DLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 பிப்ரவரி 2017

DLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும்

DLP என்றால் Dual Language Programme. மலேசிய மொழியில் Program Dwibahasa. தமிழில் *இருமொழிப் பாடத் திட்டம்*.  


இந்த இரு மொழித் திட்டத்தினால் எதிர்காலத்தில் மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் நிச்சயம் பாதிக்கப்படும். தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்ல. தமிழாசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும்.

தவிர இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். DLP இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம் அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள ஒரு மறைமுகச் சிக்கலைப் பற்றி பலர் கண்டு கொள்வதே இல்லை. 



பெரும்பாலோர் இப்போது தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை DLP திட்டத்தில் சேர்ப்பது இல்லை. இந்தப் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை ஆங்கிலத்திலும் நடத்தலாம் அல்லது மலாய் மொழியிலும் நடத்தலாம். தலைமையாசிரியரைப் பொருத்தது.

அடுத்து மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தந்த மொழிகளிலேயே போதிப்பார்கள். அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிக்க வேண்டும்.

ஆக இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்தால் மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள்.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், பொருளியல், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களும் ஆங்கில மொழியில் போதிப்பார்கள். மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். ஆக மொத்தம் 6 பாடங்கள் வேற்று மொழிகளில் போதிக்கப் போகிறார்கள்.

அப்படி என்றால் இன்னும் 10 ஆண்டுகளில்... இந்த DLP திட்டத்தினால் 10 தமிழாசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 4 பேர் தான் தமிழாசிரியர்களாக இருக்கலாம். மற்ற 6 ஆசிரியர்கள் இதர சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கலாம். 



ஆக அந்த 6 ஆசிரியர்கள் சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில்... அந்தத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு தமிழராகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவிக்கு வரலாம். வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இந்த 2017ஆம் ஆண்டு மலேசியாவில் 54 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வருகிறது. அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் 6 பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத வேற்று மொழியில் படித்துக் கொடுக்கப் போகிறார்கள். இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யும்.

DLP இருமொழிப் பாடத் திட்டத்தைச் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்களே. எதிர்கால மலேசியத் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும். இந்தக் கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து.