05 செப்டம்பர் 2020

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்... முத்தம் என்பது காமத்தில் சேர்ந்தது இல்லை என்று... என்னே ஒரு வாழ்வியல் தத்துவம்...

ஆனந்த யாழை மீட்டுகிறாய்... மனதை உருக்கிப் பிழியும் இசை... கசக்கிப் பிழியும் வரிகள்... உதிரத்தில் ஒட்டிக் கொள்ளும் வல்லமை...

அப்பாக்களைப் பிரியாத மகள்களை அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லலாம். மகள்களைப் பிரியாத அப்பாக்களைப் பாக்கியவான்கள் என்று சொல்லலாம். ஆனாலும் கண்டிப்பாக அப்பா மகளைப் பிரிய வேண்டி வரும். மகள் அப்பாவைப் பிரிய வேண்டி வரும். அது தான் அப்பா மகள் உறவு.

வானமே இடிந்து விழுந்தாலும் ஒரு மகள் தன் அப்பாவை விட்டுக் கொடுக்க மாட்டாள். ஏன் என்றால் ஒரு பெண்ணுக்கு முதல் ஹீரோ அவளுடைய அப்பா தான். முதல் காதலனும் அவளுடைய அப்பாவாக இருக்கலாம். அது தான் மனித உறவில் புனிதமான அப்பா மகள் உறவு.

கவியரசுக்குப் பின்னர் ஒரு கவி இளவரசர் முத்துக்குமார்... என்றும் என் மனதில் வாழும் அந்தக் கவிஞருக்குச் சிரம் தாழ்த்துகிறேன்....


ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

படம்: தங்கமீன்கள்
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடல்கள்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நா. முத்துக்குமார் (12 சூலை 1975) தமிழகம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டவர்.

தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார்.

1999-ஆம் ஆண்டு ’மின்சார கண்ணா’ படத்தில் இடம் பெற்ற "உன் பேர் சொல்ல ஆசைதான்" பாடலை எழுதி சினிமா உலகில் பிரபலமானார்.

இதுவரை 1500 பாடல்களுக்கு மேல் எழுதி உள்ள இவர் 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடல் ஆசிரியராக இருந்தார்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

நல்ல நல்ல பாடல் வரிகளைத் தமிழ் திரையுலகுக்குக் கொடையாகக் கொடுத்த வள்ளல்களில் நா. முத்துக்குமாரும் ஒருவர்.

இவர் 2006 ஆண்டு வட பழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41-வது வயதில் காலமானார். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார். சின்ன வயது.

அவர் எழுதி கொடுத்த பல வெற்றிப் பாடல்களுக்குப் போதுமான ஊதியம் அவருக்கு வழங்கப்படவில்லை. அவரின் மரணத்தின் போது எழுந்த குற்றச்சாட்டுகள்.

அவர் மறைந்தாலும் என்றுமே அவரது பாடல் வரிகள் தமிழ்ச் சமூகத்தைத் தாலாட்டிக் கொண்டே இருக்கும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2020

https://www.youtube.com/watch?v=xvo8M3jhQTs


பேஸ்புக் பதிவுகள்

Parameswari Doraisamy: மிகவும் அற்புதமான அருமையான பாடல் ஐயா.... இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டிய வயதில் காலமாகி விட்டார் மிகவும் வேதனையாக இருக்கிறது.

Kumaravel Muthu Goundan: நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் திரு நா. முத்துக்குமாரையும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல் பாதியிலேயே பறித்துக் கொண்டான் காலன். அவரின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ காலம் கடந்தும் நிற்கப் போகும் ஒரு நெகிழ்ச்சியான பாடல்.

Parimala Muniyandy: அருமையான பதிவு. பாடல் வரிகள் ஒவ்வொன்றிலும் மனம் லயித்துப் போகிறது... மிக்க நன்றிங்க அண்ணா.

Chelvi Tamil: My first hero is my father. I never thing he will be my hero forever .He is the best in his life till 86 years old protect all her daughters.

Rave Rajoo: Thank you Sir... its a very nice song.. want ask you something...YALLAI means what Sir... just to know.Tq

B.k. Kumar: பிடித்த கவிஞர் பிடித்த பாடல்

Ajayan Bala Baskaran: மனைவி பெயர்.: ஜீவலட்சுமி

Vimal Sandanam: பொதுவாக சொல்வார்கள் ஐயா. பெண் பிள்ளைகள் அப்பாவிடம் தான் அதிக பாசம் கொள்வார்கள் என்று. அது உண்மை ஐயா. பாடல் வரிகள் அருமை. அவர் மறைந்தாலும் புகழ் மறையாது. நன்றி ஐயா.

Sheila Mohan: அருமையான பதிவு. நன்றிங்க சார்...

Francis Arokiasamy: மிக அருமையான விளக்கம்.. கட்டுரை சிறப்பு

Palar Thangamarimuthu:
🙏

Raja Rajan:
🙏

Letchmy Chengodam:
🙏

Mageswary Muthiah:
🙏

Siva Palani:
🙏

Suria Rich:  🙏

Kevin Karu: 💐👏👏👏❤️🙏 Valthukal Ayya..👍

Palaniappan Kuppusamy:
🙏

Avadiar Avadiar:
Nanri Ayya.

Kody Sivasubramaniam: எந்த ஒரு அலட்டலும் இல்லாத எளிமையான மனிதராய் இருந்து மிகச் சிறப்பான கவிதை வரிகளை பாடலில் கொடுத்த கவிஞர் நா. முத்துக்குமாரை காலன் கொன்று சென்றது என்னையும் கலங்க வைத்தது. மறைந்தாலும் வரிகளின் மூலம் திரும்பவும்!!!!

Muthukrishnan Ipoh: https://www.youtube.com/watch?v=xvo8M3jhQTs
ஆனந்த யாழை

Poovamal Nantheni Devi: ஆனந்தயாழ் எப்பொழுதும் ஆனந்தக் கண்ணீர்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக