தாமரை கோபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாமரை கோபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 அக்டோபர் 2019

தாமரை கோபுரம்

தாமரை மலர் இந்துக்களின் தேவதை சரஸ்வதியின் சிம்மாசனம். இந்திய சமயத் தத்துவத்தின் தலைவாசல். சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை என்றும் செந்தாரகை தான். ஆன்மீகத்தின் தலை மலர் அல்லவா. அதுவே தனிப் புகழ்மாலை அல்லவா.
 

தாமரைக் கோபுரம் (Lotus Tower), தாமரை மலருக்குச் சிறப்பு செய்யும் கோபுரம். இந்தியப் பாரம்பரிய மலருக்குச் சிறப்பு சேர்க்கும் கோபுரம். இலங்கையில் உள்ளது.

உலகிலேயே உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று. இரு வாரங்களுக்கு முன்னதாக, 2019 செப்டம்பர் 16-ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப் பட்டது.

தமிழர்கள் சிலருக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். இருப்பினும் கலை நயத்துடன் தாமரைக் கோபுரத்தைப் பார்ப்போம். போற்றுவோம். கலையை ரசிப்போம். அதுவே தமிழர்களின் பண்பாடு. ஒருவருடைய நற்சேவைகளைப் பாராட்டும் பழக்கம் நமக்கு வேண்டும். அதுவே நல்ல ஒரு மனிதப் பாண்பு.

 

தாமரைக் கோபுர நிர்மாணிப்புப் பணிகள் 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. கட்டி முடிக்க 7 ஆண்டுகள்.

மொத்தம் 104.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு. சீனாவின் எக்சிம் வங்கி 67 மில்லியன் கடனாகக் கொடுத்து உதவியது.

தாமரைக் கோபுரத்தில்...

- 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய வசதி

- 50 வானொலி நிலையங்கள்

- 50 தொலைக்காட்சி நிலையங்கள்

- 20 தொலைத்தொடர்பு நிலையங்கள்

- கொழும்பு நகரத்திற்குள் செல்லும் ஒவ்வொருவரின் கண்களுக்கும் எட்டிய தூரத்தில் இருந்து தெரியக் கூடிய கோபுரம். 




- கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டர்.

- கட்டடத்தின் 215 மீட்டர் வரை லிப்ட் வசதி.  90 மாடிகள் உச்சிக்குச் செல்ல 2 நிமிடங்கள். அதி வேகமான லிப்டுகள்.

- உலகிலேயே 19-ஆவது உயரமான கோபுரம். ஆசியாவில் 11-வது உயரமான கோபுரம்.

- கோபுரத்தின் மேல் பகுதியில் 400 பேர் அமரும் வசதி கொண்ட மாநாட்டு மண்டபம்; திருமண வரவேற்பு மண்டபம்; ஆடம்பரமான தங்கும் அறைகள்.




-  6-ஆவது மாடியில் சுழலும் உணவகம். கொழும்பு நகர் முழுவதையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம்.

- 8 மின்தூக்கிகளை (லிப்ட்) கொண்டது. நொடிக்கு 7 மீட்டர் உயரும் வேகம். படு வேகம்.

- கோபுரத்தின் அடித்தளத்தில் மண்ணுக்கு அடியில் நான்கு மாடிகள்.

கூடுதல் தகவல். மலேசியாவின் கோலாலம்பூர் கோபுரம் (Kuala Lumpur Tower) 421 மீட்டர் உயரம் (1,381 அடி). தாமரைக் கோபுரத்தை விட 44 மீட்டர்கள் கூடுதலான உயரம். 




உலகில் 7-ஆவது உயரமான கோபுரம். 54 விநாடிகளில் உச்சியைச் சென்று அடையும் மிக வேகமான மின்தூக்கிகள்.

1995 மார்ச் மாதம் முதலாம் தேதி கட்டி முடிக்கப் பட்டது. மலேசியாவின் NTV7 இங்கு இருந்து தான் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.10.2109



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
VT Rajan அற்புதமான தகவல் சகோதரரே... தமிழ் மலர் நாளிதழ் நான் வாங்கி படிப்பதற்கு காரணமே,...உங்களின் அற்புதமான படைப்புகள் தான் காரணம்... வாழ்க வளமுடன்... தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி...
 
M R Tanasegaran Rengasamy உலகில் உயர்ந்த கோபுரங்களைக் கட்டும் அரசியல்வாதிகள் சிலர் தங்கள் மனங்களை மடு அளவே முடக்கிக் காட்டுவது வேதனையாய் உள்ளது. ஆனால் வழக்கம் போல் உங்கள் பதிவில் இதுவொரு கோபுரம் சார்.
 
