கா. மு. ஷெரீப் பிறந்த நாள் - 07.07.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கா. மு. ஷெரீப் பிறந்த நாள் - 07.07.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜூலை 2019

கா. மு. ஷெரீப் பிறந்த நாள் - 07.07.2019

ஏரிக்கரையின் மேலே போறவளே…
பாட்டும் நானே பாவமும் நானே...
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை...
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா...
வானில் முழுமதியைக் கண்டேன்...
உலவும் தென்றல் காற்றினிலே...
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்...
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா...


இப்படி அற்புதம் அற்புதமான பாடல்களைத் தந்த மாபெரும் கவிஞர் கா. மு. ஷெரீப் அவர்கள் பிறந்தநாள். தமிழுகம் பார்த்த அந்தக் கவித் திலகத்தை நினைவு கூர்வோம். தமிழுகம் என்றைக்கும் அவரை மறக்காது.

Image may contain: 1 person, cloud, sky, text, nature and outdoor

உன்னதங்கள் நிறைந்த கவிஞர். உத்தமங்கள் மலர்ந்த மனிதர். ஆன்மிகத்தில் இமயம் பார்த்தவர். ஒழுக்கத்தில் சிகரம் தொட்டவர்.

காலத்தால் அழிக்க முடியாத அரிய பெரிய தத்துவப் பாடல்களை எழுதியவர். தமிழ் உலகம் சுவாசிக்கும் காற்றையும் மணக்க வைத்த பெருமகனார்.

வற்றாத கவிதைச் சுனைகளில் இன்றைக்கும் என்றைக்கும் வாழ்கின்ற கவித்திலகம்.

(தோற்றம்: 11.08.1914 - மறைவு: 07.07.1994)
 

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? பாடல்...

https://www.youtube.com/watch?v=Vy-nGNGAnDQ



 ........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Murugan Rajoo அருமை ஐயா. தங்களின் எழுத்தின் ஆளுமை மிக செம்மை. நல்வாழ்த்துகள்


அக்காலத்தின் கட்டாயக் கவி ❤️