ஆலயங்களில் அரசியல் வேண்டாம் - சிவநேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலயங்களில் அரசியல் வேண்டாம் - சிவநேசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 நவம்பர் 2019

ஆலயங்களில் அரசியல் வேண்டாம் - சிவநேசன்

தமிழ் மலர் - 15.11.2019

ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தினர் அண்மையில்  காவடிச் சிந்து இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சி ஈப்போ, ஜாலான் தம்பூனில் உள்ள பேராக் மாநிலக் கலை கலாசார அரங்கத்தில், இசைச் செல்வர் ஐதராபாத் பா.சிவா அவர்களின் இசைத் தலைமையில் நடைபெற்றது. மிகச் சிறப்பான இசை நிகழ்ச்சி. முன்னூறுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.




அதற்குத் தலைமை தாங்கிய பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன், ஆலயங்களில் அரசியல் வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில் ’என் தொகுதியில் ஒரு கோயிலின் தலைவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். இவர் ஒவ்வொரு நாளும் அந்த ஆலயத்திற்குப் போகிறார். தெய்வத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார். பின்னர் அதே ஆலயத்தில் அரசியல் கூட்டம் நடத்துகிறார். இப்படிப்பட்ட இவருக்கு அரசாங்கம் மானியம் கொடுக்க வேண்டுமா? கொடுக்கா விட்டால் தவறா? இதற்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.




ஆலயத்தில் வழிபாடுகள் மட்டுமே நடக்க வேண்டும் என்று மாண்புமிகு சிவநேசன் வலியுறுத்தினார்.

காவடிச் சிந்து இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பித்தனர். பெர்காசோ தலைமை அதிகாரி வாசு; ஈப்போ பாராட் ஜ.செ.க. கிளைத் தலைவர் சேகரன்; பேராசிரியர் டாக்டர் முனியாண்டி; சாய் கிருஷ்ணன் போன்றோர் கலந்து கொண்டனர். மலேசிய மேடை புகழ் விக்னேஸ்வரி நிகழ்ச்சியை இனிய தமிழில் இனிதாய் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தியக் கலாசார நடனம் கலைமிகு நாட்டியமாக அமைந்தது. மிகச் சிறப்பான கலா நடனம். அந்த இசை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது. 




மகப்பேறு மருத்துவரும்; சமயப் பற்றாளருமான டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். காவடி என்பதற்கான அவரின் சொல் விளக்கம் அரங்கத்தில் கூடிய பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.

கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. காவடி என்பது முருக பக்தர்கள், முருகப் பெருமானுக்கு செலுத்தும் நேர்த்திக் கடன் என்று காவடிக்குச் சிறப்பாக விளக்கம் அளித்தார்.