02 செப்டம்பர் 2016

அழ வைத்த ஔவை சண்முகி


சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரித்து வாழ்ந்திடாதே என்று எல்லோரையும் சிரிக்க வைத்தார். இன்றைக்கு அந்த எல்லோரையும் அழ வைத்து விட்டுப் போய் விட்டார். உற்றார் உறவினர்கள் சொந்த பந்தங்கள் என்று அவர்களுடன் சேர்ந்து உலகமே அழுது கொண்டு இருக்கிறது. ஓர் அற்புதமான கலைஞரை உலகம் இழந்து விட்டது.



மனத்தின் அழுத்தங்கள் ஓர் எல்லைக்குள் அடங்கிப் போக வேண்டும். தாண்டிப் போனால் மன உலைச்சல்கள் விஸ்வரூபம் எடுக்கும். மனிதனை மரணப் படுக்கையில் சாய்த்துவிடும். இதற்கு அமெரிக்க ஔவை சண்முகி நல்ல ஒரு சான்று. கோலிவூட்டிற்கு கமல்ஹாசன் ஓர் ஔவை சண்முகி என்றால் ஹாலிவூட்டிற்கு ரொபின் வில்லியம்ஸ் ஓர் ஔவை சண்முகி. 

சுத்த பத்தமான வெள்ளந்தி

மன அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அந்தக் கலைஞன் தற்கொலை செய்து கொண்டான் என்பது ஒரு வதந்தியாக இருந்துவிட்டுப் போகட்டும். இல்லை என்றால் அதை நம்மாலும் தாங்கிக் கொள்ள முடியாது.


அதிகம் பேசாமலேயே அசட்டுத் தனமான உடல் அசைவுகளினால், உலக மக்களைக் கட்டிப் போட்டவர். நவரச நாயகன் கமல்ஹாசனின் மானசீக குருவாக வலம் வந்தவர். மன்மதலீலைகளை வாசிக்கத் தெரியாத சுத்த பத்தமான வெள்ளந்தியாக வாழ்ந்தவர். 

கலை நகர்வுக்கு புதிய வடிவம்

மிஸ்டர் பீன்ஸ் நிகழ்ச்சி தெரியும் தானே. அதற்கு ஆரத்தி எடுத்து ஆலாபனை செய்தவர் இந்த ரொபின் வில்லியம்ஸ் தான். எதார்த்தமான உடல் கோணங்கித் தனத்தினால் மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த முடியும் எனும் ஒரு கலை நகர்வுக்கு புதிய வடிவம் கொடுத்த அந்த மனிதரை நினைத்துப் பார்ப்போம். சார்லி சாப்ளின், ரோவன் அட்கின்சன் (மிஸ்டர் பீன்) வரிசையில் ரொபின் வில்லியம்ஸுக்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம்.


அவருக்கு அதிகமானப் புகழ். அதிகமானச் செல்வாக்கு. இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்தன. துணைக்கு மன உலைச்சலைச் சேர்த்துக் கொண்டன. அடுத்து அவரை மது போதைக்கு அடிமையாக்கின. இப்போது அந்த மனிதரைப் பலிக்கடாவாகவும் ஆக்கி விட்டன. ஒரு நல்ல நடிகரை உலகம் இழந்து விட்டது.

புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர்

மனிதச் சாமான்ய வாழ்க்கையில் பணம், பெயர், புகழ், செல்வாக்கு போன்றவற்றினால் மன நிம்மதி, மன அமைதி, மன மகிழ்ச்சி, மன நிறைவுகளைப் பெற முடியாது என்பதற்கு ரொபின் வில்லியம்ஸ் நல்ல ஓர் எடுத்துக் காட்டு. 


