சாலிகிராம் உயிரினங்களின் ஓடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலிகிராம் உயிரினங்களின் ஓடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 பிப்ரவரி 2019

சாலிகிராம் உயிரினங்களின் ஓடுகள்

சாலிகிராம் என்றால் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் அம்மோனைட் ஓடுகள். இந்த ஓடுகள் எப்படி நேபாளத்திற்குப் போயின.
Image result for shaligram

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நேபாளம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்தது என்பதுதான் புவியியல் உண்மை.

(Shaligrams are Ammonoid fossils of the Devonian - Cretaceous period which existed from 400 to 66 million years ago. )

இந்தியக் கண்டத்தின் நில அடுக்கு மேல் நோக்கி நகர்ந்து ஆசிய நில அடுக்குடன் மோதியதால் இமயமலை உருவானது. இந்த நிலத் தகடுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செண்டி மீட்டர் முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கின்றன.

அந்தச் சமயத்தில் கடலில் இருந்த உயிரினங்களின் எலும்புக் கூடுகளும் நேபாளப் பகுதிக்கு வந்து சேர்ந்தன. இமயமலை அடிவாரத்தில் திமிங்கிலத்தின் எலும்புக் கூடுகளைத் தோண்டி எடுத்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Image result for shaligram

இந்தியாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் தனித்தனி நிலத் தகடுகள். இந்தியா மட்டும் தனி ஒரு தகட்டில் உட்கார்ந்து இருக்கிறது.

ஆசியத் தகட்டை இந்தியத் தகடுதான் முதலில் மோதுகிறது. அந்த மாதிரியான ஒரு மோதலில், ஓர் அழுத்தத்தில் உருவானதே இமயமலையாகும்.

உலகத்திலேயே உயரமான அந்த மலை இன்னும் உயர்ந்து கொண்டு போகிறது. ஓர் ஆண்டிற்கு ஒரு சில அங்குலம் உயர்கிறது. இமயமலை உயர்வதற்கு, இந்திய, ஆசியத் தகடுகள் மோதிக் கொள்வதுதான் மூல காரணம்.

பூமியின் மேல்பகுதியில் உள்ள நில அடுக்குகளை 'டெக்டானிக் பிளேட்ஸ்' (Tectonic Plates) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

இந்த அடுக்குகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது அல்லது ஒன்றை விட்டு மற்றொன்று விலகிச் செல்லும் போது நில அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வைத் தான் நிலநடுக்கம் என்கிறோம்.

Image result for shaligram

மத்திய ஆசியாவில் அமைந்து இருப்பது யூரேசியன் டெக்டொனிக் பிளேட் (Eurasian Tectonic Plate) எனும் நிலத் தகடு. அதைக் கண்டத்தட்டு என்றும் சொல்லலாம்.

அதற்கு கீழ்ப் புறமாக இருப்பது இந்திய டெக்டொனிக் பிளேட் (Indian Tectonic Plate). இந்த இரண்டு தட்டுகளும் பல கோடி ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டே இருக்கின்றன. அந்த உரசலின் விளைவாகத் தான் இமயமலைத் தொடர் உருவானது.

சாலிகிராம் கடல்வாழ் உயிரினங்களில் அம்மோனைட் ஓடுகள் இந்த மாதிரி நிலத் தகடுகளின் நகர்வுகளினால் தான் 3500 கிலோ மீட்டர்கள் தாண்டி நேபாளத்திற்கு வந்து சேர்ந்தன.