தமிழரை ஏமாற்றும் தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழரை ஏமாற்றும் தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 மார்ச் 2019

தமிழரை ஏமாற்றும் தமிழர்கள்

இன்று 09.02.2019 மாலை ஆறு மணி போல நடைப்பயிற்சிக்குப் போய் இருந்தேன். திரும்பும் போது ஒரு தள்ளுவண்டியில் ஒரு தமிழரின் மீ கோரேங் விற்பனை. ஒரு வாரமாகக் கடை போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே எனக்கு ஒரே ஒருநாள் அறிமுகம். ஒரு முறை வாங்கி இருக்கிறேன். ஓர் ஆள் சாப்பிடும் அளவிற்கு மீ கோரேங். ஒரு பாக்கெட்டின் விலை 5 ரிங்கிட்.

உண்மையான் விலையில் பார்த்தால் பொருட்களின் அடக்க விலை ஒன்றரை வெள்ளிக்கு மேல் தாண்டிப் போகாது.

இன்றைக்கு மாலையில் அவரைப் பார்த்தேன். ’நாலு வெள்ளிக்கு போடுங்க தம்பி’ என்றேன். உடனே அவர் ’நாலு வெள்ளிக்கு எல்லாம் இல்ல. கட்டுப்படி ஆகாது. அஞ்சு வெள்ளி’ என்றார்.

அதற்கு நான் ’என்னிடம் நாலு வெள்ளிதான் இப்ப இருக்கு. நாலு வெள்ளிக்கே போடுங்க தம்பி’ என்றேன்.

’நாலு வெள்ளிக்கு எல்லாம் முடியாதுங்க’ என்று கராராகச் சொல்லி விட்டார். ’

இல்ல தம்பி... நான் காசு எடுத்து வரல... நாலு வெள்ளிக்கே போடுங்க... ஒரு ஆள் சாப்பிடத் தானே’ என்றேன்.

அதற்கு அவர் தலையை ஆட்டிக் கொண்டே கைப்பேசியில் மூழ்கிவிட்டார். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அவரும் தமிழர். நானும் தமிழர். அவருக்கு வயது 40-ஐ தாண்டிப் போகாது. நான் அவருக்கு ஓர் அப்பா வயதில் இருக்கிறேன்.

ஒரு வெள்ளியில் என்ன வந்திடப் போகிறது. கொஞ்சம் இரக்கம் காட்டி இருக்கலாமே. அட... வயதுக்கு மரியாதை வேண்டாங்க. ஒரு தமிழருக்கு ஒரு தமிழர் மரியாதை கொடுத்து இருக்கலாமே.

பொருளின் விலை ஐந்து வெள்ளியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என் கையில் நான்கு வெள்ளி தானே இருக்கிறது. அந்த நான்கு வெள்ளிக்கே கொடுக்கலாமே. அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தேன். அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

எத்தனைப் பேருக்கு எவ்வளவோ கொடுத்து உதவி செய்து இருக்கிறேன். திரும்பிக் கேட்டதாக என் நினைவில் இல்லை. தானம் செய்த பணத்தை எல்லாம் கணக்குப் பார்த்தால் அது எங்கேயோ போய் நிற்கும். நடந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே பக்கத்துச் சீனரின் மளிகைக் கடைக்குச் சென்றேன்.

ஒரு கிலோ மீ; ஐந்து முட்டைகள்; ஒரு பாக்கெட் மீன் உருண்டைகள்; கொஞ்சம் தாவ்கே; மூன்று பச்சை மிளகாய் விலை 5 ரிங்கிட் 20 சென். கையில் இருந்த நான்கு வெள்ளியைக் கொடுத்து மிச்சத்தை நாளைக்கு கொடுப்பதாகச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

கடையில் வாங்கிய பொருட்களைக் கொண்டு நான்கு முறை மீ கோரேங் பிரட்டிச் சாப்பிடலாம்.

என் மனதின் ஓரத்தில் ரொம்பவுமே வேதனை. ஒரு தமிழர் வியாபாரம் செய்கிறாரே... அவருக்கு ஆதரவு கொடுப்போமே எனும் ஒரு தமிழர் உணர்வில்தான் ஒரு தமிழரைத் தேடிப் போனேன். ஆனால் இப்படிப்பட்ட தமிழராக இருப்பார் என்று நினைக்கவே இல்லை.

இனிமேல் இந்த மாதிரி தமிழர்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்வதே புண்ணியம் என்று அப்போதே முடிவு செய்தேன். இவர் மட்டும் அல்ல.

இவரைப் போல இன்னும் பலரும் இருக்கிறார்கள். எங்கேயோ அத்தி பூத்தால் போல ஒரு சில நல்ல மனங்கள் இருக்கவே செய்கின்றன.

கடையில் போய் வாங்கிச் சாப்பிடுவதை விட வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம். அதுவே என் பணிவான அன்பான வேண்டுகோள்.

