கொரோனா வைரஸ்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் தடுப்பு மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் தடுப்பு மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: ஹைட்ராக்ஸி குளோரோ குயின் தடுப்பு மருந்து

தமிழ் மலர் - 30.03.2020

கொரோனா வைரஸுக்கு தற்காலிகமாகத் தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. மகிழ்ச்சியான செய்தி. 


பரிசோதனைக் கட்டத்தில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின்
மறுபடியும் சொல்கிறோம். இன்னும் பரிசோதனைக் கட்டத்தில் தான் உள்ளது. அதற்கு எம்.ஆர்.என்.ஏ. 1273 (mRNA -1273) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுமையாக மருந்தகப் பெயர் வைக்கப் படவில்லை. அதற்கு இதற்கு வணிகப் பெயரும் வைக்கப் படவில்லை.
அமெரிக்காவின் மொடெர்னா (Moderna) என்கிற நிறுவனம், அந்தத் தடுப்பூசியின் முதல் கட்டப் பரிசோதனையில் இறங்கி உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்கா, மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் உலகம் முழுமைக்கும் 41 ஆய்வு நிறுவனங்கள் களம் இறங்கி உள்ளன. அவை அனைத்தும் உலகச் சுகாதார நிறுவனத்தில் (World Health Organisation) பதிவு பெற்ற மருத்துவ அமைப்புகள்.


மாதிரிச் சான்று மாத்திரைகள்

எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசிக்கான முதல் மனிதச் சோதனையை மொடெர்னா கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிறுவனம் தான் புதிய தடுப்பூசி மருந்திற்கு முதல் அடி எடுத்து வைத்த முதல் நிறுவனம்.

முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரையிலான 45 நபர்கள் முதற்கட்டப் பரிசோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டார்கள்.

அவர்களில் முதல் நபருக்கு 2020 மார்ச் 17-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப் பட்டது. 6 வாரங்களுக்குப் பரிசோதனைகள் நடைபெறும். பரிசோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டவரின் கைகளில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்து செலுத்தப் படுகிறது.


தமிழ் மலர் - 30.03.2020

இன்றைய வரையிலும் கட்டம் கட்டமாகச் சிலருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஊசி போட்டவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக் குறைவு எதுவும் ஏற்படுகிறதா என்று கண்காணித்து வருகிறார்கள். 2020 ஏப்ரல் மாதக் கடைசியில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்தின் வீரியம் தெரிந்துவிடும். அதாவது ஆறு வாரங்களில் அந்த மருந்தின் வீரியம் தெரிந்துவிடும்.

இந்தச் சோதனை வெற்றி பெற்றால் மருந்து தயாரிப்புகள் உடனடியாகத் தொடங்கப்படும். இருந்தாலும் முழு அளவிலான தயாரிப்பிற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை பிடிக்கலாம்.




கொரோனா கோவிட் mRNA -1273 தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கும் சில கல்விக் கழகங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள்.

1. Moderna, அமெரிக்கா
2. DIOSynVax, இங்கிலாந்து
3. Imperial College London, இங்கிலாந்து
4. Oxford University, இங்கிலாந்து
5. Serum Institute of India, இந்தியா
6. BioNTech, ஜெர்மனி
7. Zydus Cadila, இந்தியா
8. Migal Galilee Research Institute, இஸ்ரேல்
9. Inovio Pharmaceuticals, அமெரிக்கா
10. Johnson & Johnson, அமெரிக்கா
11. Novavax, அமெரிக்கா
12. University of Queensland, ஆஸ்திரேலியா
13. VIDO-InterVac, கனடா
14. CureVac, ஜெர்மனி
15. Bharat Biotech, இந்தியா
16. CanSino Biologics, சீனா

இந்தியாவில் மூன்று தனியார் நிறுவனங்களும் கல்விக் கழகங்களும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. எப்படியும் ஓர் ஆண்டு காலம் பிடிக்கும்.



தடுப்பூசி என்பதைத் தடுப்பு மருந்து ஏற்றம் என்று சொல்வார்கள். நம்முடைய உடலில் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் எப்போதுமே இருக்கும். அது இயற்கை வழங்கிய மாபெரும் வரப்பிரசாதம். அந்த எதிர்க்கும் ஆற்றலைத் தூண்டி விடுவதே தடுப்பூசியின் தலையாய நோக்கமாகும்.

