நடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 மே 2016

நடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1

ந்தக் கட்டுரையில் பாலினேசியப் பெண்கின் பத்ை அிகாகச் சேர்த்ுள்ளேன். அற்குக் காரம் அவர்கின் மையர் ி ிராவிடர் இனத்ைச் சேர்ந்தர்கள். அுவும் ஒரு வாறு. அைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்காகச் சொல்கிறேன். 

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள். கரித்துக் கொட்டும் கிராமத்துச் சிலேடை. உங்களுக்கும் தெரியும். தெரியாவிட்டால் பரவாயில்லை. இனிமேல் தெரிந்து கொள்ளலாம். அந்தக் கதையில் வக்கிரப் பார்வை இருந்தாலும் சரி... இல்லை விவேகப் பார்வை இருந்தாலும் சரி... பிரச்சினை இல்லை. 
 

அந்தக் கரும்புக் கதையில் இந்தக் கதையையும் தூக்கிப் போட்டுச் சமாளித்துக் கொள்ளுங்கள். பரிதாபத்தின் கண்கள் பார்த்துக் கிரங்கிப் போன அதிபுத்திசாலிகளின் அரிச்சுவடிகள். 


நல்ல ஒரு வரலாற்று மர்மக் கதை. படித்த பிறகு உங்கள் மனசு சின்னதாய்க் கலகலக்கும். அப்படியே சன்னமாய்ச் சலசலக்கவும் செய்யும். பார்த்துக் கொள்ளுங்கள். சரிங்களா.

கன்னிப் பெண்களை வளைத்துப் பிடித்து

நீங்கள் எத்தனையோ விதமான வரலாற்றுக் கலகங்கள் புரட்சிகளைப் பற்றி படித்து இருப்பீர்கள். கேள்விப் பட்டும் இருப்பீர்கள். ஆனால், இப்போது படிக்கப் போகிற புரட்சி இருக்கிறதே... சும்மா சொல்லக் கூடாது.

ஒரு மாதிரியான புரட்சி. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. கன்னிப்பெண்களைக் கடத்திக் கொண்டு போன கதை. படியுங்கள்.
 

ஆழமான பசிபிக் மாக்கடலில் பிஜி தீவுக்கு அருகில் கப்பல் போய்க் கொண்டு இருக்கிறது. அந்தக் கப்பலில் வேலை செய்தவர்களில் ஒரு கும்பல். அந்தக் கும்பல் புரட்சி என்று சொல்லி கலகம் செய்து கப்பலைக் கைப்பற்றியது.

கப்பல் தலைவனையும் அந்தத் தலைவனின் எடுபிடிகளையும் பிடித்து ஒரு படகில் ஏற்றி 'செத்தாலும் சரி… பிழைத்தாலும் சரி. போய்த் தொலையுங்கள்' என்று அனாதையாக விரட்டி அடித்தது.
 

கப்பலைக் கைப்பற்றிய புரட்சிக் கும்பல் நேராக ஒரு தீவிற்குப் போனது. அங்கே இருந்த பூர்வீகக் கன்னிப் பெண்களை வளைத்துப் பிடிக்கிறது. அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு ஒரு கண்காணா தீவிற்குக் கடத்திக் கொண்டும் போகிறது.

அவர்கள் போனது மனித வாடையே இல்லாத மாசில்லாக் கன்னித்தீவு. அதிலே இந்தச் சின்னச் சின்னப் பெண்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள்.

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள்

புரட்சிக் கும்பலில் பலர் பல ஆண்டுகள் பெண்களைப் பார்க்காமல் கருகிப் போன சருகுகள். சொர்க்கத்தின் வாசல்படிகள் திறந்துவிடப் படுவதாக கும்பலின் தலைவன் சொல்கிறான். ஆளாளுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுக்கிறார்கள். கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறார்கள். அப்புறம் ஏறி வந்த கப்பலை அப்படியே சுவடு தெரியாமல் எரித்தும் விடுகிறார்கள். ஒரு சகாப்தம் உருவாகி விட்டது.
 

