கொரோனா வைரஸ் கோவிட் 19 - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ் கோவிட் 19 - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 பிப்ரவரி 2020

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 2

தமிழ் மலர் - 17.02.2020

உலக மக்களைக் கொரோனா வைரஸ் நடுங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. ஆர்டிக் துருவத்தில் வாழும் எஸ்கிமோ மக்கள் பயப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு கீழே இருக்கும் அண்டார்டிக்கா மக்கள் பயப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் காட்டு வாழ்க்கை வாழும் கயானா நாட்டு மக்கள் பயப்படுகிறார்கள். அமெரிக்கா ஆண்டிஸ் மலையில் வாழும் இன்கா மக்களும் பயப்படுகிறார்கள். 



பயம். பயம். ஏகப்பட்ட பயங்கள். உலகத்தில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள். இதில் சீனா நாட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வல்லரசாகும் கனவில் சன்னமான செல்லரிப்புகள்.

உலகப் போலீஸ்காரர் அமெரிக்காவிற்குச் சட்டாம்பிள்ளை வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பதாகக் கேள்வி. விடுங்கள். கொஞ்ச நாளைக்கு ரோத்தான் கையில் இருக்கட்டுமே. பொறுத்து இருந்து பார்ப்போம். 

கொரோனா நோய்க்கு இதுவரையிலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உருப்படியாக ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க குறைந்த பட்சம் 18 மாதங்கள் பிடிக்குமாம். உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. 



அதுவரையிலும் என்ன செய்வது. நோய் கண்டவர்களைத் தனிமைப் படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நோய்த் தாக்குதலுக்கு மூலகாரணமாக இருந்தது பாம்புக் கறி என்று முதலில் சொன்னார்கள். பின்னர் வௌவால்கள் என்று சொன்னார்கள். ஆனால் அது தவறு என்று இப்போது சொல்கிறார்கள். கொரொனா வைரஸ் விலங்குகளில் இருந்து பரவுவது இல்லை. மனிதர்களிடம் இருந்து மனிதர்களிடம் தான் பரவுகிறது என்று இப்போது சொல்கிறார்கள்..

கொரோனா வைரஸ் தாக்குதலினால் ஆயிரக் கணக்காக மக்கள் இறந்து விட்டார்கள். அதிகாரப் பூர்வமான தகவல்கள் ஆயிரங்கள் என்று சொன்னாலும் உண்மையில் பல ஆயிரங்கள் இருக்கலாம் எனும் வதந்திகளும் கசிகின்றன. 


தமிழ் மலர் - 17.02.2020

பாதுகாப்பு முன்னிட்டு உண்மையான புள்ளி விவரங்கள் மறைக்கப் படலாம் என்பதும் வதந்திகளில் கசிந்து வரும் கசிவுகள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது எவருக்கும் தெரியப் போவதும் இல்லை. அதைப் பற்றித் தெரிந்து கொண்டு ஆகப் போவதும் ஒன்றும் இல்லை. உலக மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இப்போதைக்கு தலை போகிற விசயம்.

கடந்த சில பத்தாண்டுகளாக, உலகின் சில பல வல்லரசு நாடுகள் உயிரியல் போருக்கு (Biological Warfare) தயாராகி வருகின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் ரொம்ப இரகசியமாக உயிரியல் ஆயுதங்களைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகின்றன. சில நாடுகள் தயாரித்தும் விட்டன. இதில் இஸ்ரேல் நாட்டை மறந்துவிட வேண்டாம்.



அணுகுண்டுகளைப் போட்டு எல்லாவற்றையும் அழிப்பதினால் எதுவும் மிஞ்சப் போவது இல்லை. போட்ட முதலுக்கு மோசம் என்று சொல்லி உயிரியல் போருக்குத் தயார் நிலையில் நிற்கின்றன.

ஆக உயிரியல் போர் மூலமாக ஒரு மக்கள் கூட்டத்தை அழிக்கலாம். ஓர் இனத்தை அழிக்கலாம். ஒட்டு மொத்தமாக ஒரு நாட்டு மக்களையும் அழிக்கலாம்.

உயிரியல் போர் மூலமாக மனிதர்கள் அழிந்தாலும் தாவரங்கள் அழியாது. மற்ற மற்ற விலங்கினங்களும் அழியாது. 



