ஹெலன் கெல்லர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹெலன் கெல்லர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2019

ஹெலன் கெல்லர்

அதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைப் பெண்மணி. பிறந்த பத்தொன்பது மாதங்களி‌ல் பேசுகின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற சக்தியைப் பறிகொடுத்த ஒரு பச்சைத் தளிர். அந்தப் பச்சைக் குழந்தை எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் போராட்டங்களின் சப்த நாடிகள்.



பொழுது விடிவதற்குள் செத்துப் போய்விட வேண்டும் எனும் கொடிய வேதனையில் வதைபட்ட அந்தக் குழந்தை வானத்தையே வசப் படுத்தியது. உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது.

விதி எந்த அளவுக்குப் பின்னுக்கு இழுத்தாலும் அதையே பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்குப் போய் போராடிக் காட்டியவர் ஹெலன் கெல்லர். கண் பார்வை இல்லாமலும் காது கேளாமாலும் கெல்லர் பட்ட சிரமங்களை விடவா நம்முடைய பிரச்சினை பெரிசு. சொல்லுங்கள்.

அவரால் இத்தனைச் சாதிக்க முடிந்தது என்றால் நமக்கு தடையாக இருப்பது எதுவுமே இல்லை. தெரிந்து கொள்ளுங்கள். நமக்கு ஏற்படும் தடைகளை உடைத்து எறிய வேண்டும் என்றால் ஹெலன் கெல்லரை நினைத்துக் கொள்ளுங்கள்.

அவர் நம் காதுகளில் சொல்லும் இரண்டே இரண்டு வார்த்தை மந்திரம் என்ன தெரியுங்களா. தன்னம்பிக்கை, விடாமுயற்சி.

தன்னம்பிக்கை; விடாமுயற்சி; இந்த இரண்டையும் பின்பற்றும் எவருக்கும் வானம் வசப்படும். நீங்கள் வசப்படுத்த விரும்பும் வானத்தில் மகிழ்ச்சியாக சிறகடித்துப் பறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.



Varusai Omar Florence Nightingale மற்றுமோர் அதிசயப் பெண்மணி என்பதை எத்துணை பேர் அறிந்திருப்பார்கள் முத்து?


Melur Manoharan "இனிய" காலை வணக்கம்...!

 No photo description available.

 
Murugan Rajoo அருமையான பதிவு ஐயா, ஏலன் கேல்லர் ஒரு அற்புதம், எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. நல்வணக்கம் ஐயா


Thennarasu Sinniah இவரைப் பற்றி மேலும் அறிந்திட ஆவல்...


Sambasivam Chinniah Thank you, Vaazhga Valamudan.Good morning saar. God bless you. Take care of your health.


Devarajan Dev Great woman


Mageswary Muthiah

 Image may contain: 1 person, smiling, text
  • No photo description available.

  • Image may contain: one or more people, people standing and outdoor


    Vanaja Ponnan காலை வணக்கம்! 🌹🌹

    Kumar Murugiah Kumar's அனைத்து உயிருக்கு அவர் சொல் ஓர் புத்துணர்ச்சி
     

     Sundaram Natarajan Inniya Kaalai Vanakam Anna


  • Sathya Raman மன சஞ்சலம் ஏற்பட்டு சே! என்னடா வாழ்க்கை இது என்று எண்ணும் போதெல்லாம் பிரம்மன் படைப்பில் உடல் குறை உள்ளவர்களாக பிறந்தவர்களை சாரசரி எல்லாவித ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள் காட்டிலும் இருநூறு விழுக்காடு திறமையாவர்கள் சாதனையாளர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள் என்பதைப் பலவாறாக கண்டும் கேட்டும் வருகிறோம். 

    முடியாது இயலாது என்பது சோம்பேறிகளின் சொந்த மொழி. வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பவர்களுக்குச் சாதனைகளைத் தவிர சங்கடங்கள் ஒரு சாக்கே அல்ல "ஏலன் கேல்லர்" போன்றவர்கள் இந்த பூமியின் பொக்கிஷங்கள், எந்நாளும் போற்றுதலுக்கு உரியவர்கள். மற்றுமொரு அருமையான பதிவு சார் 🙏

  • Manickam Nadeson நல்ல பதிவு, முழுமையும் பதிவிடுங்க ஐயா சார். நன்றியடன் காத்திருக்கிறேன்.

