு மூலகாரணம். இதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். அதிகார மையங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சமூக சேவை அமைப்புகள், ஆன்மீக வகுப்புகள் எல்லாம் கலந்த ஒரு கூட்டாஞ்சோறுதான் இன்றைய கார்ப்பிரேட் சாமியார்கள்.
சான்று: http://everyonelovesvj.blogspot.com/2010_03_13_archive.html

இந்தக் கார்ப்பிரேட் சாமியார்களின் குரு யார் தெரியுமா? அவர்தான் தீரேந்திர பிரம்மச்சாரி. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது தீரேந்திரரின் பயணம் தொடங்கியது. இந்திராகாந்திக்கு ஜெயபிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன் ராம் ஆகிய இருவரும் பக்கா எதிரிகள். இருந்தாலும் பிரம்மச்சாரியார் இரு தரப்பினருக்கும் நண்பர்களாக இருந்தார். தனக்கு வேண்டியதைச் சாணக்கியமாகச் சாதித்துக் கொண்டார். அந்தக் காலக் கட்டத்தில்தான் கார்ப்பிரேட் சாமியார்களின் மன்மத மந்திரங்களுக்கு அரிச்சுவடி எழுதப்பட்டது.
 
Maharishi Mahesh Yogi
அதன் பின்னர் சந்திராசாமி வந்தார். இப்போது பெயர் போட்டுக் கொண்டு இருக்கும் கார்ப்பிரேட் சாமியார்களுக்கு அந்தச் சந்திராசாமிதான் நல்ல ஒரு ரோல் மோடல். இவர் நரசிம்ம ராவ், சந்திரசேகர் காலங்களில் கோடிக் கோடியாகப் பணம் சம்பாதித்தார். அடுத்து வந்த இந்திய அரசு இவர் மீது வழக்கு போட்டது. அவர் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவாறு அவரின் கடப்பிதழையும் முடக்கி வைத்தது. அது ஒரு பெரிய கதை. அப்புறம் ரஜ்னீஷ் வந்தார்.

இவர்  கொஞ்சம் வித்தியாசமானவர். சுதந்திரமான போக்கு கொண்டவர். இவரைச் ’செக்ஸ் குரு’ என்றும் சொல்வார்கள். இவர் ஒரு புரட்சிகரமான தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ‘செக்ஸ் என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். அதை ஆழ்ந்து அனுபவித்தால், அதில் இருந்து விடுதலை அடைவார்கள்.’

என்ன அபிரிதமான கண்டுபிடிப்பு. நோபல் பரிசு கொடுத்து இருக்கலாம். யாரும் சிபாரிசு செய்யவில்லை. இவர் அமெரிக்காவில் பெரிய பெரிய ஆசிரமங்களைக் கட்டினார். அவற்றை அமெரிக்க அரசு பறிமுதல் செயதது. அதுவும் ஒரு பெரிய நீண்ட கதை.
 
ிக்ரம் பாப
இந்தக் கட்டத்தில்தான் சாய்பாபா வந்தார். வெறும் கையில் விபூதி வரவழைப்பது. மோதிரத்தை வரவழைத்து பரிசாகக் கொடுப்பது. பார்வை இல்லாதவர்களுக்கு பார்வை கொடுப்பது. இவை அனைத்தும் சித்து வேலைகள் என்று லண்டன் பி.பி.சி.யும் நார்வே நாட்டு என்.ஆர்.கே. தொலைக்காட்சி நிலையமும் பிரபலப்படுத்தின. Seduced By Sai Baba எனும் நாடகம் சாய்பாபாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை.  
சான்று: http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba#Criticism_and_controversy

தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும், அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார் பிரேமானந்தா. பாலியல் குற்றம், வெளிநாடுகளில் சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்துச் சிறையில் தள்ளியது. 14 ஆண்டுகள் சிரையில் இருந்தார்.
 
Radhe Maa

2011ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சிறையிலேயே இறந்தும் போனார். ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்குகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகின்றன. கல்கி எனும் சாமியார் மீதும் ஏராளமான புகார்கள் இருக்கின்றன. சான்று: http://ta.wikipedia.org/wiki/பிரேமானந்தா

ஆக, ரஜ்னீஷின் மெகா ஆசிரமங்கள், சந்திராசாமியின் அரசியல் அதிகாரப் பிடிகள், அடுத்து சாய்பாபாவின் சமூக நலச் சேவைகள். இந்த மூன்றையும் ஒன்றாகக் கூட்டிப் பாருங்கள். அதில் ஒரு கலவை வரும். அந்தக் கலவையில்தான் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள் வந்து நிற்கிறார்கள். சில கார்ப்பரேட் சாமியார்கள் அரசியல் தரகர்களாகவும் இருக்கிறார்கள்.

சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். சிலர் கருப்புப் பண வங்கிகளாக இருக்கிறார்கள். சிலர் போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். (சான்று: திகுதிகு திகம்பர சாமிகள். ப.திருமாவேலன். 17.03.2010 ஆனந்த விகடன்.)

படு மோசமான தொழில்களைக் காவி உடையில் கார்ப்பரேட் செய்கிறார்கள். முதலீடு இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக ஒரு சமயம் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் நம்பும்படி  பல்வேறு மாஜிக் மாய்மாலங்களைச் செய்து வருகிறார்கள். கோடிக் கோடிகளாகக் குவிக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை,

தேவநாதன் எனும் சாமியாரின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இருபது ஆண்டு கால வரலாறுகள் உள்ளன. இருந்தும் எப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் சர்வலோக குருவாக வலம் வர முடிகிறது?

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். “கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதன் பார்வை என்னவோ மண்ணில் அழுகிக் கிடக்கும் பிணம் மீது தான்” கார்ப்பரேட் சாமியார்கள் பெரிய பெரிய தத்துவங்களைப் பற்றி மேடையில் பேசலாம். ஆனால், கடைசியில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சிற்றின்பப் பிரியர்களாக இருக்கலாம். அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் அவர்களை ஆண்டவனாகப் பார்ப்பது பேதைமையிலும் பேதமை ஆகும்.

ஏமாற்றுபவர்கள் எங்கும், எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். ஏமாந்து விடாமல் இருக்க மனிதன் இறைவன் அளித்த ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே என்னுடைய ஆசையும்கூட!

சாமியார்களை நம்புங்கள். ஆனால், அவர்களைக் கடவுளாக நினைக்க வேண்டாம். கடவுளாக நினைத்து அவர்களின் கால்களில் விழ வேண்டாம். தயவு செய்து அப்பா அம்மா காலில் விழுங்கள். அது கடவுள் காலில் விழுந்ததற்குச் சமம். உங்களுக்கு ஏழேழு ஜென்மங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.



நடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2

19.05.2016 ினத்ந்தி நாளிில் வெளியானட்.

மேற்கிந்தியத் தீவுகளில் ஏறக்குறைய 50 தீவுகள். அவற்றில் ஒன்று தான் ஜமாய்க்கா (Jamaica). இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகு அழகான பச்சைக் கானகங்கள். நிறையவே கரும்புத் தோட்டங்கள். கறுப்பர்கள் நிறைய பேர் அடிமைகள். கரும்புத் தோட்டங்களின் முதலாளிகள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்.

முதலாளிகளுக்கும் திண்டாட்டம்
தொழிலாளிகளுக்கும் திண்டாட்டம்

இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. கடுமையான உடல் உழைப்பு. அதனால், அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. முதலாளிகளுக்கு திண்டாட்டம் தொழிலாளிகளுக்குத் திண்டாட்டம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி ஒருவர் இருந்தார். இவர் உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்த ஈரப் பலாக்காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தார்.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

இந்த ஆய்வுப் பயணத்திற்குப் பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் கட்டப் பட்டது. 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது. பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தனர். வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோசமாய் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. 
 

'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்க... வாங்க... என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனா... தயவு செஞ்சு... தயவு செஞ்சு... பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்க... வேண்டாங்க சாமி... அது விவகாரமான விசயமா மாறி… அப்புறம் கொலையில் தான் போய் முடியும்... வேண்டாங்க சாமி...' என்று அவர்களுக்குப் படித்துப் படித்துப் புத்தி சொன்னார்கள். கேட்டார்களா. எல்லோரும் கேட்டார்கள். கேட்ட மாதிரி பதிவுசாகப் பக்குவமா… ஒன்னும் தெரியாத பாப்பா மதிரி பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்க் கொண்டே இருந்தார்கள்.

இரவோடு இரவாக கடலில் நீந்திப் போய்

அதையும் மீறி பாருங்கள்... ஒரு மன்மதக் குஞ்சு போய் கலாட்டா பண்ணி விட்டது. படியுங்கள். மன்மதக் குஞ்சு இல்லை. மன்மதக் குஞ்சு ராசா. சொன்னது எல்லாம் அதன் மரமண்டையில் ஏறவில்லை. ராசாவைச் சொல்லிக் குற்றம் இல்லை. இள ரத்தம் கொஞ்சம் கொப்பளித்து விட்டது.
 

