கொரோனா வைரஸ்: தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ்: தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 மார்ச் 2020

கொரோனா வைரஸ்: தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள்?

சில தடுப்பூசிகளில் பாதி இறந்த கிருமிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் மயக்க நிலையில் கிருமிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள் இருக்கும். 


சில தடுப்பூசிகளில் நுண்ணுயிரிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் பலவீனம் ஆக்கப்பட்ட நுண்ணுயிரிகள் (inactivated vaccine) இருக்கும்.

அதையும் தாண்டிய நிலையில் சில தடுப்பூசிகளில் உயிருடனேயே கிருமிகள் இருக்கும். அல்லது ஒரு கிருமியின் நச்சுப் பொருளாகவும் இருக்கும். ஆனால்  அனைத்துமே ஒரே மாதிரியான அடிப்படைக் கொள்கையில் தான் செயல் படுகின்றன.

நமக்கு ஆறறிவு இருக்கிறது. மூளைக் கொண்டு சிந்திக்கிறோம். செயல் படுகிறோம். ஆனால் நம்முடைய உடலுக்கும் அறிவு இருக்கிறது. அது தெரியுமா உங்களுக்கு?

நம்மை எதுவும் கேட்காமலேயே அதுவே சொந்தமாக முடிவு எடுக்கும் ஆற்றல் அதனிடம் உள்ளது. இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.



நம் உடலுக்குள் எந்த ஒரு கிருமி நுழைந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது கெட்ட கிருமியா என்று நமக்குத் தெரியாமலேயே நம் உடல் ஆராய்ச்சி செய்துவிடும். ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மை.

சில விசயங்களில் நம் உடல் நம்மைக் கேட்டு ஆராய்ச்சிகள் செய்வது இல்லை. அதுவாக சொந்தமாக ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறது. அதற்கு முன்...

பாக்டீரியா வைரஸ் கிருமிகளில் நல்ல கிருமிகள் இருக்கின்றன. ஜெண்டல்மேன் கிருமிகள் இருக்கின்றன. சில அடாவடிக் கிருமிகள் இருக்கின்றன. சில அக்கப் போரான கிருமிகள் இருக்கின்றன.

அவற்றுக்கு எல்லாம் ’பை பை’ சொல்லும் இட்லர் இடி அமின் கிருமிகளும் இருக்கின்றன. அதில் கொரோனா கோவிட் கிருமிகள் இருக்கின்றனவே... சும்மா சொல்லக் கூடாது... எமதர்ம ராசனையே மெர்சல் ஆக்கிவரும் கிருமிகள்.



நல்ல கிருமிகள் பல ஆயிரங்கள் உள்ளன. அவை நம் உடலுக்கு கெட்டது ஒன்றும் செய்யாது. நல்லதுதான் செய்யுங்கள். பெரும்பாலும் பாக்டீரியா கிருமிகள்.

நம் உடலுக்குள் ஒரு கெட்ட கிருமி நுழைந்து விட்டால், நம் உடல் சட்டுபுட்டு என்று ஒரு பெரிய கூட்டுப் படையை உருவாக்கி விடுகிறது.

அந்தக் கூட்டுப் படையில் கழுத்துக் கணையச் சுரப்பி அதாவது தைமஸ் சுரப்பி (Thymus); கல்லீரல் (Liver); மண்ணீரல் (Spleen); எலும்பு மஜ்ஜைகள் (Bone Marrow); சிறுநீரகம் போன்றவை இருக்கும்.

இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. உடலுக்குள் நுழைந்த கெட்ட கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரியான மருந்து தயாரிக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கின்றன.

அந்தப் புதிய மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களை உடனடியாகச் சேகரிக்கின்றன. தயாரித்த மருந்தை அந்தக் கிருமிகள் மீது செலுத்துகின்றன. அப்படியே அந்தக் கெட்டக் கிருமிகளை அழிக்கின்றன. எப்படி பக்காவாக வேலை செய்கிறது கவனித்தீர்களா? 



இயற்கையாகவே உலகில் உள்ள எல்லா மனித உடல்களுக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. ஒரு குழந்தை பிறந்த போதே அந்த ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உண்டாகி விடுகிறது. 

ஆனால் தடுப்பூசி வேறு மாதிரி வேலை செய்கிறது. நம் உடலுக்குள் நோய்க் கிருமிகளின் நகல்களை அறிமுகப்படுத்தி, அந்தக் கிருமிகளை அழிக்கும் ஆற்றலைத் தூண்டுகிறது. அதற்காகத் தான் தடுப்பூசி போடப் படுகிறது.



தடுப்பு மருந்துகள் உடலுக்குள் பல வகைகளில் செலுத்தப் படுகின்றன.

1. வாய் வழி (Oral)

2. ஊசி வழி (Injection) - இதைத் தான் தடுப்பூசி என்கிறோம். இந்த ஊசியை தசைக்குள் செலுத்துவது (Intramascular); தோலுக்குள் செலுத்துவது (Intradermal); தோலுக்கு கீழ்ப் பகுதியில் செலுத்துவது (Subcutaneous).
   
3. தோலில் ஒட்டுப் போட்டு மருந்து செலுத்துவது (Transdermal).
   
4. உடலில் துளையிட்டு மருந்து செலுத்துவது (Puncture)

5. மூக்கு வழியாக மருந்து செலுத்துவது (Intranasal)



சரி. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் (Hydroxy Chloro Quine) எனும் மருந்தைக் கொண்டு கொரோனா கோவிட் நோயைக் குணப் படுத்தலாம் எனும் சர்ச்சை உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.03.2020