தமிழர் வரலாற்றுக் காலக்கோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் வரலாற்றுக் காலக்கோடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மே 2019

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கி.மு. 2000-களில் தொடங்கி இன்று வரை தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை பிரித்துப் பார்க்கலாம்.


தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆட்சி செய்தவர்கள், தமிழர்கள் அடைந்த இன்னல்கள் என பல முக்கிய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது.

தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைகின்றது. அவை தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளைக் கோடிக் காட்டுகின்றது. இந்தக் காலக்கோடு, கல் ஆயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இந்தக் காலத்துத் தமிழர்கள் வரை பிரித்துக் காட்டுகின்றது.

அத்துடன் அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், அவர்கள் அடைந்த வெற்றித் தோல்விகளையும், அவர்களின் ஏற்ற இறக்கங்களையும் அறிய உதவுகின்றது.

வரலாற்றுக்கு முந்திய காலம்

சுமார் கி.மு. 3000 - 1400 - பையம் பள்ளியில் புதிய கற்காலம்.

சுமார் கி.மு. 2000 - 300 - தமிழகத்தின் இரும்பு காலம்.

முற்சங்க காலம்

சுமார் 1000 - 300 கி.மு. - பெருங்கற்காலம்.

சுமார் 600 கி.மு. - தமிழ்ப் பிராமி நடைமுறைத் தமிழ் எழுத்தாகியது.

சுமார் 500 கி.மு. - தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப் படுகிறது.
 

சங்க காலம்

சுமார் கி.மு. 500 - சங்க காலப் பாண்டியர்களால் தமிழக முத்திரைக் காசுகள் வெளியிடப்பட்டன.

சுமார் கி.மு. 300 - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா எனும் அரசி பாண்டிய நாட்டில் ஆட்சி.

சுமார் கி.மு. 250 - அசோகர் கல்வெட்டு. தமிழகத்தின் நான்கு பேரரசுகள் (சேரர், சோழர், பாண்டியர், வேளிர்.

சுமார் கி.மு. 200 - நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சியில் சமண மதம்.

சுமார் கி.மு. 145 - இலங்கையில் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சி. துட்டகை முனுவுடன் போர்.

சுமார் கி.மு. 200 - சங்க இலக்கிய நூல்கள் சங்க காலத்தில் உருவாக்கப் பட்டன.

சுமார் கி.மு. 150 - கலிங்க நாட்டு அரசன் த வெற்றிகளைத் கதிகும்பம் எனும் கல்வெட்டில் பதிவு செய்தல்.

சுமார் கி.மு. 130 - சேர அரசன் உதியஞ்சேரலாதன் சேர நாட்டில் ஆட்சி.

சுமார் கி.மு. 175 - இலங்கை அரசன் கஜபாகு காலத்தில் சேரன் செங்குட்டுவன்; கரிகால் சோழன் ஆட்சி.

சுமார் கி.மு. 190 - சேர நாட்டில் சேர அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி.

சுமார் கி.மு. 200 - தமிழ் பிராமியானது. தமிழ் எழுத்தின் முன்னோடியான வட்டெழுத்து தோற்றம்.

சுமார் கி.மு. 60 - மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அகஸ்டஸ் கிரேக்க மன்னனுக்குத் தூது.



வணிக காலம்

சுமார் கி.பி. 1 - 140 - மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக பிலினி, தாலமி என்பவர்களின் குறிப்புகள்.

சுமார் கி.பி. 190 - சாவகம் (ஜாவா) தீவில் தமிழ் பேசப்பட்டது.

சுமார் கி.பி. 1 - 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர்கள் யவனர்களுடன் சிறந்த வணிக உறவு. கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக எழுதப் பட்டது.

சுமார் கி.பி. 250 - சீன நாட்டு வரலாற்று அறிஞர் சுவான்சாங், பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்து இருந்தனர் என எழுதி உள்ளார்.

சங்க காலத்திற்கு பின்னான காலம்

சுமார் கி.பி. 300 -325 - சிவகந்தவர்மன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தில் பல்லவர் அரசு.

சுமார் கி.பி. 300 - 590 - களப்பிரர் தமிழ் நாட்டின் மீது படையெடுப்பு. பாரம்பரிய ஆட்சி மாற்றம்.

சுமார் கி.பி. 340 - குப்தப் பேரரசு தென்னிந்தியாவை நோக்கி படையெடுப்பு. தொண்டை நாடு முழுவதும் சோழர்கள் ஆக்கிரமிப்பு.

சுமார் கி.பி. 361 - ரோமானியப் பேரரசனான சூலியனுக்கு பாண்டியர் தூதனுப்புதல்.

சுமார் கி.பி. 436 - 463 - தமிழகத்தில் இருந்து இலங்கை சென்ற பாண்டிய மன்னர்கள், இராசராட்டிரம் எனும் அரசை ஏற்படுத்தினர்.

சுமார் கி.பி. 436 - 460 - பல்லவன் இரண்டாம் கந்தவர்மன் என்பவனின் மூன்று மகன்களும் பல்லவ அரசை வடதமிழகம் முழுதும் விரிவுபடுத்தினர். 



பல்லவர் பாண்டியர் ஆட்சி

சுமார் கி.பி. 550 - 600 - பல்லவன் சிம்மவிஷ்ணு தொண்டை நாடு, சோழ நாடுகள் மீட்பு. பாண்டியன் கடுங்கோன் மதுரையைக் களப்பிரர் ஆட்சியில் இருந்து மீட்பு.

சுமார் கி.பி. 590 - 630 - காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி.

சுமார் கி.பி. 610 - மகேந்திரவர்மனைச் சமணத்தில் இருந்து சைவ சமயத் துறவி திருநாவுக்கரசு நாயனார் மதம் மற்றுகிறார்.

சுமார் கி.பி. 628 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசு மீது படையெடுப்பு. காஞ்சிபுரம் முற்றுகை.

சுமார் கி.பி. 630 - 668 - பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் தொண்டை மண்டலத்தில் ஆட்சி.