அந்த ராசாவுக்கு 18 வயசு. அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள்.

தென்னை மரத்தில் இருந்து ’கள்’ வரும் என்பது அங்கே ஊறிப் போன விஷயம். பல நூறு ஆண்டுகளாக கள் இறக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்தக் கள் சமாசாரம் உலகம் முழுமையும் பரவி இருந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
 

தப்பாக நினைக்க வேண்டாம். நானும் ஒரு தமிழன்தான். சமயங்களில் லகர ளகரப் பிரச்சினைகள் வருவது உண்டு. 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' என்பார்கள். அது எந்தக் கல் என்பதுதான் இங்கே கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது. ஓர் எழுத்து பண்ணுகின்ற வேலையைப் பாருங்கள். பிரச்சினை இல்லை. பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரி. பானமும் வெள்ளை. மன்மதனின் மனசும் வெள்ளை. ஆக, அந்த வெள்ளை வேகத்தில் போய் மொக்கை முடிச்சுத் தெரியாமல் குடித்து இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு பதினைந்து வயது பெண் அந்தப் பக்கமாய் வந்து இருக்கிறாள். என்ன செய்வது. 
 

நம்ப மன்மதக் குஞ்சு கொஞ்சம் கூடுதலாகக் குடித்து அதற்கு மப்பு மந்தாராமாகிப் போனது. இயற்கை பானம் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறது. ராசாவும் ஒரு மனுசன் தானே. பாவம் அந்தப் பதின்ம வயசு மன்மத ராசா.

ஆக... நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்துச் சிரிக்க... அவள் இவனைப் பார்த்துச் சிரிக்க... இரண்டு காந்தப் புலன்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  அவளும் கிட்ட வர... ராசாவும் நெருங்கிப் போக... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அந்த நேரம் பார்த்து… சிவ பூசையில் கரடி நுழைந்தது மாதிரி பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... பார்த்த விசயத்தை வெளியே போய் சொல்ல... ஊரே பற்றிக் கொண்டது.
 

கிராமத்து மக்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு விரட்டி இருக்கிறார்கள். இருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கே போவது என்று தெரியாமல் மன்மத ராசா திகைத்துப் போய் நின்று இருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் நன்றாக அத்துப்படி. அதனால் அங்குள்ள ஒரு குகைக்குள் அவனை இழுத்துக் கொண்டுப் போய் இருக்கிறாள். எங்கே ஒளிந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்த விசயம். சுற்றிக் கிடந்த செடி கொடிகளை கொண்டு வந்து ஒரு மறைப்பு கட்டி… படுக்க ஒரு பச்சைப் பாய் தயார் செய்து… இரண்டு பேருமே அன்றிரவு அங்கே தங்கி இருக்கிறார்கள். 
 

பொழுது விடிந்ததும் அவள் அந்தப் பக்கம் போக இவன் இந்தப் பக்கம் வர அவர்களின் மரத்தோன் ஓட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. பிறகு ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தப்பித்ததே பெரிய விசயம்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. ஊர்ப் பஞ்சாயத்து சமாதானம் செய்கிற மாதிரி சமாதானம் செய்து உள்ளுக்குள் ஒரு பெரிய திட்டமே போட்டு வைத்து இருக்கிறது. அதாவது மன்மதக் குஞ்சைத் தீர்த்துக் கட்டுவது. அதற்கு மூன்று ஆட்களையும் ஏற்பாடு செய்து விட்டார்கள். 
 

விசயம் எப்படியோ அந்த இளம் பெண்ணுக்குத் தெரிந்து விட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து... இரவோடு இரவாகக் கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். கப்பலின் கயிறுகளைப் பிடித்து ஏறி விசயத்தைச் சொல்லி இருக்கிறாள்.

சுறா மீன்கள் நிறைந்த கடல் பகுதி அது. தான் விரும்பியவனுக்காகத் தன் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். தன் உயிரைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. தான் விரும்பியவனின் உயிர்தான் அவளுக்கு அப்போது பெரிதாகத் தெரிந்து இருக்கிறது. பாருங்கள். யார் யாருக்கு எங்கே எங்கே எல்லாம் எழுதி வைத்து இருக்கிறது… பாருங்கள். 

