மலேசிய இந்தியர்களின் அனுதாபம் - 20.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இந்தியர்களின் அனுதாபம் - 20.10.2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்களின் அனுதாபம் - 20.10.2019

இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009-ஆம் ஆண்டில் முடிவு பெற்றது. 27 ஆண்டுகள் நீடித்தது. அந்தப் போரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.



முதலாம் போர்: 1983 ஜுலை 23-இல் தொடங்கி 1987 ஜுலை 29 வரை;

இரண்டாம் போர்: 1990 தொடங்கி 1995 வரை;

மூன்றாம் போர்: 1995 தொடங்கி 2002 வரை;

நான்காம் போர்: 2006 ஜுலை 26இல் தொடங்கி 2009 மே 18 வரை;




200,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். முதியவர்களும், பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர்களும், பால் மனம் மாறா பச்சை சிசுக்களும், தொட்டில் விட்டில் பூச்சிகளும், ஆயிரக் கணக்கில் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்கள்.

பல இலட்சம் இலங்கைத் தமிழர்கள் காணாமல் போனார்கள். ஒரே வார்த்தையில் சொன்னால்... மனிதக் கட்டமைப்பு கொல்லப் பட்டது. மனித வரலாற்றில் ஓர் இருண்ட வரலாறு.

அந்த இழப்புகளினால் உலகத்தின் இதயம் வலிக்கிறது. மனிதங்களின் மனம் வலிக்கிறது. சாமானிய மனிதம் வெடித்துச் சிதறுகின்றது. வலிகளின் உக்கிரம் உச்சத்திற்கும் போகின்றது.




நடந்து முடிந்த அநியாயங்களை மீள்பார்வை செய்து பார்க்கும் போது வேதனை... வேதனை. இருக்கிற கொஞ்ச நஞ்சக் கண்ணீரும் காய்ந்தும் போகிறது. அதுதாங்க இலங்கை உள்நாட்டுப் போர்.

மறுபடியும் சொல்கிறேன். அது அங்கே நடந்த ஓர் உள்நாட்டுப் போர். அது அடுத்த நாட்டு உள் விவகாரம். அதில் நாம் தலையிட வேண்டாம். அவசியமும் இல்லை.

ஆனாலும் கரைந்து போன அந்த அப்பாவி மக்களுக்காக அனுதாபப் படலாம். தப்பு இல்லையே. அதே சமயத்தில் அந்த அனுதாபத்திற்குத் தடை விதித்தால் நியாயம் இருப்பதாகவும் தெரியவில்லை.




மற்றபடி அவர்களின் உள்நாட்டுப் போரையும் நான் ஆதரிக்கவில்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அனுதாபப் படுகிறேன்.

இருந்தாலும் இன்னொரு பக்கம் பார்த்தால்... அந்த உள்நாட்டுப் போர் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று சொல்லி விலகவும் முடியவில்லை. ஏன் என்றால் சாகடிக்கப் பட்டது மனித உயிர்கள். ஓர் உயிர் அல்ல. இரண்டு உயிர் அல்ல. பல பல ஆயிரம் உயிர்கள்.

அந்த உயிர்களுக்காக அனுதாபப் படுகிறோம். நாமும் மனிதர்கள். அவர்களும் மனிதர்கள். மனிதர்களுக்காக மனிதர்கள் அனுதாபப் படுவதில் தப்பு இல்லைங்க.

மறைந்து போனவர்களின் வலிகள் ஒவ்வொரு நாளும் அழ வைக்கின்றன. ஆழ்மனத்தில் அதீத வேதனைகளை ஆர்ப்பரிக்கவும் வைக்கின்றன.




போர் நடந்து முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 2012-ஆம் ஆண்டில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஒரு மில்லியன் (US$1mil - RM3.13mil) அமெரிக்க டாலர் பணத்தை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

2012-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 31 இலட்சத்து 13 ஆயிரம்.

2019-ஆம் ஆண்டு கணக்குப்படி 41 இலட்சத்து 19 ஆயிரம்.

ஏழு வருசத்தில் நம்ப மலேசிய காசு 10 இலட்சத்திற்கும் குறைந்து இருக்கிறது. அதையும் கவனியுங்கள். தொட்டாலும் லஞ்சம்... விட்டாலும் லஞ்சம்... என்று சொல்லி ஒரு வழி பண்ணி விட்டார்கள். இதில் சோஸ்மாவுக்கு ரோசாப்பூ அபிஷேகங்கள். வேதனை.




