மதியிறுக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதியிறுக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஏப்ரல் 2020

மதியிறுக்கம்

மதியிறுக்கம் அல்லது தற்புனைவு ஆழ்வு என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். இயல்பிற்கு மாறுபாடான மூளை வளர்ச்சி தான் மதியிறுக்கம் (மதி + இறுக்கம்). ஆங்கிலத்தில் ஆட்டிசம் (Autism) என்று அழைக்கிறார்கள்.


நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. சிறுவயது பிள்ளைகளிடம் காணப் படுகின்றது. தோற்றத்தில் சாதாரணப் பிள்ளைகள் போல் தான் இருப்பார்கள். ஆனால் போகப் போகத் தான் இவர்களின் செயல்பாடு அல்லது பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும்.

இது ஒரு நோய் அல்ல. மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. ஆங்கிலத்தில் Development disability. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு. 


மற்ற குழந்தைகளைப் போல் பேச முடியாது; நடக்க முடியாது; நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால் அவர்களால் மற்றவர்களைப் போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

ஆட்டிசம் உள்ள குழந்தைகளைச் சாதாரண குழந்தைகள் என்று நினைத்து வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை

மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றி உள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு.


பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் காணப்படும் இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றியும் நினைக்காமல் தங்களுக்கு என்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஒதுங்கி வாழ்வதுதான் முக்கியமான அறிகுறி.

மற்றவரின் கண்ணோடு கண்பார்த்துப் பேச மாட்டார்கள்.


பெயர் சொல்லி அழைக்கும் போது அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் போக்கு குறைவாகக் காணப்படும்.

சிலர் தேவை இல்லாமல் எதை எதையோ பேசுவார்கள்.

சிலர் பேசவே மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஊமை அல்ல.

சில வேளைகளில் தேவை இல்லாமல் அழுவார்கள். தேவை இல்லாமல் சிரிப்பார்கள். தனிமையை விரும்புவார்கள்.


அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு இருக்கும். அதை மட்டும் திரும்பத் திரும்ப விளையாடுவார்கள்.

தொடக்கத்தில் பேசத் தொடங்கி பின்னர் திடீரென இரண்டு வயதை அடையும் போது பேச்சு அறவே இல்லாமல் போகும்.

இந்தப் பிள்ளைகள் நேரம், இடம், யார், எவர் எனும் வேறுபாட்டை உணர மாட்டார்கள். இதர அறிகுறிகள்...

அடுத்தவர் கண்களைப் பார்த்து பேசாமல் இருப்பது;

ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டாமல் இருப்பது;

சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது;


பயம் அல்லது ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது;

விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பது;

ஒரே மாதிரியான செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்வது;

காரணம் இல்லாமல் அழுவது;

காரணம் இல்லாமல் சோகத்தை வெளிப்படுத்துவது;

வலியை உணராமல் இருப்பது;

மாற்றங்கள் பிடிக்காமல் போவது;

பொருள் இல்லாத சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது;

இவை ஆட்டிசத்தின் அறிகுறிகளாகும்.


மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப் படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாளாகக் கொண்டாடப் படுகிறது.

மதி இறுக்கத்திற்கான (ஆட்டிசம்) சில காரணங்கள் உள்ளன. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

# மன இறுக்கம் கொண்ட மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் யாராவது இருந்தால்... ஆட்ட்சிசம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    
# மரபணு மாற்றங்கள்

# மரபணு கோளாறுகள்
    
# வயதான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை

# குறைந்த எடையில் பிறப்பு

# வளர்சிதை மாற்ற ஏற்றத் தாழ்வுகள் (metabolic imbalances)

# உலோகங்கள் மூலமாக அல்லது சுற்றுச் சூழலின் நச்சுகள் வெளிப்பாடு

வைரஸ் தொற்றுநோய்களின் பின்புலம்

# குழந்தை கருவில் இருக்கும் போது வால்ப்ரோயிக் அமிலம் (valproic acid  - Depakene) தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால்

# அல்லது தாலிடோமைட் (thalidomide - Thalomid) மருந்துகள் தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால் ஆட்டிசம் வரும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

aஅட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்த இயலாது. ஆகவே அவர்களைக் கடவுளின் குழந்தைகளாக நினைத்து அரவணைத்துச் செல்வதே நமக்குப் புண்ணியம்.