சுமார் கி.பி. 642 - சாளுக்கியர் மீது முதலாம் நரசிம்ம பல்லவன் படை எடுத்து பாதமியை நீக்குதல். புலிகேசி யுத்தத்தில் கொல்லப் படுதல்.

சுமார் கி.பி. 670 - 700 - பாண்டிய அரிகேசரி மாறவர்மன் மதுரையில் ஆட்சி.

சுமார் கி.பி. 700 - 728 - பல்லவன் ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலையும் மாமல்லபுரக் கடற்கரைப் பகுதிகளில் கோயில்களைக் கட்டுதல்.

சுமார் கி.பி. 700 - 730 - கொங்கு நாடு வரை பாண்டிய அரசை கோச்சடையான் ரணதீரன் விரிவாக்குதல்.

சுமார் கி.பி. 731 - பல்லவப் பேரரசில் ஆட்சி முறைக் குழப்பம். பல்லவ அரசனாக இரண்டாம் நந்திவர்மன் தேர்வு.

சுமார் கி.பி. 731 - 765 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து, பாண்டியன் மாறவர்மன் ராஜசிம்மன் பல்லவ அரசன் நந்திவர்மனைத் தாக்குதல்.

சுமார் கி.பி. 735 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாடு மீது படையெடுத்து, தலைநகர் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தல்.

சுமார் கி.பி. 760 - பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மன் மேற்கு கங்க அரசு மீது போர்த் தொடுத்து அதைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 765 - 815 - பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையான் மதுரையை ஆளுதல்.

சுமார் கி.பி. 767 - பாண்டியப் படைகள் காவிரி ஆற்றின் தெற்கில் பல்லவர்களைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 800 - 830 - முதலாம் வரகுன பாண்டியன் அரசனாகிறான். பல்லவ அரசன் நந்திவர்மனைத் தோற்கடித்து திருச்சிராப்பள்ளி வரை அரசை விரிவாக்குதல்.

சுமார் கி.பி. 825 - 850 - பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசைத் தோற்கடித்து வைகை வரை பல்லவப் பேரரசை விவரித்தல்.

சுமார் கி.பி. 830 - 862 - பாண்டியன் சீவல்லபன் மதுரையில் ஆட்சி.

சுமார் கி.பி. 840 - சீவல்லபன் இலங்கை மீது போர்த் தொடுத்து முதலாம் சேனனிடமிருந்து வட மாகாணங்களைக் கைப்பற்றல்.

சுமார் கி.பி. 848 - காவிரி கழிமுகத்தை ஆட்சி செய்த முத்தரையர்களை வெற்றி கொண்டு விஜயாலய சோழன் தஞ்சாவூரில் எழுச்சி.

சுமார் கி.பி. 859 - பாண்டியன் சீமாறன் சீவவல்லபன் கும்பகோணப் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தல்.

சோழர் காலம் - யாழ்ப்பாண அரசு

சுமார் கி.பி. 887 - ஆதித்த சோழன் பல்லவ அரசன் அபராஜிதனைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 949 - தக்கோலம் போர். சோழர் படையை ரஸ்ராகுப்தா கிருஷ்ணா III தோற்கடிக்கிறான்.

சுமார் கி.பி. 985 - ராஜ ராஜ சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1010 - ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டி முடித்தல்.

சுமார் கி.பி. 1012 - இராஜேந்திர சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1023 - இராஜேந்திர சோழன் கங்கைக்குப் பயணம்.

சுமார் கி.பி. 1025 - சோழர் கடற்படை ஸ்ரீவிஜய அரசனைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 1041 - இராஜேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்தல்.

சுமார் கி.பி. 1054 - மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான கொப்பம் போரில் இராஜேந்திர சோழன் மரணம் அடைதல்.

சுமார் கி.பி. 1070 - முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1118 - விக்கிரம சோழன்.

சுமார் கி.பி. 1133 - இரண்டாம் குலோத்துங்க சோழன்.

சுமார் கி.பி. 1146 - இரண்டாம் இராஜராஜ சோழன்.

சுமார் கி.பி. 1163 - இரண்டாம் இராஜாதிராஜ சோழன்.

சுமார் கி.பி. 1178 - மூன்றாம் குலோத்துங்க சோழன்.

சுமார் கி.பி. 1178 - கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (யாழ்ப்பாண அரசு).

சுமார் கி.பி. 1216 - மூன்றாம் இராஜராஜ சோழன்.

சுமார் கி.பி. 1246 - மூன்றாம் இராஜேந்திர சோழன்.

சுமார் கி.பி. 1246 - குலசேகர சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு).

சுமார் கி.பி. 1256 - குலோத்துங்க சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு).

சோழரிடமிருந்து பாண்டியருக்கு மாறுதல்

சுமார் கி.பி. 1190 - 1260 - ஆறகழூரைத் தலைநகராக்கி பானா வம்ச ஆட்சி.

சுமார் கி.பி. 1216 - 1239 - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையைச் சோழரிடம் இருந்து மீட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று பெயர் பெறுதல். இவருடைய ஆட்சியில் சோழர் சிற்றரசர் ஆனவுடன் அவர்களின் அழிவும் தொடங்குதல்.

சுமார் கி.பி. 1216 - காடவர் வம்சம்.

சுமார் கி.பி. 1236 - சம்புவரையர் வடதமிழகத்தைக் கைப்பற்றி நாயக்கர் காலம் வரை ஆள்கின்றனர்.

பாண்டியர் எழுச்சியும் இஸ்லாமியர் ஆட்சியும்

கி.பி. 1214 - 1236 - இலங்கை மீதான கலிங்கப் படையெடுப்பு.

கி.பி. 1251 - முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறல்.

கி.பி. 1268 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வட இலங்கையைக் கைப்பற்றி அங்கு குலசேகர சிங்கையாரியன் என்பவனைப் பட்டத்தில் அமர்த்துகிறான். அதற்குப் பின் இவன் வழியில் வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்பாணத்தை கி.பி. 1619 வரை ஆண்டனர்.

கி.பி. 1279 - மூன்றாம் இராஜேந்திர சோழனின் இழப்பைத் தொடர்ந்து சோழ ஆட்சியின் முடிவு.

