வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஏப்ரல் 2020

வௌவால்கள் சொல்லும் மர்மங்கள் - 2

வௌவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்கித் தூங்குகின்றன. காரணம் இருக்கிறது. உலகின் பல உயிரினங்கள் தூங்கச் செல்லும் போது வெளவால்கள் மட்டும் விதிவிலக்கு.
 

படுத்த பாயைச் சுருட்டி... மூட்டை கட்டி... கொட்டாவி விட்டு... இரை தேடப் போகின்றன. இராத்திரி முழுவதும் சுற்றி அலைகின்றன. சூரியன் வந்ததும் மறுபடியும் படுக்கப் போகின்றன. சும்மா ஒரு ஜோக்.

வௌவால்களுக்குப் படுக்க பாயும் இல்லை. இழுத்து போர்த்திக் கொள்ள போர்வையும் இல்லை. தலைகீழாய்த் தொங்கிக் கொண்டே தூங்கும் ஜீவன்களுக்கு அப்படி எல்லாம் நவீன வசதிகள் இல்லை.

50 மில்லியன் வருசங்களாக அப்படித்தான் தலைகீழாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.


வௌவால்கள் ஏன் தலைகீழாகத் தொங்கித் தூங்குகின்றன. அவற்றால் ஹெலிகாப்டர் போல சட்டென்று எழுந்து சடக் சடக் என்று மேலே பறக்க முடியாது. அவற்றின் இறக்கைகள் கனமானவை. மேலும் அதன் இறக்கைகள் 6 அடி வரை நீளமாக இருக்கும்.

பொதுவாகவே பறவைகள் தம் பலம் பொருந்திய இறக்கைகளைக் கிழ்நோக்கி உந்துவதன் மூலம் மேலே எழும்பி பறக்கின்றன. சில பறவைகள் தம் வேகத்தை அதிகரிக்க விமானத்தை போல சிறிது தூரம் ஓடி அப்புறம் மேலே பறக்கின்றன.

ஆனால் வௌவால்களுக்கு அப்படி இல்லை. அவற்றின் முன் கால்கள்; பின் கால்கள் மிக மிருதுவானவை. ஓடி வந்தோ அல்லது இறக்கைகளை உயர்த்தியோ பறக்கும் அளவுக்கு பலம் இல்லை.


அதனால் தான் அவை தலைகீழாக தொங்கி... விமானம் போல கீழே இறங்கி பறக்கின்றன. உயரமான இடத்தில் தலைகீழாக தொங்குவதால் அவை மற்ற மற்ற விலங்குகளிடம் எளிதில் பலியாவது இல்லை.

தனக்கு ஏற்படும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும் வௌவால்கள் தலைகீழாகத் தொங்குகின்றன. தூங்குகின்றன.

இன்னும் ஒரு விசயம். வௌவால்கள் தலைகீழாகத் தொங்கும் போது, அதிக அளவு சக்திகள் தேவைப் படுவது இல்லை. உடனே பறப்பதற்கும் அதுவே எளிமையான வழியாகவும் அமைகின்றது.

வௌவால் தலைகீழாகத் தொங்கும் போது இறந்து விட்டால் கூட, வேறு ஏதோ ஒரு பொருள் அதை மோதி தள்ளும் வரை அது கீழே விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டு இருக்கும்.


வௌவால்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியவை. இருந்தாலும் அவற்றைப் பறவை இனத்தில் சேர்க்க முடியாது. ஏன் என்றால் அவை குட்டி போட்டு பால் தரும் பாலூட்டிகள்.

வௌவால்களின் இறைக்கைகள் தான் அவற்றின் முன் கைகள். வௌவால்களுக்குக் கண் பார்வை உண்டு. ஆனால் கண்கள் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இருந்தாலும் அதற்கு கண் பார்வை தேவை இல்லை.

50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களின் போதே அவற்றின் கண்கள் சின்னதாக அமைந்து விட்டன. இன்றும் அதே கண்கள்.

இவற்றின் இறக்கை, கால், முதுகு எல்லாமே ஜவ்வு போல இணைந்து அமைந்து இருக்கின்றன.


வௌவால்கள் இரவில் பறக்கும் போது ஒரு வகையான மீயொலியை (Ultrasound) எழுப்பும். அப்படி ஓர் ஆற்றல். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. வௌவால்களால் கேட்க முடியும்.

மீயொலிகள் மற்ற பொருட்களின் மீது பட்டு எதிர் ஒலிக்கும். அந்த எதிரொலிப்பின் அளவை உணர்ந்து கொண்டு தான் வௌவால்கள் தம் திசையை நிர்ணயித்துக் கொள்கின்றன.

