கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய செயலிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய செயலிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஆகஸ்ட் 2019

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய செயலிழப்பு

நிர்வாக அமைப்பைக் கண்காணிக்கும் நால்வரிடம் விசாரணை

அண்மையில் தொழில்நுட்ப பாதிப்பால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சேவைகள் செயல் இழந்தன. அதைத் தொடர்ந்து இதில் சதி வேலை நடந்து உள்ளதா என்பதைக் கண்டறிய காவல் துறை விசாரணையை முடுக்கி உள்ளது.

காவல் துறையினர் விசாரணக்கு நால்வரை அழைத்து இருப்பதாக கே.எல்.ஐ.ஏ. விமான நிலைய உதவி தலைமை ஆணையர் ஸுல்கிப்ளி அடாம் ஷா கூறி இருக்கிறார். 

தமிழ் மலர் - 30.08.2019
கே.எல்.ஐ.ஏ. மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 ஆகிய இரு விமான நிலையங்களில் ஒட்டு மொத்த நிர்வாக அமைப்பைக் கண்காணிக்கும் பிரிவை அந்த நால்வரும் நன்கு தெரிந்தவர்கள். அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

இதைப் பற்றி விசாரணை நடத்துமாறு ’எம்.ஏ.எச்.பி.’ என்பப்படும் விமான சேவை நிறுவனத்தின் உயர்நிலை தலைமை நிர்வாகி காவல் பிரிவில் புகார் செய்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கி உள்ளது.

இதில் சதி மறைந்து உள்ளதா? தீய நோக்கத்துடன் இது செய்யப்பட்டு உள்ளதா?

ஏற்கனவே இது ஒரு சைபர் தாக்குதல் என்று இதற்கு முன்னர் ஆரூடம் கூறப் பட்டது. இதைப் பற்றி கருத்து உரைத்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், யாரும் ஆரூடங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னதாக பேசியிருந்த எம்.ஏ.எச்.பி. தலைமை செயலதிகாரி ராஜா அஸ்மி ராஜா நஸ்ருடின் இந்தச் சம்பவத்தில் தீய நோக்கச் சாத்தியங்கள் உண்டு என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் இந்தத் தொழில்நுட்ப பாதிப்பினால் விமான நிலையத்தின் பல சேவைகள் முடங்கின. பயணிகள் பரிதவித்தனர். பல விமானப் பயணங்கள் தாமதமாயின.