12 டிசம்பர் 2021

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி (2021)

சிலாங்கூரில் உள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி ரி.ம. 5 மில்லியன் வழங்கப்பட்டு உள்ளது. உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தம் ரி.ம. 505,000.00 வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள பெரும்பான்மையான தமிழ்ப்பள்ளிகளுக்கு கணிசமான நிதியுதவியை சிலாங்கூர் மாநில அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

2008-ஆம் ஆண்டுக்கு முன்னர் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி கேட்டு; சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, மத்திய அரசு என்று கெஞ்சி கையேந்தி பிச்சை எடுத்த காலமாக இருந்தது. வேதனையான காலம்.

ஆனால் 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்திக்கு பின்னர் தான் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு விடிவு காலம் ஏற்பட்டது.

ஆம். முதலில் சிலாங்கூரில் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கும் விடிவு காலம் பிறந்தது.

பல ஆண்டுகளாக நிதியிதவி இல்லாமல் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்திக்கு விடிவு காலம் பிறந்தது. 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 285,000.00 கொடுத்தது.

2010-ஆம் ஆண்டில் எப்பிங்காம் தமிழ்ப் பள்ளியின் யு.பி.எஸ்.ஆர். தேர்ச்சி  விகிதம் 28%. ஆனால் 2012-ஆம் ஆண்டில் 55%-ஆக உயர்வு கண்டது.

மேலும் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு 2012ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 85,000.00 நிதியுதவி செய்தது. இந்த நிதியைக் கொண்டு தான் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளியின் கணினி வகுப்பறையில் 40 கணினிகள் பொருத்தப் பட்டன. மேலும் இந்த கணினி வகுப்பறை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் தொடர்ந்து முறையாக வழி நடத்தப் படுகிறது.

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் பொது வசதி முன்னேற்றத்திலும் கல்வி முன்னேற்றத்திலும்  சிலாங்கூர் மாநில அரசின் தொண்டு அளப்பரியது.

இந்தச் சேவையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியும் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் அவர்களும் தொடர்ந்து செய்ய வேண்டும்.


04 டிசம்பர் 2021

சிலாங்கூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; சிலாங்கூர் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 97 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 26,506 மாணவர்கள் கல்வி பயின்றனர். 2,155 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

கிள்ளான் மாவட்டம்

மலேசியா; சிலாங்கூர்; கிள்ளான் மாவட்டத்தில் (Klang District) 14 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 7,487 மாணவர்கள் பயில்கிறார்கள். 491 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.







10 அக்டோபர் 2021

பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்ட 73 இந்திய விடுதலை தியாகிகள்

பினாங்கு நாட்டிற்கு 73 இந்திய விடுதலை போராட்ட தியாகிகளை வெள்ளையர்கள் நாடு கடத்தி உள்ளார்கள்.

புரட்சி அணித் தலைவர்கள் 73 பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை (தீவாந்தர சிட்சை) வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1802-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றப் பட்டு பினாங்கைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு அனுப்பப் பட்டனர்.


இருவர் இருவராகச் சேர்த்துக் கைவிலங்கிடப்பட்டு இருந்த இவர்கள் எழுபத்தாறு நாள்கள் நீடித்த இந்தக் கடல் பயணத்த்தின் போது அடைந்த துயர் அவலமானது.

இவர்களுள் ஒருவர் வழியிலேயே கடலில் விழுந்து இறந்தார். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பினாங்கைச் சென்று அடைந்த பின்னர் தண்டனைக் காலம் ஐந்து மாதங்கள் கழிவதற்குள் 24 பேர் இறந்து போயினர்.

போராட்ட தியாகிகளின் பெயர்கள்.