அந்த உதவி நிதிக்கு ஏற்பாடு செய்தது Tamil Forum Malaysia (TFM) என்று அழைக்கப்படும் மலேசியத் தமிழ் வாரியம். 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வாரியம்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக மலேசியாவில் உருவாக்கப்பட்ட வாரியம். அதன் தலைவராக டாக்டர் ஐங்கரன் இருந்தார். சரி.

அந்த நிதி முழுமையாகப் போய்ச் சேர்ந்ததா... தெரியவில்லை. அதே சமயத்தில் ’களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா’ என்கிற பழமொழிக்கு விளக்கம் சொல்லவும் எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும்.




ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக அண்மையில் 12 பேர் கைது செய்யப் பட்டார்கள்.

சோஸ்மா குற்றச் செயல் பாதுகாப்புச் சட்டம் (Security Offences Special Measures Act 2012: Sosma) எனும் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை. சரி.

மலேசியக் காவல் துறையினர் அவர்களின் கடமையைச் செய்து உள்ளார்கள். அவர்களின் கடமை உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். மரியாதை செய்கிறோம்.

கைது செய்யப் பட்டவர்களில் ஒரு சிலர், இலங்கையின் தமிழீழ இயக்கத்தினருடன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனும் குற்றச்சாட்டு. சரி.

எவ்வளவு பணம் என்கிற விசயத்தைச் சொல்ல வேண்டியது காவல் துறையின் கடப்பாடு. அதற்கான சான்றுகளை அவர்கள் முன் வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நம்முடைய நிலைப்பாடு.




இவர்களைப் போல முன்னாள் பிரதமர் நஜீப் அவர்களும் பண உதவி செய்து இருக்கிறார். இல்லீங்களா.

ஒரு மில்லியன் என்பது பெரிய காசு. இல்லீங்களா. ஒரு காசு என்றாலும் குற்றம் தான். இல்லீங்களா.

அந்த வகையில் முன்னாள் பிரதமரும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரும் தமிழ்ப் புலிகளுக்கு உதவி செய்து இருக்கிறார் என்று முடிவு எடுக்கலாமா? எடுக்க முடியுமா?

வேண்டாங்க.

மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்ட உதவிகள் மனிதத் தன்மையில் செய்யப் பட்டவையாக இருக்கட்டும். என்றைக்கும் அவை அனுதாபத்தின் அலைகளாக இருக்கட்டும்.




அலைகள் ஓய்வதில்லை. அனுதாப அலைகளும் ஓய்வது இல்லை.

பிரதமர் நஜீப் அவர்களைப் போல அந்த 12 பேரும் அனுதாபம் காட்டி இருக்கலாம் அல்லவா. அதற்காக அவர்களைச் சோஸ்மாவின் கீழ் கைது செய்யலாமா? குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்து இருக்கலாமே?

காவல் துறையினர் நல்ல ஒரு முடிவை எடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். பினல் கோட் குற்றவியல் சட்டங்கள் வழியாகக் குற்றப் பதிவுகள் செய்ய வேண்டும். நிரூபிக்கப்பட வேண்டும். அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே என் தாழ்மையான வேண்டுகோள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.10.2019



பேஸ்புக் பதிவுகள்


Malini Rangasamy: ஆளும் அரசாங்கத்தின் கூட்டணியில் உயர்ந்த பதவியை வகிக்கும் இவர்களுக்கு நேர்ந்த அநீதி விடை தெரியாத விடயமாக உள்ளது. காலமும் நேரமும் பதில் சொல்லும் என நமக்கு நாமே சமாதனம் சொல்லிக் கொண்டாலும் மகனைப் பிரிந்த பெற்றோர், ஒவ்வொரு நொடியும் கணவனின் பிரிவால் ரணப்படும் மனைவி, தந்தை இன்று வருவார், நாளை வருவார் என ஏமாற்றத்துடன் காத்திருக்கும் பிள்ளைகள், ஏக்கத்துடன் பரிதவிக்கும் குடும்பத்தாரின் கண்ணீருக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அரசியல் விளையாட்டினால் அப்பாவிகள் வஞ்சிகப் படுவது சத்திய சோதனை.


