கறுப்பு தீபாவளி மலேசியா 2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறுப்பு தீபாவளி மலேசியா 2019 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 டிசம்பர் 2019

கறுப்பு தீபாவளி மலேசியா 2019




நம்ப வீட்டுப் பெண் பிள்ளைகள் நடுத் தெருவில்… மழையிலும் பனியிலும் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்...

எங்கள் கணவன்மார்களை விடுவியுங்கள்... என்று இரைஞ்சுகின்றார்கள்...

எங்கள் கணவன்மார்களைக் காப்பாற்றுங்கள்... என்று ஏங்கித் தவிக்கிறார்கள்...

இந்த நிலையில் மலேசிய இந்தியர்களுக்கு தீபாவளி அவசியம் தானா...

அப்படிப்பட்ட ஒரு தீபாவளி நமக்குத் தேவை தானா…

நமக்கும் இன மான சமூக உணர்வுகள் இருக்கு தானே?




பேஸ்புக் பின்னூட்டங்கள்


Sukumaran Suppiah: நிச்சயம் இனப்பற்று உள்ளவர்கள் செல்ல மாட்டார்கள்! நம் சகோதரர்களுக்காகப் பிரார்த்திக்கவும் மறக்க மாட்டார்கள்! அரசாங்கம் நம்மைக் கிள்ளுக்கீரையாகக் கூட மதிப்பதில்லை எனபதற்கோர் சிறந்த உதாரணம்! ஒற்றுமையே பலம்! ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருணம் இது! சிந்திப்போம்! செயல்படுவோம்!

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றிங்க...

Sivaguru Sithambaram: அரசாங்கம் ஏற்பாடு செய்யும் எந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும்.

Nagappan Arumugam >>> Sivaguru Sithambaram: பரவட்டும் செய்தி!

Letchumanan Nadason: தீபாவளி வேண்டாம். அரசாங்க தீபாவளி விருந்து நிகழ்வுகளை புறக்கணித்து நம் உணர்களை வெளிப்படுத்துங்கள்.

ஏகாம்பரம் கன்னி >>> Letchumanan Nadason: உண்மைதான் ஐயா.

Manickam Nadeson: எங்கள் பேராக் மாநிலத்தில் 10 மாவட்டங்களிலும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடத்தி கொண்டாடப் போரானுங்கலாம். யார் வீட்டுப் பணத்தில்? அவனுங்க அப்பன் வீட்டு காசில கொண்டாட்டடும். பொது மக்கள் வரிப் பணத்தில் இப்படி தீபாவளி கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? பதவியில் இருந்தால் மக்கள பணத்தை தன் விருப்பத்திற்கு செலவு பண்ண் முடியுமா?

ஏகாம்பரம் கன்னி >>> Manickam Nadeson: நமது தமிழா்கள் கண்டிப்பாக இவனுங்க உபசாிப்பை புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

Perry Muthan: My humble opinion is we need Deepavali but boycot Deepavali functions organized by PH government and its leaders.

Johnanthonysamy John: well said Mr. Muthan. As we all indian celebrating this Deepavali but this we all boycot this PH government open house celebration, to support our sisters family at the roadside under the rain. No sence on new malaysia to abolish SOSMA and prihatin pada rakyat selepas menang PR 14 Bullshet, pembohong menteri2 wakil india dan kerajaan PAKATAN.

Manikam Kuppusamy: உண்மை ஐயா, அரசாங்கம் ஏற்பாட்டில் நடைபெறும் எந்த தீபாவளி நிகழ்ச்சிகளிலும், நாம் புறக்கணிக்க வேண்டும்,

Thanabaal Varmen: இந்தத் தீபாவளியை, நாம் கறுப்பு தினமாக ஏற்றுக் கொண்டாலும் தவறில்லை என்றே உணர்கிறேன்!!!

