பலாப்பழத்தைப் பிளக்காமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலாப்பழத்தைப் பிளக்காமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மே 2019

பலாப்பழத்தைப் பிளக்காமல்

பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள்

முக்கனிகளில் இரண்டாவதாகக் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழம் ஆகும். அதைப் பிளக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று சொல்ல முடியுமா? தாராளமாகச் சொல்லலாம். ஒரு சூத்திரம் இருக்கிறது.


கணக்கதிகாரம் என்று ஒரு நூல் இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில் கொறுக்கையூர் காரிநாயனார் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். இந்த நூலில் காணப்படும் கணித வழிமுறைகள் சாமான்ய மக்களின் பரிமாணங்களை கணக்கியல் ரீதியாக அணுகுகின்றது.

அதில் பலாப் பழத்தின் சுளைகளுக்கு ஒரு சமன்பாடு இருக்கிறது. அதாவது பார்முலா. அதில் பலாப் பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று சொல்ல முடியும் என்று அந்தச் சமன்பாடு சொல்கிறது. எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருகு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே, ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறெண்ண வேண்டாம் சுளை


உரை: ஒரு பலாப் பழத்தை அறுப்பதற்கு முன்னே அதிலுள்ள சுளைகள் இவ்வளவு என்று கண்டிபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு;

காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, ¥ முள்ளுக் கண்டது. இதை ©-ஆல் பெருக்க, ¥ x © =©¥, இதை ஸ-க்கீய, ¥ x ஸ = ஸ¥, உ· x ஸ = ¥, ஆக ©¥. ஈவு ¥உ· சுளை என்று சொல்வது. தமிழ்க் கணிதம் தெரியாமல் இந்த விளக்கத்தைப் புரிந்து கொள்வது சற்றே சிரமம்.

விளக்கம்: பலாப் பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ண வேண்டும். கொஞ்சம் பெரிய வேலை தான். இருந்தாலும் முயற்சி செய்யலாமே.

அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். கிடைத்த தொகையை ஐந்தால் வகுக்க வேண்டும். முடிவாகக் கிடைக்கும் தொகைதான் அந்தப் பலாப் பழத்தின் உள்ளே இருக்கும் சுளைகளின் எண்ணிக்கை.

எடுத்துக் காட்டாக 30 முட்கள். ஆறால் பெருக்கினால் 180. ஐந்தால் வகுத்தால் 36 வருகிறது. அதுதான் உள்ளே இருக்கும் சுளைகளின் எண்ணிக்கை.

ஒரு தடவை சோதனை செய்து பார்த்தேன். சரியாகவே இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.