Augustine Chinnappan Muthriar >>> Malini Rangasamy: mega arumaiyana sonnegeh


Muthukrishnan Ipoh:
உங்கள் வேதனையைப் போல மற்றவர்களும் வேதனை அனுபவிக்கிறார்கள்... காலம் பதில் சொல்லும்...


Kalai Selvam:
நன்றி ஐயா. நன்மையையும், நல்லதையும் மட்டுமே எதிர்பார்க்கின்றோம்.


Muthukrishnan Ipoh:
அதுவே நம் எதிர்பார்ப்பு ஐயா...


Selvi Sugumaran: All this Malaysia political to save ZAKIR naai...


Augustine Chinnappan Muthriar >>> Selvi Sugumaran: well saying try to diversify new tactic...


Muthukrishnan Ipoh: பின்னணியில் பெரிய நாடகம்...


Devarajan Dev:  Ini semua sendiwara politik... LTTE bukan penggans. PDRM tak tahu keh...


Muthukrishnan Ipoh: காவல் துறையினர் அவர்களின் கடமையை அவர்கள் செய்கிறார்கள்... அதில் நாம் தலையிட முடியாது... நம்முடைய கருத்துகளைச் சொல்லலாம்... அவ்வளவுதான்...


Sivalingam Dharmayah: இது ஓர் அரசியல் நிகழ்வு போல் உள்ளது. யாரையோ திருப்தி படுத்த இது நடைபெறுகிறது.


Muthukrishnan Ipoh: இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்...


Selvaraja Seladoray: இது தான் உண்மை.


Amz Harun: உயிரென்றால் அது உயிர் தான். பேதமில்லை. பயிரென்றாலும் வாடினார் வள்ளலார். அந்த காருண்யத்திற்கு எல்லையில்லை.


Muthukrishnan Ipoh: அருமை ஐயா... அருமை...


Narinasamy Karpaya: அப்பாவிகளைச் சிக்கி விடுதல் தான் சுலபம்! அரசியலுக்கு வருபவர்கள் இவற்றை எதிர்கொண்டே ஆக வேண்டும். குறிப்பாக சிறுபான்மை இனங்களில் இருந்து உயர எண்ணுபவர்கள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது சகஜம். ஆட்சி செய்யும் கட்சியில் இருந்தும், புதிதாக அரசியல் பயணம் மேற்கொண்டு உள்ளவர்களுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டு இருப்பது நம் நாட்டின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது! வருத்தம் தந்தாலும், பிரச்னை தீரும் வரை உயிரூட்டிக் கொண்டு இருப்பது நம் கடமை!!

Muthukrishnan Ipoh: இங்கே மட்டும அல்ல சார்... பெரும்பாலான நாடுகளிலும் சிறுபான்மை இனத்தவர் அரசியல் பலிக்கடா ஆவதைப் பார்க்கலாம்... கடிவாளத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிடிமானத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சவாரி செய்வது ஓர் அரசியல் கலை...


Augustine Chinnappan Muthriar Mega: veethanaiyana neelamai nam Malaysia tamilagralaku sri Lanka aniyathuku periyanikku kural kuuduthuku eepadi oru soothanai roomba kaadamah erruku aathuam Deepavali mega arigel eerukku

(வேதனையான நிலைமை நம் மலேசியத் தமிழர்களுக்கு... ஸ்ரீலங்கா அநியாயத்திற்கு குரல் கொடுத்ததற்கு இப்படி ஒரு சோதனை...அதுவும் தீபாவளி மிக அருகில் இருக்கு...)


ஓம் நம சிவாய >>> Augustine Chinnappan Muthriar இவனுங்க எங்கே தமிழர்களை நிம்மதியாக வாழ விட்டார்கள்...


Augustine Chinnappan Muthriar >>> ஓம் நம சிவாய mega unmai ana een nam perinta Malaysia Mannel tamilaguku evaalu sootanai... india velum sri Linga velum burma velum nam tamilagargal roomba avamanah paadu keevalamah vaanthu vaarigreroom eena tamilan eelicha vaayan ,, ama sami poidureheven...
(மிக உண்மை அண்ணா... ஏன் நாம் பிறந்த மலேசிய மண்ணில் தமிழருக்கு இவ்வளவு சோதனை... இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும் பர்மாவிலும் நம் தமிழர்கள் ரொம்ப அவமானப்பட்டு கேவலமா வாழ்ந்து வருகிறோம்... ஈன தமிழன் இளைச்சவாயன்... ஆமாம் சாமி போடுறவன்...)


