இராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்திகள் - மாயிருண்டகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்திகள் - மாயிருண்டகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 செப்டம்பர் 2019

இராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்திகள் - மாயிருண்டகம்

இராஜா ராஜா சோழன்; இராஜேந்திர சோழன்; இவர்களின் மெய்க்கீர்த்திகள் மட்டும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசியத் தமிழர்களின் வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். நிதர்சனமான உண்மை அல்ல. நியாயமான உண்மை.
 
தமிழ் மலர் - 06.05.2019

ஒன்றும் வாசிக்க முடியாது. ஒன்றுமே பேச முடியாத அளவிற்கு வாயைக் கட்டிப் பொத்தி வைத்து இருப்பார்கள். நல்ல வேளை. தப்பித்தோம். சரி.

இராஜேந்திர சோழனின் படைகள் பலேம்பாங்கை விட்டு வெளியாகும் போது ஸ்ரீ விஜய கடல் படைகள் பலத்த எதிர்ப்புகளைக் கொடுத்தன. சோழப் படைகளுக்கு ஏற்கனவே பலத்த சேதங்கள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டன.
 

ஒரு கட்டத்தில் சுந்தா நீரிணையில் பயங்கரமான மோதல். இராஜேந்திர சோழன் படைகள் பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருடைய படைகளில் பாதி பேர் பலியானதாக வரலாற்று ஆசிரியர் ஜார்ஜ் ஸ்பென்சர் சொல்கிறார்.

இராஜேந்திர சோழன் கைப்பற்றிய அரசுகளைத் தக்க வைத்து இருக்க வேண்டும். அரசுப் பிரதிநிதிகளை நியமித்துவிட்டுப் போனது தவறு. தடி எடுத்தவன் தண்டல் ஆவான் என்று சொல்வார்களே அந்த மாதிரிதான் தீபகற்ப மலேசியாவிலும் நடந்து விட்டது.

இராஜேந்திர சோழன் நம்பிக்கையோடு விட்டுச் சென்ற சிற்றரசுகளும் பேரரசுகளும் காலப் போக்கில் மாறிப் போயின. மதமாற்றங்கள் ஒரு காரணம். வரலாறும் மாறிப் போய்க் கிடக்கிறது.
 

Chola invasion ultimately failed to install direct administration over Srivijaya. Since the invasion was short and only meant to plunder. This invasion gravely weakened the Srivijayan hegemony and enabled the formation of regional kingdoms like Kahuripan, Kediri in Java.

Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. p. 163.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் வருகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். தமிழகக் கோயில்களில் இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் நிறையவே கிடைத்து உள்ளன.

மெய்க்கீர்த்திகள் என்றால் கல்வெட்டுகளில் ஓர் அரசரைப் பற்றி செதுக்கப் பட்ட பெருமைச் செய்திகள்.

அதாவது ஓர் அரசரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய புகழ்ச் செயல்களையும் புகழ்ச் சாதனைகளையும் கூறும் கல்வெட்டுகளைத் தான் மெய்க்கீர்த்திகள் என்று அழைக்கிறார்கள். அவற்றைப் புகழ்மாலைகள் என்றுகூட சொல்லலாம்.
 

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள். அந்தக் கோர்வையின் முதல் தொகுப்பு எண்: 66, பக்கம்: 98-இல் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இராஜேந்திர சோழன் நடந்து வந்த பாதையில் தென்பட்ட அத்தனை நகரங்களும் அவனுடைய காலடியில் வீழ்ந்தன. கங்கா நகரம் எனும் நகரத்திற்கு வரும் போது அந்த நகரை ராஜா லிங்கயோகன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு ராஜா லிங்கி ஷா ஜோகான் எனும் மற்றொரு பெயரும் உண்டு.

ஒரு குன்றின் உச்சியில் கங்கா நகரம் இருந்தது. அந்த நகருக்கு தற்காப்புக்காக ஒரு பெரிய கோட்டை கம்பீரமாய் நின்றது. ஒரு குட்டி மலை போல காட்சி அளித்தது. அந்தக் கோட்டை பேராக் ஆற்று ஓரத்தில் இருந்தது. (அந்த இடம் டிண்டிங்ஸ் என்று இப்போது அழைக்கப் படுகிறது)

இராஜேந்திர சோழன் வருவதை அறிந்த ராஜா லிங்கயோகன் தன்னுடைய படைகளை ஒன்று கூட்டினார். கோட்டையின் வாசல் கதவை மூடச் சொன்னார். கோட்டையைச் சுற்றி உள்ள கால்வாய்களில் நீரை நிரப்பச் சொன்னார். அதற்குள்  இராஜேந்திர சோழனின் படையினர் கோட்டையை முற்றுகை செய்தார்கள்.