அவளுடைய பிடிவாதம் அவளுடைய துணிகரமான முடிவு… உள்ளூர் சுதேசி மக்களையே அசர வைத்தது. கட்டினால் அவனைத் தான் கட்டுவேன் இல்லை என்றால் செத்துப் போவேன் என்று மிரட்டி இருக்கிறாள். உடனே அவளைப் பிடித்து ஒரு வீட்டுக்குள் அடைத்துப் போட்டு வைத்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் அங்கிருந்து தப்பித்து விட்டாள்.

எப்படி தப்பித்தாள் என்பது ஊர் பஞ்சாயத்திற்கே பெரிய ஓர் ஆச்சரியம். அவளை அடைத்து வைத்து இருந்த கதவை வெளியே இருந்து தான் திறக்க முடியும். உள்ளே இருந்து திறக்க முடியாது. அப்படி என்றால் யார் திறந்து விட்டு இருக்க முடியும். யாராக இருக்கும் என்று அப்போது அவர்களிடம் இருந்த ’இண்டர்போல் போலீஸ்’ ஆராய்ந்து பார்த்தது. கடைசியில் கண்டுபிடித்து விட்டார்கள். யார் தெரியுமா.
 

நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் தாயார் தான். ஏற்கனவே ஒரு முதியவருக்கு மூன்றாம் தாரமாக அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன. பெண்ணுக்கு வயது 16. முதியவருக்கு வயது 61. என்னே பொருத்தம். எண்களைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள்.

தாயாருக்கு அந்தக் கல்யாணம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அடைக்கப் பட்டு இருந்த தன் மகளைத் திறந்து விட்டு கையில் கொஞ்சம் பொன் ஆபரணங்களையும் கொடுத்து ‘நீ ஆசைபட்டவன் கூடவே கண்காணாத இடத்திற்கு ஓடிப் போய் விடு’ என்று ஒரு படகையும் கொடுத்து இரவோடு இரவாக அனுப்பி இருக்கிறாள். அந்தப் பெண் படகில் போய்க் கொண்டு இருக்கும் போது வழிமறிக்கப் பட்டாள். மீண்டும் கைதியானாள்.

அப்புறம் அதற்குள் நமப மன்மத ராசாவுக்கும் விசயம் எட்டி விட்டது. அவனும் சும்மா இல்லை. தன் நண்பர்கள் இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு தீவில் இறங்கி விட்டாரன். சுதேசி மக்களின் பெரிய ஆள்பலத்தை மூன்று பேர் எப்படி சமாளிக்க முடியும். அதற்குள் கப்பலில் இருந்த மற்றவர்களும் களம் இறங்கி விட்டார்கள். 
 

வேறு வழி இல்லாமல், பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் நல்லபடியாகக் கல்யாணத்தைச் செய்து வைத்தார்கள். இதுவும் ஆழ்கடலில் நடந்த ஓர் அதிசயம்தான்.

அந்த மன்மத ராசாவின் பெயர் குயிந்தால். கடத்தல் கும்பலில் ஆகச் சிறியவன். அப்போது அவனுக்கு வயது 19. புத்தகங்களைத் திருடியதற்காக சிறைக்குப் போனவன். நல்ல முக இலட்சணம். ஓரளவுக்குப் படித்தவன். போதாதா. அதுவே அவனுக்கு பிளஸ் பாய்ண்ட். அவன் காதலித்தப் பெண்ணுக்கு வயது 16.
 

இருந்தாலும் கடைசியில் கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா... இவர்களின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடியது என்பதைப் பிறகு சொல்கிறேன். முதலில் ஒரு பீடிகை போட்டு விடுகிறேன். நிச்சயமாக உங்கள் மனசு ஈரமாகும். நிச்சயம் அழுது விடுவீர்கள். இது உண்மையாக நடந்த கதைங்க… தொடர்ந்து படியுங்கள்.

இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு

தாகித்தி தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவன். அந்தத் தலைவன் ஒவ்வோர் ஆண்டும் தன் பெயரை மாற்றிக் கொள்வான். அதில் ஒருவன் தான் தீனா எனும் தலைவன்.

அவனுடைய பழைய பெயர் ஊட்டு. கப்பலுக்கு வந்த பூர்வீகத் தலைவன் தீனா,  கூடவே தன் மனைவியையும் கூட்டி வந்தான். அவள் பெயர் இடாயா. கப்பலுக்கு வந்த தலைவன் அங்கிருந்த கத்தரிக்கோல் தான் தனக்கு வேண்டும் என்று ஒரேயடியாக அடம் பிடித்து இருக்கிறான்.