கி.பி. 1268 - 1310 - குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலை சிறந்த செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு.
பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்களுக்கும் குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.

கி.பி. 1308 - அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் தமிழ்நாடு வழியாக தேவகிரியை ஆக்கிரமித்தல்.

கி.பி. 1310 - குலசேகரப் பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று அரசனாகுதல். இது உள்ளூர் கலகமாக மாறித் தன் சகோதரன் வீரபாண்டியனால் தோற்கடிக்கப் படுகிறான்.

கி.பி. 1311 - மாலிக் காபூர் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்து மதுரையைத் தாக்குதல்.

கி.பி. 1327 - 1370 மதுரை சுல்தானினால் மதுரை ஆளப்படுதல்.

விஜயநகரப் பேரரசு - திருமலை நாயக்கர் - ஐரோப்பிய ஆட்சி

கி.பி. 1370 - தமிழ் நாடு முழுவதையும் விஜயநகரப் பேரரசின் முதலாவது புக்கா ராயனும் அவனுடைய மகனும் கைப்பற்றுகிறார்கள். பாண்டியர்கள் சிற்றரசர் எனும் நிலையை அடைந்தனர்.

கி.பி. 1422 - சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் தென்காசி, பாண்டியர் தலைநகரமாக இருந்தது. தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் இவனுடைய தம்பியின் காலத்தில் கட்டி முடிக்கப் பட்டு அதற்குப் பின் வந்த பாண்டியர்கள் அந்தக் கோயிலிலேயே முடியும் சூட்டுக் கொண்டனர்.

கி.பி. 1505 - இலங்கையில் போர்த்துக்கீசிரியரின் வருகை.

கி.பி. 1519 - முதலாம் சங்கிலி யாழ்ப்பாண அரசனாகுதல்.

கி.பி. 1522 - போர்த்துக்கீசிரியரின் வருகை.

கி.பி. 1535 - தஞ்சாவூரில் நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்திய சேவப்பா நாயக்கரை விஜயநகரப் பேரரசின் அச்சுத ராயன் தஞ்சாவூரை ஆள நியமிக்கிறான்.

கி.பி. 1535 - 1590 - சேவப்பா நாயக்கர் முதலாவது சுதந்திர நாயக்கராக தஞ்சாவூரை ஆளுகிறார்.

கி.பி. 1600 - 1645 - கொல்லம் கொண்டான் என்ற பாண்டிய மன்னனின் ஆட்சி முடிவோடு பாண்டியர்கள் வரலாற்றில் இருந்து மறைதல். தஞ்சை நாயக்கர்களில் முக்கியமான ரகுநாத நாயக்கர் வருகை.

கி.பி. 1609 - புலிக்கட் எனும் இடத்தில் இடாச்சு குடியேற்றங்கள்.

கி.பி. 1609 - யாழ்ப்பாண அரசு போர்த்துக்கீசிரியரிடம் வீழ்தலும் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசிரியர் ஆட்சியும்.

கி.பி. 1621 - யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலி கோவாவில் போர்த்துக்கீசிரியரால் தூக்கிலிடப் படுகிறார்.

கி.பி. 1623 - 1659 - மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி.

கி.பி. 1639 - பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சென்னை பட்டினத்தினை வாங்கி ஜார்ஜ் கோட்டையை அமைத்தல்.

கி.பி. 1652 - தஞ்சையும் சிவசிங்கையும் விஜயபுர சுல்தானிடம் வீழ்தல்.

கி.பி. 1656 - மதுரை நாயக்கர் திருமலைக்கு எதிராக மைசூர் படைகள் ஆக்கிரமிப்பு.

கி.பி. 1658 - இலங்கையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி.

கி.பி. 1675 - விஜயபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி மராத்தியப் படை நகர்வு. ஏகோயி தன்னைத் தானே அரசனாக அறிவித்தல்.

கி.பி. 1692 - மொகலாய பேரரரசின் பிரதிநிதி சுல்பிகார் அலிகான் ஆற்காடு நவாப்பை அமைத்தல்.

கி.பி. 1746 - பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுதல்.

கி.பி. 1796 - இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்.

கிழக்கிந்திய நிறுவனம் - பாளையக்காரர் போர்கள்

கி.பி. 1749 - பிரித்தானியர் ஜார்ஜ் கோட்டையை மீண்டும் கைப்பற்றுதல்.

கி.பி. 1751 - ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கிக் கைப்பற்றுதல்.

கி.பி. 1751 - பூலித்தேவன் கும்பினிப் படைத் தலைவர்களான முகமது அலி; அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்து பாளையக்காரர்கள் போரைத் தோற்றுவித்தல்.

கி.பி. 1752 - விஜயக்குமார நாயக்கரை தோற்கடித்து பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் பரங்கிப் படை மதுரையை கைப்பற்றுதல். அதை அறிந்த முத்து வடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து, கேப்டன் கோப்பின் படைகளை விரட்டி அடித்து, மீண்டும் விஜயக்குமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தல்.

கி.பி. 1756 - பிரித்தானியாவும் பிரான்ஸும் முதலாவது கர்நாடக ஒப்பந்தம் செய்தல். ஆற்காடு நவாப்பாக முகம்மது அலி வால்யாவை நியமித்தல்.

கி.பி. 1759 - பிரான்ஸ் படையினர் தாமஸ் ஆர்த்தர் தலைமையில் சென்னையைத் தாக்குதல்.

கி.பி. 1760 - பிரித்தானியருக்கும் பிரான்ஸுக்கும் இடையே வந்தவாசிப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு.

கி.பி. 1767 - மைசூர் சுல்தான் ஹைதர் அலி சென்னையைத் தாக்குதல், பிரித்தானியர் அதை முறியடித்தல். பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டாஞ்செவ்வலின் பக்கத்து பாளையமான கொல்லம் கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவன், பூலித்தேவனுக்கு உதவியதற்காகப் பரங்கிப் படையால் கொல்லப் படுதல். பூலித்தேவன் இறப்பு.

