கோத்தா கெலாங்கியில் தாமரை கல் படிவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோத்தா கெலாங்கியில் தாமரை கல் படிவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 செப்டம்பர் 2019

கோத்தா கெலாங்கியில் தாமரை கல் படிவங்கள்

*தமிழ் மலர் செய்தி - 07.10.2018*

மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய காலத்துக் தாமரைப் கற்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 



ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியில் அந்தத் தாமரைப் படிவங்கள் காணப் பட்டதாக ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் கூறினார்.

இந்தத் தாமரைப் கற்படிவங்கள் தொடர்பான ஆவணங்கள் ஜொகூர் அருங்காட்சியகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அருங்காட்சியக அதிகாரிகளும் அதைப் பற்றி விரைவில் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்து உள்ளனர்.
மீட்புக் குழுவின் தலைவர் கணேசன்
கோத்தா திங்கி மலைக்காட்டுப் பகுதியில் பாழடைந்த கோட்டைக் கோபுரங்கள் உள்ளன. அவை ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ விஜய பேரரசின் சிதைந்து போன வரலாற்றுப் படிவங்கள் ஆகும்.

இங்கே சோழர் காலத்துக் கல்வெட்டுகளும் சில தாமரைப் படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தக் படிவங்கள் எப்போது செதுக்கப் பட்டவை என்று தெரியவில்லை. ஆனால் அவை இராஜாராஜன் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் என்று உறுதியாக நம்பப் படுகிறது.

கி.பி. 1025ஆம் ஆண்டு சோழர் காலத்து நாணயங்களில் காணப்பட்ட அதே வரைப் படிவங்கள் ஜொகூர் ஆற்றின் கரையோரப் பகுதியின் கற்பாறைகளிலும் செதுக்கப்பட்டு உள்ளன. அந்த மாதிரியான கல்வெட்டுப் பாறைகள் ஆற்றின் சில இடங்களில் காணப் படுகின்றன என்று கணேசன் கூறினார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் துணை அரசு இயங்கி வந்துள்ளது. புத்த மதம் வேரூன்றி இருந்துள்ளது. அந்தச் சமயத்தில் சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசு இராஜேந்திர சோழனின் கடல் படைகளினால் தாக்கப்பட்டு அந்தப் பேரரசு நிர்மூலமானது.

ஸ்ரீ விஜய பேரரசைத் தாக்கிய இராஜேந்திர சோழன் அடுத்ததாக கோத்தா கெலாங்கியில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசின் கோட்டைகளையும் பொதுமக்கள் குடியிருப்புகளையும் தாக்கித் தவிடு பொடியாக்கி விட்டான். பின்னர் மலாயா தீபகற்பத்தின் வடக்கே இருந்த கடாரத்தையும் தாக்கினான்.