இருப்பதோ ஒன்றே ஒன்று. அதை வைத்து தான் எல்லாரும் தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டும். என்ன செய்வது. அவன் தொடர்ந்து அடம் பிடித்தான். இங்கே நம்ப பெண்கள் சமயங்களில் அடம் பிடித்துச் சிணுங்கிக் கொள்கிறார்களே... அந்த மாதிரி தான். மன்னிக்கவும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 
 

ஆக, வேறு வழி இல்லாமல் ‘இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு’ என்று கத்தரிக்கோலைக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் கப்பலிலேயே ஒரு பெரிய விருந்து.

தாகித்தி முறைப்படி ஆண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டுமாம். மிச்சம் மீதியைத் தான் பெண்கள் சாப்பிட வேண்டுமாம். அப்படி ஒரு வழக்கம் இருந்து இருக்கிறது. இருந்தாலும் இப்போது காலம் மாறி விட்டது. மிச்சம் மீதியைக் கணவன்மார்கள் தான் சாப்பிடுகிறார்களாம். கள்ளுக்கடை கந்தசாமி புலம்பிக் கொண்டு திரிகிறார். சந்தேகம் இருந்தால் அவரிடம் போய் கேட்கலாமே. சரி.

திடீரென்று ஒருநாள் கப்பல் சிப்பந்திகள் மூவர் காணாமல் போய் விட்டனர். தேடிப் பார்த்ததில் துப்பாக்கிகள் மருந்துகள் போன்றவற்றைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடிப் போனது தெரிய வந்தது.

மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தாகித்தியின் இயற்கையான சொர்க்கத் தன்மை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருந்தாலும் சில நாட்களில் பிடிபட்டனர்.  ஆளாளுக்கு வக்கனையாகப் பத்தொன்பது கசையடிகள். அதில் மன்மத ராசா குயிந்தாலும் ஒருவர்.

ஆனால் தண்டனையில் இருந்து தப்பித்தான். எப்படி. இங்கே தான் அவனுடைய பூர்வீக மனைவி வருகிறாள். என் புருசன் என்னைப் பார்க்க வந்தார் என்று ஒரே சத்தம் ஒரே ஆர்ப்பரிப்பு. ஊர் மக்கள் அடங்கிப் போயினர். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

18 மே 2016

நடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1

ந்தக் கட்டுரையில் பாலினேசியப் பெண்கின் பத்ை அிகாகச் சேர்த்ுள்ளேன். அற்குக் காரம் அவர்கின் மையர் ி ிராவிடர் இனத்ைச் சேர்ந்தர்கள். அுவும் ஒரு வாறு. அைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்காகச் சொல்கிறேன். 

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள். கரித்துக் கொட்டும் கிராமத்துச் சிலேடை. உங்களுக்கும் தெரியும். தெரியாவிட்டால் பரவாயில்லை. இனிமேல் தெரிந்து கொள்ளலாம். அந்தக் கதையில் வக்கிரப் பார்வை இருந்தாலும் சரி... இல்லை விவேகப் பார்வை இருந்தாலும் சரி... பிரச்சினை இல்லை. 
 

அந்தக் கரும்புக் கதையில் இந்தக் கதையையும் தூக்கிப் போட்டுச் சமாளித்துக் கொள்ளுங்கள். பரிதாபத்தின் கண்கள் பார்த்துக் கிரங்கிப் போன அதிபுத்திசாலிகளின் அரிச்சுவடிகள். 


நல்ல ஒரு வரலாற்று மர்மக் கதை. படித்த பிறகு உங்கள் மனசு சின்னதாய்க் கலகலக்கும். அப்படியே சன்னமாய்ச் சலசலக்கவும் செய்யும். பார்த்துக் கொள்ளுங்கள். சரிங்களா.

கன்னிப் பெண்களை வளைத்துப் பிடித்து

நீங்கள் எத்தனையோ விதமான வரலாற்றுக் கலகங்கள் புரட்சிகளைப் பற்றி படித்து இருப்பீர்கள். கேள்விப் பட்டும் இருப்பீர்கள். ஆனால், இப்போது படிக்கப் போகிற புரட்சி இருக்கிறதே... சும்மா சொல்லக் கூடாது.

ஒரு மாதிரியான புரட்சி. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. கன்னிப்பெண்களைக் கடத்திக் கொண்டு போன கதை. படியுங்கள்.
 

ஆழமான பசிபிக் மாக்கடலில் பிஜி தீவுக்கு அருகில் கப்பல் போய்க் கொண்டு இருக்கிறது. அந்தக் கப்பலில் வேலை செய்தவர்களில் ஒரு கும்பல். அந்தக் கும்பல் புரட்சி என்று சொல்லி கலகம் செய்து கப்பலைக் கைப்பற்றியது.

