மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 3 கோடி ரிங்கிட்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 3 கோடி ரிங்கிட்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 நவம்பர் 2020

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 3 கோடி ரிங்கிட்?

தமிழ் மலர் - 26.11.2020

பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் தாக்கல் செய்துள்ள 202-1ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டில் உள்ள 527 தமிழ்ப் பள்ளிகளுக்கு வெறும் 3 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை அளிப்பதாக பத்துகாஜா ஜ.செ.க. நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பெரிய அளவிலான பாதிப்பு இந்தியர்களுக்குத்தான் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில் இப்போது தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பெரும் ஏமாற்றத்தை தருகிறது என்றார்.

நவம்பர் 6-ஆம் தேதி நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ரூல் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் அறிவிக்கப்படவில்லை. இது குறித்து பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கல்வி அமைச்சர் டாக்டர் ரஸ்டி ஜிடின் நேற்று முன்தினம் மக்களவையில் எந்தெந்த பள்ளிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிவித்து உள்ளார்.

கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் உள்ள 527 தமிழ்ப்பள்ளிகளுக்கு 2 கோடியே 99 லட்சத்து 80,000 வெள்ளி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

2020-ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் சமர்ப்பித்த பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.

ஆனால், 2021 பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியத்தில் 40 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது என்று கல்வியமைச்சர் அறிவித்து இருப்பது இந்தியச் சமுதாயத்திற்கு பெருத்த ஏமாற்றம் என்று சிவகுமார் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 527 தமிழ்ப்பள்ளிகளுக்கு சுமார் 3 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கு 29.98 மில்லியன் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கல்வி அமைச்சரின் புதிய வீயூக நடவடிக்கையால் 527 தமிழ்ப்பள்ளிக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வேதனையான விசயம் என்றார்.

தமிழ்ப்பள்ளிக்கான ஒதுக்கீட்டில் இருந்து 2 கோடி வெள்ளி குறைக்கப்பட்டு இருப்பது இந்தியச் சமுதாயத்திற்கு பெரிய ஏமாற்றம். பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் நியாயமற்ற இத்தகைய முடிவை, ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் இந்தியர்களை ஒரங்கட்டுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும் என்று சிவகுமார் சுட்டிக் காட்டினார்.