சான்று: https://www.healthline.com/health/autism#causes

இந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அரவணைப்பு மிக முக்கியம். பெற்றோர்களால் தான் இந்தக் குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர இயலும். இதை ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவமானம் எனக் கருதவே கூடாது.

அப்படிப்பட்ட குழந்தையை ஏற்று, அந்தக் குழந்தைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான் மற்றவர்களும் மரியாதை கொடுக்க முன் வருவார்கள்.

அந்த ஜீவன்கள் நம்முடைய இன்ப துன்பத்தை உணர முடியாதவர்கள்.  துன்பமான துயரமான சூழநிலையில்கூட சிரித்துக் கொண்டு இருப்பார்கள். அதனால் அவர்களை வெறுத்து ஒதுக்கக் கூடாது.

அவர்களுக்கு மூளை குறைபாடு. அதனால்தான் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் குழந்தைகளை இறைவனின் குழந்தைகளாக நினைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.


பேஸ்புக் பதிவுகள்
17 April 2020


Doraisamy Lakshamanan: வாழ்த்துகள் உறவுகளே! மனிதகுல மேம்பாட்டை வாழ்நாள்  வாழ்த்துகள் அனைவருக்கும்!

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... தங்களின் கருத்துகளுக்கு நன்றி...

Gunasegar Manickam: வணக்கம் ஐயா!!! அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு ஐயா.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... கருத்துகளுக்கு நன்றி...

KR Batumalai Robert: நல்ல தகவல் அண்ணா. வணக்கம் வாழ்த்துக்கள்.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Sheila Mohan: காலை வணக்கம் சார்.. அருமையான விளக்கம்.

Muthukrishnan Ipoh: இனிய வணக்கம்... இனிதான வாழ்த்துகள்...

Melur Manoharan: "பயனுள்ள" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி...


Sathya Raman:
ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளிலும் பலவிதமானர்கள், ரகமானவர்கள் இருக்கிறார்கள் சார். சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள். சில குழந்தைகள் அதிகப் பிடிவாதத்தோடு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கத்திக் கொண்டே இருப்பார்கள்.


இன்னும் சிலர் பொது இடங்கள் அதிக மக்கள் கூட்டத்தைப் பார்த்து விட்டால் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கத்திக் கூச்சல் போடுவார்கள். தரையில் படுத்து உருளுவார்கள். இத்தகையவர்களைக் கையாள்வதற்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் வேண்டும்.

இவர்களின் பெற்றோர்கள் குழந்தை பருவத்திலேயே இவர்களின் குறைகளை அறிந்து தெளிவு பெற்றால் இவர்களை திறமையிலும், ஆற்றலிலும் மற்ற சராசரி மனிதர்களைவிட மேன்மையாய் உருவாக்கிவிட, உயர்த்திட இயலும்.

அத்தகைய ஆட்டிசம் குறைபாடு உள்ள நிறைய பேர் முயற்சியால், பயிற்சியால் முன்னேற்றம் அடைந்து முன்னுக்கு வரும் நிஜங்களை நாம் கண்டு வருகிறோமே. வைரஸ் பதிவுகளையே பார்த்துப் பார்த்து ஒரு மாற்றத்திற்கு இன்றைய பதிவு மனதை சற்று இலகுவாக்கியது நன்றிங்க சார்.