1) வேங்கன் பெரிய உடையத்தேவர் - (சிவகங்கை மாமன்னர்)

2) துரைசாமி (மன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன்)

3) சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் - வாராப்பூர்

4) ஜெகநாத ஐயன் - இராமநாதபுரம்

5) பாண்டியப்ப தேவன் - கருமாத்தூர்

6) சடையமான் - கருமாத்தூர்

7) கோசிசாமி தேவர் - கருமாத்தூர்

8 தளவாய் மாடசாமி நாயக்கர் - பாஞ்சாலங்குறிச்சி

9) குமாரத்தேவன் - முள்ளூர்

10) பாண்டியன் - பதியான்புத்தூர்

11) முத்துவீர மணியக்காரர் - ஆணைக்கொல்லம்

12) சாமி - மணக்காடு

13) ராமசாமி

14) எட்டப்ப தேவர் - நான்குநேரி

15) பாண்டிய நாயக்கர் - கோம்பை

16) மண்டைத் தேவர்

17) மலையேழ்மந்தன்

18) வீரபாண்டிய தேவர்

19) கருப்ப தேவர்

20) சுப்ரமணியம்

21) மாடசாமி

22) பெருமாள்

23) உடையத்தேவர் (த/பெ : சின்னப்பிச்சை தேவர்)

24) தேவி நாயக்கர்

25) முத்துக்கருப்ப தேவர்

26) மண்டந்தேவர் (த/பெ : சங்கரநாராயண தேவர்)

27) பேயன் (த/பெ : பால உடையாத் தேவர்)

28) அழகிய நம்பி

29) ஒய்யக்கொண்ட தேவர்

30) சிவனுத்தேவர்

31) காணி ஆழ்வார்

32) மூப்பு உடையான்

33) கொண்டவன்

34) வீரபத்திரன் - நான்குநேரி

35) சிலம்பன் - நான்குநேரி

36) பேயன் - நான்குநேரி

37) ராமசாமி - நான்குநேரி

38) இருளப்பன் - நான்குநேரி

39) மாடசாமி - நான்குநேரி

40) வீரபாண்டியன்

41) வெங்கட்டராயன் - நான்குநேரி

42) உடையார்

43) முத்துராக்கு - நான்குநேரி

44) முத்துராக்கு - ஆனைக்கொல்லம்

45) சொக்கதலைவர் - நான்குநேரி
 
46) இருளப்ப தேவர் - நான்குநேரி

47) மல்லையா நாயக்கர் - இளவம்பட்டி

48) சுப்பிரமணி நாயக்கர் - கண்டநாயக்கன் பட்டி

49) மல்லைய நாயக்கன் - இலாம்பட்டி

50) சல்வமோனிய நாயக் - கட்ட நாயக்கன்பட்டி

51) தோமச்சி நாயக்

52) சுளுவமோனியா நாயக் - ஆடினூர்

53) இராமசாமி - குளத்தூர் பாலிகர் பேரன்

54) பிச்சாண்டி நாயக் - எருவுபோபரம்

55) தளவாய் கல்லுமடம்

56) சின்ன மாடன் - பசுவந்தனை

57) வைடியம் மூர்த்தி - கந்தீஸ்வரம்

58) தளவாய் பிள்ளை (தேசகாவல் மணிகர்)

59) சுளுவமணியம்

60) பெடன்ன நாயக் (சுளுவமணியம் மகன்) - தூத்துக்குடி போராட்ட தளபதி

61) கிருஷ்ணமா நாயக்

62) வாயுளன் - குளத்தூர்

63) மிளனன் - அறச்சேரி

64) வைல முத்து - கங்கராயகுறிச்சி

65) ராமன் - சுவளி

66) பாலையா நாயக் - நாஞ்சி நாட்டு சூரன்குடி

67) குமரன்

68) வெள்ளிய கொண்டான் வெள்ளியன்

69) இராமன்

70) அல்லேக சொக்கு

71) சேக் உசேன்

72) அப்பாவு நாயக்

73) குப்பன்னா பிள்ளை

தனது தாய் மண்ணைவிட்டு அண்டை நாட்டிற்க்கு நாடு கடத்துவது என்பது மரணத்தைக் காட்டிலும் மிகவும் வேதனையானது.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்க்கை இழந்த சீர்மிகு சின்ன மறவர் நாட்டின் (மாமன்னன் வேங்கன் பெரிய உடையாத் தேவர்) மற்றும் மன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி உட்பட 73 தியாகிகளையும் இந்த நாடும் நாட்டு மக்களும் மறந்து விட்டனர்.

ஆனால் என்றாவது ஒரு நாள் அவர்களது தியாகத்தை நாடு அறியும்!(மலேசியம்)