ஆக மனிதர்களை மட்டும் அழிக்கும் உயிரியல் போர்க் கிருமிகளைப் பல நாடுகள் தயாரித்து வைத்து உள்ளன. அந்த வகையில் கொரோனா கொள்ளை நோய் பரவியதற்குச் சீனா ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலரும் சந்தேகப் படுகிறார்கள்.

உயிரியல் போர் என்றால் என்ன? முதலில் இதைத் தெரிந்து கொள்வோம். பேரழிவு ஆயுதங்கள் என்று நான்கு வகைகள் உள்ளன. அணு ஆயுதங்கள்; வேதியியல் ஆயுதங்கள்; உயிரியியல் ஆயுதங்கள்; கதிர்வீச்சு ஆயுதங்கள்.

இவற்றின் பின்னணியில் இருப்பவை அணுஆயுத போர் (Nuclear Warfare); வேதியியல் போர் (Chemical Warfare); உயிரியியல் போர் (Biological Warfare); கதிரியக்கப் போர் (Radiological Warfare). சரிங்களா. 



இவை அனைத்தும் பேரழிவு ஆயுதங்கள் (Weapon of Mass Destruction (WMD). உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள். பயன்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் தடை. தயாரிக்கக் கூடாது என்பதற்கு தடை இல்லையே. இதைத் தான் மாஸ்டர் கேட்ச் (Master Catch) என்று சொல்வார்கள்..

உயிரியல் போர்முறைக்கு வருவோம். இதைக் கிருமிப் போர்முறை (Germ Warfare) என்றும் சொல்லலாம். தொற்றும் கிருமிகளான (Infectious Agents) பாக்டீரியா, வைரஸ் அல்லது நச்சுப் பூஞ்சைகள் போன்றவற்றை உயிரியல் கொல்லிகள் (Biological Toxins) என்றும் சொல்வார்கள்.

அந்த உயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தி  மனிதர்கள்; விலங்குகள்; அல்லது தாவரங்கள் போன்றவற்றை அழிப்பது அல்லது கொல்வது தான் உயிரியல் போர்.



மேலே சொன்ன அந்த உயிர்க் கொல்லிகள் மற்ற உயிர்களின் உடலுக்குள் சென்றதும் மள மள என்று வளர்ச்சி அடைகின்றன. ஒரு சில நிமிடங்களில் பல கோடிகளாக இனப்பெருக்கம் அடைந்து விடுகின்றன.

ஆதி காலத்தில் அதாவது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அசீரியர்கள் (Assyrians) தங்களின் எதிரிகளுக்குப் பித்துப் பிடிக்க வைக்கும் பூஞ்சைகளின் மூலமாக உயிரியல் போர் செய்ததாக வரலாறு சொல்கிறது. அசீரியர்கள் என்பவர்கள் மத்திய கிழக்கில் பழங்காலத்து மெசபொத்தோமியா எனும் பேரரசைச் சேர்ந்தவர்கள்.

1760-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் பெரியம்மை நோய்க் கிருமிகளை உயிரியல் ஆயுதமாக அமெரிக்கச் சிவப்பு இந்தியர்கள் (Native Americans) மீது பயன்படுத்தியதாகவும் கூறப் படுகிறது. இதற்குப் போதிய சான்றுகள் இல்லை.



இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து ஓர் உயிரியல் ஆயுதத் திட்டத்தைத் தொடங்கியது. இதைப் பார்த்த ஜப்பான், பிரான்சு, சீனா போன்ற நாடுகள் ‘நாங்களும் செய்வோம் இல்ல’ என்று சொல்லி தங்களின் உயிரியல் ஆயுதத் திட்டங்களைத் தொடங்கின.

முதன்முதலில் பெரிய அளவில் உயிரியல் ஆயுத ஆராய்ச்சியைச் செய்தது ஜப்பான் நாடுதான். அதற்கு ஏகாதிபத்திய ஜப்பானின் இராணுவ பிரிவு 731 என்று பெயர் வைக்கப் பட்டது (Imperial Japanese Army Unit 731). மிகவும் இரகசியமான ஆராய்ச்சி. சீனா மஞ்சூரியாவில் உள்ள மக்கள் மீது  உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஜப்பான் திட்டம் போட்டது. செய்தும் காட்டியது.

