22 மே 2018

மகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி

மலேசியத் தமிழர்கள் சாதித்து விட்டார்கள். மாற்றம் வேண்டும் என்று நினைத்தார்கள். மாற்றிக் காட்டி விட்டார்கள். அந்த மாற்றத்தைக் இறுக்கிப் பிடிக்கும் ஓர் இரும்புக் கவசமாகவும் மாறி விட்டார்கள்.

Image may contain: 9 people, people smiling

ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களின் அகம்பாவங்களையும் எகத்தாளங்களையும் அசை போட்டுப் பாருங்கள். எத்தனை எத்தனை எடக்கு முடக்குகள். எத்தனை எத்தனை நக்கல் நையாண்டிகள். எத்தனை எத்தனை கூத்துக் கொம்மாளங்கள். நினைத்துப் பார்த்தால் பற்றிக் கொண்டு வருகிறது.

குட்டிக் குட்டித் தலைவர்களில் இருந்து மேட்டுக்குடி மோடி மஸ்தான்கள் வரை ஆடாத ஆட்டமா. போடாத வேசமா. நடிக்காத நாடகமா. செய்யாத அசிங்கமா.

ரம்பா சம்பா சம்பாதான் என்று சொல்லிச் சொல்லியே மலேசியத் தமிழர்களின் எதிர்காலத்தையே ’சம்பா சாராப்’ என்று குப்பைக் கூளமாக்கி விட்டார்கள்.

Image may contain: 2 people, people smiling

ஆதிதாளம், அடதாளம், திரிபுரதாளம், ஜம்பதாளம், ரூபகதாளம் ஆகியவை பஞ்ச தாளங்கள் என்று சொல்வார்கள். ஒத்து வராமல் நொந்து நூலாகும் போது ஏக தாளம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இங்கேயும் நடந்தது. விடுங்கள். அடுத்து நம் இந்தியச் சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம்.

அதற்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தலில் துன் மகாதீரின் சாணக்கியம் பற்றி கண்டிப்பாக கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். மகாதீர் எனும் மகா சாணக்கியர் இல்லாமல் மலேசியாவில் ஆட்சி மாற்றம் நடந்து இருக்கவே முடியாது.



Image may contain: cloud, sky, tree, skyscraper and outdoor

துன் மகாதீர் எப்படி சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி இருக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். நான் ரெடி. நீங்கள் ரெடியா.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். மலேசியாவிலும் சரி சிங்கப்பூரிலும் சரி. ஆட்சி மாற்றம் என்பது நடந்து இருக்கவே முடியாது. அது கனவில் தான் நடந்து இருக்கும். உங்களுக்கு ஒரு படக்காட்சியை முன் வைக்கிறேன். ஒரு கற்பனை. இப்போது மகாதீரே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தக் காட்சியில் அன்வார் இருக்கிறார். மொகைதீன் இருக்கிறார். லிம் கிட் சியாங் இருக்கிறார். குலசேகரன் இருக்கிறார். வேறு எந்தப் பெரும்புள்ளி வேண்டும் என்றாலும் இருக்கட்டும். 

இருப்பினும் நடந்து முடிந்த தேர்தலில் 222 நாடாளுமன்ற இடங்களில் எதிர்க்கட்சியினர் 200 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் இந்த அரசியல் மாற்றம்; இந்த ஆட்சி மாற்றம் நடந்து இருக்கவே இருக்காது.

மலேசியா என்றால் பாரிசான். பாரிசான் என்றால் மலேசியா. கீழே சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி போல.

அடுத்து மகாதீர் மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சியினர் 200 இடங்களில் வெற்றி பெற்று இருந்தால் எங்கேயாவது இரண்டு மூன்று இடங்களில் சிறிய பெரிய அசம்பாவிதங்கள் நடந்து இருக்கலாம். இது என் கணிப்பு.

அதன் பின்னர் மாஜ்லீஸ் கெசெலாமாத்தான் நெகாரா எனும் தேசிய பாதுகாப்பு மன்றத்தை முடுக்கிவிட்டு இருப்பார்கள். அதாவது செயல்படுத்தி இருப்பார்கள்.

1969-இல் இனக்கலவரம் வந்த பொழுது துன் ரசாக் அவர்கள் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். துங்கு வெளியே போக முடியாதபடி வீட்டிலேயே முடக்கப் பட்டார். தெரியும் தானே. அது வரலாறு. ஆகவே துணிந்து எழுதலாம்.

அதே மாதிரி தான் இங்கேயும் நடந்து இருக்கும். தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமைப் பொறுப்பை நஜீப் ஏற்று இருக்க மாட்டார். நிச்சயமாக. மற்ற தலைவர்களில் ஒருவர் தான் பொறுப்பை ஏற்று இருப்பார். பின்புலத்தில் நஜீப் இயக்குச் சக்தியாக விளங்கி இருப்பார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தைக் கொஞ்ச காலம் செயல் படுத்திய பின்னர் மறு பொதுத் தேர்தலைக் கொண்டு வந்து இருப்பார்கள். சரி.

இப்படி எல்லாம் குழப்பங்கள் பிரச்சினைகள் கசப்புகள் வந்த பின்னர் மறுபடியும் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் பொது மக்கள் எதிர்க்கட்சிகளுக்குத் துணிந்து ஓட்டு போடுவார்களா. சொல்லுங்கள். முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

துன் மகாதீர் அவர்களின் சாணக்கியத் திறமைக்கு வருகிறேன். நடந்த முடிந்த தேர்தலில் ஒரு சுள்ளி அசம்பாவிதமும் நடக்கவில்லை. பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஜெயித்து துன் மகாதீர் பிரதமர் பதவியை ஏற்கும் வரையில் ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

பொதுமக்கள் யாருக்கும் எவருக்கும் எந்தவித ஒரு சின்ன பாதிப்பும் ஏற்படவில்லை. எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு கசப்பான நிகழ்வு நடந்ததா. இல்லை. எங்கேயாவது ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டதா. இல்லை.

பொதுமக்கள் அப்படியே அப்படியே பாதுகாப்பாக இருந்தார்கள். அவர்கள் மீது ஒரு துளி கீறல்கூட விழவில்லை. பத்திரமாக இருந்தார்கள். அப்படியே ஆட்சியையும் மாற்றிக் காட்டி இருக்கிறார்கள். சரி.

நஜீப்பிற்கு நன்றாகத் தெரியும். அவர் தோற்றுப் போனால் நிச்சயமாக அவரைப் பிடிப்பார்கள். பிடித்துக் கொண்டு போய் சிறையில் போடுவார்கள். சிறையிலேயே கிடக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரியாமல் இருக்குமா. என்னங்க.

அவர் என்ன கிண்டர்கார்டன் மாணவரா இல்லை பால் குடிக்கும் பச்சை சிசுவா. பத்துப் பதினைந்து வருடங்களாக ஒரு நாட்டை ஆட்சி செய்த ஒரு பெரிய ஜாம்பவான்ங்க. அவரைக் குறைத்து மதிப்பிட முடியுமா. சொல்லுங்கள்.

இங்கே ஒன்றை நன்றாகக் கவனியுங்கள்.

தேர்தல் நடந்த தினத்தில் ஏறக்குறைய 9 மணிக்கு எல்லாம் முக்கால்வாசி முடிவுகள் வந்து விட்டன. நஜீப்பின் பாரிசான் கட்சி தோற்று வருகிறது என்பது அவருக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரியும். ரொம்ப வேண்டாம். அன்றிரவு 12 மணிக்கு எல்லாம் முடிவு தெரிந்து விட்டது. நஜீப் தோற்று விட்டார் எனும் முடிவு தெரிந்து விட்டது. சரி.