Thina Karan: தீபாவளியை புறக்கணிப்பு செய்வதால் அது எத்தகைய அழுத்தத்தை ஆளும் அரசுக்கு தரக்கூடும் என்பதையும் தெளிவாக கூறவும். பாதகமா அல்லது சாதகமா? மாறாக தீபாவளி பண்டிகை புறக்கணிப்பு செய்யப் பட்டால் பாதிக்கப் படப்போவதும் நமது வியாபாரிகள் தானே. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

Doraisamy Lakshamanan: மலேசிய இந்தியர்கள் அனைவரின் மன வேதனையை நன்கு உணர்ந்துள்ள நம் பிரதமர் மனம் இறங்கினால் தீபாவளியை பாதிக்கப் பட்டவர்களும் அவர்களின் குடும்பமும் மகிழ்ச்சியாகக் கொண்டாடியபின் சம்பந்தப் பட்டவர்களின் வழக்கை விசாரிக்க ஏற்பாடு செய்யக் கூடும் பொறுமை காப்போம்! இன்னும் 24 மணிநேரம் இடைவெளியில் எதுவும் நல்ல முறையில் ஏதாவது நடக்காதா என எல்லோரும் எதிர்பார்போம். அதுவரை உண்ணா நோன்பில் உள்ள சகோதரிகளுக்கு சட்டத் துறைச் சகோதரி அம்பிகா அம்மையார் தொலைபேசி வழியாவது ஆறுதலாக உண்ணாவிரதத்தை கை விடுமாறு எடுத்துரைப்பார்களா?

Khavi Khavi: கொடிய விலங்குகள், உயிர்கொல்லி விஷப் பூச்சிகள், ஆறுகள் மற்றும் அடர்ந்த மலைக் காடுகளை அழித்து சாலைகள் அமைத்து, மலைகளை குடைந்து தண்டவாளங்களை அமைத்து, ரப்பர் செம்பனைத் தோட்டங்களில் தோய்ந்து இம்மலையகம் மேன்மை அடைந்திட, இம்மண்ணின் மைந்தர்கள் இன்பமாய் கழித்திட தனது இன்னுயிரையும் இரைத்திங்கு தொடர் சந்ததிகளாய் இன்னும் இங்கேயே நாதியற்று வாழ்கின்ற அவலம். "எந்நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகட்கு..!"

Malathi Nair: Pray for them frm bottom of my heart. at least today we hear good news frm who ever responsible for this.

Arjunan Arjunankannaya: நம்மை பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது

Arojunan Veloo: நாம் ஒன்றுபடும் நேரம் வந்துவிட்டது....!

Muniyandy Veerasamy: அரசாங்க தீபாவளி விருந்து நிகழ்ச்சிகளைப் புறக்கணியுங்கள்

Pon Vadivel: நமது சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நாடு தூய்மை பெற வீரத் திலகங்களாக அமையும்

Gunasegar Manickam: உண்மை ஐயா.... இந்த தீபாவளியை கொண்டாட மூடே இல்லை.... நமது சகோதரிகள் படும் துன்பங்கள் வேதனையாக இருக்கிறது.

Selva Mani: எட்டப்பன்களும், சகுனிகளும் நம் சாபக் கேடுகள்!

KR Batumalai Robert: Unmai. Deepavali Ellai. Vethanai.

Karuna Jayaraman: உண்மை அண்ணா உண்மை அண்ணா

Jsr Chandra: Parithapam intha kudumpanggal

Santha Arumugam: Ya.

Kumar Murugiah Kumar's: நானும் என் குடும்பத்தார் அனைவரும் உங்களுடன் !

Shree Rau: May God Bless

Periasamy Ramasamy: மன்னிக்கவும். இங்கு பகிர்ந்துள்ள கருத்துக்களில் இருந்து சற்று மாறு பட விழைகிறேன். சமீப காலமாக இந்திய அரசின் வர்த்தக நெருக்கதலுக்கு உள்ளாகி இருக்கும் தருவாயில் கூட, நம் நாட்டுத் தலைவர் பிடிவாதமாக அனைத்துலக மேடையில் வெளியிட்ட இந்தியாவுக்கு எதிரான தனது கருத்தை மீட்டுக் கொள்ள மறுப்பதும், உள் நாட்டில், துங்குவின் அரசு 1957-இல் ’வந்தேறிகளுக்கு’ குடியுரிமை கொடுத்து தவறு இழைத்து விட்டதாக வெளிப்படையாகவே பேசி வருவதும், LTTE இயக்கம் பயங்கரவாத பட்டியலில் இருந்து அகற்றப்பட்டு இருப்பது தெரிந்து இருந்தும், இங்கே தேவை இல்லாமல் குறிப்பாக நம்மவர்களை அதனுடன் சம்பந்தப் படுத்தி எடுத்து இருக்கும் நடவடிக்கைகளைப் பார்க்கையில், நம்மவர்களைப் 'பணயமாக' வைத்து இந்தியாவிற்கு ஒரு மருட்டல் விடுவது போலத் தெரிகிறது.