1940-ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள நிங்போ (Ningbo) எனும் நகரத்தின் மீது உயிரியல் தாக்குதல். கொடூர பிளேக் நோய்க் கிருமிகளைக் கொண்ட செராமிக் குண்டுகளை (Ceramic Bombs) அந்த நகரின் மீது வீசியது. 4 லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். 



இங்கே ஒன்றை நன்றாகக் கவனியுங்கள். ஒரு காலத்தில் சீனா மீது ஜப்பான் உயிரியல் கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்தியது. ஆடிப் போனது சீனா அப்போது. ஆனால் இப்போது அதே சீனா உலகத்தையே ஆட வைத்து விட்டது. உயிரியல் போரில் தடம் பதித்து தர்க்கம் பண்ணிக் கொண்டு இருக்கிறது.

இப்போது உலகத்தையே உறைய வைத்து இருப்பது கொரோனா வைரஸ். தெரிந்த விசயம். அந்த வைரஸ் உருவாக்கம் பெறுவதற்குச் சீனாவின் உயிரி ஆயுத ஆய்வகம் (Wuhan Institute of Virology) ஒரு காரணம் எனும் தகவல் கசிந்து வருகிறது.

சீனாவில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் எந்த ஒரு தகவலும் வெளியே வராது. ஏன் என்றால் சீனா ஓர் இரும்புத் திரை (Iron Curtain) போட்ட நாடு. மன்னிக்கவும். உண்மையைத் தான் எழுதுகிறேன். 



உலகில் சில நாடுகளை இரும்புத் திரை நாடுகள் என்று சொல்லலாம். 1991-ஆம் ஆண்டிற்கு முன்னர் போலந்து; கிழக்கு ஜெர்மனி; ஹங்கேரி; ரொமேனியா; பல்கேரியா; அல்பேனியா; ரஷ்யா போன்றவை இரும்புத் திரை நாடுகளாக இருந்தன. இருந்தாலும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அதை உடைத்துக் கொண்டு அந்த நாடுகள் வெளியாகி விட்டன.

இப்போது இந்த நவீன உலகில் இரு நாடுகள் மட்டுமே இரும்புத் திரையைப் போட்டுக் கொண்டு கண்ணாமூச்சி காட்டுகின்றன. இருட்டடிப்புகள் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் கொரோனா களேபரத்தில் சண்டைக்கு வர மாட்டார்கள். நம்பலாம்.

சீனா; வட கொரியா; இந்த இரு நாடுகள் தான் இப்போதைக்கு இரும்புத் திரை நாடுகள். அங்கே இருந்து உண்மையான தகவல்கள் கசிவதற்குச் சற்று சிரமமே. 



சீனாவைப் பொறுத்த வரையில் அங்கே இருந்து செய்தி வெளிவருவதைச் சுலபமாக தடுத்துவிட முடியும். தணிக்கை என்று சொல்வார்களே அதுதான். ஆனால் இப்போது கொரோனா வைரஸ் கிருமிகளைத் தடுக்க முடியாமல் தவிக்கிறதே. என்ன செய்வதாம்.

அது மட்டும் அல்ல. உலகின் பல நாடுகளில் சீனர்களைப் பார்த்ததும் மற்றவர்கள் பயந்து பயந்து விலகி ஓடும் நிலைக்கு நிலைமை மோசமாகி வருகிறது (Xenophobia). தெரியுங்களா.

சீனாவில் 23 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹுபே (Hubei) எனும் மாநிலம். இதன் தலைநகரம் வுஹான் (Wuhan). மத்திய சீனாவில் இருக்கிறது. மக்கள் தொகை 1 கோடி 10 இலட்சம். அதாவது கோலாலம்பூர் மக்கள் தொகையைப் போல ஆறு மடங்கு அதிகம். சீனாவின் சிக்காகோ நகரம் என்று பெருமையாக அழைக்கப்படும் நகரம் இந்த வுஹான் மாநகரம்.



பலரும் நினைப்பது போல வுஹான் ஒரு மாநிலம் அல்ல. அது ஒரு நரகம். மன்னிக்கவும் நகரம். இந்த நகரத்தில் தான் இப்போது கொரோனா வைரஸின் அமளி துமளிகள் அரங்கேற்றம் கண்டு வருகின்றன.