Muthukrishnan Ipoh: நன்றிங்க... தமிழில் தட்டச்சு செய்யுங்கள் ஐயா...
https://ksmuthukrishnan.blogspot.com/.../blog-post_20.html


ஓம் நம சிவாய >>> Augustine Chinnappan Muthriar: ஏன் என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா?... உலகத்திலயே மிக அறிவு உள்ளவன் தமிழன் ... உலகத்தின் மூத்த குடிமகன் தமிழன்... உலகத்தையே ஆண்டவன் தமிழன் ... நாகரீகத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழன் ... குமரி கன்டத்தின் உரிமையாளன் தமிழன் ... அன்பானவன் தமிழன் ... தன்னினத்தை அவமதித்தால் வீரனாய் சூரனாய் எழுந்து போர் செய்தவனும் தமிழன் ... இவ்வளவு திறமை கொண்ட தமிழன் மீண்டும் உலகை ஆளவான் என்ற பயம்தான்...


Augustine Chinnappan Muthriar >>> Muthukrishnan Ipoh: ok Tamil ulga thalaiveereh (ஓகே... தமிழ் உலகத் தலைவரே)


Augustine Chinnappan Muthriar >>> ஓம் நம சிவாய: uraikaramaatri sonnugkeh nethi adi valga tamil (உரைக்கிற மாதிரி சொன்னீங்க... நெற்றியடி... வாழ்க தமிழ்)


Varusai Omar >>> Augustine Chinnappan Muthriar: தோழர் முத்து ஏன் தமிழில் தட்டச்சில் பதிவிடச் சொன்னார் என்பது புரியும். புண்படுத்தும் நோக்கமல்ல! Take it with a pinch of salt! நகைச்சுவை உணர்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள்...


Varusai Omar: இலக்கியத்தில் "காடக முத்தறையனுக்கு சிறந்த இடமுண்டு. சின்னப்பன் - எனது தமிழாசான் பெயர்: அமரர் திரு. பீட்டர் சின்னப்பனார்.


Anbarasan Shanmugam: சாதாரண மக்களான நமக்கு தெரிந்தது அரசுக்கு இது தெரியாமலா போகும்.. நாம் முடிவு எடுக்கும் இடத்தில் இல்லையே...


Letchumanan Nadason:
மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பும் செயல்.


Neela Vanam: கடந்த கால முடிஞ்சு போன கதைக்கு இப்ப முடிச்சுப் போடுவது ஏனோ...


Manikam Manikam Manikam: இந்த நாட்டில் இன்னும் என்ன நடக்கப் போகிறது என்று பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.


Maha Lingam: உலகத்து மாந்தர்களுக்கு தமிழர்களின் உயிர் என்றால்...
ம...ருக்கு சமமே??? என்று எண்ணுகிறார்கள் போலும்....


M R Tanasegaran Rengasamy: அனுதாபத்துக்கும் ஆதரவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். விடுதலைப் புலிகளை வேரோடு பிடுங்கி எரிந்தாகி விட்டது என அன்றைய இலங்கை அரசு எக்காளமிட்டது. இவ்வாறு இருக்கையில் இல்லாத ஓர் இயக்கத்துக்கு பணப் பரிமாற்றம் என்பது அரசியல் சதி என்பது தெளிவாகிறது. முன்னாள் பிரதமர் நஜிப் பண உதவி செய்து இருப்பதைச் சரியான நேரத்தில் பதிவு செய்து இருக்கிறீர்கள் சார். நிச்சயம் நீதி வெல்லும்.


Moon Noom: இது பழிவாங்கும் செயல்... எல்லாம் தெரிந்தும் ஏன் இந்த நாடகம்... மக்களை மோதவிட்டு நினைத்ததைச் சாதிக்கவா...


Augustine Chinnappan Muthriar: Mega unmaiyana paagariu nalah nayam keegah aanuthu Malaysia tamilagal paadu paaduvooam... (மெகா உண்மையான பகிர்வு... நல்ல நியாயம் கிடைக்க மலேசியத் தமிழர்கள் பாடுபடுவோம்)


Nathan Perumal


Jsr Chandra


Ramaiah Paidiah: எனக்கு என்றுமே UMNO ஸ்டைல் தான் ரொம்ப பிடிக்கும். உனக்கு என்ன ஆனது. அது எனக்கு தெரியாது. அல்லது எனக்கு என்ன பிடிக்கும். அது உனக்கு தேவை இல்லை.