ரொபின் வில்லியம்ஸ் என்பவர் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகர். அகடாமி விருதுகளுக்கு மூன்று முறை முன் மொழியப் பட்டவர். ஆனாலும், Good Will Hunting எனும் படத்திற்கு அகடாமி விருது கிடைத்தது. அகடாமி விருது என்பது இந்தியாவின் திரைப்பட தேசிய விருதிற்குச் சமமானதாகும். இரண்டு முறை எமி விருதுகள், இரண்டு முறை அமெரிக்கத் திரைப்பட விருதுகள், நான்கு முறை கோல்டன் குளோப் விருதுகள், ஐந்து முறை கிராமி விருதுகள் பெற்றவர்.

கணவர் எனக்கு ஒரு நல்ல தோழர்

அவருடைய இறப்புச் செய்தியைக் கேட்டு உலகமே அதிர்ந்து போனது. நேற்று வரை சிரித்துப் பேசிக் கொண்டு நல்லா தானே இருந்தார். திடீரென்று என்ன ஆனது. இத்தனைக்கும் பெரிய வயது இல்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம். உலக மக்களை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு மகிழ்ச்சிப் படுத்தி இருக்கலாம். அவருடைய மனைவி சூசன் என்ன சொல்கிறார் தெரியுமா. 


என்னுடைய கணவர் எனக்கு ஒரு நல்ல தோழராகவே இருந்தார். வாழ்ந்தார். யாரும் அழக்கூடாது என்று எப்போதும் சொல்வார். அமெரிக்கப் போர் வீரர்கள் ஈராக்கில் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் போது, அவர் அங்கே போனார். ஆடிப் பாடி நகைச்சுவை வழங்கி எல்லாரையும் சிரிக்க வைத்தார். சண்டை வேண்டாம் சமாதானமாகப் போவோம் என்று சொன்னவர் இப்போது அழ வைத்துவிட்டுப் போய் விட்டார் என்று சொல்கிறார்.


1993-ஆம் ஆண்டு மிஸஸ் டவுட்பையர் (Mrs. Doubtfire) எனும்  படத்தில் ஆண் பெண் இரட்டை வேடங்களில் நடித்து உலகத்தையே அசத்திக் காட்டியபர் இந்த ரொபின் வில்லியம்ஸ். 25 மில்லியன் பட்ஜெட் படம். ஆனால், 441 மில்லியன் வசூல் செய்து ‘பாக்ஸ் ஆபிஸ்’ சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தழுவி, 1996-ஆம் ஆண்டு, தமிழில் ஔவை சண்முகி படம் எடுக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே பரிச்சயம் ஆனது. கமல்ஹாசனின் நவரசங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தது.

கமல்ஹாசன் இரங்கல் செய்தி 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் ரொபின் வில்லியம்ஸை அதிகமாய்த் தெரிந்து வைத்து இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.  இறப்புச் செய்தியைக் கேட்டு துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார். கமல்ஹாசன் தன்னுடைய இரங்கல் செய்தியில் இப்படிச் சொல்கிறார். 

’தொடர்ந்தால் போல வேடிக்கையான முகபாவத்தை வைத்து இருப்பது மன அழுத்தத்தைத் தரும். அந்த வகையில் ரொபின் வில்லியம்ஸ் இயற்கையாகக் கண்ணீர் சிந்தி நடிப்பவர். அவரது படங்களில் அதைத் தெளிவாகக் காண முடியும். ஆணின் அழுகைக்கு ஒரு கண்ணியமான அர்த்தத்தைத் தந்தவர் ரொபின் வில்லியம்ஸ். அவரது திறமைக்காகவே நான் அவரைப் பெரிதும் விரும்புகின்றேன். 

கமலஹாசன் கவலை

ஆனால் அவரது மரணம் தற்கொலை என்பது உறுதியானால், அந்தச் செயலை வெறுக்கிறேன். திறமை வாய்ந்த ஒரு நடிகரான அவரிடம் இருந்து, இப்படிப்பட்ட ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை என்று கமலஹாசன் கவலையுடன் கூறினார். 

ரொபின் வில்லியம்ஸ்க்கு எல்லாம் இருந்தன. ஆனால், மன நிம்மதியும் மன அமைதியும் மட்டும் கிடைக்கவே இல்லை. மாற்றுவழியாக மது போதைக்குப் பாதை மாறினார். ஒட்டு மொத்தமாக அவற்றுக்கு அடிமையாகியும் போனார். கடைசியில் என்ன ஆனது. தன் உயிரையே அடமானம் வைக்க வேண்டி வந்தது. 