  • Varusai Omar நன்றி சாம்பு. அந்த வாழ்த்துப் பதிவு எனக்கென நினைக்கிறேன்... வாழ்க தமிழ் மொழி வளமுடன்"
    •  

  • Sri Kaali Karuppar Ubaasagar இனத்தால் அல்ல.. கருணையால் வாழ்ந்த இந்த அன்னையின் நாமம் வாழிய வாழியவே 🙏🏼🙏🏼
    •  

  • Muniandy Segar ஹெலன் கெல்லர் ஓர் அற்புதத் சின்னம். முடியாது என்ற சொல்லுக்கு ஓர் சவால்!
    •  

  • Varusai Omar இது போன்ற அதிசய போராட்டங்கள் மரண வலிகள்!
    இன்று நேற்றா எனக்குத் தெரிந்த ஒரே தாரக மந்திரம்?

    ஒன்றே ஒன்றுதான்:
    WINNERS NEVER QUIT
    QUITTERS NEVER WIN.
    (அ-து: தோல்வி மனப்பான்மையுடையார்
    வெற்றி இலக்குடையார் நெகிழ மாட்டார்)

    இதுதான் அன்றும் இன்றும் இனி என்றும், என் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, எனது மாணவர்க்கும் உச்சரிக்கக் கற்றுக் கொடுப்பது!
  •  
  • Krishnan ATawar Great Ayya
    •  
  • Rajoo Veeramuthu பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
    •  
  • Karunaharan Karuna மிக சிறந்த பதிவு ஐயா
    •  
  • Hamba Mu Umar Umar Mikka nanri ayyah 
    •  
  • Veerasingam Suppiah உலகம் உள்ளலரை உலக மனதில் என்றும் இதயநாடியாக எலன் கெல்லர்
    •  
    •  
       
  • Veerasingam Suppiah நண்பர் வருசை ஓமாருக்கு ; முடிந்த அளவிற்கு பார்பணன் எழுத்துக்களை எழுதுவதை குறைத்து வருகிறேன் ஆகவே ஹெலன் என்பதை எலன் என்று எழுதி நமது தூய தமிழுக்கு ஆதரவை தமிழுணர்வுடன்முயன்று வருகிறேன். நன்றி
    •  

  • Varusai Omar இல்லை வீரா... அது தவறு எனச் சுட்டுவதே எனது நோக்கம்!
    யாரையும் குறை கூறும் எண்ணமில்லை.


    சில பெயர்ச் சொற்களை வேற்று மொழியிலிருந்து, தமிழாக்கம் செய்வது இயலாது கூடாது. காரணம்?


    சில வேளைகளில் அதன் அர்த்தம் அனர்த்தமாகி விடும் என்பதே நிதர்சன உண்மை!

    உம்மைவிட எண்டமிழை உயிர் மூச்சாக நினைப்பவன் இவன்.
    இங்கே ஒன்றை கவனித்தீரா அன்பரே?


    தன்னிலையை மூன்றாம் எண்ணால் குறிப்பிட்டுள்ளேன்.


    ஏனென்று நீங்களே பகுத்தாய்ந்து கொள்ளுங்கள்.


    இல்லையெனில் விவரம் அறிந்தோரிடம் கேட்டுத் தெளிவு பெருக.
    தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்து எம்மொழியை சிறுமைப் படுத்தி விடாதீர்கள்.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா!

    சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டாமே!!!


  • Veerasingam Suppiah தொல்காப்பிபத்தில் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் முப்பது தான். தமிழ் மொழிக்கு மொத்த எழுத்துக்கள் என்பதை தொல்காப்பியர் குறிப்பிடுவது நிதர்சன உண்மை என்பதை உணர்ந்தால் விடயம் உண்டு