பின்னர் காலத்தில் ஏற்படக் கூடிய தொற்று நோய்களைத் தடுப்பூசி தடுத்து நிறுத்துகிறது. இன்னும் எளிமையாகச் சொல்லலாம். சில பல தொற்று நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும்; தொற்று நோய்கள் வராமல், முன்னதாகவே தடுத்து நிறுத்தவும் தடுப்பூசிகளைப் பய்ன்படுத்துகிறோம்.

தடுப்பூசிகள் அனைத்துமே ஒரே மாதிரியான அடிப்படைக் கொள்கையில் தான்  செயல் படுகின்றன. தடுப்பூசிகளில் நிறைய வகைகள் உள்ளன. சில தடுப்பூசிகளில் இறந்த கிருமிகள் இருக்கும். சில தடுப்பூசிகளில் பாதி இறந்த கிருமிகள் அல்லது நுண்ணுயிரிகள் இருக்கும். 



சில தடுப்பூசிகளில் பலவீனம் ஆக்கப்பட்ட நுண்ணுயிரிகள் (inactivated vaccine) இருக்கும். சில தடுப்பூசிகளில் மயக்க நிலையில் உள்ள கிருமிகள் இருக்கும். அல்லது நுண்ணுயிரிகள் இருக்கும்.

அதையும் தாண்டிய நிலையில் சில தடுப்பூசிகளில் உயிருடனேயே கிருமிகள் இருக்கும். அல்லது ஒரு கிருமியின் நச்சுப் பொருளாகவும் இருக்கும்.

நமக்கு ஆறறிவு இருக்கிறது. மூளைக் கொண்டு சிந்திக்கிறோம். செய்லற்றுகிறோம். ஆனால் நம்முடைய உடலுக்கும் அறிவு இருக்கிறது. அது தெரியுமா உங்களுக்கு? நம்மை எதுவும் கேட்காமலேயே அதுவே சொந்தமாக முடிவு எடுக்கும் ஆற்றல் அதற்கு உள்ளது.



நம் உடலுக்குள் எந்த ஒரு கிருமி நுழைந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது கெட்ட கிருமியா என்று நமக்குத் தெரியாமலேயே நம் உடல் ஆராய்ச்சி செய்யும். ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மைங்க. நம்மைக் கேட்டு ஆராய்ச்சி செய்வது இல்லை. அதுவாக ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறது.

இந்தக் கிருமிகளில் நல்ல கிருமிகள் இருக்கின்றன. ஜெண்டல்மேன் கிருமிகள் இருக்கின்றன. சில அடாவடிக் கிருமிகள் இருக்கின்றன. சில அக்கப் போரான கிருமிகள் இருக்கின்றன.

அவற்றுக்கு எல்லாம் பை பை சொல்லும் அகோரமான கிருமிகளும் இருக்கின்றன. அதில் கொரோனா கோவிட் கிருமிகள் இருக்கின்றனவே, சும்மா சொல்லக் கூடாது எமதர்ம ராசனையே மெர்சல் ஆக்கிவிடும் கிருமிகள்.



நல்ல கிருமிகள் பல ஆயிரங்கள் உள்ளன. அவை நம் உடலுக்கு கெட்டது ஒன்றும் செய்யாது. பெரும்பாலும் பாக்டீரியா கிருமிகள்.

நம் உடலுக்குள் ஒரு கெட்ட கிருமி நுழைந்து விட்டால், நம் உடல் உடனே ஒரு பெரிய கூட்டுப்படை உருவாகி விடுகிறது.

கழுத்துக் கணையச் சுரப்பி அதாவது தைமஸ் சுரப்பி (Thymus);

கல்லீரல் (Liver);

மண்ணீரல் (Spleen);

எலும்பு மஜ்ஜைகள் (Bone Marrow);

சிறுநீரகம் (Kidney)

போன்றவை ஒன்று சேர்ந்து கொள்கின்றன. அந்தக் கெட்ட கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரியான மருந்து தயாரிக்கலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கின்றன. 



அந்தப் புதிய மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களையும் உடனடியாகச் சேகரிக்கின்றன. தயாரித்ததும் அந்தக் கிருமிகள் மீது செலுத்துகின்றன. அப்படியே அந்தக் கெட்டக் கிருமிகளை அழிக்கின்றன.

