புந்தோங் மர்ம கும்பலின் வன்முறை 24.09.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புந்தோங் மர்ம கும்பலின் வன்முறை 24.09.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 செப்டம்பர் 2019

புந்தோங் மர்ம கும்பலின் வன்முறை 24.09.2019

ஈப்போ புந்தோங் பகுதியில் ஒரு வீட்டிற்கும் வாகனங்களுக்கும் ஒரு மர்மக் கும்பல் தீ வைத்தது. அந்த அராஜகச் செயலால் இந்திய மாது ஒருவர் மரணம் அடைந்தார். 

இந்தச் சம்பவம் ஈப்போவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த அந்தக் குடும்ப மாது எம்.அபிராமி என்று அடையாளம் கூறப் பட்டது. 

தமிழ் மலர் 24.09.2019
ஈப்போ, புந்தோங் ஜாலான் 4, நியூ டில்லியில் ஒரு மர்மக் கும்பல் அவர் வீட்டிற்கு வந்து உள்ளது. வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த காரைச் சரமாரியாக அடித்துத் தாக்கி இருக்கின்றது.

அப்போது வீட்டில் இருந்து வெளியில் வந்த அபிராமி (வயது 44) ’என் மகனின் காரை உடைக்காதீர்கள்’ என்று பலமுறை உரக்கக் கூச்சல் போட்டு இருக்கிறார். அவரையும் அந்தக் கும்பல் தாக்கி இருக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பிய நேரத்தில் திருமதி அபிராமி மயங்கிக் கீழே விழுந்தார். 

அபிராமி

தன்னுடைய தாயார் மயங்கி விழுந்ததைத் தன் சகோதரியின் மூலம் அவரின் மூத்த மகன் என்.நினேஸ்வரன் அறிந்து இருக்கிறார். பின்னர் அவர் வீடு திரும்பி தன் தாயாரை ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் மருத்துவ மனைக்குச் சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றித் தாயார் அபிராமி மரணம் அடைந்தார்.

அபிராமி மருத்துவ மனையில் உயிரை விட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் அவர்களின் வீடு தீப்பற்றி எரிவதாகத் தகவல் வந்தது. 


நினேஸ்வரன் சொல்கிறார்: பதறியடித்து வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மர்மக் கும்பல் வீட்டில் நுழைந்து, அங்கிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்து அராஜகம் புரிந்து உள்ளனர்.

அந்த நேரத்தில் எனது இரு தம்பிகளும் அப்பாவும் வீட்டில் இல்லை. கடந்த 30 வருடங்களாக இந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி என்ன என்று புரியவில்லை. காவல்துறை இது பற்றி தீர விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.