கி.பி. 1772 - முத்து வடுகநாதர் காளையார் கோயிலுக்கு ஆயுதமின்றிச் சென்ற போது பரங்கிப் படைத் தளபதி பான்சோர் அவரைச் சுட்டுக் கொன்றான்.

கி.பி. 1773 - பிரித்தானிய அரசு சீராக்கல் சட்டத்தை அமுலாக்குதல். பிரித்தானிய அரசின் கீழ் சென்னை நிர்வாகம் செல்லுதல்.

கி.பி. 1777 - 1832 - இரண்டாம் சரபோஜி தஞ்சையை ஆளுதல்.

கி.பி. 1799 - சரபோஜி உடன்படிக்கையின்படி தஞ்சைப் பேரரசு பிரித்தானியர் வசமாதல். பிரித்தானியரால் கட்டபொம்மன் தூக்கிலிடப் படுதல்.

கி.பி. 1803 - சென்னை ஆளுநரை பென்டிங் நியமித்தல்.

கி.பி. 1800 - 1805 - பாளையக்காரர் போர்கள்.

கி.பி. 1806 - வேலூர்க் கோட்டையில் சென்னை ஆளுநர் பென்டிங்கிற்கு எதிர்ப்பு. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வீரர்களின் வேலூர்ச் சிப்பாய்க் கலகம்.

பிரித்தானிய ஆட்சி

கி.பி. 1800 - பிரித்தானிய ஆட்சிக்கு வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப் படுதல்.

கி.பி. 1815 - தேயிலை, கோப்பி, தென்னைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப் படுதல்.

கி.பி. 1860 - தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் தென்னாப்பிரிக்கா அழைத்து செல்லப் படுதல்.

கி.பி. 1892 - பிரித்தானிய அரசின் இந்திய கவுன்சில்கள் சட்டம்.

கி.பி. 1901 - தமிழகத்தில் இருந்து தமிழர்கள் மலேசியாவிற்கு வேலைக்காகச் செல்லுதல்.

கி.பி. 1909 - இந்திய அரசுச் சட்டம்.

கி.பி. 1921 - முதலாவது பிரதேச தேர்தல் சென்னையில் நடைபெறுதல்.

கி.பி. 1927 - சென்னை காங்கிரஸ் முழு சுதந்திரத் தீர்வை வெளியிடுதல்.

கி.பி. 1928 - சைமன் குழுவின் சென்னை வரவு. வலுவான எதிர்ப்பு.

கி.பி. 1928 - இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்.

கி.பி. 1937 - காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சென்னையில் ஆட்சி அமைத்தல்.

கி.பி. 1939 - இலங்கையில் முதலாவது தமிழ் - சிங்களக் கலவரம்.

கி.பி. 1938 - பெரியாரின் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட திராவிடநாடு போராட்டம்.

கி.பி. 1941 - சென்னையில் இந்திய முஸ்லிம் லீக்.

கி.பி. 1943 - இந்திய தேசிய ராணுவத்தில் மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் இணைந்தனர்.

கி.பி. 1944 - பெரியாரும் அண்ணாதுரையும் திராவிடர் கழகத்தை அமைத்தல்.

கி.பி. 1944 - இலங்கையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உருவாக்கம்.

பிரித்தானிய ஆட்சியின் பின்பு

கி.பி. 1947 - சென்னை மாகாணம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் பகுதிகளாக தமிழ்நாடு உள்ளடக்கப் படுதல்.

கி.பி. 1949 - இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சிக் கோரிக்கை.

கி.பி. 1953 - சென்னை மாநிலத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழி.

கி.பி. 1958 - இலங்கை இனக் கலவரம்.

கி.பி. 1964 - இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான முதலாவது ஸ்ரீரிமாவோ - சாஸ்திரி உடன்படிக்கை.

கி.பி. 1965 - இந்தி தேசிய மொழியாக பிரகடனம். பரவலான இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்.

கி.பி. 1969 - சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்.

கி.பி. 1981 - யாழ் பொது நூலகம் எரிப்பு.

கி.பி. 1983 - இலங்கையில் தமிழர் படுகொலை. இலங்கை இனப்பிரச்சினை. ஆயுதப் போராக மாறுதல்.

கி.பி. 1983 - அதிக அளவான ஈழத் தமிழர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்தல்.

கி.பி. 1985 - ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் திம்புப் பேச்சுவார்த்தைகள்.

கி.பி. 1987 - இந்திய இலங்கை ஒப்பந்தம். இந்திய அமைதி காக்கும் படையின் வருகை.

கி.பி. 2004 - ஆழிப் பேரலையால் ஆயிரக் கணக்கான தமிழர்களும் உடமைகளும் இழப்பு.

கி.பி. 2006 - 2009 - இலங்கைத் தமிழர் இனப் படுகொலை.

கி.பி. 2009 - இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைதல்.

கி.பி. 2011 - இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றங்கள் செய்ததாக ஐ.நா. குற்றம் சாட்டு.

............................................................

 மேற்கோள்கள்:

விக்கிப்பிப்பீடியா தமிழ்

பண்டைய தமிழகம் - சி.க. சிற்றம்பலம், 1999

Nilakanta Sastri, K.A. A History of South India, OUP, Reprinted 2000

Historical Atlas of South India-Timeline-http://www.ifpindia.org/Historical-Atlas-of-South-India-Timeline.html (French Institute of Pondicherry)

Codrington, Humphry William, A Short History of Lanka (http://lakdiva.org)

Veluppillai, Prof. A., Religious Traditions of the Tamils http://tamilelibrary.org/

Nilakanta Sastri, K.A., Srinivasachari, Advanced History of India, Allied Publishers Ltd, New Delhi, Reprinted 2000

Read, Anthony, The Proudest Day - India's Long Ride to Independence, Jonathan Cape, London, 1997

14 ஏப்ரல் 2019

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கி.மு. 2000-களில் தொடங்கி இன்று வரை தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை பிரித்துப் பார்க்கலாம்.


தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆட்சி செய்தவர்கள், தமிழர்கள் அடைந்த இன்னல்கள் என பல முக்கிய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது.

தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைகின்றது. அவை தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளைக் கோடிக் காட்டுகின்றது. இந்தக் காலக்கோடு, கல் ஆயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இந்தக் காலத்துத் தமிழர்கள் வரை பிரித்துக் காட்டுகின்றது.



அத்துடன் அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், அவர்கள் அடைந்த வெற்றித் தோல்விகளையும், அவர்களின் ஏற்ற இறக்கங்களையும் அறிய உதவுகின்றது.

வரலாற்றுக்கு முந்திய காலம்

சுமார் கி.மு. 3000 - 1400 - பையம் பள்ளியில் புதிய கற்காலம்.

சுமார் கி.மு. 2000 - 300 - தமிழகத்தின் இரும்பு காலம்.

முற்சங்க காலம்

சுமார் 1000 - 300 கி.மு. - பெருங்கற்காலம்.

சுமார் 600 கி.மு. - தமிழ்ப் பிராமி நடைமுறைத் தமிழ் எழுத்தாகியது.

சுமார் 500 கி.மு. - தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப் படுகிறது.


சங்க காலம்

சுமார் கி.மு. 500 - சங்க காலப் பாண்டியர்களால் தமிழக முத்திரைக் காசுகள் வெளியிடப்பட்டன.

சுமார் கி.மு. 300 - மெகஸ்தெனஸ் இந்தியா வருகை. பண்டையா எனும் அரசி பாண்டிய நாட்டில் ஆட்சி.

சுமார் கி.மு. 250 - அசோகர் கல்வெட்டு. தமிழகத்தின் நான்கு பேரரசுகள் (சேரர், சோழர், பாண்டியர், வேளிர்.

சுமார் கி.மு. 200 - நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் ஆட்சியில் சமண மதம்.

சுமார் கி.மு. 145 - இலங்கையில் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சி. துட்டகை முனுவுடன் போர்.

சுமார் கி.மு. 200 - சங்க இலக்கிய நூல்கள் சங்க காலத்தில் உருவாக்கப் பட்டன.

சுமார் கி.மு. 150 - கலிங்க நாட்டு அரசன் த வெற்றிகளைத் கதிகும்பம் எனும் கல்வெட்டில் பதிவு செய்தல்.

சுமார் கி.மு. 130 - சேர அரசன் உதியஞ்சேரலாதன் சேர நாட்டில் ஆட்சி.

சுமார் கி.மு. 175 - இலங்கை அரசன் கஜபாகு காலத்தில் சேரன் செங்குட்டுவன்; கரிகால் சோழன் ஆட்சி.

சுமார் கி.மு. 190 - சேர நாட்டில் சேர அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி.

சுமார் கி.மு. 200 - தமிழ் பிராமியானது. தமிழ் எழுத்தின் முன்னோடியான வட்டெழுத்து தோற்றம்.

சுமார் கி.மு. 60 - மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அகஸ்டஸ் கிரேக்க மன்னனுக்குத் தூது.

வணிக காலம்

சுமார் கி.பி. 1 - 140 - மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக பிலினி, தாலமி என்பவர்களின் குறிப்புகள்.

சுமார் கி.பி. 190 - சாவகம் (ஜாவா) தீவில் தமிழ் பேசப்பட்டது.

சுமார் கி.பி. 1 - 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர்கள் யவனர்களுடன் சிறந்த வணிக உறவு. கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக எழுதப் பட்டது.

சுமார் கி.பி. 250 - சீன நாட்டு வரலாற்று அறிஞர் சுவான்சாங், பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்து இருந்தனர் என எழுதி உள்ளார்.

சங்க காலத்திற்கு பின்னான காலம்

சுமார் கி.பி. 300 -325 - சிவகந்தவர்மன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தில் பல்லவர் அரசு.

சுமார் கி.பி. 300 - 590 - களப்பிரர் தமிழ் நாட்டின் மீது படையெடுப்பு. பாரம்பரிய ஆட்சி மாற்றம்.

சுமார் கி.பி. 340 - குப்தப் பேரரசு தென்னிந்தியாவை நோக்கி படையெடுப்பு. தொண்டை நாடு முழுவதும் சோழர்கள் ஆக்கிரமிப்பு.

சுமார் கி.பி. 361 - ரோமானியப் பேரரசனான சூலியனுக்கு பாண்டியர் தூதனுப்புதல்.

சுமார் கி.பி. 436 - 463 - தமிழகத்தில் இருந்து இலங்கை சென்ற பாண்டிய மன்னர்கள், இராசராட்டிரம் எனும் அரசை ஏற்படுத்தினர்.

சுமார் கி.பி. 436 - 460 - பல்லவன் இரண்டாம் கந்தவர்மன் என்பவனின் மூன்று மகன்களும் பல்லவ அரசை வடதமிழகம் முழுதும் விரிவுபடுத்தினர்.

பல்லவர் பாண்டியர் ஆட்சி

சுமார் கி.பி. 550 - 600 - பல்லவன் சிம்மவிஷ்ணு தொண்டை நாடு, சோழ நாடுகள் மீட்பு. பாண்டியன் கடுங்கோன் மதுரையைக் களப்பிரர் ஆட்சியில் இருந்து மீட்பு.

சுமார் கி.பி. 590 - 630 - காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சி.

சுமார் கி.பி. 610 - மகேந்திரவர்மனைச் சமணத்தில் இருந்து சைவ சமயத் துறவி திருநாவுக்கரசு நாயனார் மதம் மற்றுகிறார்.

சுமார் கி.பி. 628 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசு மீது படையெடுப்பு. காஞ்சிபுரம் முற்றுகை.

சுமார் கி.பி. 630 - 668 - பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் தொண்டை மண்டலத்தில் ஆட்சி.

சுமார் கி.பி. 642 - சாளுக்கியர் மீது முதலாம் நரசிம்ம பல்லவன் படை எடுத்து பாதமியை நீக்குதல். புலிகேசி யுத்தத்தில் கொல்லப் படுதல்.

சுமார் கி.பி. 670 - 700 - பாண்டிய அரிகேசரி மாறவர்மன் மதுரையில் ஆட்சி.