அப்படி இருக்கும் போது நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை நஜீப் ஏன் எடுக்கவில்லை. இன்னும் ஒரு விசயம். குறைந்த பட்சம் அவருடைய குடும்பத்தையாவது எங்கேயாவது கொண்டு போய் மறைத்து வைத்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி. நஜீப் என்ன நம்ப விடுதலைப் புலித்தலைவர் மாதிரி உயிரையும் உடலையும் மண்ணுக்கு தாரை வார்க்கும் தியாகச் சீலரா.

தமிழ்த் தலைவர் பிரபாகரன் எல்லாம் சுத்தமான தியாகிகள். கடைசி வரையில் தன் குடும்பத்தினரைப் பக்கத்திலேயே வைத்து இருந்தார். தன் மனைவி மக்கள் அனைவரையும் தமிழீழ மண்ணுக்காகத் தியாகம் செய்தவர். தன் குடும்பத்தைவிட தமிழீழமே தன்னுயிர் என்று நினைத்தவர்.

கழுத்திற்குக் கத்தி வந்த பின்னரும் ஏன் நஜீப் பேசாமல் இருந்தார். சொல்லுங்கள். தன் குடும்பத்தை ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று ஏன் நஜீப் நினைக்கவில்லை.

இங்கே தான் அவருடைய மாஸ்டர் பிளேன் வருகிறது. எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று வந்தாலும் எப்படியாவது ஆட்சியை மாற்றிவிட முடியும். ஆட்சியைத் தன் வசம் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கையில் அவர் இருந்து இருக்கலாம்.

அதாவது ஆட்சி மாறுகிறதோ இல்லையோ அதிகாரம் தன் கையில் தான் இருக்கும் எனும் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையில் தான் அவர் பயணித்து இருக்கலாம். அந்த வகையில் அவர் எல்லா காய்களையும் அழகாக நகர்த்தி வந்து இருக்கலாம். அதாவது முன்கூட்டியே திட்டம் வகுத்து வைத்து இருக்கலாம்.

நஜீப் ஆட்சிக் காலத்தில் அவரின் செயல்பாடுகள் எல்லாம் சாதனைகள் அல்ல. அவற்றைச் சாதனைப் பட்டியலில் சேர்க்க முடியாது. பதவி அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். எதை வேண்டும் என்றாலும் செய்யலாம். இது உலகம் அறிந்த வரலாற்று உண்மை.

யார் ஒருவர் பிரதமராக வந்தாலும் சரி: அவர் பதவியில் இருக்கும் போது அவர் அந்த நாட்டின் மன்னருக்கு நெருக்குதல் கொடுக்க முடியும். கொடுக்கலாம். இராணுவத் தளபதிகளுக்கு நெருக்குதல் கொடுக்கலாம். அட்டர்னி ஜெனரலுக்கு நெருக்குதல் கொடுக்கலாம். அரசு இயந்திரங்களுக்கு நெருக்குதல் கொடுக்கலாம். அரசுசார் நிறுவனங்களுக்கு நெருக்குதல் கொடுக்கலாம்.

தனியார் நிறுவனங்களைச் சொல்லவே வேண்டாம். எண்ணெய் என்றதும் எள் நெய்யாய் வடிவார்கள். டோனி பெர்னாண்டஸைச் சொல்லவில்லை. அப்புறம் ஏர் ஏசியாவில் ஏற முடியாது. சிணுங்கும் சிவப்புச் சட்டை அணங்குகள் சீறிக் கொண்டு போவார்கள். நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு.

ஆக அந்த வகையில் ஒரு பிரதமர் தன் விரல் அசைவில் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும்.

ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். துன் மகாதீர் அவர்களிடம் எந்த ஓர் அதிகாரமும் இல்லை. அதாவது தேர்தல் நடக்கும் போதும் சரி; தேர்தல் முடிவுகள் வந்த பிறகும் சரி; அவரிடம் ஒரு துளி அதிகாரமும் இல்லை. அவர் அப்போது ஒரு பேசாமடந்தை.

ஆக எதுவுமே இல்லாமல் துன் மகாதீர் சாத்தியப் படுத்தி சரித்திரம் படைத்து இருக்கிறாரே. மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அழகாக அமைதியாக ஆட்சியை மாற்றி இருக்கிறாரே. அங்கேதான் பிரதமர் மகாதீர் நிற்கிறார்.

நாட்டில் ஒரு கலவரம் இல்லை. ஒரு சண்டை இல்லை. ஒரு சச்சரவு இல்லை. ஒரு பதற்றம் இல்லை. ஆங்காங்கே சின்னச் சின்ன அரசல் புரசல்கள் இருந்தன. அவை எல்லாம் எரிகிற வீட்டில் பிடுங்கிக் கொண்டு ஓடிய சில்லறைகளின் சில்மிசங்கள். என்ன செய்வது. தெருநாய்களுடன் சேர்ந்து கொண்ட சில வேட்டை நாய்களுக்கு மட்டுமே கெட்ட பெயர்.

சரி. மகாதீர் எப்படி இந்த மாதிரி இத்தனை லாவகமாக இத்தனை அற்புதமாக ஆட்சியை மாற்ற முடிந்தது. இங்கே தான் கிளைமக்ஸ் வருகிறது. அந்த உச்சம் என்ன தெரியுங்களா. அவர் நாட்டு மக்களுக்கு விடுமுறை கொடுத்தாரே அங்கேதான் எல்லா ரகசியங்களும் தொக்கி நிற்கின்றன.

இன்னும் ஒரு விசயம். மகாதீர் மிக மிக கண்டிப்பானவர். அவர் ஆட்சி செய்யும் போது லீவு என்பதே ஒரு குதிரைக் கொம்பு. அவரிடம் அப்படி ஒன்றும் சுலபமாக விடுமுறை வாங்கிவிட முடியாது.

இதைப் பற்றி கோலாலம்பூர் அரசியல் பார்வையாளர் ஊடக விமர்சகர் மதியழகன் என்ன சொல்கிறார் என்பதை நீங்களும் கேளுங்கள்.

‘எனக்கு தெரிஞ்சி அவர் கடைசியா கொடுத்த லீவு வந்து…. 1989 ‘சீ’ கேம்ஸ்ல நம்ப நாடு ஜெயிச்சு முதலாவதா வந்தப்ப லீவு கொடுத்தாரு. காமன்வெல்த் கேம்ஸ்லகூட அவரு லீவு கொடுக்கல. 2002இல் புகைமூட்டம் வந்தபோதுகூட அவரு லீவு கொடுக்கல. எதுக்கு உங்களுக்கு லீவு. போய் படிங்கனு சொன்னாரு.

அந்த மாதிரி அந்த மனுசன் லீவே கொடுக்க மாட்டாரு. தேர்தல் முடிஞ்ச மறுநாள் லீவு லீவுனு பக்காத்தான்காரங்க சொல்லிகிட்டு இருந்தாங்க. மகாதீர் வாயை திறக்கவே இல்லை. தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு தான் நான் ரெண்டு நாள் லீவு கொடுக்கிறேனு சொன்னாரு. எனக்கு லீவு கொடுக்கப் பிடிக்காது என்றும் சொன்னாரு. இருந்தாலும் பரவாயில்ல எல்லாரும் லீவுல போயிட்டு வாங்க. ஏன் அப்படி சொன்னார்’ என்று மதியழகன் தொடர்கிறார்.

