கொரோனா கோவிட் 19 - மலேசியா 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா கோவிட் 19 - மலேசியா 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மார்ச் 2020

கொரோனா கோவிட் 19 - மலேசியா 5

சபாவில் மூன்றாவது நபரின் உடல் அடக்கம்

கொரோனா கோவிட் -19 தாக்குதலினால் மலேசியாவில் இறந்த மூன்றாவது நபரின் உடல் இன்று இரவு 10.20 மணி அளவில் இங்குள்ள ஒரு முஸ்லிம் கல்லறையில் பாதுகாப்பாக அடக்கம் செய்யப் பட்டது.

58 வயதான நபரின் சடலம், தாவாவ் மருத்துவமனையில் இருந்து ஐந்து மருத்துவமனை ஊழியர்களுடன் முழுமையான பாதுகாப்புக் கவச சாதனங்களுடன் முஸ்லிம் கல்லறைக்கு வந்து சேர்ந்தது.



அடக்கம் முடியும் வரையில் யாரும் அந்த இடத்திற்கு அருகில் அனுமதிக்கப் படவில்லை.

மலேசியாவில் கொரோனா கோவிட் -19 நோயினால் மரணம் அடைந்த மூன்றாவது நபர். 2020 மார்ச் 9-ஆம் தேதி கடுமையான சுவாச நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாக தாவாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்

தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று மாலை காலமானார். இவர் கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங் எனும் இடத்தில் ஒரு சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.