கோத்தா கெலாங்கி கருங்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோத்தா கெலாங்கி கருங்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஏப்ரல் 2019

கோத்தா கெலாங்கி கருங்கோட்டை

1955-ஆம் ஆண்டு J. R. R. Tolkien எனும் ஆங்கிலேய எழுத்தாளர் War of the Rings எனும் நாவலை எழுதினார். அந்த நாவலில் வேறு உலகத்து மக்கள் பற்றிய கற்பனைக் கதை. இதுவரை மூன்று லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள் வெளிவந்து உள்ளன. 


1. The Fellowship of the Ring (2001),
2. The Two Towers (2002)
3. The Return of the King (2003).

எத்தனை பிரம்மாண்டமானவை, சிக்கலானவை, தேர்ந்த தொழில்நுட்பமும், கலை நேர்த்தியும் கொண்டவை. அந்தப் படங்களின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் உலகை வியக்கவைத்தது.  
 


“லார்ட் ஆப் த ரிங்ஸ்” ஒரு ஹாலிவுட் படமாக இருந்தாலும், அது உண்மையில் முழுக்க முழுக்க நியூஸீலாந்தில் தயாரிக்கப்பட்டது.

ஜே.ஆர்.ஆர்.டால்கின் 1937-ஆம் ஆண்டில் தன்45-ஆவது வயதில் எழுத ஆரம்பித்து சுமார் 12 ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி முடித்த நீண்ட புனைக் கதைதான் “லார்ட் ஆப் த ரிங்ஸ்”. இது ஒரு புராண காவியம்.

அதை வைத்து The Black Gate எனும் ஓவியம் தீட்டினார்கள். பின்னர் 1969-ஆம் ஆண்டு திரப்படமாகத் தயாரிக்கப் பட்டது. அந்த ஓவியத்தை கோத்தா கெலாங்கி (மாயிருண்டகம்) எனும் ஸ்ரீ விஜய அரசு கோட்டையுடன் ஒப்பிடுகிறார்கள். 


கோத்தா கெலாங்கி கோட்டை மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கிறது. அதன் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டுமானால் 100 அடி ஆழத்திற்குத் தோண்டிப் பார்க்க வேண்டும். ஒரு கற்பனையான தோற்றத்தில் மட்டுமே நாம் அந்தக் கோட்டையை அனுமானிக்க முடியும்.

The Malaysian Centre of Remote Sensing (MACRES) என்பது மலேசியத் தொலையுணர் தொழில்நுட்ப மையம். இந்த மையத்தின் துணை கொண்டு கோத்தா கெலாங்கியை வானத்தில் இருந்து படம் எடுத்து இருக்கிறார்கள்.

அந்த மையத்தின் இணைய முகவரி:

http://www.remotesensing.gov.my/portal/index.php

Kota Gelanggi is an archaeological site reported in 2005 as potentially the first capital of the ancient Empire of Srivijaya and dating to around 650–900 and one of the oldest Kingdoms on South East Asia's Malay Peninsula. The site's existence was announced as a 'discovery' by the Malaysian press on 3 February 2005.