பரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 பிப்ரவரி 2018

பரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம்

மஜாபாகித் அரசு சிங்கப்பூரின் மீது தாக்குதல்கள் நடத்தியதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது. பரமேஸ்வராவின் அந்தர்ப்புரத்தில் நிறைய சேவகப் பெண்கள்; வேலைக்காரப் பெண்கள்; மனைவிமார்கள் இருந்தார்கள். சேவகப்  பெண்களில் ஒருவருக்கும் வேறு ஓர் ஆடவருக்கும் நெருக்கமான  பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 


பரமேஸ்வராவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் அதைப் பற்றி பரமேஸ்வராவிடம் சொல்லி இருக்கிறார். அமைச்சரின் வார்த்தைகளைத் தெய்வ வாக்காக நினைப்பவர் பரமேஸ்வரா. அமைச்சர் சொன்னது உண்மையாகத் தான் இருக்கும் என்று நம்பினார். இருந்தாலும் முழுமையாக நம்பவில்லை.


ஒருநாள் பரமேஸ்வராவிற்கு கோபம் எல்லை மீறிப் போனது. அந்தப் பெண்ணை வரவழைத்துக் கடும் தண்டனையை வழங்கி இருக்கிறார். என்ன தண்டனை தெரியுமா.

அரண்மனை வளாகப் பொதுச் சபையில் நிர்வாணக் கோலம் போடும் தண்டனை. அதாவது நிர்வாணமாக நின்று சபையோர் பார்க்கும் படியான தண்டனை. அது கடும் தண்டனை அல்ல. கொடும் தண்டனை. இப்படிப்பட்ட ஒரு தண்டனையைப் பரமேஸ்வரா வழங்கி இருக்கிறார். 



ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். தன்னுடைய மூத்த அமைச்சரின் ஆலோசனையின் பேரில் தான் பரமேஸ்வரா அந்தத் தண்டனையை வழங்கி இருக்கிறார். தண்டனை வழங்கப்படும் போது பரமேஸ்வரா அரண்மனை வளாகத்தில் இல்லை. வேறு எங்கோ இருந்து இருக்கிறார். சான்றுகள் உள்ளன.

அதனால் அந்தப் பெண்ணின் தகப்பனார் ராஜுனா தாப்பா (Rajuna Tapa) என்பவருக்கு பரமேஸ்வராவின் மீது அளவு கடந்த கோபம் ஏற்பட்டது. பரமேஸ்வராவின் அமைச்சர்களில் ராஜுனா தாப்பாவும் ஒருவராக இருந்தவர். அமைச்சர்களில் இவர் நிதியமைச்சர். 



ஒரு மகளுக்கு இப்படி ஒரு தனடனை கொடுக்கப் பட்டால் எந்தத் தகப்பனுக்குத் தான் கோபம் வராது. எப்படியாவது பரமேஸ்வராவைப் பழி வாங்க வேண்டும் என்று வஞ்சம் வளர்த்துக் கொண்டார். (F2)

[#F2]  Succeeded as ruler of Singapura Temasek on the death of his father, ca 1399. Expelled from Temasek by the Batara of Majapahit working in collusion with the Bendahara, Sang Ranjuna Tapa, 1401.

அப்போது சுமத்திராவில் மஜபாகித் பேரரசின் அரசராக விக்கிரமா வர்த்தனா (Wikramawardhana) என்பவர் இருந்தார். இந்த விக்கிரமா வர்த்தனாவிற்கு அந்தப் பெண்ணின் தகப்பனார் ரகசியமாக ஒரு செய்தி அனுப்பினார். 



சிங்கப்பூரின் மீது படை எடுக்க இதுதான் மிகச் சரியான நேரம். அப்படி நீங்கள் படை எடுத்து வந்தால் உங்களின் மஜபாகித் அரசிற்கு முழு ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன். இதுதான் அமைச்சர் ராஜுனா தாப்பா அனுப்பிய அந்தச் செய்தி.