ராஜா லிங்கயோகனின் கோட்டை மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்து இருக்கிறது. எளிதாகத் தகர்த்து உள்ளே நுழைய முடியவில்லை. சோழப் படை வீரர்கள் தீவிரமாகத் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதல்களுக்கு இராஜேந்திர சோழனே முன் நின்றார். ஒரு யானையின் மீது ஏறி தாக்குதல்களை நடத்தினார்.
 

அவற்றை எதிர்த்த கங்கா நகரத்தின் ராஜா லிங்கயோகனின் படையினர் இராஜேந்திர சோழனின் படைகளைச் சரமாரியாகத் தாக்கினார்கள். ஈட்டிகளாலும் அம்புகளாலும் தொடர் எய்தல்களைத் தொடுத்தார்கள்.

ஒரு கட்டத்தில் இராஜேந்திர சோழன் கோட்டையின் கதவுகளை இராட்சச இரும்புக் குண்டுகளால் அடித்துத் தகர்க்க ஆரம்பித்தார். தொடர் தாக்குதல்களினால் கோட்டையின் கதவுகள் சன்னம் சன்னமாய்த் தகர்ந்தன. இராஜேந்திர சோழனின் தளபதிகளும் வீரர்களும் விறுவிறுவென்று கோட்டைக்குள் நுழைந்தார்கள்.

அங்கே ராஜா லிங்கயோகன் சோழப் படைகளை எதிர்த்துச் சண்டை போட தயாராக இருந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு படையே பக்கபலமாக நின்றது. இராஜேந்திர சோழன் தன்னை நோக்கி முன்னேறி வருவதைக் கண்ட ராஜா லிங்கயோகன் அவர் மீது நச்சு கலந்த அம்புகளை எய்தினார்.

அதில் ஓர் அம்பு இராஜேந்திர சோழனின் மீது படாமல் அவர் ஏறி வந்த யானையின் தும்பிக்கையைத் தைத்துச் சென்றது. நச்சுக் கலவையைத் தாங்க முடியாமல் யானையும் சரிந்து விழுந்தது.

இராஜேந்திர சோழன் சட்டென்று கீழே குதித்தார். தன் வாளை உருவிய அவர் ராஜா லிங்கயோகனைத் தாக்கினார். ஒரு வாள் வீச்சு ராஜா லிங்கயோகனின் கழுத்தில் பட்டது. ராஜா லிங்கயோகனின் தலை துண்டாகிப் போனது. ராஜா லிங்கயோகனின் அங்கேயே இறந்து போனார்.

அதைப் பார்த்த ராஜா லிங்கயோகனின் படையினர் மூலைக்கு மூலை சிதறி ஓடினார்கள். அவ்வளவு தான். பின்னர் கங்கா நகரம் சூறையாடப் பட்டது.
 

அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் கடல் படையின்ர் நேரடியாகக் கடாரத்தில் போய் தரை தட்டவில்லை. எல்லோரும் அப்படித் தான் நினைக்கிறார்கள். பேராக் ஆற்றின் முகத்துவாரத்தில் கரை இறங்கி இருக்கிறார்கள். அங்கு இருந்து தான் கங்கா நகரத்திற்குப் படைகள் போய் இருக்கின்றன.

அப்போது கடாரத்தின் ஆட்சியாளராக இருந்தவர் லிங்கயோகன். சற்றுமுன் தெரிந்து கொண்டீர்கள். ஆனால் ஒட்டு மொத்த ஸ்ரீ விஜய பேரரசின் அரசராக சங்கர ராமா விஜயதுங்க வர்மன் மட்டுமே இருந்து இருக்கிறார். இவரின் வசிப்பிடம் பலேம்பாங்.

ஸ்ரீ விஜய பேரரசின் துணைச் சிற்றரசுகளுக்கு அரசுப் பிரதிநிதிகளை நியமித்து இருக்கிறார். அந்தப் பிரதிநிதிகளைச் சிற்றரசர்கள் என்று அழைத்து இருக்கிறார்கள்.

அதே போல கடாரத்திற்கும் ஓர் ஆட்சியாளரை நியமித்து இருக்கிறார். அந்த ஆட்சியாளரே கடாரத்தின் சிற்றரசராகவும் சேவை செய்து இருக்கிறார். அவர் தான் லிங்கயோகன்.

கங்கா நகரமும் கடாரமும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் லிங்கயோகனின் மகள் புத்திரி கங்காவை இராஜேந்திர சோழன் மணம் செய்து கொண்டார்.

Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India - Travancore Archeological Series vol 111, Part 1, No 41

கங்கா நகரம் எப்படி இராஜேந்திர சோழன் கரங்களில் வீழந்தன. அதைப் பற்றியும் கல்வெட்டுகளில் கிடைத்த விளக்கத்தையும் பார்த்தீர்கள்.