சுமார் கி.பி. 700 - 728 - பல்லவன் ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலையும் மாமல்லபுரக் கடற்கரைப் பகுதிகளில் கோயில்களைக் கட்டுதல்.

சுமார் கி.பி. 700 - 730 - கொங்கு நாடு வரை பாண்டிய அரசை கோச்சடையான் ரணதீரன் விரிவாக்குதல்.

சுமார் கி.பி. 731 - பல்லவப் பேரரசில் ஆட்சி முறைக் குழப்பம். பல்லவ அரசனாக இரண்டாம் நந்திவர்மன் தேர்வு.

சுமார் கி.பி. 731 - 765 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து, பாண்டியன் மாறவர்மன் ராஜசிம்மன் பல்லவ அரசன் நந்திவர்மனைத் தாக்குதல்.

சுமார் கி.பி. 735 - சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவ நாடு மீது படையெடுத்து, தலைநகர் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்தல்.

சுமார் கி.பி. 760 - பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மன் மேற்கு கங்க அரசு மீது போர்த் தொடுத்து அதைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 765 - 815 - பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையான் மதுரையை ஆளுதல்.

சுமார் கி.பி. 767 - பாண்டியப் படைகள் காவிரி ஆற்றின் தெற்கில் பல்லவர்களைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 800 - 830 - முதலாம் வரகுன பாண்டியன் அரசனாகிறான். பல்லவ அரசன் நந்திவர்மனைத் தோற்கடித்து திருச்சிராப்பள்ளி வரை அரசை விரிவாக்குதல்.

சுமார் கி.பி. 825 - 850 - பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் பாண்டிய அரசைத் தோற்கடித்து வைகை வரை பல்லவப் பேரரசை விவரித்தல்.

சுமார் கி.பி. 830 - 862 - பாண்டியன் சீவல்லபன் மதுரையில் ஆட்சி.

சுமார் கி.பி. 840 - சீவல்லபன் இலங்கை மீது போர்த் தொடுத்து முதலாம் சேனனிடமிருந்து வட மாகாணங்களைக் கைப்பற்றல்.

சுமார் கி.பி. 848 - காவிரி கழிமுகத்தை ஆட்சி செய்த முத்தரையர்களை வெற்றி கொண்டு விஜயாலய சோழன் தஞ்சாவூரில் எழுச்சி.

சுமார் கி.பி. 859 - பாண்டியன் சீமாறன் சீவவல்லபன் கும்பகோணப் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தல்.

சோழர் காலம் - யாழ்ப்பாண அரசு

சுமார் கி.பி. 887 - ஆதித்த சோழன் பல்லவ அரசன் அபராஜிதனைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 949 - தக்கோலம் போர். சோழர் படையை ரஸ்ராகுப்தா கிருஷ்ணா III தோற்கடிக்கிறான்.

சுமார் கி.பி. 985 - ராஜ ராஜ சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1010 - ராஜ ராஜ சோழன் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டி முடித்தல்.

சுமார் கி.பி. 1012 - இராஜேந்திர சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1023 - இராஜேந்திர சோழன் கங்கைக்குப் பயணம்.

சுமார் கி.பி. 1025 - சோழர் கடற்படை ஸ்ரீவிஜய அரசனைத் தோற்கடித்தல்.

சுமார் கி.பி. 1041 - இராஜேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்தல்.

சுமார் கி.பி. 1054 - மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிரான கொப்பம் போரில் இராஜேந்திர சோழன் மரணம் அடைதல்.

சுமார் கி.பி. 1070 - முதலாம் குலோத்துங்க சோழன் அரியணை ஏறுதல்.

சுமார் கி.பி. 1118 - விக்கிரம சோழன்.

சுமார் கி.பி. 1133 - இரண்டாம் குலோத்துங்க சோழன்.

சுமார் கி.பி. 1146 - இரண்டாம் இராஜராஜ சோழன்.

சுமார் கி.பி. 1163 - இரண்டாம் இராஜாதிராஜ சோழன்.

சுமார் கி.பி. 1178 - மூன்றாம் குலோத்துங்க சோழன்.

சுமார் கி.பி. 1178 - கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (யாழ்ப்பாண அரசு).

சுமார் கி.பி. 1216 - மூன்றாம் இராஜராஜ சோழன்.

சுமார் கி.பி. 1246 - மூன்றாம் இராஜேந்திர சோழன்.

சுமார் கி.பி. 1246 - குலசேகர சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு).

சுமார் கி.பி. 1256 - குலோத்துங்க சிங்கையாரியன் (யாழ்ப்பாண அரசு).

சோழரிடமிருந்து பாண்டியருக்கு மாறுதல்

சுமார் கி.பி. 1190 - 1260 - ஆறகழூரைத் தலைநகராக்கி பானா வம்ச ஆட்சி.

சுமார் கி.பி. 1216 - 1239 - முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையைச் சோழரிடம் இருந்து மீட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று பெயர் பெறுதல். இவருடைய ஆட்சியில் சோழர் சிற்றரசர் ஆனவுடன் அவர்களின் அழிவும் தொடங்குதல்.

சுமார் கி.பி. 1216 - காடவர் வம்சம்.

சுமார் கி.பி. 1236 - சம்புவரையர் வடதமிழகத்தைக் கைப்பற்றி நாயக்கர் காலம் வரை ஆள்கின்றனர்.

பாண்டியர் எழுச்சியும் இஸ்லாமியர் ஆட்சியும்

கி.பி. 1214 - 1236 - இலங்கை மீதான கலிங்கப் படையெடுப்பு.

கி.பி. 1251 - முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறல்.

கி.பி. 1268 - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் வட இலங்கையைக் கைப்பற்றி அங்கு குலசேகர சிங்கையாரியன் என்பவனைப் பட்டத்தில் அமர்த்துகிறான். அதற்குப் பின் இவன் வழியில் வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்பாணத்தை கி.பி. 1619 வரை ஆண்டனர்.

கி.பி. 1279 - மூன்றாம் இராஜேந்திர சோழனின் இழப்பைத் தொடர்ந்து சோழ ஆட்சியின் முடிவு.