09 பிப்ரவரி 2019

தமிழரை ஏமாற்றும் தமிழர்கள்

இன்று 09.02.2019 மாலை ஆறு மணி போல நடைப்பயிற்சிக்குப் போய் இருந்தேன். திரும்பும் போது ஒரு தள்ளுவண்டியில் ஒரு தமிழரின் மீ கோரேங் விற்பனை. ஒரு வாரமாகக் கடை போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே எனக்கு ஒரே ஒருநாள் அறிமுகம். ஒரு முறை வாங்கி இருக்கிறேன். ஓர் ஆள் சாப்பிடும் அளவிற்கு மீ கோரேங். ஒரு பாக்கெட்டின் விலை 5 ரிங்கிட்.

உண்மையான் விலையில் பார்த்தால் பொருட்களின் அடக்க விலை ஒன்றரை வெள்ளிக்கு மேல் தாண்டிப் போகாது.

இன்றைக்கு மாலையில் அவரைப் பார்த்தேன். ’நாலு வெள்ளிக்கு போடுங்க தம்பி’ என்றேன். உடனே அவர் ’நாலு வெள்ளிக்கு எல்லாம் இல்ல. கட்டுப்படி ஆகாது. அஞ்சு வெள்ளி’ என்றார்.

அதற்கு நான் ’என்னிடம் நாலு வெள்ளிதான் இப்ப இருக்கு. நாலு வெள்ளிக்கே போடுங்க தம்பி’ என்றேன்.

’நாலு வெள்ளிக்கு எல்லாம் முடியாதுங்க’ என்று கராராகச் சொல்லி விட்டார். ’

இல்ல தம்பி... நான் காசு எடுத்து வரல... நாலு வெள்ளிக்கே போடுங்க... ஒரு ஆள் சாப்பிடத் தானே’ என்றேன்.

அதற்கு அவர் தலையை ஆட்டிக் கொண்டே கைப்பேசியில் மூழ்கிவிட்டார். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. அவரும் தமிழர். நானும் தமிழர். அவருக்கு வயது 40-ஐ தாண்டிப் போகாது. நான் அவருக்கு ஓர் அப்பா வயதில் இருக்கிறேன்.

ஒரு வெள்ளியில் என்ன வந்திடப் போகிறது. கொஞ்சம் இரக்கம் காட்டி இருக்கலாமே. அட... வயதுக்கு மரியாதை வேண்டாங்க. ஒரு தமிழருக்கு ஒரு தமிழர் மரியாதை கொடுத்து இருக்கலாமே.

பொருளின் விலை ஐந்து வெள்ளியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். என் கையில் நான்கு வெள்ளி தானே இருக்கிறது. அந்த நான்கு வெள்ளிக்கே கொடுக்கலாமே. அவரைப் பார்த்து ஒரு புன்னகை செய்தேன். அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

எத்தனைப் பேருக்கு எவ்வளவோ கொடுத்து உதவி செய்து இருக்கிறேன். திரும்பிக் கேட்டதாக என் நினைவில் இல்லை. தானம் செய்த பணத்தை எல்லாம் கணக்குப் பார்த்தால் அது எங்கேயோ போய் நிற்கும். நடந்ததை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டே பக்கத்துச் சீனரின் மளிகைக் கடைக்குச் சென்றேன்.

ஒரு கிலோ மீ; ஐந்து முட்டைகள்; ஒரு பாக்கெட் மீன் உருண்டைகள்; கொஞ்சம் தாவ்கே; மூன்று பச்சை மிளகாய் விலை 5 ரிங்கிட் 20 சென். கையில் இருந்த நான்கு வெள்ளியைக் கொடுத்து மிச்சத்தை நாளைக்கு கொடுப்பதாகச் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

கடையில் வாங்கிய பொருட்களைக் கொண்டு நான்கு முறை மீ கோரேங் பிரட்டிச் சாப்பிடலாம்.

என் மனதின் ஓரத்தில் ரொம்பவுமே வேதனை. ஒரு தமிழர் வியாபாரம் செய்கிறாரே... அவருக்கு ஆதரவு கொடுப்போமே எனும் ஒரு தமிழர் உணர்வில்தான் ஒரு தமிழரைத் தேடிப் போனேன். ஆனால் இப்படிப்பட்ட தமிழராக இருப்பார் என்று நினைக்கவே இல்லை.

இனிமேல் இந்த மாதிரி தமிழர்களுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்வதே புண்ணியம் என்று அப்போதே முடிவு செய்தேன். இவர் மட்டும் அல்ல.

இவரைப் போல இன்னும் பலரும் இருக்கிறார்கள். எங்கேயோ அத்தி பூத்தால் போல ஒரு சில நல்ல மனங்கள் இருக்கவே செய்கின்றன.

கடையில் போய் வாங்கிச் சாப்பிடுவதை விட வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம். அதுவே என் பணிவான அன்பான வேண்டுகோள்.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்