அதிகமான போதைப் பொருட்கள்

இரண்டு முறை மதுப் பழக்கத்தில் இருந்து வெளியாகி புனரமைப்பு மையங்களில் புதிய வாழ்க்கை தேடி இருக்கிறார். பல ஆண்டுகள் அந்தத் தறுதலைகளின் பக்கம் தலை வைக்காமல் பயணித்தும் இருக்கிறார். இருந்தாலும், சில சமயங்களில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி இருந்தது கடைசியில் கள்ளிக் காயாக மாறிப் போனது.

அவர் அதிகமான போதைப் பொருளைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று வதந்தி நிலவுகிறது. அதிகமாக மதுவையும் போதைப் பொருட்களையும் பயன்படுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று இன்னொரு வதந்தியும் நிலவுகிறது. 

அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது மூன்றாவது வதந்தி. எது எப்படியோ அவர் இறந்து விட்டார். இப்போது நம்மிடம் இல்லை, மன உலைச்சலின் காரணமாக மது மயக்கத்திற்கு அடிமையாகிப் போனது என்பது என்னவோ உண்மை.  

மனைவியினால் பிரச்சினை தொடங்கியது

ஔவை சண்முகி படத்தில் கமல்ஹாசன் எப்படி நடித்து இருந்தாரோ, அதைவிட மிஸஸ் டவுட்பையர் படத்தில் ரொபின் வில்லியம்ஸ் சிறப்பாகவே நடித்து இருந்தார். அந்தப் படத்தை நானும் பார்த்து இருக்கிறேன். அதனால்தான், ரசிகர்களால் ரொபின் வில்லியம்ஸின் இறப்பை அவ்வளவு எளிதாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

இப்படி உலகத்து மக்கள் எல்லோரையும் சிரித்து மகிழ்வித்த இவருக்கு வீட்டிலே தான் பிரச்சினை ஆரம்பமானது. அவருடைய மனைவியினால் தான் பிரச்சினை தொடங்கியது. மனைவின் பெயர் வாலரி வாலார்டி. 1978-இல் திருமணம். அப்போது அவருக்கு வயது 27. 

மணவாழ்க்கையில் பல சிக்கலகள்

குடும்பம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. வாலரி வாலார்டி தன்னைவிட வயது குறைந்த ஒருவருடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த ரொபின் வில்லியம்ஸ் குடிக்க ஆரம்பித்தார். அதனால் பலப் பல சிக்கல்கள். கடைசியில் பத்தாண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டார்கள். 

அடுத்து மார்ஷா கார்சே என்பவரை ரொபின் வில்லியம்ஸ் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவின் காலத்தில் தான், ஆங்கில ஔவை சண்முகி (மிஸஸ் டவுட்பையர்) படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் திருமணமும் விவாகரத்தில் போய் முடிந்தது. 

மூன்று ஆண்டுகள் கழித்து சூசன் சினேய்டர் எனும் பெண்னைத் திருமணம் செய்து கொண்டார். இங்கேயும் பிரச்சினைதான். இருந்தாலும் வாழ்க்கையை அமைதியாக ஓட்டிக் கொண்டு வந்தார். ஏற்கனவே வாழ்ந்த மனைவிகள் ஜீவனாம்சம் கோரி வழக்கு மேல் வழக்கு போட்டு, அவரை ரொம்பவும் அலைகழித்து விட்டார்கள். 

மகள் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை

மன உலைச்சல்களில் இருந்து அவரால் மீள முடியவில்லை. மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார். அப்புறம் போதைப் பொருட்களுடன் சகவாசம் ஏற்பட்டது. கடைசியில், இரண்டு நாட்களுக்கு முன்னர் குடி, போதைப் பொருட்களால் தன் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

இவருக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்கள். ஒரு மகள். பெயர் செல்டா வில்லியம்ஸ். இவரும் புகழ்பெற்ற ஹாலிவூட் நடிகை என்பதைச் சொல்லி விடுகிறேன். இதுவரை 15 படங்களில் நடித்து இருக்கிறார். செல்டா தன் தந்தையுடன் சேர்ந்து ’ஹவுஸ் ஆப் டி’ எனும் படத்தில் நடித்து இருக்கிறார். 