காலம் காலமாகக் காத்துக் கொண்டு இருந்த விக்கிரமா வர்த்தனா சும்மா இருப்பாரா. உடனடியாகக் களம் இறங்கினார். 300 போர்க் கப்பல்கள், பல நூறு சிறு கப்பல்கள் பலேம்பாங் துறைமுகத்திற்கு வரவழைக்கப் பட்டன. 



அந்தக் கப்பல்களில் 200,000 மஜபாகித் போர் வீரர்கள் பயணித்தனர். சிங்கப்பூர் கடல் பகுதியைத் தாண்டிய மஜபாகித் வீரர்கள் சிங்கப்பூரைத் தாக்கினார்கள்.

இருந்தாலும் பரமேஸ்வராவின் கோட்டையைத் அவ்வளவு எளிதாகத் தாக்கிச் சிதைக்க முடியவில்லை. அத்துடன் கோட்டையின் உள்ளே செல்லவும் முடியவில்லை. பரமேஸ்வராவின் கோட்டை பலம் வாய்ந்த கோட்டையாக இருந்து இருக்கிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை. இது 1398-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி. (1. Tsang, Susan; Perera, Audrey - 2011)
[#1] Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet, ISBN 978-981-4260-37-4, p. 120

மஜபாகித் படையினர் கோட்டையின் வெளிப்புறத்தில் முற்றுகையிட்டு தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். அதனால் கோட்டையின் உள்ளே இருந்த போர் வீரர்களும் பொது மக்களும் வெளியே போக முடியவில்லை. 



அந்த வகையில் அவர்களுக்குச் சரியாக உணவும் குடிநீரும் கிடைக்கவில்லை. பசி பட்டினியால் வாட வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமை.

இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டையின் சேமிப்புக் கிடங்கில் நிறையவே உணவு தானியப் பொருட்களைச் சேகரித்து வைத்து இருந்தார்கள். வெளியே இருந்து உணவுப் பொருட்கள் வருவதற்குத் தடை ஏற்பட்டதும் பரமேஸ்வராவின் படை வீரர்களுக்குள் கலகம் மூண்டது. பரமேஸ்வராவிற்கு எதிராகவே வெறுப்பு உணர்வுகள் தோன்றின.

நிலைமை மோசமாகி வருவதைக் கண்ட பரமேஸ்வரா ஒரு கட்டளை பிறப்பித்தார். கோட்டையின் உள்ளே தற்காப்புப் போரில் ஈடுபட்டு இருக்கும் போர் வீரர்களுக்கு உணவுப் பொருட்களைச் வழங்கும்படி அரச கட்டளை. (2. Sabrizain, Sejarah Melayu)
[#2] Sabrizain, Sejarah Melayu - A History of the Malay peninsula - http://www.sabrizain.org/malaya/



சமயம் காத்து இருந்த ராஜுனா தாப்பா உணவு எதுவும் இல்லை என்று சொல்லி கோட்டைக் கதவுகளைத் திறந்து விட்டார். மஜபாகித் படையினர் கோட்டைக்குள் நுழைந்தனர். தயவு தாட்சண்யம் இல்லாமல் எல்லோரையும் வெட்டிக் கொன்றார்கள்.

சிங்கப்பூர் ஆற்றில் இரத்தப் பிரளயமே கரை புரண்டு ஓடி இருக்கிறது. இனியும் அங்கே இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று எண்ணிய பரமேஸ்வரா அரண்மனையில் தப்பிச் சென்றார். (3. A. Samad, Ahmad, Sulalatus Salatin)
[#3] A. Samad, Ahmad (1979), Sulalatus Salatin (Sejarah Melayu), Dewan Bahasa dan Pustaka, ISBN 983-62-5601-6, pp. 69–70

இந்த நிகழ்விற்குப் பின்னர் தான் மலாக்கா எனும் பெயரே மலாயா வரலாற்றில் இடம் பெறுகிறது.



ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு சிங்கப்பூரின் செலாத்தார் (Seletar) பகுதிக்கு வந்தார். இது சிங்கப்பூரின் வட பகுதியில் உள்ளது. மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (Biawak Busuk - அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் (Kota Buruk) எனும் மற்றோர் இடமும் இருக்கிறது.

இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். (4. The Indianized States of South-East)



நன்கு ஆராய்ந்து பார்த்தார். அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசை அமைப்பதற்குப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போகும் போது சுங்கை ஊஜோங் (Sungai Ujong) எனும் இடத்தை அடைந்தார். இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு (Bertam River - former name of the Malacca River) என்று அழைக்கப் படுகின்றது.

1403-ஆம் ஆண்டு தன் அரண்மனையைக் கட்டிக் கொண்டார். இப்போது செயிண்ட் பால் குன்று (St Paul's Hill) என்று அழைக்கப்படும் இடத்தில் தான் அந்த அரண்மனை கட்டப் பட்டது. 



உதவிக்கு சுமத்திரா தீவில் இருந்து பூகிஸ் மக்கள் பலரையும் அழைத்துக் கொண்டார். தன்னுடைய பெயரை ஸ்ரீ ரத்னா ஆதிவிக்ரம ராஜா (Sri Ratna Adivikrama di-Raja - Seri Rama Adikerma Raja) என்று மாற்றிக் கொண்டார். (F3)

பரமேஸ்வரா தேர்ந்து எடுத்த அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். இதைப் பற்றி இன்னும் ஒரு கதை இருக்கிறது.

ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் பரமேஸ்வரா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மலாக்கா வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகுமான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.



சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா அதிசயித்துப் போனார். அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஓர் அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது.

அதன்படி மலாக்கா எனும் ஊர் உருவானது. அந்த ஊரே இப்போதைய மலேசிய வரலாற்றில் மலாக்கா பேரரசு என்று பீடு நடை போடுகிறது. அப்படித் தான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயரும் வந்தது.

இன்னும் ஒரு வரலாற்றுப் பதிவும் உள்ளது. சருகு மானுக்கும் நாய்க்கும் நடந்த மோதலின் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து இருந்தார். அந்த மரத்தின் பெயர் மலாக்கா மரம். (மலாய்: Pokok Melaka. ஆங்கிலம்: Phyllanthus emblica). அந்த மரத்தின் பெயரையே புதிய இடத்திற்கும் பரமேஸ்வரா  வைத்ததாகச் சொல்லப் படுகிறது. (5. Beyond the Monsoon, Douglas Bullis)



இந்தக் காலக் கட்டத்தில் நிறைய சீன வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் அதிகரித்தன. பெருமிதம் அடைந்தார் பரமேஸ்வரா. அந்த வகையில் மலாக்காவில் புக்கிட் சீனா எனும் ஒரு குன்றுப் பகுதியைச் சீனர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

கடல் கடந்து மலாக்காவில் வியாபாரம் செய்ய வணிகர்கள் வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சயாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தச் சமயத்தில் வட சுமத்திராவில் சமுத்திரா பாசாய் (Samudra Pasai) எனும் ஒரு சிற்றரசு வளர்ச்சி பெற்று இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்த ஒரு சிற்றரசு. சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவானது. சுமத்திராவின் அசல் பெயர் சுமத்திரபூமி (Sumatrabhumi). 



மார்க்கோ போலோ எழுதிய மார்க்கோ போலோவின் பயணங்கள் எனும் நூலில் சுமத்திராவை சமாரா (Samara) என்றும்; சமார்ச்சா (Samarcha) என்றும் குறிப்பிட்டுள்ளார். (6. Malacca_Sultanate)

சுமத்திராவில் பாசாய் எனும் சிற்றரசு இருந்தது. அந்தச் சிற்றரசின் இளவரசியைத் தான் பரமேஸ்வரா 1409-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசியின் பெயர் மாலிக் உல் சாலே (Malik ul Salih).

திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்ததாகச் சொல்லப் படுகிறது. தன் பெயரை இஸ்கந்தார் ஷா (styled himself) என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. ‎

ஷா என்பது பாரசீகத்தில் பல்லவர்கள் பயன்படுத்திய அரசச் சொல் ஆகும். பாரசீகம் என்பது ஈரானைக் குறிக்கும். அப்போதும் சரி இப்போதும் சரி ஈரானிய அரசர்களின் பெயர்களுக்குப் பின்னால் பல்லவ (Pahlawa) எனும் சொல் வருவதைக் கவனித்து இருக்கலாம். இந்தச் சொல் பல்லவர் எனும் சொல்லில் இருந்து உருவானதாகும்.

ஆகவே பரமேஸ்வரா என்பவர் பல்லவர் அரச பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்பதை நினைவு கூறுகிறேன். இதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன். அந்த வகையில் பரமேஸ்வரா மதம் மாறவில்லை. உலகக் கலைக் களஞ்சியங்கள் உறுதி கூறுகின்றன. (7. The Travels of Marco Polo)

ஒன்று மட்டும் உண்மை. பரமேஸ்வரா தன் பெயரை ஷா என்று மாற்றிக் கொண்டார். உண்மை. ஆனால் வேறு மதத்திற்கு மதம் மாறவில்லை என்பது தான் உண்மை. அதற்கான சான்றுகள் உள்ளன. ஷா என்பது ஓர் அரசரைக் குறிக்கும் பாரசீகச் சொல்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதி வரும் பரமேஸ்வரா ஆய்வு நூலில் இருந்து தொகுக்கப் பட்டது)

சான்றுகள்:
[#4] The Indianized States of South-East Asia:https://books.google.com.my/books?id=iDyJBFTdiwoC&redir_esc=y)
[#5]  http://archive.aramcoworld.com/issue/200104/beyond.the.monsoon.htm -  Beyond the Monsoon, Written by Douglas Bullis
[#6]  http://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate
[#7]  The Travels of Marco Polo - Harmondsworth, Middlesex; New York: Penguin Books, Penguin Classics, 1958
[#9]  http://malaysiansmustknowthetruth.blogspot.my/2011/09/parameswara-is-certified-singaporean.html - Raja Secander Shah, and his son, and his son's son NEVER converted. It was actually his great-grandson Raja Kichil Besar, who converted.
[#10] https://zaidpub.com/2017/01/16/the-original-lineage-of-malacca-rulers-are-indian/ - THE ORIGINAL LINEAGE OF MALACCA RULERS ARE INDIAN
[#11] https://blog.limkitsiang.com/2011/01/20/malay-history-what%E2%80%99s-missing-from-the-textbooks/ - What’s missing from the textbooks
[#12] http://ktemoc.blogspot.my/2016/05/discarding-own-culture-and-history.html - Discarding own culture and history?  

Footnotes:
[#F1]  The 'Sejarah Melayu' does not mention a ruler called Parameswara between Pekerma Wira and Iskandar Shah. The only ruler mentioned is Seri Maharaja.

[#F2]  Succeeded as ruler of Singapura Temasek on the death of his father, ca 1399. Expelled from Temasek by the Batara of Majapahit working in collusion with the Bendahara, Sang Ranjuna Tapa, 1401.

[#F3]  Established a settlement and constructed his palace at Malacca (on St Paul's Hill) ca 1403, encouraging the Bugis to settle there with immigrants from Aru. Succeeded as ruler on the death of his father in late 1413, and installed as Sri Ratna Adivikrama di-Raja [Seri Rama Adikerma Raja]. He subsequently removed the capital there after his accession.

[#F4]  In 1409, Parameswara married Malik ul Salih, a princess of Pasai, adopted the Persian title Shah, and styled himself as Sultan Iskandar Shah although he remained a Hindu to his death. Although he did not convert to Islam, his marriage to the Muslim princess encouraged a number of his subjects to embrace Islam.