ஜெயதாஸ் சற்குணவேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயதாஸ் சற்குணவேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மே 2019

ஜெயதாஸ் சற்குணவேலு

போராளியும் போராட்டவாதியுமான தோழர் ஜெயதாஸ் சற்குணவேலு (53) மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். மலேசிய இந்தியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக போராடியவர். 



பல முறை கைது செய்யப் பட்டவர். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டவர். மலேசிய இந்தியர்கள் இவரை என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.

அவரின் மறைவு அவர் குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பு இல்லை. மலேசிய இந்திய சமுதாயத்திற்குப் பெரும் இழப்பு. கெஅடிலான் கட்சிக்கு மாபெரும் இழப்பு. கெஅடிலான் கட்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.

தன் உடல் நிலையைப் பற்றி சற்றும் அக்கறை கொள்ளாமல் அனைத்துப் போரட்டத்திலும் தன்னை இணைத்து அர்ப்பணித்துக் கொண்டவர். அவரின் போராட்டக் குணத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.




பி.கே.ஆர். கட்சித் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராகிமுடன், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஆகியோரும் ஜெயதாசின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.

1998-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கிய சீர்திருத்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு மிகத் தீவிரமாகப் போராடியவர் ஜெயதாஸ்.

53 வயதான ஜெயதாஸ் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.




பி.கே.ஆர். கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டு இருந்த ஜெயதாஸ் அந்தக் கட்சியில் பல பதவிகளை வகித்து இருக்கிறார். பி.கே.ஆ.ர் கட்சியின் சுபாங் கிளைத் தலைவராகவும், மனித உரிமை மற்றும் சட்ட விவகாரப் பிரிவின் துணைத் தலைவராகவும் இருந்து உள்ளார்.

2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலாக்கா மெர்லிமாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.




ஹிண்ட்ராப் இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டிய ஜெயதாஸ் அந்த இயக்கத்தின் தகவல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.  நீண்ட காலமாக மலேசியர்களின் பிரச்சனைகளுக்காகவும், இந்தியர் நலன்களுக்காகவும் போராடியவர்.

Jayathas Sirkunavelu (53). A real reformist that stood bold for many injustices from death in custody to many oppression of justice. Despite his health condition, he never put that as an excuse to stop him to defend for our rights.



He fought for many cases and never expect any return from anyone. For him Lawan Tetap Lawan. Let's pray for Brother Jayathas Sirkunavelu soul to be blessed and placed among good one.