கங்கா நகரத் தாக்குதல் என்பது மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பதைப் பற்றி இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளின் வழியாகத் தெரிந்து கொண்டோம்.
 

இன்னும் ஒரு விசயம். கடாரம் எங்கே இருக்கிறது புருவாஸ் டிண்டிங்ஸ் எங்கே இருக்கிறது. அதைக் கவனித்தீர்களா. எப்படியும் 150 மைல்கள் இடைவெளி இருக்கும். இல்லீங்களா. அதைப் பார்க்கும் போது உண்மையிலேயே மலைப்பு ஏற்படுகிறது.

இருப்பினும் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளைச் சான்றாக வைத்து தான் வரலாற்றைப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்த வகையில்  கடாரத்தின் எல்லை கெடாவில் மட்டும் தனித்துப் போகவில்லை. பேராக் மாநிலத்திலும் பரவி இருந்து இருக்கிறது. பேராக் தைப்பிங் வரையிலும் விழுதுகள் விட்டுப் போய் இருக்கிறது.

நம்ப முடிகிறதா. என்னைக் கேட்டால் கங்கா நகரமும் கடாரமும் ஒன்றாக இருந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளில் எப்படி பேராக் ஆற்றைப் பற்றிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

இதைப் பற்றி மேலும் ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன். அதனால் இதோடு இதை நிறுத்திக் கொள்வோம்.

கடாரத்தை வென்ற பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் மலாயா தென் பகுதிக்குப் பயணித்து இருக்கின்றன. அங்கே தான் மாயிருண்டகம் எனும் பேரரசு இருந்தது. இந்த மாயிருண்டகம் தான் கோத்தா கெலாங்கி. புரியுதுங்களா.

இந்தக் கட்டுரைத் தொடரில் 08.12.2018 சனிக்கிழமை வெளியான கட்டுரையில் மாயிருடிங்கம் என்று பதிவு செய்து இருக்கிறேன். எழுத்துப் பிழைகள் ஏற்பட்டு உள்ளன. படித்து இருப்பீர்கள். கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆங்கில வரலாற்றுப் பதிவுகளிலும் சரி; செஜாரா மெலாயு பதிவுகளிலும் சரி; மாயிருடிங்கம் என்றே பதிவு செய்து இருக்கிறார்கள். ஆக மாயிருடிங்கம் என்பதையே நானும் அப்படியே பதிவு செய்து விட்டேன். ஆனால் மாயிருடிங்கம் என்பதை மாயிருண்டகம் என்று தான் அழைக்க வேண்டும். சரிங்களா.

மாயிருண்டகம் எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். மா + இருண்டகம் என இரு சொற்கள் பிரிந்து வருவதைப் பார்க்கலாம். ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். ’இருண்டகம்’ என்றால் ’இருண்டு கிடக்கும் இடம்’ என்று பொருள்.
 

அந்தக் காலக் கட்டத்தில் மாயிருண்டகத்தில் மாபெரும் கோட்டை இருந்து இருக்கிறது. கரும் கற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை. தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் போது கருமையாகக் காட்சி அளித்து இருக்கின்றது. அதை வைத்துத் தான் அந்த இடத்திற்கு மாயிருண்டகம் எனும் பெயர் வந்து இருக்கலாம்.

கோத்தா கெலாங்கியை லெங்குய் என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சீன நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவில் வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள்.

அப்படிப் போகும் வழியில் கோத்தா கெலாங்கியைப் பார்த்து லெங்குய் என பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்போது அங்கே லிங்கி எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் லெங்குய் என்று மருவி உள்ளது.

லெங்குய் எனும் பெயர்தான் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்று உள்ளன. சீன நாட்டவர் பயன்படுத்திய அதே செங்குய் எனும் பெயரையே மெய்க்கீர்த்திகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Maayirudingam a big city in South Malaya with a fortress of blackstone (granite) known as 'Glang Gui' (Lenggui in corrupted form). The kingdom of Maayirudingam at that time was ruled by the king Chulaamanivarman.

மாயிருண்டகத்தைப் பற்றி மெய்க்கீர்த்திகள் என்ன சொல்கின்றன. அதையும் பார்ப்போம். ஒரு செருகல்.

இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகள் மட்டும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். மலேசிய இந்தியர்களின் வரலாற்றை எப்போதோ பொட்டலம் கட்டி போத்தல் கடையில் விற்று இருப்பார்கள். தெரியுதுங்களா. நாம் ஒன்றும் வாசிக்க முடியாது. ஒன்றுமே பேச முடியாத அளவிற்கு வாயைக் கட்டிப் போட்டு இருப்பார்கள். நல்ல வேளை. தப்பித்தோம். சரி. விசயத்திற்கு வருகிறேன்.