தேர்தல் முடிந்த மறுநாள் வியாழக் கிழமை. அதற்கும் மறுநாள் வெள்ளிக் கிழமை. இந்த வெள்ளிக் கிழமையில் கிளந்தான், திரங்கானு, கெடா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் வார விடுமுறை. அரசாங்க அலுவலகங்கள் இயங்கா. ஞாயிற்றுக் கிழமை வந்ததும் வேலைக்குச் சென்று விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை அவர்களுக்கு வேலை நாள்.

ஆனால் இதர மாநிலங்களில் வியாழக் கிழமை; வெள்ளிக் கிழமைகளில் அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் இயங்கும். அதாவது புத்ராஜெயாவில் உள்ள அனைத்து அமைச்சரகங்களும் இயங்கும். 

அந்த வகையில் அட்டர்னி ஜெனரல் அலுவலகமும் இயங்கும். எல்லா அரசாங்க அலுவலகங்களும் வெள்ளிக்கிழமை இயங்க வேண்டும். எல்லா அரசாங்க அதிகாரிகளும் புத்ராஜெயாவில் இருப்பார்கள்.

ஆக மகாதீர் இப்படி நினைத்தார். அதாவது தேர்தல் முடிந்த மறுநாள் வியாழக் கிழமை. அதற்கும் மறுநாள் வெள்ளிக் கிழமை. அந்த நாட்களில் விடுமுறை கொடுத்தால் எல்லா அரசாங்க அதிகாரிகளும் சொந்த ஊர்களுக்குப் போய் விடுவார்கள். 

இன்னும் விளக்கமாகச் சொல்லலாம். புத்ரா ஜெயாவில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் ஏறக்குறைய 80% பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆக அந்த விடுமுறை நாட்களில் எவரும் புத்ரஜெயாவில் இருக்கப் போவது இல்லை. ஆக புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய ஐந்து நாட்களும் விடுமுறை நாட்களாகி விடும்.

அந்த நாட்களில் அரசாங்க வேலைகள் எதுவும் நடக்காது. அதாவது மத்திய அரசாங்கத்தில் எந்த வேலையும் நடக்காது. அந்த வகையில் எந்த அரசாங்க அதிகாரியும் எந்த கட்டளையையும் போட முடியாது.

கம்பத்துக்குப் போனவர்கள் ஐந்து நாட்களுக்குத் திரும்பி வரப்போவதும் இல்லை. ஆக புதராஜெயாவில் பிரச்சினை பண்ண எவரும் இருக்கப் போவதும் இல்லை. சரி. அப்படித் தான் மகா மகாதீர் காய்களை நகர்த்தி இருக்கிறார்.

வியாழக்கிழமை 10-ஆம் தேதி இரவு 9.30க்கு பிரதமர் பதவியை மகாதீர் ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற அடுத்த நிமிடமே புத்ராஜெயாவில் இருந்த எல்லா சாலைகளும் மூடப்பட்டன. அது தெரியுமா உங்களுக்கு. அங்கே இருந்த எந்த ஓர் அரசாங்க அலுவலகத்திற்குள் யாரும் போக முடியாது; ஒரு காக்கா குஞ்சு போக முடியாத அளவிற்குத் தடுப்புகள் போடப் பட்டன.

புத்ராஜெயாவிற்குப் போகும் சாலைகளை மூடச் சொல்லும் போது மகாதீர் புத்ராஜெயாவில் இல்லை. அப்போது அவர் யாயாசான் பெர்தானா மந்திரி அலுவலகத்தில் இருந்தார்.

இன்னும் ஒரு விசயம். இந்தக் கட்டுரையை எழுதும் போது புதன்கிழமை 16.05.2018 பிற்பகல் மணி நான்கு. இந்த நேரம் வரையிலும் பிரதமர் மகாதீர் புத்ராஜெயாவில் இருக்கும் தன் பிரதமர் அமைச்சகத்திற்குப் போகவில்லை.

புருணை சுல்தான் மலேசியாவுக்கு வந்த போதுகூட மகாதீர் அவரை யாயாசான் பெர்தானா மந்திரி அலுவலகத்தில் தான் சந்தித்துப் பேசினார். பிரதமர் அமைச்சகத்தில் அல்ல. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

இந்தக் கட்டுரையை இன்றைய தமிழ் மலர் நாளிதழில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

(கட்டுரை எழுதுவதற்குத் தகவல்களை வழங்கி உதவிகள் செய்த கோலாலம்பூர் மதியழகன் அவர்களுக்கு நன்றிகள்.)


 பின்னூட்டங்கள்

Magendran Rajendran அருமை ஐயா. அரசியலை ஆய்வு செய்து எழுதுவது மிகவும் கடினமான ஒன்று. நடுநிலையான மன நிலையில் அலச வேண்டும். என் காலம் முடிந்து தான் புதிய ஆட்சி மலரும் என்று நான் நினைத்து இருக்கிறேன். 

ஆனால் என் காலத்திலேயே அது நடந்து விட்டது.மகாதீர் எனும் அரசியல் வித்தகர் தான் இதற்கு சூத்திரதாரி.10 வயதில் Pantai Dalam Kuala Lumpur இல் தான் அவரின் முதல் அரசியல் உரையை கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. புரிந்தும் புரியாமல் அவர் எனக்குள் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

Mu Ta Neelavaanan Muthuvelu 1969 ல் வாழ்ந்த மக்களின் மன நிலையும், இன்றைய மலேசியர்களின் மன நிலையும் மாறியிருப்பதை அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. 1969 இன அடிப்படையிலான எதிர் கட்சி அரசியல் மேலோங்கி இருந்தது !

2018 மலேசியர் என்ற உணர்வு மேலோங்கி இருப்பதால் ,,, மே 13. மீண்டும் தலை தூக்க வாய்ப்பு மிக குறைவே !


அதைவிடுங்கள் ஐயா !


" ரம்பா, சம்பா,சம்பா சாராப் " சொல்லாடல் என்னை வெகுவாக கவர்ந்தது.


Gunasegar Manickam வாழ்த்துக்கள் நண்பரே.....தங்கள் பதிவு சிறப்பு, அருமை மற்றும் இளைய சமுதாயத்திற்கு தகவல் பெரும் நன்மையாக இருக்கும்.....மீண்டும் வாழ்த்துக்கள் ஐயா.....

Thanga Raju அரசியல் ஆய்வு பகிர்வு நல்ல முதிர்ச்சியடைந்த ஆசிரியர் என்று நினைக்க தோன்றுகிறது சபாஸ் வாழ்த்துகள்
 
Sathya Raman துன் அவர்கள் பழுத்த அரசியல் சாணக்கியர் என்றாலும்கூட கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்வதற்கு மீண்டும் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மலேசிய மக்களிடையே பிரித்தாளும் போக்கை நீக்கி இனம் ,சமயம் காத்திட துணைபுரிய வேண்டும். 

மீண்டும் பிரதமர் பணி மேற்கொண்டததிலிருந்து ஓய்வு ,சரியான தூக்கமின்றி இந்த வயதிலும் ஒரு இளைஞனைப்போன்று பம்பரமாய் இறங்கி வேலை செய்யும் துன் மகாதீர் அவர்களின் வருகை காலத்தின் கட்டாயம் என்றால் இவற்றை எல்லாம் நிர்ணயிப்பது மேலே இருந்து ஒருத்தர் என்பது மட்டும் புரிகிறது.

Sathya Raman சிறந்த நல்ல ஆய்வு தகவல் சார். வழக்கம்போல தங்களின் எழுத்துநடைக்கு மனம் மயங்கவேச்செய்கிறது.நன்றி சார்.

