தஞ்சை அரண்மனை நாயக்கர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சை அரண்மனை நாயக்கர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 மார்ச் 2019

தஞ்சை அரண்மனை நாயக்கர்கள்

தஞ்சை அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப் பட்டது. நாயக்க மன்னர் சேவப்ப நாயக்கரால் தொடங்கப் பட்டது. இறுதியில் விஜயராகவ நாயக்கரால் முடிக்கப் பட்டது.


தஞ்சை நாயக்கர்கள் என்பவர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மண்டலத்தை ஆட்சி செய்து வந்தவர்கள். முதல் மன்னர் சேவப்ப நாயக்கர். இவர் விஜயநகரப் பேரரசராக இருந்த கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய நண்பர்.


சோழர்களின் ஆட்சி முடிவு அடைந்த பின்னர் தான் நாயக்கர்களின் ஆட்சி வந்தது. 12-ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசசு உருவான போது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தங்களின் தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர்.

விஜயநகரப் பேரரசு பலம் இழந்ததும் நாயக்கர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு விஜயநகரப் பேரரசில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். 



செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு நாயக்கர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார்கள். இவர்களின் தாய்மொழி தெலுங்கு.

*தஞ்சை நாயக்க அரசர்கள்*

1532 - 1560 சேவப்ப நாயக்கர்
1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
1600 - 1632 இரகுநாத நாயக்கர்
1633 - 1673 விஜயராகவ நாயக்கர்



பின்னர் 1674-ஆம் ஆண்டில் இருந்து 1855-ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் தஞ்சையை ஆட்சி செய்தார்கள்.