மாயிருண்டக அரசு. அதைச் சுற்றிலும் ஆழ்க் கடல்கள். நூற்றுக் கணக்கான வணிகக் கப்பல்கள். பச்சைக் காடுகள் மேவிய தீபகற்பத்தின் தென் பகுதியில் மாயிருண்டக அரசு மையம் கொண்டு இருந்தது.
 

மாயிருண்டகத்தின் தலைநகரம் லெங்குய். கருங்கற்களால் ஆன பெரிய ஒரு கோட்டை தலைநகரத்தைப் பாதுகாத்தது. அந்த நகரத்தின் வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு.

சுமத்திராவில் இருந்த ஸ்ரீ விஜய பேரரசிற்கு மாயிருண்டக அரசு அடிபணிந்து சேவை செய்து வந்தது. சூளாமணி வர்மன் என்பவர் அந்த அரசின் பேரரசராக இருந்தார்.

மறுபடியும் சொல்கிறேன். அந்த நகருக்கு கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை பாதுகாப்பு அரணாக வலிமை சேர்த்து இருக்கிறது. மாயிருண்டகப் பேரரசை ஆகக் கடைசியாக சூளாமணி வர்மன் என்பவர் ஆட்சி செய்து இருக்கிறார்.

இராஜேந்திர சோழனின் படைகள் வருவதை அறிந்த சூளாமணி வர்மன் தன்னுடைய படைகளை எல்லாம் ஒன்று திரட்டினார். இராஜேந்திர சோழன் வரும் பாதையை நோக்கி முன்னேறிச் சென்று இருக்கிறார். இருபது மைல்கள் கடந்ததும் இராஜேந்திர சோழனின் படைகளை எதிர்கொண்டார்.

யானையின் மீது ஏறி வந்த சூளாமணி வர்மன் சோழப் படைகளின் மீது தாக்குதல் நடத்தினார். இராஜேந்திர சோழனும் தன்னுடைய யானை மீது அமர்ந்தவாறு எதிர்த் தாக்குதல் செய்தார். இரு தரப்பிலும் நூற்றுக் கணக்கான பேர் இறந்து போனார்கள்.

அது ஒரு கசப்பான போர். இராஜேந்திர சோழன் கூர் அம்புகளால் சூளாமணி வர்மனைத் தாக்கினார். அதில் ஓர் அம்பு சூளாமணி வர்மன் மீது பாய்ந்தது. அவர் உடனடியாக இறந்து போனார். தலைவரை இழந்த மாயிருண்டகப் படைகள் மூலைக்கு ஒன்றாய்ச் சிதறி ஓடின.

அதன் பின்னர் சோழப் படைகள் தங்கு தடை இல்லாமல் கெலாங்கி கோட்டைக்குள் நுழைந்தன. கோட்டைக்குள் இருந்த அரண்மனைக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றன. மாயிருண்டகப் பேரரசின் செல்வங்களை எல்லாம் சூறையாடின. குவிந்து கிடந்த பொன்னும் மணியும்; பவளமும் வைரமும்; மாணிக்கமும் மரகதமும் சுத்தமாக வழித்து எடுக்கப் பட்டன.

(சான்று: இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி; கோர்வையின் முதல் தொகுப்பு; எண்: 66, பக்கம்: 98.)

பின்னர் மாயிருண்டகத்தின் அரசர் சூளாமணி வர்மனின் மகள் இளவரசி ஒனாங்கி (ஓனாங் கியூ) என்பவரை இராஜேந்திர சோழன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இராஜேந்திர சோழனின் படைகள் கடல் வழியாகக் கடாரத்திற்குச் சென்றன.

(தொடரும்)

சான்றுகள்

1. Copper Plates of Rajendra Chola - 1 of Thiribhuwanamadevi Chathurvedimangalam in Thanjavur, Tamil Nadu. Tamil Polil - Vol 33 (1957)

2. Inscription of Rajendra Chola - 1 in the inner sanctum of Koneriswarer Temple at Agatheeswarem in Kanyakumari district, Tamil Nadu, India. Kanyakumari Inscriptions - edited by Nadana Kasinathan, Part 1, No 1968/120

3. Inscription of Rajathiraja Chola - 1 at Thiruvenkadu temple in Thanjavur district, Tamil Nadu.
Annual Report in Epigraphy (Madra) b- 1918, No.450

4. Kalingaththu Parani - by Jeyamkondaar, edited by Puliyuur Kesikan, chapter 8, page 104.

5. Inscription of Airlangga from Kamalaggan in East- Java - Oud-Javaansche Ookonden - Nagelaten Transscripties, van wijlen Dr. J.L.Brandes, Uitgegeven door Dr. N.J.Krom - page 120.

6. The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum - by T.N. Ramachandran, Joint Director-General of Archaeology, India, Page 124 & 92 - Bulletin of the Madras Government Museum, Vol VII,