Sama Sivam Sama Sivam கட்டுரையை முழுமையாக
வாசிக்க தங்களின்
மின்னஞ்சல் முகவரியை
தரும்படி தாழ்மையுடன்
வேண்டுகிறேன நன்றி!
ஆ.சா.சிவம்
ஈப்போ
 


Parimala Muniyandy உங்களின் அரசியல் கண்ணோட்டம் அருமை ஐயா.வாழ்த்துகள்.👍👏

 நீல மேகன் · Friends with Dato' Muneandy 
அபாரம் ....... அருமையான விளக்கம் . எனக்கு மகாதீருக்கு ஆதரவு தர முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி 5 நாட்களில் அவருடைய பிரசாரம் நல்ல பலன் அளித்தது.வெற்றியும் பெற்றார் . வாழ்த்துக்கள் .



Edward Gana ·
சுப்ரா தூங்கி விட்டார். இவர்கள் சாதித்து விட்டார்கள்.






















மலேசியர் ஒருவர் 20,061 ரிங்கிட் கடனாளி

இன்றைக்கு 18.05.2018-ஆம் தேதி. இப்போது மணி மாலை 6.10க்கு மலேசியாவின் மக்கள் தொகை 31,782,291. 
 
அவர்களில் ;

மலாய்க்காரர்கள் 15,505,931 (50.1%).

சீனர்கள் 6,994,691 (26.2%).

சுதேசிகள் - புகலிடம் பெற்றவர்கள் (வங்காளதேசிகள், இந்தோனேசியர்கள், மற்றவர்கள்) 3,652,096 (11.8%).

இந்தியர்கள் 2,073,647 (6.7%).

குடியுரிமை இல்லாதவர்கள் 2,537,897 (8.2%).

இன்றைக்கு மணி மாலை 6.10 வரை மலேசியாவில் 696 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். இன்றைக்கு மணி மாலை 6.10 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 183.

நம் மலேசிய நாடு இது வரை வாங்கிய கடன் ரிம. 643,958,010,331 (643 பில்லியன்). நம் நாட்டில் வாழும் 31,782,271 பேர் மக்களின் பெயரில் அவர்களை அடைமானமாக வைத்துக் கடன் வாங்கப்பட்டு இருக்கிறது.

வாங்கி இருக்கும் கடனுக்கு வட்டியாக ஒவ்வொரு வருடமும் ரி.ம. 23,390,810,645 (23 பில்லியன்) கட்ட வேண்டும்.

ஒவ்வொரு வினாடிக்கும் வட்டி 742 ரிங்கிட். அதாவது ஒவ்வொரு விநாடிக்கும் 742 ரிங்கிட் கடனாக ஏறிக் கொண்டு போகிறது.

அந்த வகையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மலேசியரும் வெளிநாட்டினருக்கு 20,061 ரிங்கிட் கடன்காரனாக இருக்கிறார்கள்.

‘எனக்கு கடன் எதுவும் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டு இருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்கள் வெளிநாட்டினருக்குக் கடன்காரர்கள். இன்றைக்கு மணி மாலை 6.10 வரை
பிறந்த 696 பச்சைச் சிசுக்களும் கடன்காரர்கள் தான்.

ஆக இப்படி கடன் வாங்கியது யார். வாங்கிய கடனுக்கு நாம் தான் வரிப் பணமாக நம்முடைய பணத்தைச் செலுத்தி வருகிறோம். நாம் கட்டுவோம் என்று சொல்லி தான் 1MDB நிறுவனத்தின் பெயரில் 42 பில்லியன் கடன் வாங்கப் பட்டது.

அதில் 2.67 பில்லியன் நஜீப்பின் கணக்கில் சேர்க்கப்பட்டு தண்ணீர் மாதிரி செலவு செய்யப்பட்டு உள்ளது.

https://en.wikipedia.org/…/1Malaysia_Development_Berhad_sca…

அந்தக் காசை நாம் தான் கட்டப் போகிறோம். மகளின் வயிற்றில் இருக்கும் பேத்தியும் பேரனும் கட்டப் போகிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு?

ஆக இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி நாம் உழைத்துச் சம்பாதித்த காசை இப்படி அனாவசியமாக, ஆடம்பரமாக, திருட்டுத் தனமாகச் செலவு செய்தது நியாயமா?

ஏழைகளின் வயிற்றை அடித்து 1000 ரிங்கிட் உள்ளாடையை அணியத் தான் வேண்டுமா. அந்த உள்ளாடைக்கு தங்க வெள்ளி இழை நூல்கள் தேவை தானா.

அந்தப் பெண்மணி பயன்படுத்திய அந்த 1000 - 3000 ரிங்கிட் விலை உயர்ந்த உள்ளாடைகளுக்கு மலேசியர் ஒவ்வொரும் பணம் கட்ட வேண்டும் என்பது அவர்களின் தலையெழுத்தா? வாங்கி வந்த வரமா. பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் வரப்பிரசாதமா.

1MDB வழக்கு நீதிமன்றத்திற்கு வந்ததும் அதே உடைகளையும் அதே ஆபரணங்களையும் சாட்சிப் பொருளாகக் காட்சிப் படுத்துவார்களே... அப்போது என்ன செய்யலாம். சொல்லுங்கள்.

20 மே 2018

குலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர்

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் சுடர்மணியாய் ஜொலிப்பவர். மலேசியத் தமிழர்களின் சமூக நலன்களில் சுடர்விளக்காய்த் திகழ்பவர். மலேசியத் தமிழர்களின் மதமாற்றச் சர்ச்சையில் சுடரொளியாய் மிளிர்கின்றவர்.   
 

மலேசிய வரலாற்றுச் சுவடுகளில் மகிமை பேசுகின்ற மண்ணின் மைந்தர். அவர்தான் மாண்புமிகு எம். குலசேகரன். ஒரே வார்த்தையில் சொன்னால் மலேசிய இந்தியர்கள் கண்டெடுத்த மதிப்புமிகு மந்திரப் புன்னகை.

இப்போது ஓர் அமைச்சர். மலேசிய மனித வளத்தை வழிநடத்திச் செல்லப் போகும் தெளிந்த மனிதர். மாற்றம் ஒன்றே மாறாதது என்று மாறி வந்த மலேசிய இந்தியர்களின் கனவுகளுக்கு நனவுச் சீமானாகக் காலடி பதிக்கின்றார். வாழ்த்துகின்றோம்.

மதமாற்ற உரசல்களிலும் சரி; நீதிமன்ற நெரிசல்களிலும் சரி; சமர் மேடை விவாதங்களிலும் சரி; தனி மனிதப் பிடிமானங்களிலும் சரி; தனித்து நிற்பவர் விழித்தும் நிற்பவர் குலசேகரன். 
 

மலேசிய இந்தியர்களின் சமயப் பிரச்சினைகளை உலகப் பொதுப் பார்வைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தவரும் இதே இந்த மனிதர் தான். அதை யாராலும் மறுக்க முடியாது. அதுவரையிலும் அவர் நல்ல ஓர் அழகிய மகனாகவே நமக்குத் தெரிகின்றார்.

மலேசியப் பிரதமரிடம் தன் கருத்துகளை அழுத்தமாய் ஆழமாய் ஆணித்தரமாய் வெளிப்படுத்திய வைர நெஞ்சம் படைத்த ஒரு பெருமகன். விவேகமானத் துணிவுடன் செயல் படுபகின்றார்.

(http://ipohbaratvoice.blogspot.my/2016/02/kula-let-refugees-already-in-msia-do.html)

ஒரே வார்த்தையில் சொல்லலாம். இன்றையக் காலக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டத் தலைவர்களில் தனித்துப் பிரகாசிக்கின்றார். இது ஓர் ஆலாபனை இல்லை. ஓர் ஆராதனை. 
 