கி.பி. 1268 - 1310 - குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலை சிறந்த செல்வச் செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு.
பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்களுக்கும் குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.

கி.பி. 1308 - அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் தமிழ்நாடு வழியாக தேவகிரியை ஆக்கிரமித்தல்.

கி.பி. 1310 - குலசேகரப் பாண்டியனின் மகன் சுந்தர பாண்டியன் தன் தந்தையைக் கொன்று அரசனாகுதல். இது உள்ளூர் கலகமாக மாறித் தன் சகோதரன் வீரபாண்டியனால் தோற்கடிக்கப் படுகிறான்.

கி.பி. 1311 - மாலிக் காபூர் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்து மதுரையைத் தாக்குதல்.

கி.பி. 1327 - 1370 மதுரை சுல்தானினால் மதுரை ஆளப்படுதல்.

விஜயநகரப் பேரரசு - திருமலை நாயக்கர் - ஐரோப்பிய ஆட்சி

கி.பி. 1370 - தமிழ் நாடு முழுவதையும் விஜயநகரப் பேரரசின் முதலாவது புக்கா ராயனும் அவனுடைய மகனும் கைப்பற்றுகிறார்கள். பாண்டியர்கள் சிற்றரசர் எனும் நிலையை அடைந்தனர்.

கி.பி. 1422 - சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் தென்காசி, பாண்டியர் தலைநகரமாக இருந்தது. தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் இவனுடைய தம்பியின் காலத்தில் கட்டி முடிக்கப் பட்டு அதற்குப் பின் வந்த பாண்டியர்கள் அந்தக் கோயிலிலேயே முடியும் சூட்டுக் கொண்டனர்.

கி.பி. 1505 - இலங்கையில் போர்த்துக்கீசிரியரின் வருகை.

கி.பி. 1519 - முதலாம் சங்கிலி யாழ்ப்பாண அரசனாகுதல்.

கி.பி. 1522 - போர்த்துக்கீசிரியரின் வருகை.

கி.பி. 1535 - தஞ்சாவூரில் நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்திய சேவப்பா நாயக்கரை விஜயநகரப் பேரரசின் அச்சுத ராயன் தஞ்சாவூரை ஆள நியமிக்கிறான்.

கி.பி. 1535 - 1590 - சேவப்பா நாயக்கர் முதலாவது சுதந்திர நாயக்கராக தஞ்சாவூரை ஆளுகிறார்.

கி.பி. 1600 - 1645 - கொல்லம் கொண்டான் என்ற பாண்டிய மன்னனின் ஆட்சி முடிவோடு பாண்டியர்கள் வரலாற்றில் இருந்து மறைதல். தஞ்சை நாயக்கர்களில் முக்கியமான ரகுநாத நாயக்கர் வருகை.

கி.பி. 1609 - புலிக்கட் எனும் இடத்தில் இடாச்சு குடியேற்றங்கள்.

கி.பி. 1609 - யாழ்ப்பாண அரசு போர்த்துக்கீசிரியரிடம் வீழ்தலும் யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசிரியர் ஆட்சியும்.

கி.பி. 1621 - யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் இரண்டாம் சங்கிலி கோவாவில் போர்த்துக்கீசிரியரால் தூக்கிலிடப் படுகிறார்.

கி.பி. 1623 - 1659 - மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி.

கி.பி. 1639 - பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சென்னை பட்டினத்தினை வாங்கி ஜார்ஜ் கோட்டையை அமைத்தல்.

கி.பி. 1652 - தஞ்சையும் சிவசிங்கையும் விஜயபுர சுல்தானிடம் வீழ்தல்.

கி.பி. 1656 - மதுரை நாயக்கர் திருமலைக்கு எதிராக மைசூர் படைகள் ஆக்கிரமிப்பு.

கி.பி. 1658 - இலங்கையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி.

கி.பி. 1675 - விஜயபுரத்திலிருந்து தஞ்சை நோக்கி மராத்தியப் படை நகர்வு. ஏகோயி தன்னைத் தானே அரசனாக அறிவித்தல்.

கி.பி. 1692 - மொகலாய பேரரரசின் பிரதிநிதி சுல்பிகார் அலிகான் ஆற்காடு நவாப்பை அமைத்தல்.

கி.பி. 1746 - பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுதல்.

கி.பி. 1796 - இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்.

கிழக்கிந்திய நிறுவனம் - பாளையக்காரர் போர்கள்

கி.பி. 1749 - பிரித்தானியர் ஜார்ஜ் கோட்டையை மீண்டும் கைப்பற்றுதல்.

கி.பி. 1751 - ராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கிக் கைப்பற்றுதல்.

கி.பி. 1751 - பூலித்தேவன் கும்பினிப் படைத் தலைவர்களான முகமது அலி; அப்துல் ரகீம் போன்றவர்களை வரிமறுப்புப் போரில் தோற்கடித்து பாளையக்காரர்கள் போரைத் தோற்றுவித்தல்.

கி.பி. 1752 - விஜயக்குமார நாயக்கரை தோற்கடித்து பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் பரங்கிப் படை மதுரையை கைப்பற்றுதல். அதை அறிந்த முத்து வடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து, கேப்டன் கோப்பின் படைகளை விரட்டி அடித்து, மீண்டும் விஜயக்குமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தல்.

கி.பி. 1756 - பிரித்தானியாவும் பிரான்ஸும் முதலாவது கர்நாடக ஒப்பந்தம் செய்தல். ஆற்காடு நவாப்பாக முகம்மது அலி வால்யாவை நியமித்தல்.

கி.பி. 1759 - பிரான்ஸ் படையினர் தாமஸ் ஆர்த்தர் தலைமையில் சென்னையைத் தாக்குதல்.

கி.பி. 1760 - பிரித்தானியருக்கும் பிரான்ஸுக்கும் இடையே வந்தவாசிப் போர். வீரபாண்டிய கட்டபொம்மன் பிறப்பு.

