அகிலன் பிறந்த நாள் - ஜுன் 27 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகிலன் பிறந்த நாள் - ஜுன் 27 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூலை 2019

அகிலன் பிறந்த நாள் - ஜுன் 27

(தோற்றம்: 27.06.1922 - மறைவு: 31.01.1988)

நாவல் ஆசிரியர்; நாடக ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பன்முகத் திறன் வாய்ந்தவர்; தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவர்.
 Image may contain: 1 person, eyeglasses and closeup
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம்.

இவர் முதலில் இரயில்வே அஞ்சல் சேவைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய எளிய நடை இவரின் படைப்புகளின் சிறப்பு அம்சங்கள்.

 Image may contain: 1 person, sitting

முதல் நாவல் ‘மங்கிய நிலவு’. 1944-இல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்து உள்ளார்.

உலகின் பல மொழிகளிலும் இவரின் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரின் படைப்புகள் வலம் வருகின்றன.

இவரின் ‘பாவை விளக்கு’ நாவல்; ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப் படங்களாக வெளிவந்தன.
‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள் மறக்க முடியாதவை.

‘வேங்கையின் மைந்தன்’ நாவல் 1963-இல் சாகித்ய அகாடமி விருதையும்; ‘சித்திரப்பாவை’ 1975-இல் ஞானபீட விருதையும் பெற்றன.

எங்கே போகிறோம் என்ற சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது.

இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்த நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப் படுகிறது.

1938-இல் பள்ளியின் காலாண்டு சஞ்சிகைக்காக ‘அவன் ஏழை’ என்ற கதையை முதன்முதலாக எழுதினார். கதை நடையைப் பார்த்துச் சந்தேகம் அடைந்த தமிழ் ஆசிரியர், ‘எங்கு திருடினாய்?’ என்றார்.

இவர் கோபத்துடன் ‘என் கதையை திருப்பிக் கொடுத்துடுங்க. பிரசுரிக்க வேண்டாம்’ என்றார். உண்மையை அறிந்த ஆசிரியர் அவரை தட்டிக் கொடுத்தாராம்.

அகிலன் 66 வயதில் (1988) மறைந்தார்.