ஆகவே, நமது அரசியல் பார்வையை நாம் சற்றே மாற்றி கொள்வது விவேகமாகப் படுகிறது. "புறக்கணிப்பு" என்னும் எதிர்மறை மனவோட்டத்தைத் தவிர்த்து, இதற்கும், நாம் சற்றே அமைதி காத்தோமானால், காலம் ஒரு நல்ல முடிவைத் தரும் என்று நிச்சயமாக நம்புவோம்.

மேலும் நமது இந்தியப் பிரதிநிதிகளின் உண்மையான நிலைப்பாடு தெளிவாக தெரிந்து கொள்ளாமல், நமக்குள் இருக்கும் அரசியல் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதும், விமர்சிப்பதும் பொருத்தமற்றது என்றே நினைக்கத் தோன்றுகிறது

தீபாவளியை எப்போதும் போல அமைதியாக, எல்லா இன நண்பர்களுடன், கட்சி அரசியல் பேதமும் இன்றி எல்லா சக இந்திய பிரதிநிதிகளின் திறந்த இல்ல உபசரிப்புக்களில் சந்தர்ப்பம் வாய்த்தால் பங்கு கொள்வோம்.

https://www.malaysiakini.com/news/497348?utm_source=dlvr.it&utm_medium=facebook&fbclid=IwAR3rxssYjqWiOicBEOysflzIchCj5cwmmeH7FH_mCdVsID7RHwnKNLPNXAs

A million unqualified non-indigenous people given citizenship, says PM
malaysiakini.com

Manickam Nadeson:
அது சரி, பாக்காத்தான் ஹராப்பான் கட்சியின் இந்திய அமைச்சர்கள், மற்றும் மாநிலங்களில் உள்ள நம் இனத்தைச் சேர்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எங்கே போனார்கள். ஆனந்தமாக, மகிழ்ச்சியாக தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாட தங்களது இல்லங்களில் விளக்கேற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த சுயநலக் குள்ளநரிகள் இன்று தடுப்புக் காவலில் இருப்பவர்களைப் பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லையே. செய்யாத மக்கள் நலன்களை தாங்கள் தான் செய்ததாக பொய் சொல்லி விளம்பரம் தேடித் திரியும் இந்தப் புறம்போக்கு அரசியல் வியாதிகளை இப்பொழுதாவது அடையாளம் கண்டு, இந்த நாடோடி தெருநாய்களின் தோலை சுத்தமாக உரிக்க வேண்டும். கடுப்பு ஏத்துரானுங்க மை லார்ட்.

Varusai Omar: அவலை நினைத்து உரலை இடித்த கதைதான் நினைவிற்கு வருகிறதூ!

Shamy Appalasamy: சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நாடு தூய்மை பெற வீரத்திலகங்களாக அமையும்

Ram Subra: தற்போது அரசாங்கத்தில் பதவி வகிக்கும் பல இந்திய தலைவர்கள் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றனரே..

Dorairaj Karupiah: கரு மேகங்கள் என்று விலகுமோ அன் நாளே நன்நாள் பொறுத்திரு மகளே... சேங்கோல் சூத்திரதாரியிடம்

Raani Nair: தமிழ் இன மக்களின் ஒற்றுமையை இதன் மூலம் நன்கு அறியப்பட்டு உள்ளது.. ஒரு நாதியற்ற நிலை இது... இனி நம் சமுதாயம் என்னவெல்லாம் காணப்பட வேண்டிய சூழல் உண்டாகுமோ?