Muthukrishnan Ipoh வார்த்தைச் சாரங்களில் (ஜாலங்களில்) தனசேகரன் சாரை மிஞ்சமுடியாது போலும்... நறுக்கென்று ஏதாவது இருக்கவே செய்யும்...
Sathya Raman M R Tanasegaran Rengasamy கருத்துக்களில் எப்படிதான் நெத்தியடிக் கொடுத்தாலும் முரட்டு தோள் படைத்த அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கவே முடியாது சார் .
 
M R Tanasegaran Rengasamy Sathya Raman உண்மைதான். அவர்கள் கட்டும் உயர்ந்த கோபுரங்களைப் போலவே மன வக்கிரமும் உயர்ந்தே காணப் படுகிறது. மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற எம். ஜி.ஆர். பாடலில் ஒரு அடி வரும். "கோபுரத்தின் மேல் நீக்க வச்சாலும்..." இப்பாடலை முழுதாகக் கேட்டால் கவிஞர் சில கழிசடைகளின் முகத்திரையை அப்பொழுதே கிழித்திருப்பார்.
 
Sathya Raman M R Tanasegaran Rengasamy சில மனிதப் பெருச்சாளிகளுக்கு எத்தனை தத்துவங்களையும், தன் முனைப்புகளையும் அள்ளி வீசினாலும் திறந்த மனதோடு ஏற்று திருந்திவிடவா போகிறார்கள் சார்...
 
Muthukrishnan Ipoh Sathya Raman >>> எப்படிதான் நெத்தியடிக் கொடுத்தாலும் முரட்டு தோள் படைத்த அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கவே முடியாது >>> நல்ல கருத்து... அருமை... 

Muthukrishnan Ipoh M R Tanasegaran Rengasamy >>> கட்டும் உயர்ந்த கோபுரங்களைப் போலவே மன வக்கிரமும் உயர்ந்தே காணப்படுகிறது >>> அருமையான கருத்து... அருமையான சொல் வடை...
Muthukrishnan Ipoh Sathya Raman மனிதப் பெருச்சாளிகள் என்றாலும்... பணப் பெருச்சாளிகள் என்று சொன்னாலும் இரண்டுமே ஒன்றுதான் சகோதரி...
Mahdy Hassan Ibrahim இந்தக் கோபுரம் உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட போதும் முழுமையாகப் பூரணத்துவம் அடைய இன்னும் காலம் செல்லும்! காத்திருப்போம்!
Muthukrishnan Ipoh நன்றிங்க.... இன்னும் நிறைய வேலைகள் இருப்பதாக நானும் கேள்விப் பட்டேன் ஐயா...
Don Samsa பயனுள்ள தகவல் தலைவரே.. நன்றி
Sathya Raman சொந்த காசில் வாழ்வாதாரத்தை வளப்படுத்த முடியாமல் இந்த தனிமனிதன் கடன் பட்டு காலத்திற்கும் கலங்கிக் கொண்டு இருக்கிறான் என்றால், உலக நாடுகள் சிலதும் ஊர் மெச்ச உலகம் மெச்ச உயரமான கட்டிடங்களைக் கட்டி மன உளைச்சல்களில் மாட்டி சிக்கி தவிப்பது எதனால்?

இலங்கையில் தாமரை கோபுரத்தை பௌத்த சமயத்தை முன் நிறுத்தி புத்தரும் தாமரை மலரும் என்ற நோக்கத்தில் பெயர் சூட்டி இருக்கலாம். கடன் வாங்கி கட்டியது தானே என்னப் பெயர் வைத்தால் என்ன?

எம் இனத்தைக் கொன்று குவித்த நாடு என்பதால் அதன் இன்றைய முன்னேற்றத்தைகூட முழுமனதோடு ஏற்க முடியவில்லை சார். காடுகளை அழித்து எத்தனை உயரமான கட்டிடங்களை எழுப்பி ,உலகத்தையே அண்ணார்ந்து பார்க்கிற பரவச நிலைகளை அந்த நாடு பெற்றாலும் நம் தொப்புள் கொடி உறவுகளின் ஓலங்களும், ஒப்பாரிகளும் அந்த உயரங்களை உடைத்தெறிந்து தகர்த்து விடுகிறதே???? என்ன செய்ய?

Kumar Murugiah Kumar's Sathya Raman அதுதான் நிதர்சனமான உண்மை...
Muthukrishnan Ipoh Sathya Raman ஊர் மெச்ச உலகம் மெச்ச உயரமான கட்டிடங்களை கட்டி மன உளைச்சல்களில் மாட்டி சிக்கித் தவிப்பது எதனால்.... நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். தங்களின் பொது அறிவுத் திறன் மலைக்க வைக்கிறது...

என் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றிங்க....

Neela Vanam நன்றிங்க ஐயா!
Selvi Sugumaran SUPER SIR AND SALUTE
Melur Manoharan ஆஹா... அருமையான தகவல்கள் ஐயா...!

M Kabilan Mohan வணக்கம் நல்ல கட்டுரை sir... வாழ்த்துகள்...
Periasamy Ramasamy 1972 வரை உலகின் மிக உயரமான கட்டிடமாகத் திகழ்ந்து வந்தது Empire State Building தொடங்கி (அதற்கு முன்னமே அமெரிக்கர்களின் பொருளாதார வளர்ச்சிப் பின்னணியைப் பிரதிபலிக்கும் பல உயரமான கட்டிடங்கள் அந்நாட்டில் தொடர்ந்து எழுப்பப் பட்டு ஒன்றை ஒன்று மற்றதன் உயரத்தினை தாண்டும் போட்டா போட்டி நிலவியது வேறு விஷயம்). 

உலகின் மற்ற நாடுகளும் தத்தம் பங்கிற்கு உயரமான கட்டிடத்தைக் கொண்டிருத்தல் அரசியல் அவசியமாக்கிக் கொண்டன என்பதுதான் உண்மை. ஆயினும், அவை யாவும் தத்தம் நாட்டு பொருளாதார மற்றும் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டை முன்னெடுத்து செய்யப்பட்டனவா என்பதுதான் இன்று கேள்விக் குறியாகி உள்ளது. 

நமது எண்ணெய் இயற்கை வளம் தந்த மேம்பாட்டுக் குறியீட்டை மீறிய இலக்கை வைத்து கட்டப் பட்ட கட்டிடம் இரட்டை கோபுரம். இன்றைய பொருளாதார சரிவை சரி செய்யும் அளவுக்கு நமது நாட்டு அந்நிய செலாவணியைத் மீட்டெடுக்கும் நிலையில் தன்னிச்சையாக இயங்க வேண்டிய தேசிய எண்ணெய் நிறுவனம் அரசியல் உட்பூசலுக்குக் களமாக அமைந்திருப்பது இன்னொரு வேடிக்கை..
 
Muthukrishnan Ipoh  அருமை... அருமை... அருமையான கருத்துகள்... தாங்களும் நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்... நிறைய சமகாலத் தகவல்கள்... ஆழமான தேடல்கள் பளிச்சிடுகின்றன... நன்றிங்க ஐயா... தொடர்ந்து பயணியுங்கள்...
 
Periasamy Ramasamy தங்களை விடவா? ஏதோ கேட்டறிந்த ஒன்றை பகிர்ந்து கொண்டேன்.... அதை விடுங்கள். நம்ம வீட்டு சங்கதியை கொஞ்சம் அலசுவோம். ... 

பெரிய பெரிய கோவில்கள் கட்டி அங்கு கருவறைக்குத் தகுந்தாற் போன்று மூர்த்தங்கள் அமைத்து "மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது" என்று அழகு பார்த்த நாம், இப்போது என்னவென்றால், அந்த கோவில்களுக்கு வெளியே, பக்தர்கள் கொண்டு கொட்டும் பணத்தில், உலகிலேயே உயரமான சுவாமி சிலை(களை) உருவாக்குவதில் முனைப்புக் காட்டி வருகிறோமே! இது எங்கு போய் முடியுமோ என்றுதான் கவலையாக இருக்கிறது.
 
Varusai Omar நான் மனமாச்சரியங்களுக்கு அப்பாற் பட்டவன். அனைத்து மத போதனைகளையும் மதிப்பவன். எந்த மதமுமே தீயதை போதிக்கவே இல்லை. கேடு கெட்ட மாந்தரே தமது சுயநலத்திற்காக சுய லாபத்திற்காக மட்டுமே பிரித்தாளும் யுக்தியைக் கையாண்டு மனிதத்தைக் கூறு போட்டான்.

பௌத்த மதம் சமாதானத்தைத் தானே போதித்தது?

இருந்தும், பௌத்தம் போற்றுவோம் என்று காவிக்குள் மறைந்து கொண்டு கொடூரமாக கொலை கொள்ளை அடிக்கிறார்களே இலங்கையில் சிங்களவரும் மியன்மாரில் பர்மியர்களும்? இதுவா போதி சத்வர் கற்பித்த அறம்?

புத்தம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி,
தர்மம் சரணம் கச்சாமி!!!