மறுபடியும் சொல்கிறேன். கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகளின் கதை. நினைவு படுத்துவதில் தப்பு இல்லை. அந்தக் கதையில் இதையும் போட்டுச் சமாளித்துக் கொள்ளுங்கள். பரிதாபத்திற்குரிய சில புத்திசாலிகளின் அரிச்சுவடியில் அவதரித்த ஒரு வரலாற்றுக் கதை.

இதில் ஒரு முக்கிய விசயம். அதிலும் ஓர் அதி சுவராசியமான விசயம் இருக்கிறது. கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள். சிலர் கிரிமினல் குற்றவாளிகள். இங்கிலாந்தின் லண்டன் சிறைகளில் கொலை, கொள்ளை, கடத்தல் குற்றங்களுக்காகத் கம்பி எண்ணியவர்கள். அவர்களின் வயது 20 லிருந்து 50 வரையில் இருக்கும்.
 

கப்பல் பயணத்திற்காக அவர்களின் சிறைத் தணடனை பேரம் பேசப் பட்டது. ’நீங்கள் ஒழுங்காக நடந்து கொண்டால் உங்களுடைய தண்டனைகள் ரத்துச் செய்யப்படும்’ என்று சொல்லித் தான் அனுப்பப் பட்டார்கள். ஆனால் நடந்த கதையே வேறு. முதலுக்கே போசமாகிப் போனது. படியுங்கள்.

பதின்ம வயது சுதேசிப் பெண்கள்

கடத்தப்பட்ட பெண்கள் எல்லோரும் தாகித்தி (Tahiti) தீவில் வாழ்ந்த பாலினேசிய சுதேசிப் பெண்கள். அனைவரும் பதின்ம வயது பெண்கள். 13 லிருந்து 18 வயது வரை.

கடத்தல் கும்பலின் அந்தக் குடியேற்றம்தான் உலக வரலாற்றில் பிட்காய்னர்கள் (Pitcairners) எனும் ஒரு புதிய சந்ததியையே உருவாக்கிக் கொடுத்தது. வெகு நாட்களுக்கு அந்தப் புதிய சகாப்தத்தைப் பற்றி வெளி உலகத்தில் யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.
 

கடத்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கே அந்தத் தீவில் பல வெட்டுக்குத்துகள். பல கொலைகள். அதன் பிறகுதான் அங்கே ஒரு புதிய சமுதாயம் தோன்றியது. கப்பல் புரட்சியில் தோன்றிய ஒரு சமுதாயம்.

புரட்சி என்ற சொல் இன்றைய காலத்தில் ஓர் இறுக்கத்தைக் கொடுக்கிறது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அந்த வாசகம் பல இடங்களில் புரையோடிக் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மணி கட்டும் தாதா புரட்சி

பிரெஞ்சுப் புரட்சி, கலாசாரப் புரட்சி (Cultural Revolution) எனும் சீனக் கலாசாரப் புரட்சி, போல்ஸ்விக் புரட்சி (Bolshevik Revolution) எனும் ரஷ்ய அக்டோபர் புரட்சி, அதிபர் மார்க்கோசிற்கு எதிரான புரட்சி, வங்காளப் புரட்சி, வெற்றிப் புரட்சி (Glorious Revolution) எனும் ஆங்கிலேயப் புரட்சி; அண்மையில் நடந்த புத்த பிக்குகளின் பர்மியப் புரட்சி, பெனாசிர் புட்டோ மறைவதற்கு முன்னால் பாகிஸ்தானில் நடந்த இராணுவப் புரட்சி என்று ஏகப்பட்ட புரட்சித் தழும்புகள்.
 

புரட்சி என்ற சொல்லுக்கு பூசை புனர்ஸ்காரம் செய்தவர்கள் கிரேக்கர்கள். அந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்கள் மூத்த முன்னோடிகள். இந்தப் புரட்சிகள் எல்லாவற்றுக்குமே மணி கட்டும் தாதா புரட்சியைப் பற்றியது தான் நம்முடைய இந்தக் கட்டுரை.