Muthukrishnan Ipoh: வணக்கம். ஆட்டிசம் என்பது மூளை அமைப்பு அல்லது அதன் செயல்பாட்டில் உள்ள அசாதாரணங்களால் ஏற்படுகிறது என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஜீன் தொடர்பாக இருக்கலாம் என்றால் அதுவும் ஒரு பெரிய காரணம் அல்ல என்றும் சொல்கிறார்கள். குழப்பமாக உள்ளது.

தங்களின் நீண்ட பதிவின் வழியாக மேலும் பல புதிய தகவல்கள்... நன்றிங்க...

தவிர,

மதி இறுக்கத்திற்கான (ஆட்டிசம்) சில காரணங்கள் உள்ளன. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

# மன இறுக்கம் கொண்ட மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் யாராவது இருந்தால்... ஆட்ட்சிசம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

# மரபணு மாற்றங்கள்

# மரபணு கோளாறுகள்

# வயதான பெற்றோருக்குப் பிறந்த குழந்தை

# குறைந்த எடையில் பிறப்பு

# வளர்சிதை மாற்ற ஏற்றத் தாழ்வுகள் (metabolic imbalances)

# உலோகங்கள் மூலமாக அல்லது சுற்றுச் சூழலின் நச்சுகள் வெளிப்பாடு

வைரஸ் தொற்றுநோய்களின் பின்புலம்

# குழந்தை கருவில் இருக்கும் போது வால்ப்ரோயிக் அமிலம் (valproic acid - Depakene) தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால்

# அல்லது தாலிடோமைட் (thalidomide - Thalomid) மருந்துகள் தாயாரின் உடலுக்குள் சென்று இருந்தால் ஆட்டிசம் வரும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஆட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்த இயலாது. ஆகவே அவர்களைக் கடவுளின் குழந்தைகளாக நினைத்து அரவணைத்துச் செல்வதே நமக்குப் புண்ணியம்.

சான்று: https://www.healthline.com/health/autism#causes
What Is Autism? Symptoms, Causes, Tests, Treatment, and More
healthline.com

Sun Dram: இந்த மாதிரி பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு.. இந்தப் பதிவு ஓர் வழிகாட்டுதலாக இருக்கும். நீங்கள் கூறியது போல... இவர்களைக் கடவுளின் பிள்ளைகளாகவே எண்ணும் மனப் பக்குவத்தை... அவர்களைப் பெற்றவர்கள் மட்டும் அல்ல... இந்தச் சமுதாயமும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உண்மை... ஐயா அவர்களுக்கு நன்றி.

Thavamalar Nadarajan: Wonderful sharing

Periasamy Ramasamy: அவர்களுக்கு விருப்பமான ஒரு துறையைத் தேர்ந்து எடுப்பது சற்று சிரமமே. இருப்பினும் சமீப காலமாக, சில வகை ஊட்ட மருந்துகளோடு, இசைப் பயிற்சி, உடல் வாகுக்கு ஏற்றால் போல, உடலும் உள்ளமும் இசையுமாறு சில விளையாட்டுகள் அறிமுகப் படுத்தி வருகிறார்கள்.

முந்தைய காலங்களை விட நல்ல பலனைத் தருவதாக ஆய்வொன்று கூறுகிறது. படித்த நினைவு. பெற்றோருக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவைப் படும் ஒரு சவால் என்பதைக் கண்கூடாகப் பார்த்தும் இருக்கிறேன்.

Balamurugan Balu: வணக்கம் ஐயா! அருமையான தகவல்! நன்றி ஐயா

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி.... நன்றி... வாழ்த்துகள்...

Jainthee Karuppayah: நன்றிங்க தகவல் தரும்... அறிவின் இருப்பிடமே... இப்படி பட்ட குழந்தைகளுக்கு தற்போது ஆலோசனை மற்றும் சில வைத்தியம் பார்த்து வருகிறோம்...

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி... நல்ல சேவை... புண்ணியம் சேர்க்கும் சேவைகள்... வாழ்த்துகிறோம்...