கொரோனா 2020 மலேசியா: முன்னணிச் சேவையாளர்களுக்கு நன்றிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா 2020 மலேசியா: முன்னணிச் சேவையாளர்களுக்கு நன்றிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: முன்னணிச் சேவையாளர்களுக்கு நன்றிகள்

இன்றைய நெருக்கடியான காலக் கட்டத்தில், மலேசியாவில் மிகவும் பிரபலமாகி வருபவர் பொதுநலச் சேவை முன்னணிச் சேவையாளர்களில் ஒருவரான டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (Datuk Dr Noor Hisham Abdullah). மலேசியச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர்.



கொரோனா வைரஸுக்கு எதிரான மலேசியாவின் போரில் டாக்டர் நூர் பிரபலமான மனிதராகி வருகிறார். இவருக்கு நிறையவே வாழ்த்துச் செய்திகள் குவிகின்றன. இவருக்கும் இவரின் சுகாதார முன்னணி குழுவினருக்கும் மலேசிய மக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நெருக்கடியான நேரத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவிப்புகள் செய்யும் போது உறுதியளிக்கும் முகத்துடன் எளிய முறையில் வர்ணனை செய்கின்றார். நம்பிக்கை அளிக்கும் உறுதிப்பாட்டை அவரின் தொனியில் எதிர்பார்க்க முடிகின்றது. அதுவே அவரிடம் காணப்படும் மிகச் சிறப்புத் தன்மை.



Trauma faced by some housemen in hospitals

எப்பேர்ப்பட்ட செய்தியாக இருந்தாலும் அதை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்வதில் தான் அறிவுக் கூர்மையின் மிக உயர்ந்த நிலை பிரதிபலிக்கின்றது. அதைத் தான் டாக்டர் நிஷாம் செய்து வருகின்றார்.

சமூக ஊடகவியலாளர்களில் ஒருவர் ‘நன்றிங்க. மலேசியாவுக்கு உங்கள் சேவை முக்கியம். நீங்கள் எங்களின் சேவை முன்னணியாளர் (frontliner)’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

டாக்டர் நிஷாம், சிலாங்கூர் சிப்பாங்கில் பிறந்தவர். 2013-ஆம் ஆண்டில் இருந்து மலேசியச் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் பதவி. வயது 57. புத்ராஜெயா மருத்துவமனையில் 2007-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருந்தவர். மார்பகப் புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். 




கோவிட் -19 அவசர நிலையைக் கையாளுவதில் அயராது உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சமூக ஊடகங்களில் நன்றி தெரிவிக்கும் செய்திகள் வெள்ளம் போல நிறைந்து வருகின்றன. அவர்களில் இவருக்கும் நிறையவே வாழ்த்துச் செய்திகள்.

நாம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு அடுத்தச் செய்திகள்; பதிவுகளுக்காக ஆவலுடன் காத்து இருக்கிறோம். ஆனால் முன்னணிச் சேவையாளர்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றார்கள்.

அவர்கள் பாதுகாப்பாகச் சேவைகள் செய்ய வேண்டும். பாதிக்கப் படாமல் வீடு திரும்பிச் செல்ல வேண்டும். பிரார்த்திப்போம். Hats off to the frontliners.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.03.2020