கொரோனா கோவிட் 19 - மலேசியா: 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா கோவிட் 19 - மலேசியா: 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மார்ச் 2020

கொரோனா கோவிட் 19 - மலேசியா: 2

15 மருத்துவ ஊழியர்கள் பாதிப்பு

கொரோனா கோவிட் 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவ ஊழியர்கள் 15 பேர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் 12 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவ ஊழியர்கள். இதர மூன்று பேர் தனியார் மருத்துவ ஊழியர்கள்.

Health director-general Datuk Seri Noor Hisham Abdullah

பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் மருத்துவ ஊழியர்கள் 12 பேரில் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்குச் சுவாச உதவி (ventilatory support) வழங்கப் படுகிறது.

கொரோனா கோவிட் 19 கிருமிகளுக்கு இனம், மதம், செல்வாக்கு எதுவும் தெரியாது. நோயாளிகளுக்கு அவசர உதவிகள் செய்யும் மருத்துவ ஊழியர்களையும் அடையாளம் தெரியாது.

கொரோனா கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டில் இருக்குமாறு சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

“உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். வீட்டிலேயே இருங்கள்’ என்று சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா வேண்டுகோள் விடுத்து உள்ளார். "Our simple message to the public today – please help us to help you. Stay at home".