கி.பி. 1767 - மைசூர் சுல்தான் ஹைதர் அலி சென்னையைத் தாக்குதல், பிரித்தானியர் அதை முறியடித்தல். பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டாஞ்செவ்வலின் பக்கத்து பாளையமான கொல்லம் கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவன், பூலித்தேவனுக்கு உதவியதற்காகப் பரங்கிப் படையால் கொல்லப் படுதல். பூலித்தேவன் இறப்பு.

கி.பி. 1772 - முத்து வடுகநாதர் காளையார் கோயிலுக்கு ஆயுதமின்றிச் சென்ற போது பரங்கிப் படைத் தளபதி பான்சோர் அவரைச் சுட்டுக் கொன்றான்.

கி.பி. 1773 - பிரித்தானிய அரசு சீராக்கல் சட்டத்தை அமுலாக்குதல். பிரித்தானிய அரசின் கீழ் சென்னை நிர்வாகம் செல்லுதல்.

கி.பி. 1777 - 1832 - இரண்டாம் சரபோஜி தஞ்சையை ஆளுதல்.

கி.பி. 1799 - சரபோஜி உடன்படிக்கையின்படி தஞ்சைப் பேரரசு பிரித்தானியர் வசமாதல். பிரித்தானியரால் கட்டபொம்மன் தூக்கிலிடப் படுதல்.

கி.பி. 1803 - சென்னை ஆளுநரை பென்டிங் நியமித்தல்.

கி.பி. 1800 - 1805 - பாளையக்காரர் போர்கள்.

கி.பி. 1806 - வேலூர்க் கோட்டையில் சென்னை ஆளுநர் பென்டிங்கிற்கு எதிர்ப்பு. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் இந்திய வீரர்களின் வேலூர்ச் சிப்பாய்க் கலகம்.

பிரித்தானிய ஆட்சி


கி.பி. 1800 - பிரித்தானிய ஆட்சிக்கு வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப் படுதல்.

கி.பி. 1815 - தேயிலை, கோப்பி, தென்னைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப் படுதல்.

கி.பி. 1860 - தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் தென்னாப்பிரிக்கா அழைத்து செல்லப் படுதல்.

கி.பி. 1892 - பிரித்தானிய அரசின் இந்திய கவுன்சில்கள் சட்டம்.

கி.பி. 1901 - தமிழகத்தில் இருந்து தமிழர்கள் மலேசியாவிற்கு வேலைக்காகச் செல்லுதல்.

கி.பி. 1909 - இந்திய அரசுச் சட்டம்.

கி.பி. 1921 - முதலாவது பிரதேச தேர்தல் சென்னையில் நடைபெறுதல்.

கி.பி. 1927 - சென்னை காங்கிரஸ் முழு சுதந்திரத் தீர்வை வெளியிடுதல்.

கி.பி. 1928 - சைமன் குழுவின் சென்னை வரவு. வலுவான எதிர்ப்பு.

கி.பி. 1928 - இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்.

கி.பி. 1937 - காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சென்னையில் ஆட்சி அமைத்தல்.

கி.பி. 1939 - இலங்கையில் முதலாவது தமிழ் - சிங்களக் கலவரம்.

கி.பி. 1938 - பெரியாரின் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட திராவிடநாடு போராட்டம்.

கி.பி. 1941 - சென்னையில் இந்திய முஸ்லிம் லீக்.

கி.பி. 1943 - இந்திய தேசிய ராணுவத்தில் மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் இணைந்தனர்.

கி.பி. 1944 - பெரியாரும் அண்ணாதுரையும் திராவிடர் கழகத்தை அமைத்தல்.

கி.பி. 1944 - இலங்கையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உருவாக்கம்.

பிரித்தானிய ஆட்சியின் பின்பு

கி.பி. 1947 - சென்னை மாகாணம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் பகுதிகளாக தமிழ்நாடு உள்ளடக்கப் படுதல்.

கி.பி. 1949 - இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சிக் கோரிக்கை.

கி.பி. 1953 - சென்னை மாநிலத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழி.

கி.பி. 1958 - இலங்கை இனக் கலவரம்.

கி.பி. 1964 - இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான முதலாவது ஸ்ரீரிமாவோ - சாஸ்திரி உடன்படிக்கை.

கி.பி. 1965 - இந்தி தேசிய மொழியாக பிரகடனம். பரவலான இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்.

கி.பி. 1969 - சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம்.

கி.பி. 1981 - யாழ் பொது நூலகம் எரிப்பு.

கி.பி. 1983 - இலங்கையில் தமிழர் படுகொலை. இலங்கை இனப்பிரச்சினை. ஆயுதப் போராக மாறுதல்.

கி.பி. 1983 - அதிக அளவான ஈழத் தமிழர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்தல்.

கி.பி. 1985 - ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் திம்புப் பேச்சுவார்த்தைகள்.

கி.பி. 1987 - இந்திய இலங்கை ஒப்பந்தம். இந்திய அமைதி காக்கும் படையின் வருகை.

கி.பி. 2004 - ஆழிப் பேரலையால் ஆயிரக் கணக்கான தமிழர்களும் உடமைகளும் இழப்பு.

கி.பி. 2006 - 2009 - இலங்கைத் தமிழர் இனப் படுகொலை.

கி.பி. 2009 - இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைதல்.

கி.பி. 2011 - இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றங்கள் செய்ததாக ஐ.நா. குற்றம் சாட்டு.

............................................................
 
மேற்கோள்கள்:

விக்கிப்பிப்பீடியா தமிழ்

பண்டைய தமிழகம் - சி.க. சிற்றம்பலம், 1999

Nilakanta Sastri, K.A. A History of South India, OUP, Reprinted 2000

Historical Atlas of South India-Timeline-http://www.ifpindia.org/Historical-Atlas-of-South-India-Timeline.html (French Institute of Pondicherry)

Codrington, Humphry William, A Short History of Lanka (http://lakdiva.org)

Veluppillai, Prof. A., Religious Traditions of the Tamils http://tamilelibrary.org/

Nilakanta Sastri, K.A., Srinivasachari, Advanced History of India, Allied Publishers Ltd, New Delhi, Reprinted 2000

Read, Anthony, The Proudest Day - India's Long Ride to Independence, Jonathan Cape, London, 1997