செஞ்சி கிட்டு போய் கிட்டே இருப்பேன். குத்தாலங் கடி கிரி கிரி. ஐசாலங்கடி கிரி கிரி - ராம் ராமையா செலாயாங்.


Varusai Omar:
இங்குள்ள தண்டக் கருமாந்திரங்களுக்கு... அதரவு, ஆதரவு இரண்டுக்கும் வேறுபாடு தெரியாதே! இன்று கல்வியமைச்சன். அடுத்த ஆண்டிலிருந்து Streaming கிடையாதாம் நண்பா!
எப்படியும் வருங்கால மாணவர்களை அறவே சிந்திக்கத் திறனற்றச் சமூகமாக மாற்றிவிட செத்துப் போன் அவன் பாட்டியிடம் சங்கல்பம் செய்து இருக்கிறானாம்... மீசை கூட அரும்பாத பொடியன்!


Ramarao Ramanaidu: அரசியல் பித்தலாட்டம் ...


Varusai Omar: ஹய்யோ ஹய்யோ! நாம விரும்புவதும் அதுவே நண்பர்களே!
ஆனால்? இங்கே நடப்பது என்ன என்னவோ எழவு... நடப்பதைப் பார்க்கும் போது, 4 குருடர்கள் யானையைத் தடவித் தடவி அடையாளம் சொன்ன கதைதான்!

அது என்னவோ தமிழனின் தலையெழுத்து. கெஞ்சிக் கதறி எதையுமே பெற வேண்டிய நிலை!

அப்படியே சாமி வரம் கொடுத்தாலும், இடையிலேயே சில ஆசாமிகள் (கல்லு) தட்டிப் பறித்துக் கொண்ட கதை மறந்து போச்சா?

"அந்தச் சீட்"டை விட்டு இறக்குவதற்குள் மேல் மட்டத் தலைவருக்கு "என்னப்புடி ஒன்னப்புடீ"ன்னு... ஒரு உயர் மட்டப் பதவியுடன் அதற்கு உண்டான அத்துணை சலுகைகளும் வேண்டிப் பெற்றதும் மறந்தாச்சா?

வந்தான் புண்ணியவான் PH காரன். ஒரே இரவில் எல்லாமே மேமேமே மாதிரி ஆயிடுச்சில்ல?

Sorry Muthu... பொடி வச்சிப் பேசறேன்னு நெனைக்கிறீங்களா? நெஞ்சு எரிகிறது நண்பா! சமுதாயத்தின் பெயரைச் சொல்லியே வயிறு வளர்த்த பாவிகளின் நிலை? உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்!


ஓம் நம சிவாய: The world know the true.... U go and ask to Norway people .. They know who is prabakaran.. And they really love prabakaran...


Davakeesaminathan Saminathan: இது நம்மவர்களைத் திசைத் திருப்ப வைக்கும் செயல்... அநியாயம்...


Sekar Raghavendra: சூரிய வெளிச்சம் சேரியில் விழாமல் மாளிகை நிழல்கள் மறைத்து விட்டனவா?


ஓம் நம சிவாய: Ltte not a terrorist..


Muniandy Ponusamy: இது மலாய் மக்களைத் திருப்தி படுத்தவும் ஜ.செ.கா.வுக்கு செக் வைக்கவும் ketuanan Melayu என்பதை நிலை நிறுத்தும் நோக்கம் என சொல்லப் படுவது உண்மையா?


Varusai Omar >>> Muniandy Ponusamy: ketuanan Melayu என்னா? பிச்சை எடுப்பதா? அதுதானே நடந்து கொண்டு இருக்கிறது... இதிலென்ன மயி... வேண்டிக் கெடக்கு?


Chidambaram Muniandy: இது சிறுபான்மை மக்களுக்கு அரசு போட்ட கண்ணி வெடிகள்


Solomon Raja: வணக்கம்.... சார்


Mohamed Hidayat: அரசியல் சதுரங்க ஆட்டம்.. தமிழர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சீண்டிப் பார்த்து விளையாடும் அரசியல் சாணக்கியனின் திருட்டு விளையாட்டு....


Puvan Muniandy: MM and his spin doctors esp PDRM is doing it again!