தவிர, தந்தையும் மகளும் சில பாடல்களைப் பாடி தொகுப்பாக வெளியிட்டு இருக்கின்றனர். எமி விருதும் கிடைத்து இருக்கிறது. செல்டா வில்லியம்ஸ் 2007-ஆம் ஆண்டு அமெரிக்க நடிகைகளில் அழகான நடிகையாகத் தேர்வு செய்யப் பட்டவர். தன் தந்தையாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவர். தந்தையாரின் மறைவு இவரை மிகவும் பாதித்துவிட்டது. ஒரு மாதத்திற்குத் தன் படப் பிடிப்புகளை நிறுத்தி வைத்து இருப்பதாகக் கேள்வி.

தனிமை வாழ்க்கை

ரொபின் வில்லியம்ஸ், 1951 ஜூலை மாதம் 21-ஆம் தேதி சிக்காகோவில் பிறந்தவர். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பெரிய வீடு. தனிமையிலேயே வாழ்ந்து இருக்கிறார். நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. சின்னச் சின்ன பொம்மை போர் வீரர்கள் தான் நண்பர்கள். அவர்கள்தான் அவருக்குத் துணை. அம்மாவிடம் அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி வீசி அட்டகாசம் செய்வார்.

வில்லியம்ஸின் தந்தையார் எப்போதும் வீட்டில் இருப்பது இல்லை. அப்படியே வீட்டில் இருந்தால் ரொபின் வில்லியம்ஸின் அடிவயிறு கலங்கும். அம்மாவும் வேலைச் செய்தார். அதனால் பெரும்பாலும் வேலைக்காரிகளின் பராமரிப்பிலேயே வாழ்ந்தார். அவர் வளர்க்கப்பட முறைதான் அவரிடம் ஒரு புறக்கணிப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டதாக ரொபின் வில்லியம்ஸ் சொல்கிறார். அந்த உணர்வை ‘லவ் மி சிண்ட்ரோம்’  (Love Me Syndrome) என்று சொல்லி வந்தார்.

1978-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். படிப்படியாக முன்னேறி அமெரிக்காவின் ஔவை சண்முகி எனும் அவதாரத்தையும் எடுத்து விட்டார். எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவர், தனக்குத் தானே தண்டனையை விதித்துக் கொண்டது தான் வேதனையான விஷயம். ஓடி ஆடி சிரிக்க வைத்த ஒரு சிரிப்பு ராஜாவை மனுக்குலம் இழந்து விட்டது.

Pasupathy Sithamparam - The Lost Boys and Girls

Fact: Every year nearly 7,000 students drop out from schools
Reason: They do not find memorising formulas interesting
 

 Pasupathy Sithamparam

And the story goes... As we sat through the graduation ceremony, watching 65 school drop outs and SPM flankers strut joyfully up the stage to receive their certificate from a Minister from the Prime Minister’s office. 

We nearly teared watching those boys and girls whom were considered a "lost cause" by their own parents and teachers at school... proudly showing off their certificates.

Of course if you compare their certificates with a Diploma and Degree certificate... it is nothing big but to them it was something enormous. 

MySkills

It was their ticket for a second chance to life. With this certificate which they worked hard for a year plus they can now apply for proper jobs applicable via the certificate.

Two hours before that we actually walked nimbly into the hall expecting another boring event. But we regretted assuming as Life dealt us another lesson.

After the graduation ceremony and right after the press conference with the minister, we rushed to meet at least three of these children and asked them how they felt. All of these kids were aged around 16 to 20′s and they’re school drop outs. 