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று ஜமாய்க்கா. 1700 ஆம் ஆண்டுகளில் கறுப்பர்கள் நிறைய பேர் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்தனர். முதலாளிகள் எல்லாம் வெள்ளைக்காரர்கள். இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பு. அதனால், அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். இந்தச் சாப்பாட்டுத் தகராற்றில் பல அடிமைகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். பதிலுக்கு முதலாளிகளில் பலரும் செத்துப் போய் இருக்கிறார்கள். 
 

அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. கொடுக்கக் கொடுக்க இறங்கிக் கொண்டே இருந்தது. எல்லாரும் சாப்பாட்டு ராமன்களாக இருக்கிறார்களே என்று பயந்து போய் மாற்றுவழி தேடினார்கள்.

ஈரமான ஈரப்பலாக்காய் உபதேசம்

ஒரு சின்னச் செருகல். மாடு மாதிரி ஒருவன் உழைக்க வேண்டும். தசைகளைப் பிழிந்து... வியர்வையைக் கடலாக மாற்ற வேண்டும். இரத்தம் ஆவியாக மாற வேண்டும். எலும்புகளின் சுண்ணாம்பு எரிந்து போக வேண்டும். உடல் ஊன்கள் செல்லரித்துப் போக வேண்டும். ஆனால் சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் கேட்கக் கூடாதாம். என்னங்க இது. ரொம்ப அநியாயம் இல்ல.
 

பணமா கேட்டார்கள். சாப்பாடு தானே கேட்டார்கள். கொடுத்தால் என்னவாம். குறைஞ்சா போவுது. கொத்தடிமை எனும் சஞ்சிக் கூலிகளாக மலாயாவுக்கு வந்த நம்முடைய தாத்தா பாட்டிகளும் இப்படித் தானே கஷ்டப் பட்டு இருக்க வேண்டும். நினைக்கையில் மனம் வலிக்கிறது.

நம்ப கதைக்கு வருவோம். அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி இருந்தார். இவர் உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்தக் காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்று பரிந்துரை செய்தார். 
 

இந்த ஈரப் பலாக்காய் நம் மலேசியாவிலும் இருக்கிறது. மலேசிய மொழியில் சுக்குன் என்று அழைக்கிறார்கள். தெரியும்தானே. துண்டு துண்டுகளாக வெட்டி கோதுமை மாவில் போட்டு பலகாரம் செய்வார்கள். இதன் அறிவியல் பெயர் Artocarpus Communis.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

நவரச நாடகத்தின் சூப்பர் ஸ்டார்

இந்த ஆய்வுப் பயணத்திற்கு பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் பிரத்தியேகமாகக் கட்டப் பட்டது. 215 டன் எடை கொண்ட கப்பல். 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது.

பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.
 

துணைத் தளபதியாக பிளெட்சர் கிரிஸ்டியன் என்பவர் இருந்தார். இந்தப் பிளெட்சர் கிரிஸ்டியன்தான் நடுக்கடலில் நடந்த நவரச நாடகத்திற்கு நல்ல ஒரு சூப்பர் ஸ்டார். சின்னச் சின்னக் கன்னியர்களைக் கடத்திக் கொண்டு போனதற்கும் காரணம். பக்கா கில்லாடி. அவரை மன்மத ராசா என்று சொல்லாம். அப்புறம் கதை ‘சப்’ என்று போய் விடும்.

இருந்தாலும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அண்மைய காலத்து மன்மத ராசா பட்டியலில் இவருக்கு தாராளமாக முதலிடம் கொடுக்கலாம். ’நான் அவனில்லை’ படத்தில் வரும் மன்மத ராசா இருக்கிறாரே, அவர் எல்லாம் இந்த ராசாவிடம் பிச்சை எடுக்க வேண்டும். பிளெட்சர் கிரிஸ்டியன் பக்கா கில்லாடி இல்லீங்க பலே மன்மதக் கில்லாடி.
 