இயற்கையாகவே உலகில் உள்ள எல்லா மனித உடல்களுக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. ஒரு குழந்தை பிறந்த நாளில் இருந்து அந்த ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உண்டாகி விடுகிறது. 

நம் உடலுக்குள் ஒரு நோய்க் கிருமியை அறிமுகப்படுத்தி, அந்தக் கிருமியை அழிக்கும் ஆற்றலைத் தூண்டுவதற்குத் தான் தடுப்பூசி போடப் படுகிறது.

இருந்தாலும் தடுப்பு மருந்துகள் உடலுக்குள் பல வகைகளில் செலுத்தப் படுகின்றன.

1. வாய் வழி (Oral)

2. ஊசி வழி (Injection) - இதைத் தான் தடுப்பூசி என்கிறோம். இந்த ஊசியை தசைக்குள் செலுத்துவது (Intramascular); தோலுக்குள் செலுத்துவது (Intradermal); தோலுக்கு கீழ்ப் பகுதியில் செலுத்துவது (Subcutaneous).
   
3. தோலில் ஒட்டுப் போட்டு மருந்து செலுத்துவது (Transdermal).
   
4. உடலில் துளையிட்டு மருந்து செலுத்துவது (Puncture)

5. மூக்கு வழியாக மருந்து செலுத்துவது (Intranasal)

சரி. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் (Hydroxy Chloro Quine) எனும் மருந்தைக் கொண்டு கொரோனா கோவிட் நோயைக் குணப் படுத்தலாம் எனும் சர்ச்சை உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம். 



கொரோனா கோவிட் நோய்க்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்த உலகின் சில பல மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்கள் பரிந்துரைகள் செய்து உள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் வணிகப் பெயர் பிளேக்கனில் (Plaquenil).

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் எனும் பெயருக்குள் குளோரோ குயின் (Chloro Quine) எனும் ஓர் இடைப் பெயர் வருவதைக் கவனியுங்கள். அந்தக் குளோரோ குயின் பெயருக்குள் குயின் எனும் ஓர் ஒற்றுப் பெயர் வருவதையும் கவனியுங்கள்.

குயின் எனும் குயினா அல்லது கொயினா மூலிகை (Quinine) மலேரியாக் காய்ச்சலுக்குக் கைகண்ட மருந்து. மலேரியா நோய் அனோபிலிஸ் எனும் கொசுவால் பரவுகிறது. சிஞ்சோனா (Cinchona) எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. 



சிஞ்சோனா (Cinchona)
இந்த மூலிகை மரம் தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் பூர்வீகம். அங்கே ஆண்டிஸ் (Tropical Andes) மலைக் காடுகளில் வளர்ந்தவை. பின்னர் ஜமாய்க்கா, இந்தோனேசியா, மலாயா, இந்தியா, ஜாவா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் பயிர் செய்யப் பட்டன.

1630-ஆம் ஆண்டுகளில் பெரு நாட்டை சிஞ்சோன் எனும் ஸ்பெயின் நாட்டு ஆளுநர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய மனைவிக்கு மலேரியா காய்ச்சல். சிஞ்சோனா மரத்தின் பட்டை திரவத்தால் அவர் நிவாரணம் பெற்றார். அதன் பின்னர் சிஞ்சோனா மரத்திற்கு சிஞ்சோனா எனும் பெயர் வைக்கப் பட்டது.

இன்னும் ஒரு விசயம். இந்தக் குயினின் மருந்து இயற்கை மருந்தாகவும் உள்ளது. செயற்கை மருந்தாகவும் உள்ளது. 1820-ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சு நிபுணர்கள் சிஞ்சோனா மரத்தின் பட்டையில் இருந்து இயற்கையான மூலிகை மருந்தைத் தயாரித்தார்கள். 



1934-ஆம் ஆண்டில் அதே குயினின் மருந்தை செயற்கையான வேதியல் முறையில் ஜெர்மனியர்கள் தயாரித்தார்கள். சரி.

சில இரசாயனக் கலவைகளைக் கலந்து குளோரோ குயின் (Chloro Quine) எனும் மருந்து தயாரிக்கப்பட்டு, பின்னர் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்து மலேரியா நோயாளிகளுக்குக் கடந்த எழுபது ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்தைத் தயாரிப்பதில் விலையும் குறைவு.