வுகான் மாநகரில் சியாங் சியா (Jiangxia) எனும் இடத்தில் உயிரி ஆயுத ஆய்வு மையம் (Wuhan Institute of Virology) ஒன்றைச் சீனா நடத்தி வருகிறது. 1956-ஆம் ஆண்டு 200 மில்லியன் ரிங்கிட் செலவில் தொடங்கப் பட்டது. இதன் உயிர் பாதுகாப்பு நிலை 4 (Bio Safety Level). மிகவும் எச்சரிக்கையான நிலை.

இந்த மையம் உயிரியல் கொல்லித் தாக்குதல் ஆராய்ச்சி மையம் என்று சொல்லப் படுகிறது. அந்த ஆய்வு மையத்தின் மீது உலக நாடுகளுக்கு ரொம்ப நாட்களாகவே சந்தேகம்.

இருந்தாலும் இவ்வளவு நாளும் சீனா  மறுத்து வந்தது. அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல. அது ஓர் உயிர்க் கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம் என சீனா கூறி வந்தது.



(சான்று: In January 2020, the Institute was rumored as a source for the 2019–20 Wuhan coronavirus outbreak, The Washington Post)

(சான்று: In February 2020, the source of the outbreak through accidental leakage, BBC News China. 5 February 2020.)
ஏற்கனவே சார்ஸ் (SARS), எபோலா (Ebola) வைரஸ்கள் பரவிய போது, சீனா மீது சில பல நாடுகளுக்குச் சந்தேகம். ஆனால் அனைத்தையும் சீனா மறுத்து வந்தது. ஆனால் இப்போது நேரடியாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தலை போகிற நேரம். அதனால் கொரோனா கிருமிகளைப் பற்றிய படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டது.

கொரோனா நோயினால் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் இறந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அதே சமயத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருக்கலாம் என்றும் சில நாடுகள் சொல்கின்றன. 



அது எல்லாம் இல்லை. 1669 பேர் தான் என்று சீனா அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதில் எது உண்மை. ஆக இதில் புரளியும் இருக்கலாம். வதந்தியும் இருக்கலாம்.

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி சீனப் புத்தாண்டு. உலகின் பல பகுதிகளில் வாழும் சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வரும் காலக் கட்டம்.  அந்த நேரத்தில் தான் கொரோனா வெடித்துப் பரவியது.

ஆக சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களை மீண்டும் வெளியே விட்டால் அந்த நோய் உலகம் முழுதும் பரவி விடும் என்று சீனா அஞ்சியது. சீனாவுக்குக் கெட்ட பெயர். அதனால் வந்தவர்கள் எவரையும் வுகான் நகரில் இருந்து வெளியே போக அனுமதிக்கவில்லை.

ஜனவரி 27-ஆம் தேதியில், வுஹான் மாநகரைச் சீனா சீல் வைத்து மூடி விட்டது. வெளியே இருப்பவர்கள் உள்ளே போக முடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாது. ஒட்டுமொத்த அடைப்பு. அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் உலகத்திற்கே திகைப்பு.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒரு விசயம். கொரோனா கிருமிகள் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் வெளியே வந்தன என்று பல நாடுகள் சொல்கின்றன. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்தின் கோபத்திற்கு ஆளாகலாம் அல்லவா. ஆக அதற்கும் சீனா தக்க பதில் கொடுத்தது.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட இரத்தத் திசுக்களை ஆய்வு செய்தோம். அவற்றில் வௌவால்களின் மரபணுக்கள் இருந்தன; SARS-CoV மரபணுக்களும் இருந்தன என்று சீனா கூறியது.

வுகான் மாநகரத்தில் இருந்த ஹூவனான் கடல் உணவு சந்தையில் (Huanan Seafood Wholesale Market) விற்கப்பட்ட வௌவாலில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியது என சீனா அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இங்கே தான் இடித்தது. என்ன தெரியுங்களா. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் அந்த ஹூவனான் மார்க்கெட்டிற்குப் போகவே இல்லை. அப்படி இருக்கும் போது இவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது?

இது தெரிய வந்ததும் சீனாவிற்குத் தர்ம சங்கடமான நிலைமை. வேறு நபர்கள் மூலமாகக் கொரோனா பரவி இருக்கலாம் என்று மறு அறிக்கை வெளியிட்டது. சரி.

வேறு நபர்கள் என்றால் யார் அந்த நபர்கள். அதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதனால் தான் தகவல்கள் மறைக்கப் படுகின்றன எனும் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.

(தொடரும்)