கொரோனா கலவரத்தில் கலைகட்டிய திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா கலவரத்தில் கலைகட்டிய திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மார்ச் 2020

கொரோனா கலவரத்தில் கலைகட்டிய திருமணம்

கொரோனா கொரோனா என்று உலகமே ஆடிப் போய் கிடக்கிறது. ஓடி ஆடித் திரிந்த மக்கள் இப்போது ஒருவரைப் பார்த்து ஒருவர் ஒன்பது அடி ஒதுங்கிப் போய் நிற்கிறார்கள்.

தனித்து இரு... தள்ளி இரு... அவசர கால கோலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு துணிச்சல் மிக்க திருமணம் நேற்று நடந்து இருக்கிறது.


தமிழ்நாடு ராணிப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31). சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை.

காஞ்சிபுரம் பாலன் என்பவரின் மகள் கமலா (28). கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம். திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டியது.

கொரோனாவின் பயமுறுத்தல். திருமணம் நடத்துவதில் சிக்கல். ஆனாலும், அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் மனு செய்தனர்.


காவல்துறை உயர் அதிகாரிகளின் சில நிபந்தனைகள். அதன் பின்னர் பெருமாள் கோயிலில் நேற்று காலை 7.30 மணியளவில் திருமணம் நடைபெற்றது. மணமகன் முகக் கவசம் அணிந்து தாலி கட்டினார். மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்கள். 10 பேர் மட்டுமே வந்து இருந்தார்கள். மணமகன் வீட்டில் எளிய முறையில் விருந்து.

தடங்கல் இல்லாமல் திருமணம் நடந்ததால் அனைவருக்கும் மகிழ்ச்சி. கொரோனா களேபரத்தில் துணிச்சலான முகக்கவசத் திருமணம். வாழ்க மணமக்கள். வாழ்த்துவோம்.