உலகம் முழுவதும் இப்போது அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இந்தக் குளோரோ குயின் மருந்தின் மூலக் கூற்றை சற்றே மாற்றி அமைத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மருந்தைத் தயாரிக்கிறார்கள். இதன் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது கியூபா.

(Messenger RNA (mRNA) or Messenger Ribonucleic Acid, is a copy of a single protein-coding gene in your genome and acts as a template for protein synthesis.)



சீனாவில் கொரோனா கோவிட் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கியதும், இந்த ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை கியூபா நாட்டில் இருந்து பெற்று ஆராய்ச்சி செய்தார்கள். இந்த மருந்தின் அழற்சி நீக்கம் அதாவது புண்கள் வராமல் இருக்கும் தன்மை; மற்றும் வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொரோனா பாதிப்பைக் கட்டுப் படுத்த உதவலாம் என அறிந்து கொண்டார்கள்.

கொரோனா கோவிட் நோய்க்கு ஆளான இருபது நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்தார்கள். ஓரளவிற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன் பின்னர் உலகம் முழுவதும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள்.

(Vaccine developers have worked with unprecedented speed since the first genome sequence of the COVID-19 virus was released in January, and the first human volunteer was dosed with Moderna Inc’s candidate mRNA-127 last week. It took only 63 days from selecting the viral sequence to reach the phase I trial, in which 45 volunteers will be injected with three different doses over six weeks, with the aim of generating initial safety data and showing that the vaccine produces an immune response against the viral DNA.)



அந்த மருந்தை சீனா நாட்டு மருத்துவர்கள் கொரோனா கோவிட் நோயாளிகளுக்குப் பயன்படுத்தினார்கள். பல ஆயிரம் பேர் குணம் அடைந்ததாக சீனா அறிவித்தது.

(The primary function of mRNA is to act as an intermediary between the genetic information in DNA and the amino acid sequence of proteins. mRNA contains codons that are complementary to the sequence of nucleotides on the template DNA and direct the formation of amino acids through the action of ribosomes and tRNA.)

இருந்தாலும் அந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உலகம் எதிர்நோக்கும் இப்போதைய அவசர கால நிலைமையில் உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம் தான்.


அதற்காக சிறு சிறு ஆராய்ச்சிகளின் முடிவைக் கொண்டு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து; நல்ல மருந்து என்று தீர்மானிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மருந்தின் பக்க விளைவுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனும் எதிர்ப்புகள்.

இன்னொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தார்கள். அணை கடந்த வெள்ளம் தலைக்குமேல் வெள்ளமாய்ப் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த மாதிரியான நிலைமையில் எதிர்ப்பு தெரிவிப்பது சரி அல்ல. கையில் இருப்பதை வைத்துக் கொண்டு கரை சேரும் வழியைப் பார்ப்போம் எனும் ஆதரவுகள்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் கிருமிகளை நேரடியாக அழிக்காது. எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதீதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா என முதலில் ஐரோப்பிய நாடுகள் மறுத்தன. 



இதில் பிரான்ஸ் நாட்டின் நிலைமையைச் சொல்ல வேண்டியது இல்லை. 2000 பேருக்கு மேல் இறந்து விட்டார்கள். 29 ஆயிரம் பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். முதலுக்கே மோசம் என்கிற நிலைமையில் சிரம் தாழ்த்தி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்திற்குப் பச்சைக் ஒடி  காட்டி விட்டது பிரான்ஸ்.

(The three main types of RNA directly involved in protein synthesis are messenger RNA (mRNA), ribosomal RNA (rRNA), and transfer RNA (tRNA). In 1961, French scientists François Jacob and Jacques Monod hypothesized the existence of an intermediary between DNA and its protein products, which they called messenger RNA.)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என்று ஆர்டர் போட்டு இருக்கிறது.

இந்தக் கடட்த்தில் மகாகவியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. எங்கெங்கு காணினும் சக்தியடா எனும் பாடல் வரிகள். இந்தக் கொரோனா வைரஸ் பண்ணும் அகோரத் தாண்டவத்தைப் அவர் மட்டும் இப்போது பார்த்து இருந்தால் அவரின் மனம் மாறிப் போய் இருக்கும். கவிதை வரிகளும் மாறிப் போய் இருக்கும். எங்கெங்கு காணினும் கிருமியடா என்று பாடி இருப்பார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.03.2020