As the Education Blueprint puts them, the lost boys. Some did horrendously bad for their SPM examinations, ending up working as cleaners and some even worst, succumbing to drugs.



However, thanks to the MySkills Foundation... these kids were given a second lease to life. Currently, the foundation provides these children with skill trainings consisting of mechatronics, electronics and legal secretarial training/courses for boys and girls alike.

We wish you were there... because these words can’t simply sum what we witnessed. To us this was news as a bunch of 65 once "good for nothings" finally receiving certificates and some are already working in their respective fields already mind you.

Education should not be constricted to grades alone. Education should branch out further than grades, it should branch out to skills and values. It should be free too if you ask me.

We met the founder Mr Pasupathi Sithamparam, a very humble and down to earth man and we had a good short chat. We suggested to him to branch out to providing creative skills to these kids as well. 

You will be surprised if you hand one or two of them a camera and the photos and videos they can take can sweep you off your feet.



These different class of students are creative in their own ways as they do better in practical related jobs.
 
Mr. Pasupathi said the course is open to all Malaysians who are school drop outs and SPM underachievers who wish to do something with their lives.



We value education. We value life too. As someone close to my Heart once said The End of Education is Character. Now we saw character in the 65 lost boys and girls.

This article is based on Sukhbir Cheema narration. He a cartoonist for Cilisos.my and has been contributing write ups to Says.com, The Business Insider, The Hyped Geek, Tally Press. More details from: http://www.nst.com.my/latest/school-dropouts-graduated-from-myskills-foundation-1.169650

Pasupathy Sithamparam

Pasupathy Sithamparam, born in Batu Arang, received his early education in Batu Arang Tamil School. He furthered his studies in chemical engineering at Universiti Kebangsaan Malaysia under a Public Services Department scholarship.


Upon graduating in 1983 he started working with the income tax department and in 1987 set off to UK to study law.

Coming from a poor family, he was well aware of the difficulties faced by youths from poor background and thus helping others has become an innate character of Pasupathy.

Pasupathy has learned how an empowering environment can make the difference. He recalls how his parents, teachers and those he knew helped to transform his life for the better.

"Poverty can make you a criminal or a successful person depending the environment that you are in. I was in the empowering environment," he said.

He has been instrumental in drawing attention of the community, social institutions and the government to critical issues faced by the community.

He is committed in improving the standards of Indian students in primary schools and is the president of the Education, Welfare and Research Foundation (EWRF), an organisation that promotes education and the mother tongue through various programmes.

Pasupathy is also one of the trustees for the World Tamil Relief Fund that assists and provides support for the Tamil community all over the world in times of calamities or war.

He is a lawyer in practice since 1990. He has been active in various social organizations; President of Educational Welfare Research Foundation (EWRF) for the period 2006-2010, Founder Member and President of Tamil Foundation.


Source:http://www.martialarts.com.my/mcm/index.php/news/tag/Three%20Honoured%20For%20The%20Betterment%20Of%20Tamil%20Youths

01 செப்டம்பர் 2016

More Malaysian Indian Youths Joining Gangs

Purported gang insignia displayed in many school toilets are tell-tale signs that children are steering towards a life of violence from a young age.


This was raised at a forum titled ‘Kabali – Myth or Reality’ by panelist S Pasupathi director of MySkills Foundation.

Pasupathi believes there is a need for civil society members to come together to help Indian youths from as early as Standard One.


The blockbuster film ‘Kabali’ which stars Tamil film superstar Rajinikanth may have been exaggerated to a certain extent he admitted.

But the movie shot mostly in Malaysia and revolving around the lives of gangsters is nothing short of a reflection of the Indian community today Pasupathi had said.

You talk about violence in Kabali but just look at the recent shooting in Setapak and how (an Indian) girl and boy were butchered at Solaris Dutamas.

The Indian community has no one but itself to blame for the rise of gangs among their youth he added.

The community must be blamed because we don't want to acknowledge that such an issue is happening. The majority of gangs in the country are made up of Indians.

The problem is very serious. If you think everything is okay with the community, I think you are wrong.