கப்பல் தலைவனையும் அந்தத் தலைவனின் எடுபிடிகளையும் பிடித்து ஒரு படகில் ஏற்றி 'செத்தாலும் சரி… பிழைத்தாலும் சரி. போய்த் தொலையுங்கள்' என்று அனாதையாக விரட்டி அடித்தது.
 

கப்பலைக் கைப்பற்றிய புரட்சிக் கும்பல் நேராக ஒரு தீவிற்குப் போனது. அங்கே இருந்த பூர்வீகக் கன்னிப் பெண்களை வளைத்துப் பிடிக்கிறது. அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு ஒரு கண்காணா தீவிற்குக் கடத்திக் கொண்டும் போகிறது.

அவர்கள் போனது மனித வாடையே இல்லாத மாசில்லாக் கன்னித்தீவு. அதிலே இந்தச் சின்னச் சின்னப் பெண்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள்.

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள்

புரட்சிக் கும்பலில் பலர் பல ஆண்டுகள் பெண்களைப் பார்க்காமல் கருகிப் போன சருகுகள். சொர்க்கத்தின் வாசல்படிகள் திறந்துவிடப் படுவதாக கும்பலின் தலைவன் சொல்கிறான். ஆளாளுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுக்கிறார்கள். கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறார்கள். அப்புறம் ஏறி வந்த கப்பலை அப்படியே சுவடு தெரியாமல் எரித்தும் விடுகிறார்கள். ஒரு சகாப்தம் உருவாகி விட்டது.
 

மறுபடியும் சொல்கிறேன். கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகளின் கதை. நினைவு படுத்துவதில் தப்பு இல்லை. அந்தக் கதையில் இதையும் போட்டுச் சமாளித்துக் கொள்ளுங்கள். பரிதாபத்திற்குரிய சில புத்திசாலிகளின் அரிச்சுவடியில் அவதரித்த ஒரு வரலாற்றுக் கதை.

இதில் ஒரு முக்கிய விசயம். அதிலும் ஓர் அதி சுவராசியமான விசயம் இருக்கிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள். சிலர் கிரிமினல் குற்றவாளிகள். இங்கிலாந்தின் லண்டன் சிறைகளில் கொலை, கொள்ளை, கடத்தல் குற்றங்களுக்காகத் கம்பி எண்ணியவர்கள். அவர்களின் வயது 20 லிருந்து 50 வரையில் இருக்கும்.
 

கப்பல் பயணத்திற்காக அவர்களின் சிறைத் தணடனை பேரம் பேசப் பட்டது. ’நீங்கள் ஒழுங்காக நடந்து கொண்டால் உங்களுடைய தண்டனைகள் ரத்துச் செய்யப்படும்’ என்று சொல்லித் தான் அனுப்பப் பட்டார்கள். ஆனால் நடந்த கதையே வேறு. முதலுக்கே போசமாகிப் போனது. படியுங்கள்.

பதின்ம வயது சுதேசிப் பெண்கள்

கடத்தப்பட்ட பெண்கள் எல்லோரும் தாகித்தி (Tahiti) தீவில் வாழ்ந்த பாலினேசிய சுதேசிப் பெண்கள். அனைவரும் பதின்ம வயது பெண்கள். 13 லிருந்து 18 வயது வரை.

கடத்தல் கும்பலின் அந்தக் குடியேற்றம்தான் உலக வரலாற்றில் பிட்காய்னர்கள் (Pitcairners) எனும் ஒரு புதிய சந்ததியையே உருவாக்கிக் கொடுத்தது. வெகு நாட்களுக்கு அந்தப் புதிய சகாப்தத்தைப் பற்றி வெளி உலகத்தில் யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.
 

கடத்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கே அந்தத் தீவில் பல வெட்டுக்குத்துகள். பல கொலைகள். அதன் பிறகுதான் அங்கே ஒரு புதிய சமுதாயம் தோன்றியது. கப்பல் புரட்சியில் தோன்றிய ஒரு சமுதாயம்.