அதாவது இரவில் பறக்கும் போது மீயொலி அலைகளை அனுப்புகின்றன. அந்த மீயொலிகள் எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்களில் மீது மோதித் திரும்ப வரும். அதைக் கொண்டு அதன் தொலைவைக் கணக்கிடும் தகவமைப்பு வௌவால்களுக்கு உண்டு.

இந்தத் தகவமைப்பின் மூலம் எதிரில் இருக்கும் பொருட்களை மட்டும் அல்ல; அவற்றின் உடல் அளவையும் கூட கண்டுபிடித்து விடுகின்றன.

ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றன. மனிதனின் கேட்கும் ஆற்றல் நொடிக்கு 20 அதிர்வுகளில் இருந்து 20,000 அதிர்வுகள். ஒலியை இரு வகையாகப் பிரிக்கலாம்.

20 அதிர்வுகளுக்கும் குறைவாக இருந்தால் அதற்குப் பெயர். தாழ் ஒலி (infrasound) 20000 அதிர்வுகளுக்கும் கூடுதலாக இருந்தால் அதற்குப் பெயர் மீயொலி (ultrasound). அதையே மிகை ஒலி என்றும் அழைப்பார்கள்.

வௌவால்கள் நொடிக்கு 20,000 அதிர்வுகளுக்கும் கூடுதலாகக் கேட்கும் திறன் கொண்டவை. மனிதர்களால் அந்த அளவிற்குப் போக முடியாது. ஒலியைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

இரத்தத்தைக் குடிக்கும் வௌவால்கள் உள்ளன. இவற்றை ஆங்கிலத்தில் Vampire bat என அழைப்பார்கள்.

0.04.2020 மிருகங்கள், ஆடு மாடுகள் இரத்தத்தைக் குடிக்கும். சமயம் கிடைத்தால் மனிதர்களின் இரத்தத்தையும் விட்டு வைப்பது இல்லை. இந்த மாதிரியான காட்டேறி (Vampire) வௌவாலுக்கு வாயின் உட்புறத்தில் இரு பெரிய வெட்டுப் பற்கள் இருக்கும்.

காட்டேறி வௌவால்கள் இரையை கடிக்கும் பொது அவற்றின் உமிழ்நீரை இரையின் மீது செலுத்தும். உமிழ்நீரில் உள்ள திராகுலின் (Draculin) எனும் திரவம் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. அதனால் தான் டிராகுலா எனும் பெயர் புகழ் பெற்றது. மேலும் தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Rani Ranibalan அருமையான தகவல்.நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh மிக்க மகிழ்ச்சி...

Muthukrishnan Ipoh அனைவருக்கும் இனிய வணக்கம்... இனிய வாழ்த்துகள்... இன்றைய நாள் இனிமையாய் நலமாய் அமைய வேண்டுகிறேன்.

Vely Loganathan Nandri Aiya

Balan Muniandy சிறப்பான இன்றைய நிலைக்கு ஏற்ற தகவல்... வாழ்த்துக்கள்... மலாக்கா வரலாற்று நாயகன் ஐயா முத்துக்கிருஷ்ணன் அவர்களே... தொடரட்டும் தங்களின் வரலாற்று படைப்புக்கள்... வாழ்த்துக்கள் ஐயா... வாழ்க வளமுடன்...

Muthukrishnan Ipoh தங்களின் வாழ்த்துகளில் மெய்மறந்து போனேன்... நன்றிங்க தம்பி பாலன்....

Janakiraman Raman சிறந்த பதிவுகள் ஐயா நன்றி.

Muthukrishnan Ipoh நன்றிங்க தலைவரே...

Sheila Mohan காலை வணக்கம் சார். அருமையான விளக்கம்..

Muthukrishnan Ipoh வணக்கம்... வணக்கம்... வாழ்த்துகள்....
Arjunan Arjunankannaya காலை வணக்கம் ஐயா

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்...

Ponni Veerappan

Muthukrishnan Ipoh வாழ்த்துகள்...

Melur Manoharan "இனிய" மாலை வணக்கம் ஐயா...!

Muthukrishnan Ipoh இனிய வணக்கம்...

Poovamal Nantheni Devi Dracula விளக்கம் சிறப்பு

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி.... வாழ்த்துகள்...

Shantakumar Dilip காலை வணக்கம் ஐயா.

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்...

Tana Letchumy Very good information. Arumai.