இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டியது தவறா - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டியது தவறா - 26.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 டிசம்பர் 2019

இலங்கைத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டியது தவறா - 26.10.2019

விடிந்தால் தீபாவளி. உலகமே தீபாவளி மகிழ்ச்சியில்... ஆனால் சோஸ்மா சட்டத்தின் கீழ் மலேசியாவில் கைதான 12 பேரின் வீடுகள் இருண்டு போய்க் கிடக்கின்றன. இவர்களின் விடுதலை எப்போது? இவர்களின் வேதனை தீர்வது எப்போது? பெரிய ஒரு கேள்விக்குறி.


இருந்தாலும் மலேசியாவில் பல்லாயிரம் இந்தியர்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க முயற்சி செய்து வருகின்றார்கள். திறப்பு இல்ல விருந்து நிகழ்வுகளையும் பெரிது படுத்தவில்லை.

நாலு சுவர்களுக்குள் தீபாவளி... அப்படியே... அமைதியாக இருப்பதே சிறப்பு என்றும் சிலர் சொல்கின்றார்கள். கொண்டாடுவதும் தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்... அவரவர் உரிமை. அதில் நாம் தலையிடவில்லை.

இதற்கு இடையில்... அந்தப் பெண்கள் மூவரும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கொட்டும் மழையிலும் தொடர்ந்து அந்தப் பெண்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.

மலாக்கா மாநிலச் சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன்; மலாக்கா மாநகர் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பி.சுரேஷ்குமார்; வர்த்தகர் எஸ்.சந்துரு ஆகியோரின் மனைவிமார்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகப் பன்னிருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதனின் மனைவி உமாதேவி சொல்கிறார்...

‘எங்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி இல்லை. எங்கள் கணவன்மார்கள் தடுப்புக் காவலில் வாழும் போது எங்களுக்கு எங்கே தீபாவளி கொண்டாட்டம். எங்கள் பிள்ளைகளிடம் தொடர்ந்து எங்களால் பொய் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

’அப்படி என்ன அவர்கள் குற்றம் புரிந்தார்கள். மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு அனுதாபத்தைக் காட்டியது தவறா?’

’மலாக்காவில் அரசாங்க மாற்றம் அமையவும் ஒட்டு மொத்த ஆட்சி மாற்றம் நடக்கவும் நானும் பாடுபட்டு இருக்கிறேன். வாக்கு அளித்து இருக்கிறேன்.’

’ஆனால் எங்களுக்கு இப்படி ஒரு துன்பம் வந்த நேரத்தில் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.’

அந்த மூன்று பெண்களின் சார்பில் காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதனின் மனைவி உமாதேவி அவ்வாறு கூறினார்.

நேற்று முன்தினம் தொடங்கி... விடிய விடிய பெய்த மழையிலும் அவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர்.

இதற்கு இடையில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு உட்பட பலர் அந்தக் குடும்ப மாதர்களுக்கு தங்களின் தார்மீக ஆதரவை வழங்க அங்கு சென்று அவர்களுடன் இருந்தார்கள்.

மீண்டும் நினைவு கூர்வோம்... விடிந்தால் தீபாவளி. ஆனால் கைதான 12 பேரின் வீடுகள் இருண்டு கிடக்கின்றன. அவர்களின் விடுதலை எப்போது? இவர்களின் வேதனை தீர்வது எப்போது?

இந்தப் பெண்கள் தங்களின் கணவன்மார்களை விடுவிக்கும்படி கடந்த 21.10.2019-ஆம் தேதியில் இருந்து அமைதி மறியல் செய்து வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருக்கும் அந்தப் பெண் பிள்ளைகளுக்கு அனுதாபம் தெரிவிப்போம். மனிதாபிமான ஆதரவு வழங்குவோம்.

(மலாக்கா முத்துகிருஷ்ணன்)
26.10.2019


பேஸ்புக் பின்னூட்டங்கள்


M R Tanasegaran Rengasamy: அழிவு நெருங்குகிறது என்றால் சுடலையப்பன் உத்திராட்டம் போடுவார். நேரம் நெருங்கி விட்டது. நீசர்கள் அழிவார்கள். பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். நாமும் இவ்வருட தீபாவளியை மிதமாக கொண்டாடுவோம். சூழ்ந்துள்ள கருமேகம் கலைந்தே தீரும். இந்நிலத்தில் நீடிக்கும் அநியாயங்கள் சிதையும். எல்லோரும் ஒன்று படுவோம்.

Sukumaran Suppiah: யார் என்ற சொன்னது ஒன்று கூட கூடாதென்று! நன்றாகப் பேசுங்கள்! மலாய், இஸ்லாம் பற்றி எதை வேண்டுமானாலும் பேசுங்கள்!

ஆனால்.... அங்கே எங்களைப் பற்றிய இழிவான பேச்சு எதற்கு? சுதந்திரம் கேடகும் போது நீங்கள் தனியாகச் சென்று இருக்க வேண்டும்!