இந்தக் கப்பல் கலகத்தைப் பற்றி இரண்டு திரைப் படங்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்று மியூட்டனி ஆன் தி பவுண்டி (Mutiny on the Bounty). 1962-இல் தயாரிக்கப் பட்டது. டிரெவர் ஹாவர்ட் நடித்து இருந்தார். இவர்தான் 1982-இல் வெளியான காந்தி படத்திலும் நடித்து இருந்தார். அதையும் இங்கே நினைவுப் படுத்தி விடுகிறேன்.

கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. இங்கிலாந்தில் புறப்பட்டு தென் அமெரிக்கா வந்தனர். அப்படியே மேற்குத் திசையில் பசிபிக் மாக்கடல் வழியாகப் போகத் திட்டம். இருந்தாலும் புயல் காற்று பலமாக வீசியதால் பயணத்தைத் திசை திருப்பினர்.

தென் ஆப்ரிக்கா வந்து நன்னம்பிக்கை முனை வழியாகத் திரும்பி... அப்படியே இந்து மாக்கடலுக்குள் சென்றனர். பின்னர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தனர்.

பயணம் செய்த தூரம் 27,086 மைல்கள். ஒரு நாளைக்கு 108 மைல்கள். பயணம் செய்த வழியில் அவர்கள் பார்த்த தீவுகளில் ஏறக்குறைய 50 நாட்கள் தங்கி இளைப்பாறி ஓய்வு எடுத்துக் கொண்டு வந்து இருக்கின்றனர்.
 

தாகித்தி தீவுக்குச் சற்றுத் தொலைவில் கப்பல் நங்கூரமிட்டது. கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி உள்ளூர் சுதேசிகள் சின்னச் சின்னப் படகுகளில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டனர்.

கடலில் வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு

அப்புறம் பவுண்டி கப்பலில் வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு. கேப்டன் ஜேம்ஸ் குக்கைப் பற்றி சுதேசி மக்கள் கேட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே, ஜேம்ஸ் குக் அந்தத் தீவிற்கு வந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் இறந்துவிட்ட செய்தி அவர்களுக்குத் தெரியவில்லை.

தெரிந்து இருக்க நியாயமும் இல்லை. பேஸ்புக், வாட்ஸப், டிவிட்டர், கணினி, கைப்பேசி எதுவுமே இல்லாத காலம். அதையும் மறந்து விடாதீர்கள். இருந்து இருந்தால்... வேண்டாங்க. அதைப் பற்றி பேச வேண்டாம். வசை பாட ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

அதற்கு முன்... சில ஆண்டுகளுக்கு முன்னால் கேப்டன் ஜேம்ஸ் குக், ஹவாய் தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடியின மக்களால் கொல்லப் பட்டார். அந்தச் செய்தி பாதுகாப்பு கருதி மறைக்கப் பட்டது என்பது வேறு விசயம். அதன் பின்னர், பூர்வீகக் குடியினர் அதாவது தாகித்தி மக்கள் கப்பலுக்கு வருவதும் போவதுமாக இருந்து இருக்கின்றனர்.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோசமாய் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை.

'நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... போங்க... வாங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனா... தயவு செஞ்சு… தயவு செஞ்சு பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்க பிளீஸ். அப்புறம் கொலையில்தான் போய் முடியும்...' என்று அவர்களுக்குப் படித்துப் படித்துச் சொன்னார்கள். கேட்டார்களா. எல்லோரும் கேட்டார்கள். பதிவுசாகப் பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போனார்கள்.

ஆனால் ஒரு மனமத ராசா மட்டும் கேட்கவில்லை. அந்த ராசாவுக்கு 18 வயசு. அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள். 

ஆக... நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்து இளிக்க... இரண்டு காந்தப் புலன்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  கண்ணும் கண்ணும் கலக்க... அவளும் கிட்ட வர... ராசாவும் நெருங்கிப் போக... அவளுடைய கையைப் பிடிக்க... தடவிக் கொடுக்க... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அவளும் கொஞ்சலாய் சிணுங்க... அதைப் பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... விசயத்தைப் போய் வெளியே சொல்ல... அப்புறம் என்ன...

மிச்சத்தை நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோம். (தொடரும்)