இவரைப் போல இன்னும் பலர் இருந்தனர். இருக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை.

எஸ்.ஏ. கணபதி, வீரசேனன், காட்டுப் பெருமாள், சிபில் கார்த்திகேசு, ஜானகி ஆதி நாகப்பன், ஜான் திவி, ராசம்மா பூபாலன், டி.ஆர்.சீனிவாசகம், அம்பிகா சீனிவாசன், சிசில் ராஜேந்திரா, சார்ல்ஸ் ஹெக்டர், கெங்காதரன் நாயர், கர்ப்பால் சிங், பி. பட்டு, வி. டேவிட், தேவன் நாயர், ஐரீன் பெர்னாண்டஸ், பி. உதயக்குமார் போன்ற மனித உரிமைப் போராட்டவாதிகளின் பட்டியல் நீள்கிறது.

அந்த வகையில் குலசேகரன் அவர்கள் மீது பலருக்கும் தனி ஒரு மரியாதை. எனக்கும் தனி ஒரு மதிப்பு.

ஆக மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்ல. உலகத் தமிழர்களும் இவரைப் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும். 
 

ஓர் இடைச் செருகல். சில சமயங்களில் குலசேகரனுடன் வெளியே போவது உண்டு. தேநீர் அருந்துவதற்கு ஒரு கடையில் நுழைந்தால் அங்கு உள்ளவர்கள் சிலர் எழுந்து வந்து குலசேகரனுடன் கைக் குலுக்குவார்கள். என்னையும் அறிமுகம் செய்து வைப்பார். இனிமையான நினைவுகள்.

சில சமயங்களில் முக்கிய விசயமாக இருந்தால் அவரை அழைப்பேன். நாடாளுமன்றத்தில் இருக்கிறேன். இன்றைக்கு இப்போதைக்கு இந்த விவாதம் நடக்கிறது. வருவதாக இருந்தால் சொல்லுங்கள். அனுமதி பெற்றுத் தருகிறேன் என்று அவசரம் இல்லாமல் நிதானமாகப் பேசுவார். பழக மிக இனிமையான மனிதர்.

எம். குலசேகரன் (Kulasegaran Murugeson) மலேசிய அரசியல்வாதி. மலேசிய இந்திய, சீன, பூர்வீகப் பழங்குடியினரின் உரிமைகள் போராட்டவாதி. ரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்தவர். அயராத உழைப்பு தளராத நம்பிக்கை. அந்த இரண்டும் தான் அவரை அரசியலின் சிகரத்திற்கு ஈர்த்துச் சென்று உள்ளன. 
 

2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த டத்தோ ஹோ சியோங் சிங்  (DATUK IR HO CHEONG SING) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். 68,394 வாக்காளர்கள். அதில் குலாவிற்கு 22,935 வாக்குகள். டத்தோ ஹோவிற்கு 22,337 வாக்குகள். 598 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2008-ஆம் ஆண்டு தேர்தலில் அதே ஈப்போ பாராட் தொகுதியில் ம.சீ.ச.வைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (YIK PHOOI HONG) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் குலாவிற்கு 32,576 வாக்குகள். இக் பூய் ஹோங்கிற்கு 17,042 வாக்குகள். 15,534 வாக்குப் பெரும்பான்மையில் குலா வெற்றி பெற்றார்.

2013-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே ஈப்போ பாராட் தொகுதியில் ம,சீ.ச.வைச் சேர்ந்த செங் வேய் ஈ என்பவரை (CHENG WEI YEE) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் குலாவிற்கு 45,420 வாக்குகள். செங் வேய் ஈ அவர்களுக்கு 16,382 வாக்குகள். 29,038 வாக்குப் பெரும்பான்மையில் குலா வெற்றி பெற்றார்.
 
Image result for kulasegaran m

அண்மையில் நடந்து முடிந்த 2018 பொதுத் தேர்தலில் மீண்டும் அதே  ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதி. குலசேகரனுக்கும் ம.சீ.ச.வைச் சேர்ந்த செங் வேய் ஈ என்பவருக்கும் நேரடி மோதல். அதில் குலசேகரனுக்கு 55,613 வாக்குகள். எதிர்த்துப் போட்டியிட்ட ம.சீ.ச. செங்கிற்கு 9,889 வாக்குகள். பெரும்பான்மை 45,324 வாக்குகளில் குலசேகரன் வெற்றி பெற்றார். ஒரு மிகையான பெரும்பான்மை என்று சொல்லலாம். இந்த முறை மலாய்க்காரர்களின் வாக்குகளும் கணிசமாக வந்து சேர்ந்தன. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் 84,874 வாக்காளர்கள் உள்ளனர். சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈப்போ மாநகரில் ஒரு தமிழர் வெற்றி பெற்றது மலேசிய அரசியலில் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். அதுவும் மிகையான பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றது மாபெரும் சாதனை என்பது வெள்ளிடைமலை.

இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்கள் 12%; சீனர்கள் 63%; இந்தியர்கள் 24%; மற்றவர்கள் 1%.

எம். குலசேகரன் மலேசியாவில் பிரபலமான ஒரு வழக்குரைஞர். 1980-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள ’-லிங்கன்ஸ் இன்’- (lincoln's Inn) எனும் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
Image result for kulasegaran m

1983 ஆகஸ்டு மாதம் 29-ஆம் தேதி மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யப் பட்டார். ஈப்போவில் சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

(http://www.kulaassociates.com/2015/08/malaysian-lawyer-mkulasegaranmalaysias.html - Malaysian lawyer M.Kulasegaran,Malaysia's International Criminal Court (ICC) stance a losing gambit)

மலேசிய இந்தியர்கள் தாங்கள் பிறந்த இந்த மண்ணில் மூன்றாம் தர மக்களாக நடத்தப் படுவதைக் கண்டு மனம் கலங்கியவர் எம். குலசேகரன். அந்த மக்களுக்கு எப்படியாவது உதவிகள் செய்ய வேண்டும் என்பது அவரின் தூரநோக்குப் பார்வை.

மலேசியாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல் கட்சியுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். 1995-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு ஈப்போ, தாமான் கேனிங் தொகுதியில் முதன்முதலாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வி. இருந்தாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

1997 மே மாதம் 17-ஆம் தேதி தெலுக் இந்தான் தொகுதியின் நாடாளுமன்ற இடைத் தேர்தல். பாரிசான் நேசனல் வேட்பாளர் சீ சி சோக் (Chee See Choke) என்பவருடன் போட்டி. 
Image result for kulasegaran m

அந்தத் தேர்தலில் குலசேகரனுக்கு 15,007 வாக்குகள். பாரிசான் நேசனல் சீ சி சோக்கிற்கு 12,091 வாக்குகள். ஆக 2,916 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்தத் தொகுதியின் மக்களுக்கு பல அரிய சேவைகளையும் செய்தார்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு நிறைய உதவிகளை வழங்கினார். தெலுக் இந்தான் பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருந்தார்கள்.

அதனால் பலர் அடையாள அட்டைகள், குடியுரிமைகள் இல்லாமல் இருந்தனர். தன்னுடைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி நூற்றுக் கணக்கான இந்தியர்களுக்கு அடையாள அட்டைகள், குடியுரிமைகள் பெற்றுத் தந்தார்.

1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல். ஈப்போ பாராட் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் ஹொ சியோங் சிங் (Ho Cheong Sing)  என்பவருடன் போட்டி. அந்தத் தேர்தலில் குலசேகரனுக்கு 21,477 வாக்குகள். பாரிசான் நேசனல் வேட்பாளருக்கு 25,155 வாக்குகள். அந்தத் தேர்தலில் குலசேகரனுக்குத் தோல்வி.  
 
