கொரோனா கோவிட் 19 - மலேசியா: 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா கோவிட் 19 - மலேசியா: 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மார்ச் 2020

கொரோனா கோவிட் 19 - மலேசியா: 1

மலேசிய இராணுவம் களம் இறங்குகிறது

கொரோனா கோவிட் -19 தொற்றைத் தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் தங்களின் வீட்டிலேயே இருக்க வேண்டும்; வெளியே செல்லக் கூடாது என்று மலேசிய அரசாங்கம் பொது நடமாட்டக் கட்டுப்பாடு (Movement Control Order அல்லது Restriction of Movement Order) உத்தரவைப் பிறப்பித்தது. இருந்தும் பலர் அந்த உத்தரவைப் பொருட்படுத்துவது இல்லை.


குடும்பத்தோடு வெளியே சென்று கடைகளில் சாப்பிடுகின்றனர். குடும்ப உறுப்பினர்களைப் பொதுப் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு என்பது தங்களுக்கு கிடைத்த விடுமுறையாக சிலர் நினைத்துக் கொள்கின்றனர்.

அரசாங்கத்தின் பொது உத்தரவைத் தொடர்ந்து கண்காணிக்க மலேசியப் போலீஸ் படைக்கு உதவியாக இராணுவம் அழைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்து உள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (22.03.2020) தொடக்கம் இராணுவம் களம் இறங்குகிறது.


மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதை உறுதிச் செய்வதற்கு இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. அரசாங்கம் பிறப்பித்த கட்டளைகளுக்கு மக்கள் தொடர்ந்து மதிப்பு அளிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

முதல் சில நாட்களுக்கு போலீசார் அறிவுரை வழங்குவார்கள். அதற்குப் பின்னர் சட்டத்திற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுப்பார்கள்.

உலகளாவிய செய்திகள்
பாதிக்கப்பட்ட நாடுகள் - 182
பாதிக்கப் பட்டவர்கள் - 253,933
மருத்துவமனையில் - 154,456
குணம் அடைந்தவர்கள் - 89,070
தீவிர சிகிச்சை - 7,465
இன்றைய இறப்புகள் - 379
மொத்த இறப்புகள் - 10,407

மலேசியச் செய்திகள்


பாதிக்கப் பட்டவர்கள் - 1,030
மருத்துவமனையில் - 940
குணம் அடைந்தவர்கள் - 87
தீவிர சிகிச்சை - 26
இறப்புகள் - 3

(20.03.2020 - 08.50 மலேசிய நேரம்)