புரட்சி என்ற சொல் இன்றைய காலத்தில் ஓர் இறுக்கத்தைக் கொடுக்கிறது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அந்த வாசகம் பல இடங்களில் புரையோடிக் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மணி கட்டும் தாதா புரட்சி

பிரெஞ்சுப் புரட்சி, கலாசாரப் புரட்சி (Cultural Revolution) எனும் சீனக் கலாசாரப் புரட்சி, போல்ஸ்விக் புரட்சி (Bolshevik Revolution) எனும் ரஷ்ய அக்டோபர் புரட்சி, அதிபர் மார்க்கோசிற்கு எதிரான புரட்சி, வங்காளப் புரட்சி, வெற்றிப் புரட்சி (Glorious Revolution) எனும் ஆங்கிலேயப் புரட்சி; அண்மையில் நடந்த புத்த பிக்குகளின் பர்மியப் புரட்சி, பெனாசிர் புட்டோ மறைவதற்கு முன்னால் பாகிஸ்தானில் நடந்த இராணுவப் புரட்சி என்று ஏகப்பட்ட புரட்சித் தழும்புகள்.
 

புரட்சி என்ற சொல்லுக்கு பூசை புனர்ஸ்காரம் செய்தவர்கள் கிரேக்கர்கள். அந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்கள் மூத்த முன்னோடிகள். இந்தப் புரட்சிகள் எல்லாவற்றுக்குமே மணி கட்டும் தாதா புரட்சியைப் பற்றியது தான் நம்முடைய இந்தக் கட்டுரை.

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று ஜமாய்க்கா. 1700 ஆம் ஆண்டுகளில் கறுப்பர்கள் நிறைய பேர் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்தனர். முதலாளிகள் எல்லாம் வெள்ளைக்காரர்கள். இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பு. அதனால், அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். இந்தச் சாப்பாட்டுத் தகராற்றில் பல அடிமைகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். பதிலுக்கு முதலாளிகளில் பலரும் செத்துப் போய் இருக்கிறார்கள். 
 

அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. கொடுக்கக் கொடுக்க இறங்கிக் கொண்டே இருந்தது. எல்லாரும் சாப்பாட்டு ராமன்களாக இருக்கிறார்களே என்று பயந்து போய் மாற்றுவழி தேடினார்கள்.

ஈரமான ஈரப்பலாக்காய் உபதேசம்

ஒரு சின்னச் செருகல். மாடு மாதிரி ஒருவன் உழைக்க வேண்டும். தசைகளைப் பிழிந்து... வியர்வையைக் கடலாக மாற்ற வேண்டும். இரத்தம் ஆவியாக மாற வேண்டும். எலும்புகளின் சுண்ணாம்பு எரிந்து போக வேண்டும். உடல் ஊன்கள் செல்லரித்துப் போக வேண்டும். ஆனால் சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் கேட்கக் கூடாதாம். என்னங்க இது. ரொம்ப அநியாயம் இல்ல.
 

பணமா கேட்டார்கள். சாப்பாடு தானே கேட்டார்கள். கொடுத்தால் என்னவாம். குறைஞ்சா போவுது. கொத்தடிமை எனும் சஞ்சிக் கூலிகளாக மலாயாவுக்கு வந்த நம்முடைய தாத்தா பாட்டிகளும் இப்படித் தானே கஷ்டப் பட்டு இருக்க வேண்டும். நினைக்கையில் மனம் வலிக்கிறது.

நம்ப கதைக்கு வருவோம். அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி இருந்தார். இவர் உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்தக் காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்று பரிந்துரை செய்தார். 
 

இந்த ஈரப் பலாக்காய் நம் மலேசியாவிலும் இருக்கிறது. மலேசிய மொழியில் சுக்குன் என்று அழைக்கிறார்கள். தெரியும்தானே. துண்டு துண்டுகளாக வெட்டி கோதுமை மாவில் போட்டு பலகாரம் செய்வார்கள். இதன் அறிவியல் பெயர் Artocarpus Communis.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

நவரச நாடகத்தின் சூப்பர் ஸ்டார்

இந்த ஆய்வுப் பயணத்திற்கு பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் பிரத்தியேகமாகக் கட்டப் பட்டது. 215 டன் எடை கொண்ட கப்பல். 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது.

பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.
 

துணைத் தளபதியாக பிளெட்சர் கிரிஸ்டியன் என்பவர் இருந்தார். இந்தப் பிளெட்சர் கிரிஸ்டியன்தான் நடுக்கடலில் நடந்த நவரச நாடகத்திற்கு நல்ல ஒரு சூப்பர் ஸ்டார். சின்னச் சின்னக் கன்னியர்களைக் கடத்திக் கொண்டு போனதற்கும் காரணம். பக்கா கில்லாடி. அவரை மன்மத ராசா என்று சொல்லாம். அப்புறம் கதை ‘சப்’ என்று போய் விடும்.

