ஸக்கீர் நாயக்: பேராசிரியர் ராமசாமியிடம் 5 மணி நேர விசாரணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸக்கீர் நாயக்: பேராசிரியர் ராமசாமியிடம் 5 மணி நேர விசாரணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 செப்டம்பர் 2019

ஸக்கீர் நாயக்: பேராசிரியர் ராமசாமியிடம் 5 மணி நேர விசாரணை

(தமிழ் மலர் - 12.09.2019)

சர்ச்சைக்குரிய மத போதகர் ஸக்கீர் நாயக் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் நேற்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி; இருவரிடமும் புக்கிட் அமான் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

நேற்று காலை 9.20 மணி அளவில் துணை முதல்வரின் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் பிற்பகல் 1.15 மணி வரை விசாரணை செய்தனர்.


அதே போல சதீஷ் முனியாண்டியிடம் காலை 9.40 மணியில் இருந்து பிற்பகல் 12.30 மணி வரை விசாரணை செய்தனர்.  

அதன் பின்னர் பேசிய பேராசிரியர் இராமசாமி ‘என்னைப் பொறுத்த வரையில் ஸக்கீர் நாயக்கிடம் தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் கிடையாது. அவர் மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் அவமதித்துப் பேசினார். அவர் ஒரு நாட்டால் தேடப்படும் நபர். இங்கு ஒரு நிரந்தர வசிப்பிட அந்தஸ்தில் இருக்கிறார்.

மலேசிய இந்தியர்களை இந்த நாட்டிற்கு விசுவாசம் இல்லாதவர்கள் என்கிறார். சீனர்கள் நாட்டை விட்டுப் போக வேண்டும் என்கிறார். இது மக்களின் மனங்களைப் புண்படச் செய்து உள்ளது.

இன்னும் புக்கிட் அமான் அழைத்தால்கூட அங்கு சென்று வாக்குமூலம் வழங்க நான் தயாராக இருக்கிறேன்.

நான் எங்கும் ஓடிவிட மாட்டேன். ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். புக்கிட் அமானில் இருந்து வந்த இரண்டு இந்திய அதிகாரிகள் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.

இதற்கிடையில் சதீஷ் முனியாண்டி பேசுகையில் ‘நான் இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் காவல் துறையினருக்கு முழுமையான ஆதரவு வழங்கினேன். மலேசிய இந்தியர்களின் விசுவாசம் பற்றி கேள்வி எழுப்ப ஸக்கீர் நாயக்கிற்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.