Fellow panellist A Muraly a former gangster shared his life story during the forum and recalled how difficult it was for him to adapt to normal life after being jailed for six years.

Forum moderator Denison Jayasooria secretary-general of Society for the Promotion of Human Rights (Proham) noted how only a few non-governmental organisations in social work were paying visits to individuals they had previously cared for.

After-care is almost nil. Whether current NGOs are doing that – that's something worth looking into.

Muraly admitted that what was portrayed in ‘Kabali’ was “70 percent” true.

More and more Indian youths are joining gangs. The Indian population is getting smaller but gangsters are increasing.


Source: https://www.malaysiakini.com/news/353631

31 ஆகஸ்ட் 2016

பசுபதி சிதம்பரம்

யார் இந்த பசுபதி சிதம்பரம்...
 

மலேசிய நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதில் முன் உதாரணமாகத் திகழ்கின்றவர். ஆரம்பக் காலங்களில் அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் தான் போதிக்க வேண்டும் எனும் திட்டம் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது. யாவரும் அறிந்த தகவல். அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பசுபதியும் ஒருவர். உண்மையைச் சொன்னால் இவர் தான் முதல் நபர்.

தாய்மொழியில் தான் அறிவியல் கணிதப் பாடங்களைப் போதிக்க வேண்டும் என்று ஆய்வுகள் செய்து ஆய்வுக் கட்டுரைகள் மூலமாக உலகக் கல்வி சஞ்சிகைகளில் பிரசுரம் செய்து உலகம் அறியச் செய்தவர்.

வளர்ந்து வரும் ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை இனத்தின் தாய்மொழி மூன்றாம் தரமாகத் தாழ்த்தப் படுகிறது எனும் உண்மையை வெளியுலகத்திற்குச் சொன்னவர் இதே இந்தப் பசுபதி சிதம்பரம் அவர்கள் தான். 
(1. சான்று: http://www.world-education-center.org/index.php/wjet) 
(2. சான்று: http://www.scholink.org/ojs/index.php/wjer)

இவர் ஒரு வழக்கறிஞர் என்ற அடையாளத்தையும் மீறிய ஒரு சமூகச் சேவையாளர். ஒவ்வொரு முறையும் மலேசியாவில் தமிழர் வளர்ச்சிக்கான தடைகளும் சுரண்டல்களும் ஏற்படும் போது தன் வலுவான எதிர்ப்புக் குரலைப் பதித்து வந்தவர்.

அறிக்கைகள் ஆர்ப்பாட்டமான கோஷங்கள் என்று இருப்பது மலேசியத் தமிழர்களின் ஆண்டாண்டு கால எதிர்ப்பின் வடிவங்கள். அந்த வடிவங்களில் இருந்து பசுபதி சிதம்பரம் அவர்களின் சமூகச் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டதாகப் பயணிக்கின்றன.

மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு அதிகார மையங்கள் செய்யத் தவறியதை... செய்ய மறந்ததை... அல்லது செய்ய மறுத்ததைப் பசுபதி அவர்கள் தன் அறிவார்ந்த குழுவினரைக் கொண்டு இன்றும் செய்து வருகிறார். இன்னும் செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.

இவருடைய எதிர்ப்பின் வடிவங்கள் வெற்றுச் சொற்களின் வடிவங்களில் அமையவில்லை. துல்லியமான நகர்ச்சிகளால் அமைகின்றன.

அடுத்தத் தலைமுறைக்கு இவர் கொண்டு செல்லும் ஆரோக்கியமான எதிர்பார்ப்புகளை மலேசியத் தமிழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். போற்றிப் புகழ வேண்டும். மாறாகத் தவறித் தவறாக நினைத்துப் பார்ப்பது ஒரு பெரிய பாவச் செயலாகும்.

சவால் மிக்க ஒரு சூழலில் மிகப் பக்குவமாகப் பயணிக்கின்றார். மிக அறிவார்த்தமாக எதிர்கொள்கின்றார். நல்ல ஒரு வல்லமை. வாழ்த்துவோம். போற்றுவோம்.