கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 செப்டம்பர் 2019

கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள்

(கோத்தா கெலாங்கி பற்றி வெளிவந்த முதல் தமிழ்க் கட்டுரை)
தினத்தந்தி - 25.01.2014

மலாயா தீபகற்பகத்தின் தென்கோடியில் ஜொகூர் மாநிலம். அங்கே கோத்தா திங்கி என்பது ஒரு புறநகர்ப் பகுதி. அதற்கு அப்பால் அடர்ந்த ஒரு மழைக் காடு. அந்தக் காட்டின் நட்ட நடு மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரச மரங்கள். அந்த மரங்களுக்கு எத்தனை மாமாங்க வயது என்பது யாருக்கும் தெரியாது.

Chola Inscription at Linggui River Bed
Photograph: Courtesy of Ganesan, Kota Gelanggi Researcher, Johor Baru


அந்த மரங்களைச் சுற்றிலும் பாழடைந்த கோட்டைச் சுவர்கள். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி (Kota Gelanggi) என்கிற சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைந்து போன வரலாற்றுச் சின்னங்கள்.

இப்படி ஓர் இந்திய சாம்ராஜ்யக் கோட்டைகள் அங்கே இருக்கின்றன என்பது மலேசியர்கள் பலருக்குத் தெரியாது. ஆனால் அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த ஓராங் அஸ்லி பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியும். வேட்டைக்குப் போன அவர்களில் சிலருக்குக் கற்சிலைகள் கிடைத்து இருக்கின்றன.

அவற்றை எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்தப் பொருட்கள் எல்லாம் மாபெரும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைப் பொருட்கள். அது அவர்களுக்குத் தெரியவே தெரியாது.




2005-ஆம் ஆண்டில் தான் இந்த அதிசயம் வெளி உலகத்திற்கே தெரிய வந்தது. மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழ் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு உலகத்தையே பிரமிக்க வைத்தது.

கோத்தா கெலாங்கி என்பது ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். ஸ்ரீ விஜய என்பது இந்தோனேசியா, சுமத்திராவில் கி.பி. 650-இல் இருந்து கி.பி. 1377 வரை செல்வச் செழிப்புடன் களை கட்டிய மாபெரும் சாம்ராஜ்யம்.

வியாபாரம் செய்ய சீனா நாட்டு வணிகர்கள் அங்கே போய் இருக்கிறார்கள். நீண்ட காலமாக அராபிய வணிகர்களும் தொடர்புகளை வைத்து இருக்கிறார்கள். உள்நாட்டு வணிகர்களும் பண்டமாற்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.

ஸ்ரீ விஜய பேரரசு என்பது அந்தக் காலத்தில் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும். இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கோலோச்சி உச்சம் பார்த்தவை.



கோத்தா கெலிங்கி கோட்டை புதைந்து இருக்கும் குன்றுப் பகுதி

பேராக் புருவாஸ், பீடோர் பகுதிகளில் கங்கா நகரம் (Gangga Negara); கெடாவில் கடாரப் பள்ளத்தாக்கு (Bujang Valley); கோத்தா கெலாங்கி புரதான நகரம்; பகாங் சமவெளி நகரம். இப்படி நிறைய நகரங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து இருக்கின்றன.

மறுபடியும் சொல்கிறேன். கோத்தா கெலாங்கியைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள். இங்கே தான் லிங்கியூ நீர்த்தேக்கம் இருக்கிறது (Linggiu Reservoir by the Public Utilities Board (PUB) of Singapore).

அருகில் சுங்கை மாடேக், சுங்கை லிங்கியூ ஆறுகள் ஓடுகின்றன. சிங்கப்பூருக்குத் தேவையான குடிநீர் இங்கே இருந்துதான் அந்தக் குடியரசிற்குப் போகிறது.

*ரேய்மி செ ரோஸ்*

கோத்தா கெலாங்கி நிலப் பகுதிகள் ஜொகூர் மாநிலத்திற்குச் சொந்தமானவை. 140 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இருப்பினும் அந்த நீர்த் தேக்கத்தையும் அதைச் சுற்றி உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் தான் இன்று வரை பரமாரித்து வருகின்றது. பராமரிப்பிற்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது.



Raimy pointing to an unusual square earthern platform 
which was discovered along the pathway leading 
into the reported site of the lost city of Kota Gelanggi.
(Source: https://www.thestar.com.my/news/nation/2005/02/03/manuscript-leads-to-lost-city,)
(Thursday, 03 Feb 2005)

சிங்கப்பூர் அரசு ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் ஜொகூர் அரசுடன் ஒரு குடிநீர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஜொகூர் மாநில அரசாங்கத்தின் அனுமதியுடன் தன் பாதுகாப்பிற்காகச் சின்ன ஒரு சிங்கப்பூர் பிரதேச இராணுவத்தையும் அந்த லிங்கியூ காட்டுக்குள் தயார் நிலையில் வைத்து இருக்கிறது.

