சோஸ்மா கைதிகள் - பெண்களின் பரிதாப நிலை - 24.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோஸ்மா கைதிகள் - பெண்களின் பரிதாப நிலை - 24.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 டிசம்பர் 2019

சோஸ்மா கைதிகள் - பெண்களின் பரிதாப நிலை - 24.10.2019

உலகமே தீபாவளி கொண்டாட்டத்தில்... ஆனால் மலேசியாவில் மூன்று பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்... நெஞ்சம் பதறுகிறது. கண்ணீர் வருகிறது.

மலேசியாவின் ஆளும் பக்காத்தான் அரசாங்கத்தில் பதவி வகிக்கும் இரு இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். அவர்களுடன் மேலும் 10 பேர் கைது.




எங்கே கோளாறு... எப்படி நடந்தது; ஏன் நடந்தது என்பது ஒரு புறம் சற்றே ஒதுக்கி வைப்போம்.

அந்த 12 பேர் கைது செய்யப் பட்டது குற்றவியல் சார்பிலான குற்றமா; அல்லது சோஸ்மா சார்பிலான குற்றமா; அல்லது அது ஓர் அரசியல் நாடகமா; அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை. உண்மை நமக்கும் தெரியாது. இன்னும் தெரியாத நிலை.

ஆனால் பாதிக்கப்பட்ட அந்த 12 பேரில், மூவரின் மனைவிமார்கள் நடுத் தெருவில் நின்று கொண்டு ‘எங்கள் கணவன்மார்களை விடுவியுங்கள்; எங்கள் கணவன்மார்களைக் காப்பாற்றுங்கள்’ என்று அழுது புலம்புகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.




அவர்களின் நிலைமை மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களைப் பிழிந்து எடுக்கிறது. உலகத் தமிழர்களை வாட்டி வதைக்கின்றது.

மலேசிய இந்தியர்களை மட்டும் அல்ல மற்ற சகோதரச் சீனர்கள்; சகோதர மலாய்க்காரர்கள் பலரும் வேதனைப் படுகின்றார்கள். அந்தப் பெண்களைப் பார்த்து விம்மிச் செல்கின்றார்கள். உதவி செய்ய முடியவில்லையே என்று வெதும்பிப் போகின்றார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதே தலையாயக் குற்றச்சாட்டு.

ஒன்றை இங்கே மறந்துவிட வேண்டாம். அமைதி மறியல் செய்யும் அந்த மூன்று பெண்களின் கணவன்மார்கள் ஜனநாயக செயல் கட்சியை (ஜ.செ.க.) சேர்ந்தவர்கள். ஆளும் பக்காத்தான் அரசாங்கத்தின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றைச் சார்ந்தவர்கள்.




இந்த ஜ.செ.க.வில் பெரிய பெரிய அரசியல் ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

சீனச் சமூகத்தைச் சார்ந்த லிம் கிட் சியாங்; லிம் குவான் எங்; தோனி புவா; அந்தோனி லோக், மலாய்ச் சமூகத்தைச் சார்ந்த துங்கு ஜுல்பூரி ஷா; இந்தியச் சமூகத்தைச் சார்ந்த எம்.குலசேகரன்; கோபிந்த் சிங்; சிவகுமார்; சார்ல்ஸ் சாந்தியாகோ; ராம் கர்பால்; ராயர்;

இவர்களில் யாராவது ஒருவர் நேரடியாகக் களத்தில் இறங்கி முயற்சிகள் செய்யலாமே. ஏதாவது ஒரு தீர்வு காண முயற்சிகள் செய்யலாமே.

இதற்கு முன்னர் ஜ.செ.க.வின் சீனத் தலைவர்கள் வந்தார்கள். மெழுகுவர்த்தி பிடித்தார்கள். வீடியோ எடுத்தார்கள். ஆதரவு தெரிவித்தார்கள். அனுதாபம் தெரிவித்தார்கள். அப்படியே போய் விட்டார்கள்.