இருந்தாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அண்மைய காலத்து மன்மத ராசா பட்டியலில் இவருக்கு தாராளமாக முதலிடம் கொடுக்கலாம். ’நான் அவனில்லை’ படத்தில் வரும் மன்மத ராசா இருக்கிறாரே, அவர் எல்லாம் இந்த ராசாவிடம் பிச்சை எடுக்க வேண்டும். பிளெட்சர் கிரிஸ்டியன் பக்கா கில்லாடி இல்லீங்க பலே மன்மதக் கில்லாடி.
 

இந்தக் கப்பல் கலகத்தைப் பற்றி இரண்டு திரைப் படங்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்று மியூட்டனி ஆன் தி பவுண்டி (Mutiny on the Bounty). 1962-இல் தயாரிக்கப் பட்டது. டிரெவர் ஹாவர்ட் நடித்து இருந்தார். இவர்தான் 1982-இல் வெளியான காந்தி படத்திலும் நடித்து இருந்தார். அதையும் இங்கே நினைவுப் படுத்தி விடுகிறேன்.

கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. இங்கிலாந்தில் புறப்பட்டு தென் அமெரிக்கா வந்தனர். அப்படியே மேற்குத் திசையில் பசிபிக் மாக்கடல் வழியாகப் போகத் திட்டம். இருந்தாலும் புயல் காற்று பலமாக வீசியதால் பயணத்தைத் திசை திருப்பினர்.

தென் ஆப்ரிக்கா வந்து நன்னம்பிக்கை முனை வழியாகத் திரும்பி... அப்படியே இந்து மாக்கடலுக்குள் சென்றனர். பின்னர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தனர்.

பயணம் செய்த தூரம் 27,086 மைல்கள். ஒரு நாளைக்கு 108 மைல்கள். பயணம் செய்த வழியில் அவர்கள் பார்த்த தீவுகளில் ஏறக்குறைய 50 நாட்கள் தங்கி இளைப்பாறி ஓய்வு எடுத்துக் கொண்டு வந்து இருக்கின்றனர்.
 

தாகித்தி தீவுக்குச் சற்றுத் தொலைவில் கப்பல் நங்கூரமிட்டது. கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி உள்ளூர் சுதேசிகள் சின்னச் சின்னப் படகுகளில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டனர்.

கடலில் வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு

அப்புறம் பவுண்டி கப்பலில் வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு. கேப்டன் ஜேம்ஸ் குக்கைப் பற்றி சுதேசி மக்கள் கேட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே, ஜேம்ஸ் குக் அந்தத் தீவிற்கு வந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் இறந்துவிட்ட செய்தி அவர்களுக்குத் தெரியவில்லை.

தெரிந்து இருக்க நியாயமும் இல்லை. பேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர், கணினி, கைப்பேசி எதுவுமே இல்லாத காலம். அதையும் மறந்து விடாதீர்கள். இருந்து இருந்தால்... வேண்டாங்க. அதைப் பற்றி பேச வேண்டாம். வசை பாட ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

அதற்கு முன்... சில ஆண்டுகளுக்கு முன்னால் கேப்டன் ஜேம்ஸ் குக், ஹவாய் தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடியின மக்களால் கொல்லப் பட்டார். அந்தச் செய்தி பாதுகாப்பு கருதி மறைக்கப் பட்டது என்பது வேறு விசயம். அதன் பின்னர், பூர்வீகக் குடியினர் அதாவது தாகித்தி மக்கள் கப்பலுக்கு வருவதும் போவதுமாக இருந்து இருக்கின்றனர்.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோசமாய் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை.

'நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... போங்க... வாங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனா... தயவு செஞ்சு… தயவு செஞ்சு பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்க பிளீஸ். அப்புறம் கொலையில்தான் போய் முடியும்...' என்று அவர்களுக்குப் படித்துப் படித்துச் சொன்னார்கள். கேட்டார்களா. எல்லோரும் கேட்டார்கள். பதிவுசாகப் பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போனார்கள்.

ஆனால் ஒரு மனமத ராசா மட்டும் கேட்கவில்லை. அந்த ராசாவுக்கு 18 வயசு. அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள். 

ஆக... நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்து இளிக்க... இரண்டு காந்தப் புலன்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  கண்ணும் கண்ணும் கலக்க... அவளும் கிட்ட வர... ராசாவும் நெருங்கிப் போக... அவளுடைய கையைப் பிடிக்க... தடவிக் கொடுக்க... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அவளும் கொஞ்சலாய் சிணுங்க... அதைப் பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... விசயத்தைப் போய் வெளியே சொல்ல... அப்புறம் என்ன...

மிச்சத்தை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம். (தொடரும்)