கொரோனா கோவிட் 19 - மலேசியா 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா கோவிட் 19 - மலேசியா 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மார்ச் 2020

கொரோனா கோவிட் 19 - மலேசியா 6

மலேசியாவில் ஆறாவது இறப்பு

மலேசியாவில் கொரோனா கோவிட் 19 நோயினால் இதுவரை எட்டு பேர் பலியாகி உள்ளனர். சரவாக் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று அதிகாலையில் காலமானார்கள். 79 வயது தாயார். 40 வயது மகள்.

மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் ஒருவர் (நோயாளி 238:
Suhaimi Ab Aziz), கொரோனா கோவிட் 19 நோயினால் இன்று (21.03.2020) விடியல் காலை 1.30-க்கு காலமானார். அவருக்கு வயது 51.
 
Tanah Perkuburan Islam Kampung Chohong

அண்மையில் நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியுடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாக நம்பப் படுகிறது. கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி இவருக்கு கடுமையான சுவாச நோய்த் தொற்று அறிகுறிகள்.

அதன் காரணமாக மலாக்கா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அன்றைய தினமே அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும் சேர்க்கப் பட்டார். இருப்பினும் குணம் அடையவில்லை. இன்று அதிகாலை 1.30-க்கு காலமானார். இவர் இராணுவச் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்.

இன்று மதியம் 2.00 மணிக்கு ஜாசின் கம்போங் சோகோங் (Tanah Perkuburan Islam Kampung Chohong) எனும் இடத்தில் அடக்கம் செய்யப் பட்டார். சவ அடக்க மயானத்திற்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. 




மலேசியாவில் 1,183 பேருக்கு கொரோனா கோவிட் 19 பாதிப்பு. புதிதாக 153 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள 153 பேரில் 90 பேர் கோலாலம்பூர் சமய நிகழ்ச்சியில் தொடர்பு உடையவர்கள் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார்.

எட்டாவது நபர் கோலாலம்பூர் சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அவருக்கு வயது 69.

Source:

https://www.sinarharian.com.my/article/74883/KHAS/Koronavirus/Bangga-abang-banyak-berdakwah-sepanjang-hayat