அப்பொழுது நாங்கள் தேவைப் பட்டோம்! இல்லையேல் கிடைத்து இருக்காது இல்லையா... சுதந்திரம்! நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சரியான தடம் அமைத்துக் கொடுத்து விட்டோம் என்ற நிம்மதி பெருமூச்சு விடக்கூட சந்தர்ப்பம் கொடுக்காமல்....

இப்படியா ஒரு பிரதமர் நடந்து கொள்வது! மலேசியாவின் எதிர்காலம் இருண்டு கொண்டு வருகிறது! ஒவ்வொரு நொடியும் அச்சத்தில் நகர்கிறது! எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று மனம் ஏங்குகிறது! இறைவா... எங்களைக் காப்பாற்று.....

Manikam Manikam Manikam: வீணா போன தலைவன்... எம் மக்கள் எவ்வளவு வெறுப்பா இருக்குகிறார்கள் தெரியுமா???

Pushpalata Ramasamy: காலம் பதில் கூறட்டும்.... நாம் பிராத்திப்போம்

Soma Kulim: He is PM for Malaysians..

Madiwanan Chinnapian >>> Soma Kulim: Yes aiya... PM that had forgotten his root.

Inbachudar Muthuchandran: 
https://www.facebook.com/photo.php?fbid=2904981436182685&set=a.152237471457109&type=3&theater

Sathya Raman: நாட்டில் நடக்கிற கூத்துகளின் நிலைப்பாட்டை பார்க்கையில் வெச்சி விலாச தோன்றுகிறது. ஒரு நாதாரிக்காக இந்த நாட்டு இந்தியர்களை இம்சை படுத்துவது எந்த வகையில் நியாயம்? பல அன்பர்கள் வெவ்வேறு பதிவுகளில் இந்த நாட்டு தலைவரைத் தாறுமாறாக வசை பாடுகிறார்கள். அந்த அளவிற்கு கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

மலேசியாவின் உள்விவகாரத்தில் மற்ற நாடுகள் மூக்கை நுழைக்கக் கூடாதாம் தப்பாம். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் இங்கு உள்ளவர் மட்டும் வம்பு பேசலாமாம்? இது எந்த ஊர் நியாம்ங்க ?அதன் தொடர்பான விவாகாரம் தான் விஸ்வரூபம் எடுத்து அந்த 12 பேரை தடுத்து வைத்துள்ளது. பத்து வருடத்திற்கு முன்பு பலிகாடா ஆகி பல இலட்சம் உயிர்களைப் பறித்த உலக மகா பாவக்காரன் ராஜபக்சேகூட இப்படி யோசித்து இருக்க மாட்டான்.

இஸ்லாம் நாடுகளில் ரத்த ஆறு ஓடினால் இங்குள்ளவர்கள் யார், எவர் எந்த மதம் என்றெல்லாம் பார்க்காமல் பரிதாபப்பட்டு அனுதாபம் கொள்வோம். ஆனால் அதே நிலை மற்ற இனத்திற்கு ஏற்படும் போது அந்த அனுதாபத்திற்கு சொஸ்மா பாயுமாம். என்னங்கடா இது இந்த மரமண்டைகளின் தற்குறியான போக்கு?

கைது செய்தவர்களை 27-ஆம் தேதிக்கு மேல் தான் விசாரணையாம். இந்நாட்டு சட்டம் அமைப்பு அரசியல்வாதிகளுக்கு ஏற்றால் போல் மாற்றப்பட்டு பொது மக்களை பகடைக் காயாக ஆட்டி படைக்கிறது.

பார்ப்போம் இவர்களது பாட்ஷா எத்தனை நாள் என்று ????? கைதானவர்கள் குடும்பத்தினர் தைரியம் காத்து போராட வேண்டுகிறேன். கடவுள் மறந்தாலும் காலம் எல்லாவற்றையும் காத்து தகுந்த பலனை கொடுத்திடும் என்ற நம்பிக்கையில்..

Augustine Chinnappan Muthriar: Arumaiyaana pagaru

Jsr Chandra: Ithai todaranthu enggalnal parga mudiyavillai iya

Shanmugam Surya: Kadavule engal ammakkalukku yen intha sothanai neenga tan kappatra vendum om sairam

Arjunan Arjunankannaya: நம்மை கறை படுத்த வேறு வழி இல்லாமல் இதை கையில் எடுத்து இருக்கிறார்கள் உலக ஏ. பி. சி. டி. கண்டுபிடித்த அறிவாளிகள்.இவர்கள் மேல் உள்ள கறையை அகற்ற...

Thanabaal Varmen: அரசியல் சித்து விளையாட்டு நடைபெறுவதாகவே கருதுகிறேன்! பத்து ஆராங்கில் நடந்தப்பட்ட கொலையை, திசைத் திருப்பவே அரசியல் சாணக்கியரின் இந்த சித்து விளையாட்டு.

Ravi Purushothaman: எல்லா இனங்களும் தன்மான மாநாடு நடத்தினால் நிலைமை என்னாகும்?????