மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 நவம்பர் 2019

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம்

தமிழ்ப் பள்ளிகள் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று அடையாளம். ஆகவே தமிழ்ப் பள்ளிகளில் கல்வியைத் தொடங்குவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே தமிழ் உணர்வோடு தமிழர்ப் பண்பினை விதைக்க முடியும். 


மலேசியத் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். மலேசியத் தமிழ் பள்ளிகளின் உரிமைகளை காப்பாற்றினால் தான் மலேசியாவில் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். மலேசியத் தமிழரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளைக் காப்பாற்ற முடியும்.

தமிழ்க் கல்வியைக் காப்போம். தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம். தமிழர் என்கிற அடையாளத்தைக் காப்போம். தமிழராகத் தலைநிமிர்ந்து நடப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
26.11.2019


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

Parimala Muniyandy: இனிய காலை வணக்கம்.தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழுக்காக குரல் கொடுப்பது அவசியமாகும்.


Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்... கண்டிப்பாகக் குரல் கொடுக்க வேண்டும்... அது நம் கடமை...


Guna Shan:
கண்டிப்பாக காக்க வேண்டும் நண்பரே..இங்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால் இது சாத்தியமாகும்

Muthukrishnan Ipoh:தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் முயற்சி செய்தார்கள்... செய்கிறார்கள்...


Vanaja Ponnan: குரல் கொடுத்தால் மட்டும் போதாது.வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும்


Muthukrishnan Ipoh:தமிழ் மாணவர்களைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனும் வற்புறுத்தல் தொடர வேண்டும்...


Sri Kaali Karuppar Ubaasagar: தமிழ் மொழி செம்மொழி மட்டுமல்ல..அது தன் மானம் காக்கும் மொழி


Muthukrishnan Ipoh: உண்மைங்க... தமிழர்களின் தன்மானம் காக்கும் மொழி


Inbavally Renganathan: முதலில் நம்மவர்கள் யாரும் நம் பிள்ளைகளை மற்ற இன பள்ளிகளில் சேர்ப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.