சாம்ரி வினோத் காளிமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாம்ரி வினோத் காளிமுத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஜூலை 2019

சாம்ரி வினோத் காளிமுத்து

ஜாகிர் நாயக் என்பவர் அனைத்துலகப் போலீசாரின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டவர்; இந்தியாவால் பற்பல கிரிமினல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேடப் படுகிறவர்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய மதபோதகராகக் கருதப் படுகிறார்.. இவர் தற்போது மலேசியாவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.



இவருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்னர் இருந்த பாரிசான் அரசாங்கம் வழங்கிய தகுதி.

இந்தியாவில் 115 மில்லியன் ரிங்கிட் கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பில் ஜாகிர் நாயக் குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார்.

2019 ஜூன் 19-ஆம் தேதி, இரு நாட்களுக்கு முன்னர் மும்பை நீதிமன்றத்தில் ஜாகிர் நாயக் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது.

இண்டர்போல் அனைத்துலகக் காவல்துறை ஜாகிர் நாயக் மீது சிவப்பு அடையாளக் குறியீட்டைப் பிறப்பித்து உள்ளது. இதன் அடிப்படையில் மலேசியா அவரைக் கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சரி.

https://www.freemalaysiatoday.com/…/zakir-naik-must-presen…/

இப்போது ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக சாம்ரி வினோத் காளிமுத்து (34) என்பவர் குரல் எழுப்பி இருக்கிறார்.

ஜாகிர் நாயக் மலேசிய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டால், தன்னுடைய மலேசிய அடையாள அட்டையை ரத்து செய்து, அந்த அட்டையைத் திரும்பவும் மலேசிய அரசாங்கத்திடமே ஒப்படைக்க விரும்புவதாக மதபோதகர் முகமட் சாம்ரி வினோத் கூறுகிறார்.

Nama: Muhammad Zamri Vinoth Bin Kalimuthu

Lahir: Rahang Negeri Sembilan

Tempat Tinggal: Seremban Negeri Sembilan

Tarikh Lahir: 23 Ogos 1984

”மலேசிய அரசாங்கம் ஜாகிர் நாயக்கைத் திருப்பி அனுப்பினால் நான் என் அடையாள அட்டையைத் திரும்ப ஒப்படைக்க விரும்புகிறேன். அதன் பின்னர் நான் மலேசியாவில் தொடர்ந்து வாழ விரும்பவில்லை” என சாம்ரி வினோத் கூறி இருக்கிறார்.

”மதத்தின் பெயரால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். காரணம் நம் அனைவரின் போராட்டமும் ஒன்றுதான்” என்றும் சாம்ரி வினோத் கூறி இருக்கிறார்.



முதல் கேள்வி. ஒருவர் ஒரு நாட்டின் அடையாள அட்டையைத் திரும்ப ஒப்படைக்க விரும்புகிறேன் என்று சொன்ன அந்தக் கணமே அவர் அந்த நாட்டின் குடியுரிமையை இழக்கிறார்.

ஒருவர் ஒரு நாட்டின் குடியுரிமையை இழந்தால் அதன் பின்னர் அவர் வாழும் அந்த நாட்டிலேயே, நாடு அற்றவராகக் கருதப் படுவார். அதனால் அவர் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் போக முடியாது. ஆக இந்தக் கட்டத்தில் சாம்ரி வினோத் காளிமுத்துவின் நிலைப்பாடு என்ன?

ஒரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் புறக்கணிக்க முன்வருகிறார் என்றால் அவர் அந்த நாட்டின் மீது விசுவாசம் அற்றவர் என பொருள் படுகிறது. அப்படிச் சொன்னாலே அவர் அந்த நாட்டிற்குத் துரோகம் செய்வது போலாகும்.

ஒரு நாட்டிற்கான விசுவாசத் தன்மையைக் கேலிகூத்தாகும் ஒருவர் மீது சம்பந்தப் பட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். இது இரண்டாவது கேள்வி.

சாம்ரி வினோத் காளிமுத்துவின் மீது ஏற்கனவே இரு குற்றச்சாட்டுகள் உள்ளன.

(Section 298A of the Penal Code and Section 233 of the Communications and Multimedia Act 1998)

(AKTA 588 KOMUNIKASI DAN MULTIMEDIA 1998, SEKSYEN 233, SEKSYEN 211, SEKSYEN 298A, SEKSYEN 505 (C) ; KANUN KESEKSAAN DAN AKTA HASUTAN 1948.)

ஒரு சமயத்தை இழிவு படுத்தியதாக செக்சன் 298A -இன் கீழ் முதல் குற்றச்சாட்டு.

பொதுநலத்திற்குப் புறம்பான தகவல்களை ஊடகங்களின் வழியாகப் பரப்பியதாக செக்சன் 233-இன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டு.



Section 298A of the Penal Code for causing disharmony, disunity, or feelings of enmity, hatred or ill will, or prejudicing the maintenance of harmony or unity, on grounds of religion’

Section 233 of the Communications and Multimedia Act 1998 for improper use of network facilities or network service.

இரண்டுமே மலேசியச் சட்டத் துறையின் பார்வையில் உள்ளன. இதுவரையில் சாம்ரி வினோத் காளிமுத்துவின் மீது நாடளாவிய நிலையில் 867 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு உள்ளன.

https://www.nst.com.my/…/igp-867-reports-lodged-against-mus…

அனைத்துலகப் போலீசாரால் தேடப்படும் ஒருவருக்கான பரிந்துரையின் பேரில் தேசத் துரோகம் செய்ய முனையும் ஒருவருக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்? இதுவே பொது மக்களின் எதிர்பார்ப்பு.