இன்னும் ஒரு தகவல். சிங்கப்பூர் பிரதேச இராணுவத்தின் ஒரு குழு மலேசிய மண்ணில் இருப்பது பலருக்கும் தெரியாத தகவல் ஆகும். இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ரேய்மி செ ரோஸ் (Raimy Che-Ross) என்பவர் ஒரு மலேசிய வரலாற்று ஆய்வாளர். பன்னிரண்டு ஆண்டுகள் உலகம் பூராவும் சுற்றி கோத்தா கெலாங்கியைப் பற்றிய ஆதாரங்களைத் திரட்டினார். விமானத்தின் மூலமாக வான்படங்களையும் கிடைக்கப் பெற்றார். விண்வெளிப் படங்களும் கிடைத்தன.




(The Lost city of Kota Gelanggi was detected by satelite maps which confirms the existence of these structures and visible on site. "MACRES" or Malaysian Centre for Remote Sensing revealed this. This structure apparently matches with the aerial photographs taken by a Canberra based independent researcher, Raimy Che Ross. The satelite image proves that these structures are even larger than earlier presumed. Raimy believes he has found the lost city of Kota Gelanggi.)

(Source: http://mystiquearth.blogspot.my/2009/06/lost-city-of-kota-gelanggi.html)



The Star newspaper reported that a lost city of the Sri Vijaya Empire was found by a local researcher Raimy Che-Ross. Raimy’s findings were published in the Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society 2004.

மெக்ரெஸ் (MACRES) என்பது ஒரு தொழிநுட்ப அமைப்பு. அந்த அமைப்பை மலேசிய தொலைத் தொடர் உணர்வு மையம் என்று சொல்வார்கள். (Malaysian Centre for Remote Sensing). இந்த மையத்தின் மூலமாகவும் விண்வெளிப் படங்கள் கிடைத்து உள்ளன.

கடைசியில் ரேய்மி செ ரோஸ் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். கோத்தா கெலாங்கி என்பது ஓர் இந்திய சாம்ராஜ்யம். காலத்தால் மறைந்து போன சாம்ராஜ்யம். ஸ்ரீ விஜய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சாம்ராஜ்யம்.

அந்த சாம்ராஜ்யத்தைப் பற்றி வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்த வேண்டும் என்றார். எல்லா மலேசிய நாளிதழ்களுக்கும் தெரிய படுத்தினார். நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் செய்திகளை வெளியிட்டன.

*கோத்தா கெலாங்கி இரகசியங்கள்*


மலேசிய அரசாங்கத்திடமும் கோத்தா கெலாங்கி தொடர்பான சான்றுகளை முன்வைத்தார். சீரமைப்புப் பணிகளுக்கு நிறைய செலவாகும். ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேல் தரப்பில் சொல்லப் பட்டது.

Kota Gelanggi is an archaeological site reported in 2005 as potentially the first capital of the ancient Empire of Srivijaya and dating to around 650–900 and one of the oldest Kingdoms on South East Asia's Malay Peninsula.

Conclusive Finding?

On April 28th 2006, the Malaysian National News Service (Bernama) reported that the "Lost City does not exist".

Khalid Syed Ali, the Curator of Archaeology in the Department's Research and Development Division, said a team of government appointed researchers carried out a study over a month in July last year [2005] but found no trace of the "Lost City".

However, Khalid later added that 'the Heritage Department (Jabatan Warisan) does not categorically deny that it exists, only that research carried out until now [over the month of July] has not shown any proof that can verify the existence of the ancient city of Linggiu [sic]' (Azahari Ibrahim, 'Kota Purba Linggiu: Antara Realiti dan Ilusi', Sejarah Malaysia, July-August 2006, p.37).

When pressed for details, he revealed that Che-Ross was not involved in the museum's search team for the lost city.

சொல்லிப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்னும்தான் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். சோறு இன்னும் வேகவில்லையாம். செத்துப் போன எலியின் நாற்றம் அடிக்கிறது.

கோத்தா கெலாங்கி விவகாரத்தை ஏன் இப்படி ஆறப் போட்டு ஊறப் போட்டு காயப் போட்டு கிடப்பில் போடுகிறார்களோ… யாம் அறியேன் பராபரமே! இறைவா!!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)