Related image

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஒருமுறை அவருடைய அலுவலகம் உடைக்கப்பட்டு சில முக்கியமான சட்டப் பத்திரங்களும் பணமும் களவாடப் பட்டன. அரசியலுக்கும் தன்னுடைய அலுவலகம் உடைக்கப் பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று எம்.குலசேகரன் உறுதிப் படுத்தினார்.

இந்த 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் குலசேகரன் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்வதைக் காட்டிலும் மாற்றத்தை விரும்பிய மலேசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

(https://www.revolvy.com/main/index.php?s=M.%20Kulasegaran - 2013  M. Kulasegaran (DAP) - 45,420 - 73% - Cheng Wei Yee (MCA) - 16,382 - 26%)

இந்திராகாந்தி என்பவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவருடைய கணவர் இந்து சமயத்தில் இருந்து இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாறினார். தன் பெயரை முகமட் ரிசுவான் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். பின்னர் இந்திரா காந்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து தன் இரு பிள்ளைகளை மதமாற்றம் செய்து பெயர்களையும் மாற்றினார்.
Image result for kulasegaran m

கடைசியாக தன் மூன்றாவது மகளையும் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார். அதனால் ஷரியா சட்டப்படி பிள்ளைகள் அனைவரும் தகப்பனாரின் பராமரிப்பின் கீழ் வருவார்கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அநதத் தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

(http://hakam.org.my/wp/index.php/tag/m-indira-gandhi/ - Indira Gandhi’s marriage started falling apart around the time she gave birth to her third child, Prasana, in 2008)

தன்னுடைய குழந்தைகளை தன் அனுமதி இல்லாமல் மதமாற்றம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று வழக்கு தொடரப் பட்டது. இந்திராகாந்தியின் சார்பில் வழக்குரைஞர் எம். குலசேகரன் வாதாடினார்.

இந்த வழக்கு மலேசிய மக்களின் கவனத்தையும், அரசியல், நீதித்துறைகளைச் சார்ந்தவர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது. இறுதியில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயாரைச் சேரும் என்று ஈப்போ நீதிமன்றம் முடிவு செய்தது.
 
Image result for kulasegaran m

மலேசியாவில் இந்துக் கோயில்கள் உடைக்கப் படுவதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் குலசேகரன் கலந்து கொண்டு தன்னுடைய ஆதரவுகளை வழங்கி வந்துள்ளார்.

(http://www.csmonitor.com/World/Asia-Pacific/2008/0207/p04s01-woap.html - Temple demolitions anger Malaysia Indians)

2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. மலேசிய இந்தியர்களுக்கு பொருளாதார வகைகளில் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சமய, மொழி, கலாசார உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தலையாய கோரிக்கை.

அந்தப் பேரணியில் எம்.குலசேகரன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார். அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கேட்ட போது அவருடைய மனு முற்றாக மறுக்கப் பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அவர் நாடாளுமன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்பி வருகிறார்.

மலேசிய மக்களவையில் இந்தியர்களின் பிரச்னைகளைப் பற்றி பேசும் போது பல முறை ஆளும் கட்சியினரால் இவர் கேலி செய்யப்பட்டு உள்ளார். கீழ்த்தரமான சொற்களினால் வேதனைப்படுத்தப் பட்டுள்ளார்.
Image result for kulasegaran m

ஒருமுறை அவர் நாடாளுமன்றத்தில் ‘வேசைக்குப் பிறந்தவனே’ என்றும் திட்டப்பட்டும் இருக்கிறார். ’ஏசுபவர்கள் ஏசிவிட்டுப் போகட்டும். நான் என் கடமையைச் செய்து கொண்டே இருப்பேன்’ என்று சொன்னார் குலசேகரன்.

("Tajuddin uses 'b*****d' on Kulasegaran". Asia One. 6 November 2008)

2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் துணை சபாநாயகரின் கட்டளையை மீறி சபாநாயகர், துணை சபாநாயகர்களின் சம்பள உயர்வைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததார்.

அதனால் குலசேகரன் நாடாளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றம் செய்யப் பட்டார். நான்கு நாட்கள் அவர் நாடாளுமன்றத்தின் முகப்பு அறையிலேயே உட்கார்ந்து தன் பணிகளைச் செய்தார். இதுவும் ஒரு வரலாற்றுச் சுவடு.

ஜனநாயகக் கட்சி ஒரு மாதாந்திர இதழை வெளியிட்டு வருகிறது. அதன் பெயர் ராக்கெட். இந்த இதழின் தமிழ்ப் பகுதி ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது தான் குலசேகரன் என் நெருங்கிய நண்பர் ஆனார். 

 Image result for kulasegaran m

நடந்து முடிந்த 2018 தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் குலசேகரனைச் சந்தித்துப் பேசினேன். புந்தோங் பகுதியில் தன் குழுவினரோடு பிரசாரத்திற்கு வந்து இருந்தார். மற்றவர்களைப் பிரசாரத்திற்கு அனுப்பிவிட்டு என் வீட்டிற்கு வந்து விட்டார். பிரசார அலுப்பு. ஓய்வு எடுக்க வந்தார்.

நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அதன் பின்னர் சந்திக்க முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதும் வாழ்த்துச் சொல்ல அழைத்தேன். புத்ராஜெயாவில் இருப்பதாகச் சொன்னார்.

அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது ஓர் அமைச்சர். அழைத்தேன். கிடைக்கவில்லை. நிச்சயம் ரொம்பவும் பிசியாக இருப்பார். மலேசியாவின் புதிய மனிதவள அமைச்சர் அல்லவா.

இன்னும் ஒரு விசயம். எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதன் தாக்கத்தில் சென்ற 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கப் பட்டேன். தெரிந்த விசயம். அப்போது எனக்கு ஆதரவாக குலசேகரன் களம் இறங்கினார். நண்பர் என்ற முறையில் உதவிகள் செய்தார். மறக்க முடியாது. 
Image result for kulasegaran m


இப்போது அவர் ஓர் அமைச்சர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழர்ப் பிரதிநிதியாக வந்து இருக்கிறார். தமிழர்களுக்குப் பெருமை.

பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில் வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்கின்றார்கள். மங்காப் புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவ நாடிகளாக வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள். 

மாண்புமிகு எம். குலசேகரன் உண்மையிலேயே மலேசிய மண்ணின் மைந்தன். மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன். மலேசியச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத மனிதக் களஞ்சியமாக வலம் வருகின்றார். அமைச்சர் குலசேகரன் அவர்களை வாழ்த்துகிறோம்.

ஞானசேகரன் மாணிக்கம் இவரின் மக்களின் நலனுக்காக துணிவாக போராடும் குணத்திறகு வழங்கப்படும் பதவி இது. இறைவன் அருளால் நீண்டகால ஆயுளுடன் சேவையாற்றுவாராக.

Ta Peru குலாவின் போராட்டம் தொடரவேண்டும்.
என்இனமானவர்களுக்கு அவரது சமூகச்சேவை அயராமல் அவர்களை சென்றடையவேண்டுகிறேன். அமைச்சராக தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துகள்
 


Selbong Ratnasamy Thevar Congrats YAB Gunasegaran. We are indeed happy to see you representing the Indians in the cabinet however time and circumstances has to prove your mettle.

