வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஏப்ரல் 2020

வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 1

அனைவருக்கும் இனிய வணக்கம்... நாம் வாழும் இந்த உலகில் 1,200 வகையான வௌவால்களும் வாழ்கின்றன. ஆனால் 1,100 வகையைத் தான் அடையாளம் காண முடிந்தது. பெயர் கொடுக்க முடிந்தது. மேலும் ஆயிரம் வௌவால்களை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அவை கண்ணாமூச்சி காட்டும் வௌவால்கள்.



வௌவால் (Bat) முதுகெலும்பு உள்ள பாலூட்டி. முதுகெலும்பி என்றும் சொல்வார்கள். பாலூட்டிகளில் பறக்கக் கூடிய ஒரே ஒரு விலங்கு வௌவால்தான். மனிதர்களும் பாலூட்டிகள் தான்.

ஆனால் என்ன வௌவால்களைப் போல பறக்க முடியாது. பறக்க முடிந்தால் அம்புட்டுத்தான். என்ன செய்வார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

வௌவாலை ’வவ்வால்’ என்றும் ’வாவல்’ என்றும் அழைப்பார்கள்.




வௌவால்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பெரிய வௌவால்கள் (Mega bats); சிறிய வௌவால்கள் (Micro bats).


அவற்றை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்றும், பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) என்றும் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

குறும் கைச்சிறகி வௌவால்களில் சில வகை மற்ற விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பவை. அதே சமயத்தில் மனித இரத்தத்தைக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. அவை ‘வெம்பயர்’ வௌவால்கள்.

பெரும் கைச்சிறகி வௌவால்கள் பெரும்பாலும் பழம் தின்னிகள். அவற்றில் பறக்கும் நரி (Flying fox) என்று ஒருவகை உள்ளது. நரியைப் போல முகம் கொண்டது.




பழந்தின்னி வௌவால்கள் இரவு நேரங்களில் 48 கி.மீ. தூரம் வரை பயணிக்கக் கூடியவை. இந்த வௌவால்கள் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும்.

வாழைப் பழங்களை முழுதாகவே தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. மலர்களில் உள்ள தேனை மட்டுமே உறிஞ்சிக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. சுத்த சைவமான வௌவால்கள்.

அவற்றில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர் பச்சைகளைத் தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. இவை சாப்பாட்டு ராமன் வௌவால்கள். அதனால் விவசாயிகளின் நம்பர் 2 எதிரியாகக் கருதப் படுகின்றன.

உலகில் பல நாடுகளில் வௌவால் ஓர் உணவாகப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள்; பாப்புவா நியூகினி, சாலமான் தீவு; போன்ற இடங்களில் வௌவால் முக்கியமான உணவுப் பொருள்.




இதை எல்லாம் தாண்டிய நிலையில் இன்னும் ஒரு நாடு இருக்கிறது. மனுசனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடும் மக்கள் வாழும் நாடு. பெயரைச் சொன்னால் பொல்லாப்பு. வேண்டாமே.

இன்னும் ஒரு விசயம். ஆச்சரியமான விசயம். வௌவால் தன் வாய் வழியாக உணவு உட்கொள்கிறது. தெரிந்த விசயம். அந்த உணவு அதன் வயிற்றில் செறிக்கிறது. அதுவும் தெரிந்த விசயம்.

ஆனால் அந்த உணவு செறித்த பின் அந்தக் கழிவை தன் வாயின் அடிப்பாகத்தின் வழியாக அகற்றுகிறது. அதாவது வெளியேற்றுகிறது என்பதுதான் தெரியாத விசயம்.

(https://www.quora.com/Bats-pass-stool-through-their-mouth-H…)

வௌவால்களைப் பற்றி மேலும் சில ஆச்சரியமான தகவல்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.04.2020


பேஸ்புக் பதிவுகள்


தமிழ்த்திரு சந்துரு சுப்ரமணியம்: அருமையான செய்தி ஐயா.. பதிவுக்கு நன்றி!

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... வாழ்த்துகள்

Kesavan Suppiah: சவால்களை பற்றிய மிகத் தெளிவாக விளக்கம் அளித்த ஐயா அவர்களுக்கு நன்றி மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் சாப்பிட நாடு எந்த நாடு ஆகிய விளக்கம் சொல்லுங்களேன்

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் சாப்பிடுகிறவர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கிறார்கள்... பாபுவா நியூகினி தீவிலும் இருக்கிறார்கள்... ஆசியாவிலும் இருக்கிறார்கள்...

Parimala Muniyandy: அருமையான தகவல்கள் அண்ணா வௌவால்களைப் பற்றி...
மனிதனை தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடும் நாடு...எதுவாக இருக்கும்...?

