மகாதீர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாதீர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஆகஸ்ட் 2019

மகாதீர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை

தமிழ் மலர் - 29.08.2019

பிரதமர் துன் மகாதீர் பயன்படுத்திய ஒரு வார்த்தை இந்தியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லப்பட்டது அல்ல. அவர் வேறு வகையில் சொன்னதை இந்தியர்களை இழிவு படுத்தும் ஜாதிச் சொல்லாகக் கருத வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று கூறினார். 


‘அந்த’ பதத்துக்கு ஆங்கிலத்தில் வேறு அர்த்தம் உண்டு. ஆங்கிலத்தில் ஒருவர் இந்த வார்த்தையை உதிர்த்தால் அது இந்தியர்களை இழிவு படுத்துவதற்காகச் சொல்லப் பட்டது ஆகாது.

குறிப்பாக மலாய்க்காரர்கள் தங்களுக்கு உள்ளேயே பேசும் போது கூட இந்த வார்த்தையப் பயன்படுத்துவது உண்டு. எனவே இந்த வார்த்தை இந்தியர்களைப் புண்படுத்தும் இழிவு வார்த்தை என்று நீங்கள் கருதினால் அது தவறானது என்று பெர்சத்து தலைவருமான அவர் சொன்னார்.

அண்மையில் ‘லைனாஸ்’ அரியமண் தொழிற்சாலை விவகாரம் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர் மகாதீர், மேற்கண்ட சொல்லைப் பயன்படுத்தியது இந்தியர்களிடையே பெரும் சினத்தை ஏற்படுத்தி உள்ளது.


கெஅடிலான் காப்பார் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் துன் மகாதீருக்கு எதிராக புகார் செய்து இருக்கிறார்கள்.

தொடர்ந்து பேசிய மொகிதீன், இது போன்ற விசயங்களை நியாயப் பூர்வமாக அணுகுமாறும் முன்கூட்டியே இது பற்றிய விளக்கங்களைப் பெறுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

உண்மையில் பிரதமர் எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பிரதமரிடம் கேட்கலாம் என்றார் மொகிதீன்.

-மலேசியா கினி