குறை சொல்லவில்ல. ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லையே எனும் ஆதங்கத்தில் ஆர்ப்பரிக்கிறேன்.

ஏங்க தெரியாமல் தான் கேட்கிறேன். நம் இந்தியர்கள் நடுத் தெருவிற்கு வரும் அளவிற்கா நம் மலேசிய இந்தியர்களின் நிலைமை அப்படி மோசமாகி விட்டது. நடுத் தெருவில் நிறுத்தி வைத்து அனுதாபம் தெரிவிக்கும் அளவிற்கா நம் நிலைமை இப்படி மோசமாகி விட்டது.

ஒரு சின்னக் கேள்வி. இந்த ஜ.செ.க. தலைவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். எங்கே போய் விட்டார்கள். பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஆயிரம் ஆயிரம் அல்வாக்களை அள்ளி வீசினார்களே... ஆயிரம் ஆயிரம் சத்தியம் பண்ணினார்களே... இப்போது எங்கே போனார்கள். எங்கே... எங்கே...

ஒரே வார்த்தை... இவர்கள் அரசியல் செய்கிறார்களா அல்லது அரசியல் கூத்து நடத்துகிறார்களா. தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை.




மலேசியாவின் ஒட்டு மொத்த இந்தியர்களையும் கேவலமாக நினைக்கிறார்கள். கேலிக்கூத்துப் பொம்மைகளாகப் பார்க்கிறார்கள்.

இதில் ஒரு பெரிய அரசியல் உள்நோக்கம் உள்ளது. மலேசிய இந்தியர்களை முன் வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களின் அதே அரசியல் கூத்துகளில் மலேசிய இந்தியர்கள் பகடைக் காய்களாகவும் மாற்றப்பட்டு வருகிறார்கள். இதை இதோடு நிறுத்திக் கொள்வோம்.

இப்போதைய பெரிய பிரச்சினை... அந்த மூன்று பெண்களின் பிரச்சினை தான்.

மலேசிய இந்தியத் தலைவர்களே... அந்தப் பெண்கள் மூவரும் நடுத் தெருவில் அனாதைகளாக நிற்கின்றார்கள். இப்போது உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது நல்ல தீர்வைக் காணுங்கள்.

அவர்கள் இப்படி இராத்திரி முழுவதும் தூங்காமல் கொள்ளாமல் விடிய விடிய மெழுகுவர்த்தி பிடித்து... அனாதைகள் கோலத்தில் அழுது புலம்புவது இந்த மலேசிய மண்ணுக்கே அடுக்காது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.10.2019


பேஸ்புக் பதிவுகள்



M R Tanasegaran Rengasamy: ஆட்சியில் உள்ளவர்களையே ஆட்டிப் படைப்பது இந்நாட்டு வரலாற்றில் நடைபெறாத ஒன்று. இந்தியர்களை ஒட்டு மொத்தமாக அந்நியப் படுத்தும் முயற்சியா... எவ்வளவு நம்பிக்கை துரோகம்... நிச்சயம் இது மாறும்.

Hamba Mu Umar Umar >>> M R Tanasegaran Rengasamy: tamilar onru pattal undu vazvuh (தமிழர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு)

Muthukrishnan Ipoh: உண்மையிலேயே நம்பிக்கைத் துரோகம் ஐயா... மலேசிய வரலாற்றில் ஒரு துரோகத்தின் காலச்சுவடு...

Hamba Mu Umar Umar: Ekonomik Malaysia turun

KR Batumalai Robert: India Thalaivarhal Udanadiyaha Kalathil Erunggi Nalla Mudivu Katavendum. Thuniveh Thunai.

Sangapillai Sangapillai: India arasialvathigalin kathi vilavilaya intha alukural

Hamba Mu Umar Umar: 12 perum karupu aduhu.. arasial paligadah.. mannikaum ayyah... Memang la anak sundal mesti happy atas derita orang lain

Ihwan Jainool Bin Firdose: தீவரவாதிகளை விசாரணை நடந்துவது இயல்பு தான்...