Muthukrishnan Ipoh: எந்த நாடு என்று குறிப்பிட்டுச் சொல்வது தப்புங்க... கருத்துகளுக்கு நன்றி...

Periasamy Ramasamy Kluang:
பட்டணத்திற்கும் அந்த காரணப் பெயர் வந்ததற்கு, அந்த வட்டாராத்தில் அதிக அளவில் காணப்பட்ட பெரிய வகை வௌவால்களே காரணம். இளவயதில், டுரியான் சீசன் வந்து விட்டாலே, மாலை ஆறு மணிக்கு மேல், இந்த வகை வௌவால்கள் வானத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வதைக் காணவும், அதை சுட்டு வீழ்த்த இரட்டைக் குழல் வேட்டைத் துப்பாக்கியுடன் வரும் (சீன) கடை முதலாளியின் வேட்டு சத்தம் கேட்டு ஆர்ப்பரித்த நாட்கள் இன்றும் நினைவில் நிழலாடுகிறது.

Muthukrishnan Ipoh: நல்ல தகவல். சின்ன வயதில் அடியேன் வாழ்ந்த காடிங் தோட்டத்திலும் பழம் தின்னி வௌவால்களைச் சுடுவார்கள். பாசா காட்டுக்குள் போய் விழும். தேடல் கும்பலில் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம்... பங்கு கிடைக்கும்... ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்தது... பழைய நினைவுகள்...

KeanuVimalah Nair Gopalan: >>> Vavaalin echam is dangerous??

Melur Manoharan: "நல்ல" பயனுள்ள பதிவு ஐயா...!

Inbachudar Muthuchandran: சீனர்கள் தான் எல்லாவிதமான மிருகங்களையும் உண்பார்கள் மலேசியாவில் நகர் புறங்களில் சுற்றித் திரியும் நாய்களை நகராண்மை கழகத்தினர் சுட்டுக் கொல்லும் போது அதனை சாப்பிட எடுத்துச் செல்வார்கள்.

https://www.tamilmalaysiatv.com/2020/03/blog-post_34.html...

சீனாவில் மீண்டும் களைகட்டிய நாய், பூனை, வௌவால் விற்பனை ! அதிர்ச்சியில் உலக நாடுகள்

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு மிக்க நன்றி... பத்திரிகையில் நன்றாகவே செய்தி போட்டு இருக்கிறார்கள்...

Sathya Raman: தலை கீழாக தொங்கும் வௌவால்களில் இத்தனை ரகமா? வாசகர்களுக்காக தேடிப் பிடித்து நிறைய பதிவுகளை பிரசுரிக்க றீர்கள். *நாங்களும் நோவாமல் நொங்கு எடுப்பதுப் போல் "தேடுதலில் கஷ்டப் படாமலேயே உங்கள் பதிவுகளை படிக்கிறோம். மீண்டும்,மீண்டும் உங்களது ஆய்வு கட்டுரைகள் வழி பரவசப்படுத்தி வருவதற்கு .🙏🙏🙏 சார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க. பத்திரிக்கைக்கு கட்டுரைகள் தயாரிக்கும் போது அவற்றில் ஒரு பகுதியைப் பேஸ்புக் ஊடகத்தில் பதிவு செய்கிறேன். அவ்வளவுதான்.

கூகிள் தேடலில் புதுப்புது தகவல்கள் சரம் சரமாய் வந்து கொட்டும். ஆங்கிலத்தில் உள்ளவற்றைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் சற்று சிரமம் தான். இருந்தாலும் பழகி விட்டது.

ஒரு கட்டுரையைத் தயாரிக்க ஐந்து ஆறு மணி நேரம் பிடிக்கும். அப்படியே அதில் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்வது கஷ்டமாகத் தெரியவில்லை... அதனால் பலருக்கும் பொது அறிவு வளர்கிறது எனும் ஒரு மனநிறைவு. அது போதுங்க. இயன்றவரை பயணிப்போம். வாழ்த்துகள்.

Poovamal Nantheni Devi: பயனுல்ல தகவல். நன்றி பகிர்ந்தமைக்கு

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி...

Nahdan Narayansamy: மிக்க நன்றி அய்யா...அருமையான தகவல்....

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Shantakumar Dilip: நல்ல பதிவு ஐயா...மிக்க நன்றி.

Muthukrishnan Ipoh: நல்லதுங்க... மகிழ்ச்சி...

Jaya Brakash: மிக அருமையான கட்டுரை பதிவு.. வாழ்த்துக்கள் ஐயா👌