Maru Krishnan அரசியலில் பல ரகம் உண்டு அவைகளில் பெரும்பாலும் சுயநலம் நிறைய இருக்கும் அதுவும் மலேசியாவில் சொல்லவேண்டாம் இந்தியரில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டாலே தலையில் கொம்பு முளைத்து விடும் ஆனால் நமது குலா செல்லமாக அழைப்பது 4 தடவை ஒரே இடத்தில் அதுவும் சீனர்கள் 70% உள்ள இடத்தில் வெற்றிப்பெற்று தமிழர்களின் உயர்வுக்காக போராடும் போராட்டவாதியான நம் குலா மறைந்த பட்டு,டேவிட்டுக்கு பிறகு ஒரு உண்மையான தொண்டனைப் பார்க்கிறேன். பாராட்டுக்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

Ganabaskaran Nadason அருமையான கருத்து பரிமாற்றம் ஒரு அற்புதமான மனிதரைப்பற்றிமல்லாது, உயர்ந்த சிந்தனையும் சமுதயாய பற்றும் கொண்ட ஒரு இனிய நண்பர், மனிதர்

Image may contain: 1 person, standing 

Image may contain: 5 people, people smiling 

Pushpalata Ramasamy வளமான உழைக்கும் கரங்களை உருவாக்குங்கள் ஐயா மாண்புமிகு அவர்களே


 

18 மே 2018

மலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம்

மலேசிய இந்திய இனம் மலேசிய மண்ணில் சிந்தியது வியர்வை அல்ல. அது அந்த இனத்தின் இரத்தம்.
 



கித்தா தோப்புகளில் வடிந்தது பால் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.



தார் சடக்கில் வடிந்தது மழைநீர் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.
 



கம்பிச் சடக்கில் வடிந்தது கண்ணீர் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.



சயாம் பாதையில் வடிந்தது அழுகை அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.


வன்மங்களின் தாக்குதலில் ஆற்றாமையின் காயங்கள் நனைந்து போகின்றன. நினைத்துப் பார்க்கின்றேன். வெம்புகின்றேன்.
 

மலேசிய இந்தியர்கள் ஒரு சொர்க்க பூமியில் நரகச் சுமையைச் சுமந்து கொண்டு வாழ்ந்தார்கள். கடந்த அறுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த சன்மானங்களின் பட்டியல்;

நம்பிக்கைத் துரோகங்கள்;

ஏமாற்றங்கள்;

நயவஞ்சகங்கள்;

பசப்பு வார்த்தைகள்;

பச்சோந்தித் தனங்கள்;

சதித் திட்டங்கள்;

மோசடிகள்:

அநியாயங்கள்;

அக்கிரமங்கள்:

அந்த அவலங்களின் தலைவாசலாகக் கழுத்தை அறுக்கும் பொருளாதாரச் சுமைகள். ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கழுத்தை நெறிக்கும் வரிச் சுமைகள்.
 

இந்தியர்களின் நிலையோ அதையும் தாண்டிப் போனது. நிரந்தப் போராட்டக் களமாய்த் தொடர்ந்தது. தெருச் சண்டைகளில் போய் முடிந்தது. அத்தனையும் நெஞ்சைக் கீறிக் செந்நீர் கொட்டும் கொடூரமான அவலங்கள்.

கள்ளக் குடியேறிகளுக்கும் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கும் நீலநிற அடையாள அட்டைகள். கைநாட்டுப் போடத் தெரியாத கழிசடைகளுக்கு எல்லாம் நாட்டுரிமைப் பத்திரங்கள்.

காட்டை வெட்டி மேட்டை வெட்டி; கல்லை உடைத்து கற்பாறைகளைக் கரைத்து; மலையைப் பிளந்து குகைகளைக் குடைந்து; இந்த நாட்டை பசும்பொன் பூமியாக மாற்றியது என் இந்திய இனம். 
 

அந்த இனத்திற்கு கிடைத்த வாழ்நாள்ச் சாதனை என்ன தெரியுங்களா. ஒரு சிவப்பு அட்டை. என்னே சதிராட்டங்கள். என்னே அறிவிலிச் சூத்திரங்கள்.

செந்நீரையும் வியர்வை முத்துகளையும் இந்த மலேசிய மண்ணுக்கு அப்படியே உரமாக்கிச் சென்றவர்கள் என் இந்திய இனத்தவர்கள்.

இன்னும் எத்தனையோ தியாகங்களை என் இனத்தவர் வடித்துக் கொட்டிச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அப்போதைய அரசு அவர்களை நோக்கிக் கக்கியது எல்லாம் நஞ்சு கலந்த பசப்பு மொழிகள். அதிலே கிண்டல், நக்கல், நையாண்டி, இனத் துவேசம், மதத் துவேசம். அடிவருடி அரசியல்வாதிகள் சிலரும் பலரும் கண்டு கொள்ளவே இல்லை.
 

சுத்தமான விசுவாசத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத என் இனப் பாமர மக்களின் இதயங்களைக் கூறு போட்டது அந்தக் கடந்த கால அரசு தானே.

இன மதப் பாகுபாட்டின் சர்வாதிகாரத்தில் அதிநவீனமாக என் இனத்தை ஒதுக்கி வைத்தது அந்தக் கடந்த கால அரசு தானே.

புதிய ஆட்சி வந்தால் இந்த நாடு மோசமாகிப் போகும் என்று சொன்னது அந்தக் கடந்த கால அரசு தானே. அந்த அம்புலிமாமா கதை எல்லாம் இனி வேண்டாங்க.

இனி நாம் தரப் போகின்ற மாற்றம் தான் நம் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் அழியாச் சீதனம். அதுவே மலேசிய இந்தியர்களின் வரலாற்றுப் பொக்கிஷம்.


தெளிந்த நீரோடை போல ஓட்டுச் சாவடிக்குச் சென்றோம். நம் எதிர்கால நல்வாழ்விற்கு வேண்டினோம். நாளை நமதே என்று வாக்களித்தோம்.

நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்ட அவலத்தை அன்றோடு அப்படியே தலைமுழுகி விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

வசதிகள் மாறுகிறது
வாய்ப்புகள் மாறுகிறது
பதவிகள் மாறுகிறது
ஆட்சிகள் மாறுகிறது

மாற்றம் ஒன்றே மாறாதது

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை; உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை; சிலருக்குப் புரிவதும் இல்லை; சொன்னாலும் உரைப்பதும் இல்லை. பலருக்குப் புரிவதும் இல்லை;

மலேசிய இந்தியர்களின் உடனடித் தேவை பணம் காசு இல்லைங்க. பட்டம் பதவி இல்லைங்க. மாட மாளிகை இல்லைங்க. ஆடம்பர அலங்காரங்களும் இல்லைங்க. சமுதாயத்தின் ஒற்றுமை தாங்க இப்போதைய அவசியத் தேவை.

மலேசிய இந்தியச் சமுதாயத்தின் தலைவர்களே, வேற்றுமைகளை மறந்து ஒன்று படுங்கள். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நேர்மையாகச் சேவை செய்யுங்கள். புண்ணியத்தைச் சேருங்கள். இதுவே ஒரு சமுதாயத்தின் பொதுநல அறிவிப்பு.
 

மலேசிய இந்தியர்களே, மாலை மரியாதைப் போட்டு ஆயிரம் டத்தோ ஆயிரம் டான்ஸ்ரீ போட்டு அப்படியே கூழைப் கும்பிடு போட்டு எவரையும் ரொம்பவும் தூக்கி வைத்து ஆட வேண்டாமே. அரசியல்வாதிகள் பொதுமக்களின் சேவகர்கள். அதை நினவில் கொள்வோம். போதும்.

ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் ஓர் அரசியல்வாதியிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பாருங்கள். கவனியுங்கள். அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக அரசியல்வாதியைக் கன்னத்தில் அறைகின்ற கலாசாரம் வேண்டாமே. ஏற்கனவே ஒரு கன்னம் வீங்கி விட்டது. அதைத் தடவித் தடவி ஒத்தடம் கொடுத்து மண்ணையும் கவ்வியாச்சு.

62 ஆண்டுகள் அடிமைப்பட்டு வாழ்ந்து நொந்து போனது போதுங்க. இனி வரும் காலங்களில் இந்த பக்காத்தான் ஆட்சிக்காக மலேசியத் தமிழர்கள் ஒன்றுப்பட வேண்டும். நம் இந்தியச் சமுதாய எதிர்கால நலனுக்காக நம் வேற்றுமைகளை மறக்க வேண்டும்.

நமக்கு என ஒரு பிரதிநிதித்தை உருவாக்க வேண்டும். போட்டியும் பொறாமையும் இல்லாமல் நம் உரிமைகளுக்காகப் போராட வேண்டும். நல்ல அரசியல் சேவர்களை உருவாக்க வேண்டும்.
 

ஒவ்வோர் ஆட்சிக் காலத்திலும் நாம் எத்தனை எத்தனையோ இழந்தது விட்டோம். கணக்கில் அடங்கா. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் மீட்டு எடுப்போம். நம் பிள்ளைகளுக்கு வயிறார சோறு போடுவோம். மடி நிறைய கல்வியைக் கொடுப்போம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பட்டதாரியை உருவாக்குவோம். அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைப்போம். இதை ஒரு சத்திய வாக்காக ஏற்றுக் கொள்வோம்.

இன்னும் ஒரு விசயம். இது யாரையும் எவரையும் பழி வாங்கும் நோக்கத்தில் நடந்த தேர்தல் அல்ல. சட்டமும், நீதியும், ஒழுங்கும், மரியாதையும் தவறிப் போய் சாக்காட்டில் தத்தளித்து மூழ்கிக் கொண்டு இருந்த போது, அவற்றைக் காப்பாற்றவே வந்த தேர்தல். அப்படிச் சொல்கிறார் துன் மகாதீர்.

இன்று தோல்வி கண்ட அதே அந்தப் பாரிசான் கட்சித் தலைமையில் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சி செய்த அதே பிரதமர் சொல்கிறார் என்றால் அதில் நிச்சயம் ஓர் உண்மைச் சத்தியம் தொக்கி நிற்கிறது.

அண்மைய காலங்களில் அவருக்கு காலம் தாழ்ந்த சில கனவுகள். எதிர்காலத்தில் மலேசியா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனும் கனவுகள். அந்தக் கனவுகள் தன் வாழ்நாளிலேயே நனவுகளாக மாற வேண்டும் என நினைத்தார். கங்கணம் கட்டினார். அந்தக் கனவுகளின் நனவுகள் தான் இன்றைய மாபெரும் வெற்றி.

இந்த முறை மற்றும் ஒரு மிக முக்கியமான திருப்பம். இளம் சமூகத்தினர் 11% ஓட்டுப் போட வந்ததைத் தான் சொல்கிறேன். மொத்த வாக்குப் பதிவுகளில் பதினொரு விழுக்காடு 26 வயதிற்கும் குறைந்தவர்களின் வாக்கு.

ஒட்டு மொத்தமாக மலேசியர் எவருக்கும் பட்டவர்த்தனமான ஊழல் அரசை பிடிக்கவில்லை. அது தான் உண்மை. நாட்டிலே தலை விரித்தாடும் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள். அப்படி இருக்கும் போது மக்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த பணத்தை நாடோடிக் கொள்ளையர்கள் சூதாடுவதை இளைஞர்கள் விரும்பவில்லை. எதிர்த்தார்கள்.

அவர்களின் எதிர்காலம் சூன்யமாகிக் கொண்டு போவதை நன்றாகவே உணர்ந்து விட்டார்கள். அதை மாற்ற வேண்டும் என்று  நினைத்தார்கள். மாற்றியும் காட்டினார்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது. தெரியும் தானே. இங்கே சாது என்றால் பொதுமக்கள். காடு என்றால் ஊழல் பெருச்சாளிகள். ஒரு செருகல்.

இந்த உலகில் எந்த ஓர் அரசியல்வாதியும் ஒரு காமராசராக ஆக முடியாது. ஒரு கக்கனாகவும் ஆக முடியாது. கருவாட்டிற்கும் பூனைக்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்தாலும் அரசியல்வாதிக்கும் அகிம்சைக்கும் திருட்டுத் திருமணம் கூட செய்து வைக்க முடியாது. நோ சான்ஸ்.

அப்பேர்ப்பட்ட ஆபிரகாம் லிங்கனே தன் கடைசி நாட்களில் லஞ்சம் கொடுத்ததாக அரசல் புரசல். விடுங்கள். நம்ப கதைக்கு வருவோம்.

இந்த முறை மக்கள் விழித்துக் கொண்டார்கள். வெகுண்டு எழுந்தார்கள். மாற்றம் செய்தார்கள். ஆக அந்த வகையில் இந்தத் தேர்தல் வெற்றி என்பது மலேசிய மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு. அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

மலேசியத் தமிழர்கள் தங்கள் எதிர்ப்புகளை ஏற்கனவே பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூசகமாகக் காட்டி வந்தார்கள். அசைக்க முடியாத தலைமைத்துவம் கண்டுகொள்ளவில்லை. அதனால் என்ன ஆனது.

தங்களின் இந்தியத் தலைவரையே தோல்வி அடையச் செய்தார்கள். இது உண்மை அல்ல என்று சொல்ல முடியாது. நான் சொல்லவில்லை. அது மக்களின் வெளிப்பாடு. தப்பு என்றால் மாண்புமிகு குலசேகரனைப் போய்க் கேளுங்கள். நன்றாகவே பதில் கிடைக்கும்.

மலேசியத் தமிழர்களுக்கு அவர்களின் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்று சொல்லி இண்ட்ராப் இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். அப்படியே இந்த நாட்டையும் ஒரு கலக்கு கலக்கினார்கள். இத்தனை நடந்தும் மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி தன் சுயநலப் போக்கைக் கொஞ்சம்கூட மாற்றி அமைக்கவில்லை. 2013-தேர்தலில் சற்றே ஒரு லேசான மாற்றத்தை மக்கள்  ஏற்படுத்திக் காட்டினார்கள். அதில் சீனர்களின் பங்கு பெரும் பங்கு.

இருந்தாலும் 2013 தேர்தலில் பற்பல தில்லுமுல்லுகள். இந்தத் தேர்தலில் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் படையாகத் திரண்டனர். சத்தியமாகச் சொல்கிறேன். மலேசிய இந்திய இளைஞர்களைக் குண்டல் கும்பல்களின் வாரிசுகள் என்று அரசியல்வாதிகள் சிலர் புகழாரம் செய்தது உண்டு.

ஆனால் என்ன நடந்தது என்ன தெரியுமா. குண்டர்கள் கும்பல்கள் தாத்தாக்கள் அடியாட்கள் என்று எதுவுமே இல்லாமல் போனது தான் பெரிய விசயம். எல்லா இளைஞர்களும் ஒரே அணியில் ஒரே எண்ணத்தில் ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையில் ஐக்கியமாகிப் போனார்கள். பக்காத்தான் வேட்பாளர்களைக் காப்பாற்றினார்கள்.

நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்.
கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம்.
இமய மலை ஆகாமல் எனது உயிர் போகாது.